​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 2 August 2012

சித்தன் அருள் - 83!


"அவன்" நிறையவே தேடல்களை தனக்குள் தேக்கி வைத்தவன்,  எங்கேனும் யாராவது பேசிக்கொண்டு சென்றால் கூட கவனிக்காதது போல் இருந்து அதில் உள்ள ஏதேனும் ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அலைபவன்.  மனித வாசனையிலிருந்து விலகி வெகு தூரத்தில் நம் முன்னோர்கள் வழிபட்ட பல கோவில்களும் இன்றும் எங்கெங்கோ இருக்கிறது.  அவற்றை சென்று தரிசித்து அனுபவங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்கிற அணையாத நெருப்பு கொழுந்து விட்டு எரிகின்ற மன நிலையை உடையவன்.

மலை கோவில், மண்டபம், சிவபெருமான் சந்நிதி போன்றவை சுருக்கமாக கிடைத்த தகவலை எடுத்துக்கொண்டு, தன்னுடன் எங்கும் துணை வரும் நண்பரை கண்டு, தகவலை பரிமாறிவிட்டு  'தேடுங்கள்! எந்த இடமானாலும் நாம் போய் வரலாம்" என்றான்.

அவன் நண்பரோ உண்மையாகவே சிவனருள் பெற்றவர்.  ஒருநாள் நண்பர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு நபர், அவர் ஊரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் மலைமேல் சிவ பெருமான் குடியிருக்கும் ஒரு தலம் உள்ளது என்று கூற, செய்து கொண்டிருந்த வியாபாரத்தை நிறுத்தி விட்டு, வீட்டிற்கு வந்து தாயிடம் வெளியூர் சென்று வருவதாக கூறி, அந்த மலை நோக்கி பயணமானார், அவனுக்கு எந்த தகவலையும் தெரிவிக்காமலே.

நான்கைந்து நாட்களாக நண்பரை காணாமல், காத்திருந்து அவர் வந்து நடந்த உண்மையை விலாவாரியாக கூற,  அவன் அசந்து போனான்.  தான் தேடிய கோயில் கிடைத்துவிட்டதோ என்று கூட அவனுக்கு தோன்றியது.

இருந்தும் எதுவோ ஒன்று பொருந்தாமல் இருக்கவே, இருக்கட்டும் சென்று பார்த்து முடிவு செய்யலாம் என்று நினைத்து

"அடுத்து வரும் அமாவாசைக்கு நாம் இருவரும் போகலாம்.  எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வையுங்கள்" என்று சொல்லி விடை பெற்றான்.

அவனுக்கே தெரியாது, மலை மேல் குடியிருக்கும் சிவபெருமானார் அவனிடமிருந்து,  கடனை வட்டியுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளப்போகிறார் என்று, அவன் வாழ்க்கையே தலைகீழாக (நல்லதை நோக்கி) பயணிக்க போகிறது என்று.

அமாவாசைக்கு முதல் நாள், கிளம்பும் முன் "இறைவா! உன்னை நம்பி இறங்குகிறது இது!  கூட இருந்து துணை புரி" என்று சொல்லிவிட்டு நண்பருடன் பயணமானார்.  நண்பரின் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து கொள்ள ஒரு குழுவாக மாறியது.

மலை அடிவாரத்தில் நல்ல கூட்டம்.  அமாவாசை அந்த பெருமானுக்கு விசேஷமானதால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம்.  நடை பாதையில் இத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காததால், சீக்கிரமே அவன் சோர்ந்து போனான்.  கூட வந்த நண்பர் "இந்த பாதையிலேயே நேராக நடந்து வாருங்கள்.  வழி தவறி விடக்கூடாது" என்று கூறிவிட்டு வேகமாக முன்னே சென்று விட்டார்.

ஒரு நிலைக்கு மேல் நடக்க முடியாமல் போகவே, எங்கேனும் அமர்ந்து இளைபாறிவிட்டு செல்லாலாம் என்று உட்கார "சாமி! உட்காராதீங்க, அப்படியே நடங்க.  உட்கார்ந்து பின் நடந்தால் இன்னும் வலிக்கும்" என்று ஒருவர் கூறி செல்ல, உட்காருவதும் தடங்கலாயிற்று.

என்ன நடந்தாலும் பரவாயில்லை, என்று நினைத்து ஒரு இடத்தில் உட்கார்ந்தது அவர் சொன்ன கோவிலின் அங்க அடையாளங்களை நினைவுக்கு கொண்டு வர, அது ஒரு விதத்திலும், தான் செல்லும் வழிக்கு பொருந்தாமலே போக, நாம் தேடிய மலை கோவில் இது அல்ல என்று உடனே உணர்ந்தான்.  சரி! இத்தனை தூரம் வந்தாயிற்று, மேலும் எத்தனை தூரம் இருக்கும் என்று தெரியவில்லை.  தொடங்கியதற்கு கஷ்டப்பட்டாவது மேலும் நடந்து போய் இறைவனை தரிசித்துவிட்டு இறங்கி வந்துவிடலாம் என்று தீர்மானித்து மேலும் நடக்க, ஒரு வழியாக கோவில் சென்ற அடைய ஆறு மணி நேரம் ஆகியது.  மேலே சென்று சேர்ந்ததும் உடலில் உள்ள சக்தி அத்தனையும் போய் விட, ஓர் இடம் தேடி அமர்ந்து, தன் நண்பரிடம்

"முதலில் குளிக்க வேண்டும், எங்காவது தண்ணீர் இருந்தால் குளித்துவிட்டு பிறகு சுவாமியை பார்க்க போவோமே" என்றான்.

நண்பர் போய் பார்த்து வந்து அங்கு ஒரு இடத்தில் நீர் நிலை இருப்பதாக கூற எல்லோரும் சென்று குளித்து வந்த பின், கோவிலுக்கு சென்றனர்.

மாலை ஆறு மணி ஆகிவிட்டதால், கூட்டம் இல்லை. 

சந்நிதி முன் அவனை கொண்டு நிறுத்திய நண்பர் "இது தான் நான் சொன்ன கோயில்! தரிசனம் செய்துகொள்" என்றார்.

அவர், அவனை கொண்டு விட்ட கோவில் சந்நிதி "சதுரகிரி சுந்தர மகாலிங்கம்".  தான் தேடி வந்த கோவில் இதுவல்ல என்று அவனால் தீர்மானிக்க முடிந்தது.  இருப்பினும், அந்த இறைவடிவத்தின் ஈர்ப்பில் தன்னை மறந்தான், அவனுக்கு பின் மிகப் பெரிய வலை ஒன்று விரிக்கப்படுகிறது என்று அறியாமலே.

அன்றைய இரவு நடந்த பல திருவிளையாடல்களும் அவன் மனதை வெகுவாகவே மாற்றியது.  மறுநாள் காலை, சிவபெருமானிடம் உத்தரவு வாங்கி கொண்டு வெளியே வர, எங்கிருந்தோ தூரத்திலிருந்து ஒரு கோவில் மணி ஓசை கேட்டது.

இன்னும் ஒரு கோவில் இங்கு இருக்கா? என்று நண்பரிடம் வினவ, அவர் மேலும், அவனை சில தூரம் அழைத்து சென்று காட்ட அங்கே ஒரு சிவன் கோவில்.

"என்ன இது! அவர் சொன்னதில் ஒரு சன்னதி தானே இருந்தது! இங்கோ ஒன்றுக்கு மேற்பட்ட சன்னதிகள்" என்ற கேள்வி அவனுள் எழ

அதை புரிந்து கொண்ட நண்பர் "நாம் தேடும் கோவில் இதுவல்ல, ஆனால் இங்கு நமக்கு நிறையவே இறை அருள் கிடைக்கிறது.  இந்த சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் பெருமான் பெயர் "சந்தன மகாலிங்கம்".  இந்த சந்நிதி என்னை வெகுவாக பாதித்துவிட்டது.  எனக்குள் எதோ ஒரு குளிர்ச்சி பரவுவதை உணர முடிகிறது.  ஏன்! இதுவே நாம் இனி அடைக்கலம் அடையும் இடமாக இருக்கட்டுமே" என்றார்.

தேடினது கிடைக்காதபோது, கிடைப்பதுவரை, கிடைத்ததை  ஆட்கொள்வோமே என்று தீர்மானித்து "சந்தன மகாலிங்கம்" முன் ஒப்புதலை தெரிவித்தான், அவன்.

எங்கோ அதுவரை காத்திருந்த காற்று வேகமாக வந்து அவன் கையில் வைத்திருந்த விபூதியை தூக்கி வீசியது.  பறந்த விபூதியின் சில துகள்கள் தலையில் விழ தொடக்கம் குறிக்கப்பட்டது.

மகாலிங்கம் பகடை காயை உருட்ட தொடங்கினார்,

சதுரங்கம் ஆரம்பமானது, புதிய அத்யாயத்துடன்!

சித்தனருள்................. தொடரும்!

7 comments:

  1. aduthu varum nigazhvai padippadharkku migavum avalaga ulladhu, viraivil edhirparkiren - nandrigal pala - Om sri agatheesaya nama - Agathiyar adimai Ravi

    ReplyDelete
  2. ஆண்டவன் கணக்குகள்! கூட்டி கழிக்க நமக்கு ஏது சக்தி! நடப்பை எல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
  3. மகா குரு அகத்தியமாமுனிவர், இந்த அடிமையையும் ஆட்கொள்ள காத்திருக்கிறேன்,

    ஓம் அகத்திசாய நமக!!!
    ஓம் அகத்திசாய நமக!!!
    ஓம் அகத்திசாய நமக!!!

    குருவடிமை,
    நமசிவாயம் ராஜசேகர்

    ReplyDelete
  4. மகா குரு அகத்தியமாமுனிவர், இந்த அடிமையையும் ஆட்கொள்ள காத்திருக்கிறேன்,

    ஓம் அகத்திசாய நமக!!!
    ஓம் அகத்திசாய நமக!!!
    ஓம் அகத்திசாய நமக!!!

    குருவடிமை,
    நமசிவாயம் ராஜசேகர்

    ReplyDelete
  5. மகா குரு அகத்தியமாமுனிவர், இந்த அடிமையையும் ஆட்கொள்ள காத்திருக்கிறேன்,

    ஓம் அகத்திசாய நமக!!!
    ஓம் அகத்திசாய நமக!!!
    ஓம் அகத்திசாய நமக!!!

    குருவடிமை,
    நமசிவாயம் ராஜசேகர்

    ReplyDelete