​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 October 2013

சித்தன் அருள் - 144 - நம்பிமலை!

ஆக, எது நித்தியம், எது அநித்தியம் என்பதை எல்லாம், எத்தனையோ பேர்களுக்குத் தெரிந்தாலும், தெரிந்தே செய்கின்ற பாபங்கள் பலப் பல. அந்தப் பாபங்கள் எத்தனை தெரிந்தே செய்திருந்தாலும், இங்கு உள்ளோர் ​​அனைவர், அத்தனை பேருக்கும், அதிலிருந்து விடுதலை பெற வைக்கிறேன். அது தான் இன்று முக்கியமான செய்தி. யார் யார் என்னென்ன பாபங்களை, தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, கோபத்திலோ, ஆத்திரத்திலோ, ஆக, யார் சொல்லை கேட்டோ, தன்னிலை மறந்தோ, ஏதேனும் செய்திருந்தால், அத்தனை பாபங்களையும், இந்த புனித நதியில் அகத்தியன் தாரை வார்த்துக் கொடுக்கிறேன். ஆக, இன்றுமுதல் இங்குள்ள அத்தனை பேர்களும் இந்த நிமிடம் முதல் புண்ணியவான்களாக மாறிவிட்டார்கள். 

அன்றொரு நாள் குளிக்கச் சொன்னன். சொன்னபோது எதற்கு என்று எதிரே கையை காட்டி "நீராடி விட்டு வந்தால் போதுமே" என்றான். நானே உங்கள் அனைவருக்கும் இந்த புனித நீரை கொண்டு நீராடி வைக்கிறேன். ஆக, அகத்தியன் நீராடி வைத்த காட்சி இது வரைக்கும் கேட்டதில்லை. என்றைக்காவது அகத்தியன் தனக்குத் தானே நீராடிக் கொண்டதாக வரலாறே இல்லை. அகத்தியனுக்கு நீராட  வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அகத்தியன் புனித நீரை கொண்டு ஆட்டியதெல்லாம், எம்பெருமான் முக்கண்ணனுக்கும், நம்பி திருமலைக்கும் தான் நீராட்டியிருக்கிறேன். இதே நாளில், இதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில், இங்கு உள்ளுக்குள் அமர்ந்திருக்கின்ற நம்பி பெருமாளுக்கு அகத்தியன் நீராடிக் கொண்டு இருக்கிறேன். அது யாருக்கும் தெரியாது. கண் திறந்து கண் மூடிப்  பார்த்தால்,அந்த நம்பிக்கே பாலபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் அகத்தியன் செய்து கொண்டிருக்கிறேன். ஆக அதையும் செய்துகொண்டு உனக்கும் வாக்கு தருகிறேனடா! அந்த புனித மிகு நீர் அருகிலே ஓடுகிறதே, ஆனந்தமாக சலசல என்ற சப்தத்தோடு. அந்த சப்தத்தை கணக்கிட்டால், 9 வகையான ராகங்கள் கிடைக்கும். அந்த ஒன்பது வகை ராகங்களை கொண்டுதான் அந்த நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த புனித நீரை அகத்தியன் கையிலே எடுத்து, இங்குள்ள அத்தனை பேருக்கும் நீராடல் போல தெளித்திருக்கிறேன். ஆகவே, சற்று முன் இவன் சொல்லியிருப்பான். 2 நாழிகைக்கு முன்பாக செவ்வானத்திலிருந்து சிறு சிறு துளி நீர் விழுந்தது. மழை எப்படி விழுந்தது என்று எல்லோரும் எட்டிப்பார்த்தார்கள். அந்த நீர், அகத்தியன் தெளித்த நீரடா. அந்த நீரை தெளித்து, உங்களை எல்லாம் புண்ணியவான்களாக ஆக்கிவிட்டுத்தான் அகத்தியன் அழைத்து வந்திருக்கிறேன். சில காதம் நடக்கச்சொன்னேன். மலையில் கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காகவல்ல. இப்படிப்பட்ட மலைகளிலும், காடுகளிலும் தான் சித்தர்கள், காலாற நடந்து போய் கொண்டிருக்கிறார்கள். சற்று முன் அகத்தியனை  நோக்கி ஒரு சித்தன் வந்தான். அந்த சித்தன் பெருவிரலாலேயே நடப்பான். அப்படி பெருவிரலால் உனக்கு முன் நடந்து வந்தது யாருக்குமே தெரியாது. அவன் தாண்டா, உங்களை கை தூக்கி அழைத்து வந்து, உட்கார வைத்திருக்கிறான். அவன் காலாலே நடந்ததில்லை. கால் பெரு விரலாலே நடந்தவன். அவனும் இதோ அமர்ந்திருக்கிறான் பக்கத்திலே. அன்னவன் அற்புதமான சித்தன். ஆனந்தமான சித்தன். அவன அகத்தியனுக்கு மிக வேண்டியவன். அவன் யார் என்று பின்னர் சொல்கிறேன். அந்த சித்தன்தான் உங்களை எல்லாம் தட்டிக் கொடுத்து, காற்றாக, மரத்தின் இலையாக, சந்தோஷத்தை விட்டுக் கொடுத்து, கை பிடித்து அழைத்து வந்து உட்கார வைத்திருக்கிறான். அகத்தியனை சுற்றி 17 சித்தர்கள் இருக்கிறார்கள். இன்னும் பலரும் வந்து கொண்டு இருக்கிற நேரம். இந்த காட்சி எத்தனை பேர்களுக்கு கிடைக்கும் என்று எண்ணுகிறாய். எத்தனை வித புண்ணியங்கள் பண்ணியிருந்தால், இந்த காட்சி கிடைத்திருக்கும் தெரியுமா? ஆகவே, மனித உள்ளங்கள் எல்லாமே வித்யாசம் இல்லாமல் இருக்கவேண்டும்.

சற்று முன் செப்பினான் ஒருவன். நான் வேறு குலத்தை சேர்ந்தவன். எனக்கு எப்படி இந்த பாக்கியம் என்று. "தேவர்" குலம் என்ன சாதாரண குலமா? அந்த குலத்தை பற்றிய வரலாறு உனக்கு தெரியாது. மிகப் பெரிய வரலாறு உண்டு. உந்தன் முன்னோர்கள் எல்லாம் படிப்படியாக அன்னதானம் பல செய்து, இதயங்களை குளிரவைத்து, ஏராளமான உயிர்களுகெல்லாம் உயிர் கொடுத்து வாழ்ந்த குடும்பம் அது. முன் ஜென்ம தாத்தாக்கள், பாட்டிக்கள் என்னென்ன அன்னதானங்கள் எல்லாம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று அகத்தியன் பெரும் கணக்கை எடுத்துச் சொல்வேன். அதற்கெல்லாம் இப்பொழுது நேரம் இல்லை. ஆகவே, மனித நேயம் தான் இங்கு முக்கியம். அகத்தியன் என்றைக்காவது சாதி வேறுபாடு பார்த்ததுண்டா? வேடர் குலத்தை சேர்ந்த கண்ணப்பனுக்கு அபய ஹஸ்தம் கொடுத்து முக்கண்ணன் மோக்ஷம் தரவில்லையா? ஆகவே, இறைவனுக்கும், சித்தர்களுக்கும் ஜாதி மதம் ஏதும் இல்லையடா! ஆத்மா ஒன்றுதான் முக்கியம். அந்த ஆத்மா பரிசுத்தமாக இருக்கவே, அகத்தியன் இங்கு அழைத்து வந்தேன். முன்னோர் சமயத்தில் இவர்கள் எல்லாம், அகத்தியன் போல சித்தர்களை, சிவிகையில் தூக்கி வந்து கீழே இறக்கி, நம்பி தனை தரிசனம் செய்து விட்டு, பின் அதே சிவிகையில் தூக்கிவந்து கீழே இறக்கிய காட்ச்சிகள் எல்லாம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த சிவிகையை தூக்கி வந்தவன் பெரும் புண்ணியவானாக, வானத்தில் இன்று நட்சத்திரமாக நின்று கொண்டு இருக்கிறான் என்பதெல்லாம் பெரும் கதையடா.

ஆக, இந்த நம்பி கோயிலில் இன்னொரு விஷயமடா! இதோ அற்புதமான காட்சி அகத்தியனுக்கு தெரிகிறது. சற்று கண் மூடிப் பார்த்தால், இந்த மலையின்  தோற்றமும், சுற்றுப்புற சூழ்நிலைகளும், அருவி நீரோட்டமும் எல்லாம், அஹோபிலத்தை பற்றியே நோக்கி எண்ணத்தோன்றும். அஹோபிலம் சென்றவனுக்குத்தான் அந்த அருமை தெரியும். அதே அஹோபிலத்து நரசிம்ஹன் இங்கு பக்கத்தில் அமர்ந்து அகத்தியன் என்ன வாய் திறந்து சொல்லப் போகிறான் என்று வாய் மூடி கேட்கிறானே, இதை விட அகத்தியனுக்கு வேறென்னடா பெருமை வேண்டும். நரசிம்ஹனே இங்கு வந்து என் வார்த்தையை கேட்கிறான் என்றால் அவனை எங்கு வைக்க வேண்டும். அவனுக்கு நான் சேவை செய்திருக்கிறேன். அவனுக்காக அன்னதானம் செய்திருக்கிறேன். கோவில் மணி அடித்திருக்கிறேன். அவனுக்கு எத்தனையோ விதமான சேவை செய்து, கை கட்டி வாய் பொத்தி, அவனிடம், "எப்படி இரண்யவதம் செய்தாய்?" என்று கேட்டிருக்கிறேன்.  நரசிம்ஹனே, இரண்ய வதத்தை பற்றி அன்று அஹோபிலத்தில் கருணை கூர்ந்து காட்சி கொடுத்தான். எல்லோரும் சொல்வார்கள், அகத்தியனுக்கு சிவபெருமான் திருமண காட்சி ஒன்று தான் என்று மிகைபடுத்துகிறார்களடா. அகத்தியனுக்கு, நரசிம்கனே அன்றைக்கு ஒருநாள் ஹிரண்ய வதத்தையே கண் கொள்ளக் காட்ச்சியாய் காட்டினான். அந்த பெரும் புண்ணியவான், பெரும் கடவுள் இன்றைக்கு என் பக்கத்தில் நன்றியுடன்அமர்ந்துகொண்டு இருக்கிறான்.  அவனும் காது கொடுத்து கேட்கிறான், அகத்தியன் என்ன சொல்லப் போகிறான் என்று. அகோபில நரசிம்கனே இங்கு வந்து அமர்ந்திருக்கிற நேரமடா! நீ அஹோபிலத்துக்குச் சென்று நரசிம்ஹனை தரிசிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இந்த இடத்தில் ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு, அன்னவனை நினைத்துக் கொண்டு பார்த்தால் உன் கண்ணுக்கு அந்த நரசிம்ஹர் காட்சி தருவார். அந்த நரசிம்ஹரை அகத்தியன் யான் கேட்கிறேன். அவரும் புன்னகை பூக்கிறார். ஆக, புன்னகை பூக்கிறார் என்றால் காட்சி தரப்போகிறார் என்று அர்த்தம். ஆக, இங்குள்ள ஏழு பேருக்கும், அவரை நினைத்துப் பார்த்தால், அஹோபில நரசிம்ஹனே அகத்தியனை நோக்கி வந்திருக்கிற காலமடா. ஏன் அஹோபிலத்திலிருந்து இங்கு வந்தான் என்று கேட்டால், இன்று தான் மிக முக்கியமான நாள். நம்பியும், அஹோபில நரசிம்ஹனும் ஒன்று தானே. அந்த நம்பிக்கு அகத்தியன் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், தேன் அபிஷேகம், இது போன்ற 28 அபிஷேகங்களை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நான் நடத்துகின்ற அபிஷேக காட்சி இருவரும் கண்டு கொள்ளட்டுமே என்று தான் அவர்கள் முன் அமர்ந்திருக்கிறேன். மனிதர்கள் தெய்வத்தை பார்ப்பது கடினம். தெய்வம் மனிதர்களை பார்ப்பது மிக சுலபம். தெய்வ தரிசனம் என்பது ஒரு சிலருக்குத்தான் கிடைக்குமே தவிர, மற்றவர்களுக்கு கிடைக்காது. ஆனால் அந்த விதியையும் மீறி என் மைந்தர்களுக்கு அகத்தியன் சண்டை போட்டாவது காட்டுவேன். ஏன் என்றால், ஒரு முறை தெய்வ தரிசனம் பெற்றவன், மறு முறை உயிரோடு இருப்பதில்லை என்பது நியதி, ஒரு கணக்கு. ஏற்கனவே ஒரு முறை இதை பற்றி சொன்ன போது, தெய்வத்தை ஒளி வடிவில் காட்டியவன் மறு நாள் உயிரோடு இருந்ததில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு ஆங்கில படத்தை எடுத்தவனை பற்றி கூறியிருக்கிறேன்.  ஆனால் பலமுறை தெய்வ தரிசனத்தை அகத்தியன் மைந்தனுக்கு நான் காட்டியிருக்கிறேன்.  ஆகா, மைந்தனுக்குத்தான் தரிசனமா, எங்களுக்கு எல்லாம் கிடையாதா என்று உரிமையோடு போராடி வந்திருக்கிறார்கள் இவர்கள் எல்லாம். அந்த உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஏன் என்றால், இங்கு இருக்கிற அத்தனை பேர்களுமே அகத்தியனுக்கு வேண்டியவர்கள். அகத்தியனை, அங்கமெல்லாம் பாராட்டி, சீராட்டி வளர்த்தவர்கள். அகத்தியனை தம் கை குழந்தையாக கூட பாராட்டியிருக்கிறார்கள். இப்பொழுதல்ல முன் ஜென்மத்தில். ஆகவே, அந்த நன்றி கடன் அகத்தியன் செய்ய வேண்டாமா? அப்படிப்பட்டவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை தரவேண்டாமா? என்பதை சொல்லத்தான், இந்த நல்ல நாளில், நம்பிக்கு, சனிக்கிழமை, அனுஷம் நட்சத்திரத்தில்.......... அந்த நட்சத்திரம் கூட இந்த நல்ல நாளில் அங்கே பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. 27 நட்ச்சத்திரமும், 27 பொற்குடங்களை எடுத்து நம்பிக்கு ஆராதனை செய்து வருகிற காலமடா. அகத்தியன் மட்டுமா அபிஷேகம் செய்கிறேன்?   27 நட்சத்திரமும் ஆராதனை செய்து கொண்டிருக்கிற அருமையான காலமடா! இப்படிப்பட்ட நேரத்தில் தான் உங்கள் எல்லோரையும் வர வைத்து, அவன் சன்னதி முன் அமரவைத்து, நம்பிக்கு அபிஷேகம் செய்கிற அந்த கண் கொள்ளா காட்ச்சியை, புண்ணியத்தை பெறட்டும் என்பதற்காகத்தான் உங்களையெல்லாம் வரவழைத்தேன். அது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ செய்திகளை சொல்ல வேண்டும். இதோ என்னப்பன் முக்கண்ணனும் கூட வந்து கொண்டிருப்பதாக தகவல். ஒளிப்படத்தில் கேட்பதுபோல் இருக்கிறதல்லவா. இதை நம்பலாமா, வேண்டாமா என்று யோசிக்கலாமா? 

எங்காவது நம்பி ஆலயத்தில் சிவ பெருமான் வந்து அமர்ந்ததாக கேள்விப்பட்டிருக்கிறாயா? இதோ இங்கு ஒரு புதிய வரலாறு இன்று எழுதப்பட்டிருக்கிறது.

சித்தன் அருள் ............ தொடரும்!​

8 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. I wish n pray even our sins are taken by Sri Agasthiya rishi...
    How blessed you are!!!

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  4. I am gifted by Maha rishi Agastheyar by having you as my friend and visiting your episodes
    in Siththan Arul.
    Longlive and god bless you.


    G.Venkataramanan.

    ReplyDelete
  5. My dear friend SRI SRI SRI VELAYUDHAM KARTHIGAYAN,

    You have changed my life path entirely towards Maharishi Agastheeevarar, and Now I am
    very happy in my life. I am proposed to go to Kodaganallur on 14-11-13 to take blessings
    from Guru Agastheesvarar. But All the credit goes to you first.

    Thanking you and longlive.

    Please continue this service for the benefit of our society.

    Thanking you once again.

    Yours

    G.Venkataramanan Alamelu.

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய நம!
    ஓம் அகத்தீசாய நம!
    ஓம் அகத்தீசாய நம!

    ReplyDelete
  7. நான் ஒருமுறை நம்பிகோயில் சென்றிருந்தேன். அங்கே மலை உச்சியில் நதியில் நீராடிவிட்டு வீடு திரும்பும் போது எனது பாவங்கள் அனைத்தும் தொலைந்து போனதாக ஒரு உணர்வு இருந்தது.

    ReplyDelete
  8. ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete