​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 2 August 2012

நாடியும் அதன் பின் விளைவும் !


சித்தன் அருள் தொகுப்பு நாடியில் வந்த விஷயங்கள் என்பது உங்களுக்கு தெரியுமே!  அந்த நாடியை வைத்து உலக நன்மைக்காக வாசித்தவர் இன்று இல்லை என்பதும் அதன் பிறகு வேறு ஒருவர் தெரிவு செய்யப்படாததினால் அந்த நாடி எங்கே போயிற்று என்பதை பலரும் அறியார்.

நாடி வாசித்தவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் நான் தான் அடுத்த வாரிசு என்று ஆசையை வளர்த்துக்கொண்டு அவருடன் இருந்தனர்.  ஒரு சிலர் வெளிப்படையாகவே சொல்லி திரிந்தனர்.  அப்படிப்பட்டவர்களில் ஒரு மருத்துவரும் இருந்தார்.அவருடைய மருத்துவ விஷயங்களில் நிறையவே ஆலோசனை அகத்தியரிடம் கேட்டு செய்து வர, ஒரு நிலையில், அகத்தியரே "போகர் சித்தரின்" மருத்துவ நாடியை வரவழைத்து, அந்த மருத்துவரிடம் கொடுத்து "லோக ஷேமத்துக்காக" இந்த மருத்துவ நூலை உபயோகித்துக்கொள்" என்று சொல்லி கொடுத்ததாக, அந்த நாடி வாசித்தவரே சொன்னார்.  அந்த போகர் மருத்துவ நாடி அவர் கைக்கு வந்ததிலிருந்து அவருக்கு ஏறு முகமாக வாழ்க்கை மாறியது.  மருத்துவரும் மனிதன் தானே. சற்று அதீதமாக ஆசை பட தொடங்கினார்.  மருத்துவ உதவிக்கு வாங்குகிற பணம் அவர் மனதை நிறையவே மாற்றியது.

திடீரென்று நாடி வாசித்தவர் மறைந்துவிடவே அந்த நாடி அவர் வீட்டு பூசை அறையில் வைக்கப்பட்டிருந்தது.  ஒருநாள் அந்த மருத்துவர் வந்து நாடி வாசித்தவரின் மனைவியிடம் "அம்மா! அந்த நாடி கட்டை கொடுங்களேன்! சும்மா தானே இருக்கிறது.  என் வீட்டில்வைத்து பூசை செய்த்துவிட்டு, பல கோயில்களுக்கும் கொண்டு சென்று விட்டு வருகிறேனே" என்று கூறி பெற்றுக் கொண்டு சென்றார்.  கொண்டு சென்றவர் அதை திருப்பி கொண்டு வைக்கவில்லை.  எப்பொழுது கேட்டாலும் அது தன் வீட்டு பூசை அறையில் இருப்பதாக கூறி சமாளித்தார்.  அனைத்தையும் பொறுமையாக இருந்து கவனித்துக்கொண்டிருந்த, உண்மை அறிந்த பல நண்பர்களும் அவரிடம் "இது தவறு! அகத்தியர் அனுமதி இன்றி அந்த நாடி வேறு இடத்தில் இருக்ககூடாது.  அதற்காக ஆசை படாதீர்கள்" என்று கூறினார்கள்..  அவர் யார் வார்த்தைக்கும் செவி சாய்க்கவில்லை.  அகத்தியர் ஒருநாள் நிச்சயமாக தனக்கு அருள் புரிவார் என்று நினைத்து அந்த நாடியை அதன் உரியவரிடம் கொண்டு சேர்க்கவில்லை.

அகத்தியரும் நாடி படிக்க வேறு ஒருவரை தெரிவு செய்யவில்லை.

ஒரு வருடம் ஆனதும், அந்த மருத்துவர் நோய் வாய்ப்பட்டார்.  உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக தன் செயலை நிறுத்த தொடங்கியது.  குடல், இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைந்தது.  எந்த மருந்துக்கும் அவை வழங்கவில்லை.  ஒரு மருந்தும் பிரயோசனம் இல்லாமல் போயிற்று.  உடல் நிலை எதனால் கீழே செல்கிறது என்பதை அவர் உணர வெகு நாட்காளாகியது.  இதற்கிடையில் ஒரு மகானை சந்தித்து தன் பிரச்சினையை சொல்ல, எடுத்த எடுப்பில் "நீ சித்தனுக்கு பிடிக்காத விஷயத்தை செய்துவிட்டாய்.  அதற்கு நிவர்த்தி செய்த்துவிட்டு பின்னர் வா" என்று கூறி அனுப்பினார்.  தெள்ளத் தெளிவாக கூறியும் அவர் அந்த நாடியை விடுவதில் மனதில்லாமல் தன்னிடமே வைத்துக்கொண்டிருந்தார்.

மூன்று நாட்கள்  முன்னால், அவரும் மறைந்து விட்டார்.  அவருக்கு அப்பொழுது வயது ஐம்பது.  பலர் கூறியும் தகுதி இல்லாத ஒன்றுக்காக ஆசைப்பட்டு தன்னிடமே வைத்துக்கொண்டிருந்ததினால் இந்த வினையை சுமக்க வேண்டி வந்தது என்று எல்லோரும் கூறுகின்றனர்.

சரி! இங்கு இதை உங்களுக்கு சொல்ல காரணம் என்ன.  ஒன்று தான்.  நம் வாழ்க்கையில் நமக்கு என்றேனும் ஒருநாள் நாடி வாசித்தவர் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படலாம்.  அந்த தொடர்பை நல் வழிக்கு உபயோகபடுத்திக் கொள்ள வேண்டும்.  தகுதிக்கு மீறி ஆசை படக்கூடாது.  புரியும் என்று நினைக்கிறேன். 

நாடியில் வந்து சித்தர் நல்லதும் செய்வார்.  அதே நாடியில் தோன்றாமல் மறைந்து நின்று தண்டனையும் கொடுப்பார் என்பதற்கு இது உதாரணம்.

4 comments:

  1. true we are all waiting for agathiar to come again in naadi

    ReplyDelete
  2. When the time will come ? agathiyar saranam.

    ReplyDelete
  3. எந்த ஆதாரங்களின் அடிபடையில் நீங்கள் இதை வெளியீட்டு உள்ளீர்கள் என்பது புரியவில்லை.

    எனக்கு, ஐயா திரு. ஹனுமத்தாசன் அவர்களயும், மருத்துவர் திரு. செந்தில் நாதன் அவர்களயும் மிக நன்றாகவே தெரியும், மேலும் அவர்களோடு பழகிய அனுபவங்களும் உள்ளது.

    மூன்றாம் நபர் சொல்வதை வைத்து நீங்கள் செய்தி வெளியிட்டிர்களானால், அது உங்களின் அடையாளத்தை மாற்றிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரைக்க பயம் எதற்கு?????

      Delete