​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 February 2014

சித்தன் அருள் - 163 - பாபநாசம் - உற்றார், உறவினர், நண்பர்களுக்காக!

[பாபநாசம், திருநெல்வேலி]
விண்மீன் கேட்டை உதித்திட்ட வேளையிலே இன்று தான் அதிகாலையில் அகத்தியன் யாம் அற்புதமான வார்த்தைகளை செப்பினேன். நேற்றைய தினம் ஆங்கொரு சித்தர்கள் எல்லாம், அன்னவர்கள் துயிலும் போது பக்கத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, ஆங்கொரு ஒன்பது, நவசித்தர்களை அனுப்பிவைத்தேன்.  நவசித்தர்களும் சுற்றி வந்து சுற்றி வந்து காற்றாக இருந்து கொண்டு, துஷ்ட தேவதைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள். காலையிலேயே, இதை ஏன் சொல்லவில்லை என்றால், நீராடிய பின்பு தானே எதையும் சொல்லவேண்டும். நீராடும் முன்னாலே அகத்தியனை கேட்டதால், சில செய்திகளை மறந்து விட்டேன். ஆங்கொரு, சுற்றி வந்து காற்று மாற்றி மாற்றி அடித்ததெல்லாம் சித்தர்கள் தரிசனம் என்று எண்ணிக்கொள். பேய் காற்று என்று எல்லோரும் சொல்வார்கள், அது பேயல்ல, காற்றல்ல, சித்தர்களே காற்றாம். துஷ்ட தேவதைகள் ஏதும் வந்து உன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத்தான், அகத்தியன் அங்கு நவதேவதைகளை அனுப்பி வைத்தது போல, நவசித்தர்களையும் அனுப்பிவைத்தேன். அவர்கள் காற்றாக சுற்றி வந்து சுற்றி வந்து உங்களை காத்தார்கள், அது தான் உண்மை. ஆகவே, அது வருண பகவான் காற்று என்றோ, மலை காற்று என்றோ எண்ண வேண்டாம். சித்தர்கள் தழுவிய காற்றுதான் நேற்று. இரவு ஒரு மணிக்குத்தான், சித்தர்கள் எல்லாம் வலம் வந்த போது தான், எந்ததொரு துஷ்ட தேவதையும் வராமல் இருப்பதற்காகத்தான், இவர்களுக்கும் சௌபாக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் சுற்றி சுற்றி வந்து மலை காற்றாக மலர்ந்தார்கள். அத்தனை அற்புதமான காரியங்களை சித்தர்களே செய்கிறார்கள் என்றால், மிக மிக அற்புதம். அகத்தியன் கூட இப்படி எதிர்பார்க்கவில்லை. துணைக்கு நில் என்று சொல்லிவிட்டு, அகத்தியன் சதுரகிரி ஏகிவிட்டேன்.

என்னப்பன் முக்கண்ணனுக்கு, கால் பிடித்து ஆசுவாசப் படுத்த வேண்டும் என்று, முருகனுக்கே அகத்தியன் என்னடா? முருகனுக்கே கால் பிடிக்க வேண்டியது அகத்தியனின் கடமை, என் குரு அவன், சிவபெருமானுக்கு நானே தான் கால் பிடிக்க வேண்டும். ஏன் என்று கேட்டேன் நான். அப்பொழுதுதான் சொன்னான் முக்கண்ணன்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிற பரந்தாமனுக்கு, ஆங்கொரு பாதத்தில் அமர்ந்து கொண்டுதான் லக்ஷ்மிதேவி கால் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறாள். தனக்கும் அப்படி கால் பிடிக்க வேண்டும் என்று பார்வதி தேவியிடம் முக்கண்ணன் கேட்ட பொழுது, "நான் எதற்கு கால் பிடிக்க வேண்டும்? நான் தான் உங்கள் உடலில் பாதியாக இருக்கிறேனே. எனக்கு யார் கால் பிடிப்பார்கள், நீ பிடிக்கிறாயா?" என்று முக்கண்ணனிடம் கேட்டாள். ஆகவே பார்வதி தேவியே, சிவபெருமானை கேட்ட கேள்வியடா அது. பார்த்தேன் அகத்தியன். வேண்டாமே. இருவருக்குமே அகத்தியன் யானே கால் பிடிக்கிறேன் என்று, அன்று முதல்தான் கால் பிடித்துவிட ஆரம்பித்துவிட்டேன். அதுதான் கால் பிடிக்க போனேன் என்று சொன்னேனே, அதற்கு அர்த்தம் இதுதான். சிவபெருமான் ஆசை பட்டதுதான் உண்மை. ஒரு நாளும் சிவபெருமான் ஆசை பட்டவனல்லன். சித்தர்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்து சீர்படுத்தி, செயல்படுத்தி வருகிறவன். அன்னவனுக்கும், பரந்தாமன் போல் கால் பிடித்து விட வேண்டும் என்று ஆசை வந்ததே அபூர்வம் தான். சித்தனுக்கு அந்த ஆசை வரக்கூடாது. தலையாய சித்தனுக்கும், தலையாய சித்தனாக இருக்கின்ற முருகப் பெருமானுக்கும் தந்தையாக இருக்கின்ற சிவபெருமானுக்கும், இப்படி ஒரு ஆசை வரக்கூடாது தான், ஆனால், கால் பிடிக்கச் சொன்னதும் பார்வதி தேவி மறுத்துவிட்டாளே! அன்போடு தான் மறுத்துவிட்டாள். கோபத்தோடு அல்ல. சாதாரண சமயமாக இருந்தால், சிவபெருமான் ருத்திர தாண்டவமே ஆடியிருப்பார். என்னவோ நேற்றைய தினம், முக்கணன்னனுக்கு, இந்த தர்ம சங்கடமான நிலைமையை போக்குவதற்குத்தான், அகத்தியன் இருவருக்குமே கால் பிடித்துவிட்டுக் கொண்டுதான், வாக்குறுதியை கொடுத்துக் கொண்டிருந்தேன்.  அற்புதமான காட்ச்சியடா. அன்னவனுக்கு கால் பிடிக்கும் பாக்கியம் அகத்தியனுக்கு கிட்டியது. அந்த அம்பாளுக்கும் கால் பிடித்து, அவள் என்னை உச்சி முகர்ந்து, அவள் வாழ்த்தையும் பெற்று விட்டு வந்தேன்.

இப்பொழுது யாம் பாபநாசத்திலே இருக்கிறேன். என்னடா? இப்படி விந்தைமிகு செயலை செய்கிறாயே என்று கேட்காதே. பாபநாசத்திலே, முருகப் பெருமான் சன்னதியிலே, ஓரத்திலே அமர்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில மணி நேரத்திலே அருவியோடு அருவியாக கலந்து, அன்னவர்கள் நீராடும் போது அருகில் இருந்து, நேற்றைக்கு தாமிரபரணி நதியில், லோபாமுத்ரா நதியாக வந்து நீராட வந்தவர்களை எல்லாம் அள்ளித் தெளித்து ஆசிர்வாதம் பண்ணினாளே, அந்த பாக்கியம் யாருக்கும் கிட்டவில்லை என்ற குறை எனக்கு தெரியும். பேசாமல் நீங்களும் நீராடப் போயிருக்கலாமே, ஏன் போக வில்லை என்று நான் உங்களை கேட்க்க மாட்டேன். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து, எம் பெருமான் முக்கண்ணனை கால் பிடித்த கையோடு,  அந்தப் புனிதக் கையோடு வந்திருக்கிறேன். உங்களுக்கும், அருவியிலே குளிக்கும் போது, அகத்தியனே முதுகை தேய்த்து கொடுப்பது போல, நீரோடு நீராக கலந்து, என் நன்றி கடனை செலுத்த வருவேன். நீங்கள் நீராடும் பொழுது அகத்தியன் நான் அங்கிருப்பேன். உங்களை குளிர் ஊட்டுவேன், குளிப்பாட்டுவேன். ஆக, எத்தனை பாபம் செய்தாலும், சிறிதளவு புண்ணியம் கூட செய்யாவிட்டாலும், பக்தியை மேற்கொள்ளாவிட்டாலும், அவருக்கெல்லாம், இந்த பாபநாசம் நீரிலே குளித்துவிட்டால், அந்த பாபம் தொலையுமென்று,  ஏற்கனவே, எழுதப்பட்ட நியதி அது. ஏன் என்றால், பாமர ஜனங்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், தெய்வத்தையே நம்புகிறவர்களுக்கு எல்லாம் என்னடா திக்கற்ற கதி, எல்லோரும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடியுமா? செய்ய இயலாது. அப்படிப் பட்டவர்கள் இங்கு வந்து அருமையாக நீராடி, சென்றாலே, அந்த பாபம் போகும் என்று வரப்பிரசாதத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.  ஆக, இங்கு நீராடுகிற எத்தனை பேர்களாக இருந்தாலும் சரி, எத்தனை விகல்பமான மனிதர்களாக இருந்தாலும் சரி, ஒருமுறை இங்கு நீராடி விட்டால், பாபம் தொலைந்து விடும். பாபம் தொலைந்துவிட்டால் மறுபடியும் பாபம் செய்யக்கூடாது என்பதற்கல்ல, ஓரளவு தான் அந்த பாபம் போகும், என்பதே உண்மை.  ஆகவே, அவர்களுக்கும் அந்த பாபம் போக்கும் வன்மை, அகத்தியன் தான் அந்த முக்கண்ணனிடம் சொல்லி, வலுக்கட்டாயமாக வாங்கிக் கொடுத்த புண்ணிய இடமடா இது. 

இந்த ஓலை படிக்கிறானே, இங்கு தான், அகத்தியன் ரெண்டாவது யாகத்தை செய்தான். அகத்தியன் மட்டுமல்ல, பிரம்மதேவர் வலது பக்கத்தில் அமர்ந்து கொள்ள, நந்தியம் பெருமான் ஓரத்தில் அமர்ந்து கொண்டு, யாக மந்திரங்களை சொல்ல, அத்தனை பேர்களும் அமர்ந்து யாகம் செய்த புண்ணிய இடம் தான் இந்த இடம். அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு அகத்தியன் யான் உரைக்கிறேன், சுமார் 4817 ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியன் அமர்ந்து யாகம் செய்த புனிதமான இடம் இது. அப்படிப்பட்ட புனித இடத்தில் அமர்ந்து தான் உங்கள் அனைவருக்கும் அருள் வாக்கு தந்து கொண்டிருக்கிறேன். ஆகவே, இந்த இடம் மிகப்புனிதமான இடம் மட்டுமல்ல, பாமர மக்களுக்கும், இன்னவர் துணையாக இருக்கும் குழந்தைகளுக்கும், பாபத்தை போக்கி தருகின்ற புண்ணியத்தை வாங்கித் தருகிறேன். ஏன் என்றால் எத்தனையோ பேர்களுக்கு மனதிலே குறை இருக்கும். தான் மட்டும் புண்ணியத்தை சம்பாதிக்கிறோமே, வீட்டில் உள்ள அனைவரும் வர முடியாமல் போயிற்றே, அவர்களுக்கு எப்படியடா பாபம் கழியும்? மறு விமோசனம் உண்டா? என்று அன்னவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் அகத்தியன் யான் அறிவேன். அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த இடத்தில், அவர்கள் சார்பாக, நீராடினால் 33.1/33 விழுக்காடு புண்ணியம் அவர்களுக்கு போய் சேரும்."

இதற்கிடையில் ஒருவர் குறிக்கிட்டு "சாமி! சரியா கேட்கவில்லை! மறுபடியும் சொல்லுங்களேன்" என்றார்.

உண்மைதான்! கோவிலுக்கு வந்தவர்களினாலும், சிறு குழந்தைகள் ஓடி விளையாடுகிற சப்தத்தினாலும், அகத்தியர் சொன்ன முக்கியமான விஷயத்தை அவர்களால் கேட்க முடியவில்லை என்பதை உணர்ந்து, நான் படித்ததை சுருக்கமாக, அவர்களுக்கு மறுபடியும் சொன்னேன்.

"அதாவது, படிப்பறிவில்லாத, பாமர மக்களுக்கு, கோவிலுக்கு போகாமல் இருக்கும் சூழ்நிலையிலும், அந்த மாதிரி மக்கள், இங்கு வந்து குளிச்சா அவர்கள் செய்த பாபத்தின் 33.1/33 விழுக்காடு கரைந்து போகும்.  இதுக்காக முக்கண்ணனிடம் சண்டை போட்டு, பக்தி பண்ணினால்தான் பாபம் போகும் என்று சொல்லக் கூடாது, பக்தி இல்லாதவர்களுக்கும் அந்த பாபம் போகவேண்டும். என்று அந்த வரப்பிரசாதத்தை வாங்கிக் கொடுத்தார் அகத்தியர். ரெண்டாவது, நான் உட்கார்ந்திருக்கிறேனே இந்த இடத்தில்தான், அவர், இரண்டாவது யாகத்தை செய்தார். அதையும் காட்டத்தான் வந்தார். மூணாவது, உங்களில் யாருக்குன்னு தெரியாது, யாரோ மனசுல நெனச்சிருக்கீங்க. நமக்கு மட்டும் புண்ணியம் கிடைக்கிறதே, வீட்டில் இருப்பவர்களுக்கு இந்தப் புண்ணியம் கிடைக்கவில்லையே, என்கிற மன வருத்தம் அவர்களுக்கு இருந்திருக்கு.

"அவர்களை அழைத்து வரமுடியாது, இயலாது என்பதை அகத்தியன் நேற்றே சொன்னேன்.  அந்த புண்ணியம் கூட இப்பொழுது நீராடப் போகும் போது, நீங்கள் பண்ணுகின்ற புண்ணியம், 33.1/3 விழுக்காடு புண்ணியம் அவர்களுக்கு, இயல்பாகவே சென்று சேர்ந்துவிடும். ஆகவே, நீங்கள் எந்த புண்ணியம் பண்ணினாலும், இயல்பாகவே, உங்கள் வீட்டாருக்கும், வீட்டை சேர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூட போய் சேரும். நீங்கள் அழைத்து வர முடியாதவர்களை, நினைத்து இங்கு குளித்தீர்கள் என்றால், உங்களுக்கு இதுவரை கிடைத்த புண்ணியங்கள், நேற்றைக்கு கிடைத்த புண்ணியங்கள், இன்றைக்கு கிடைக்கப் போகிற புண்ணியங்கள் எல்லாமே, 33.1/3 விழுக்காடு புண்ணியம் இங்கிருந்து அவர்களுக்கு இயல்பாகவே, பரிவர்த்தனை ஆகிவிடும். ஆதலால், நீங்கள் மட்டும் வரவில்லை, உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும், புண்ணியத்தை வாங்கித் தருகிற வாய்ப்பு இங்கு இருக்கிறது, என்கிறார்.

"அது மட்டுமல்ல, நேற்றைய தினம் ஆங்கோர் தாமிரபரணியிலே எந்தெந்த தேவதைகள், நதி தேவதைகள் வந்து நீராடினார்களோ, அத்தனை தேவதைகளும், இன்று இங்கு வந்திருக்கிறார்கள். இன்று மதியம் மூன்று மணிவரை இங்குதான் இருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் எல்லாம் அமைதியாக சென்று ஆனந்தமாக நீராடினால், அகத்தியன் மட்டுமல்ல, அந்த புனித நதி தேவதைகள், யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, கோதாவரி, வைகை, தாமிரபரணி, காவேரி, கிருஷ்ணா, ஆகிய 8 நதிக்கரை தெய்வங்களும், இங்கு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு நீராடினால், 8 புண்ணிய தலத்தில் நீராடிய புண்ணியமும் கிடைத்துவிடும். என்னடா இது கதை விடுகிறேன் என்று எண்ணுகிறாயா? இல்லை இல்லை. ஏன் என்றால் மானிடர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். இதை நான் அடிக்கடி ஞாபகப் படுத்துகிறேன். நீங்கள் எல்லாம் "பகுத்து அறிவாளிகள்" ஆயிற்றே. இதெல்லாம் நடக்குமா? பொய்யா? ஏட்டிலே ஏதோ சொல்லுகிறானே என்று எண்ணாதே. இது கிடைக்காத பாக்கியம் என்று சொல்கிறேன். இல்லை என்றால் உன்னை பாபநாசத்துக்கு வரச் சொல்லி இருக்க மாட்டேன். உன்னை வேறு எங்காவது திசை திருப்பி அனுப்பியிருப்பேன்" என்றார்.

சித்தன் அருள்............ தொடரும்!

8 comments:

  1. ஓம் அகத்திசாய நம; Awesome , Interesting Information. Hope someday to visit these holy places mentioned by Sage Agasthiyar. Thanks for your Valuable Blog.

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி.
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  4. Om Agasthiyare Potri Potri..

    romba nandringa ayya.thoguthu koduthatharku.ellam iraivan nam maha siddhar arul.kankalil kanneerae varukirathu.

    thanks Ayya.

    ReplyDelete
  5. Jai Sarguru OM Agathisaya Namaha Sarguru Patham Saranam Patham

    ReplyDelete
  6. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  7. பலர் வாழ்வில் நன்மைகள் செய்து விழ்கேற்றிய பெரியவரின் தங்கைகளின் திருமணம் நடந்தேரியதா?

    ReplyDelete
  8. மிக்க நன்றி.
    பதில் கிடைக்காதோ என்றிருந்தேன்.
    எல்லாம் அகதீசபெருமானின் அருள்.

    ReplyDelete