​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 18 February 2021

சித்தன் அருள் - 984 - புண்ணிய ஸ்தலங்கள் - பெருமாள் - நவதிருப்பதி !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

​ஆலயம் தொழுவது சாலமும் நன்று என பெரியவர்கள் கூறி சென்றாலும், நமது குருநாதர் கூற்றின்படி, இறை சாந்நித்யம் நிறைந்த கோவில் தரிசனத்தில், நாம் ஒவ்வொருவரும், நம் கெட்ட கர்மாவை கழித்து, புண்ணியத்தை சேர்த்து இப்பிறவியிலேயே கரையேறி விடலாம் என்கிறார். அப்படிப்பட்ட கோவில்களில், இன்று பெருமாளின் நவதிருப்பதி கோவில்களை பற்றி பார்ப்போம்.

நவ திருப்பதி என்பது, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் உள்ளது. ஒன்று திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களிலும், இரண்டாவது கும்பகோணத்தை சுற்றியும் உள்ளது.

கும்பகோணத்தை சுற்றிய நவத்திருப்பதிகள் என்பது கீழ் வருமாறு.

  1. திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
  2. நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
  3. நாச்சியார்கோவில் - செவ்வாய்
  4. திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
  5. திருஆதனூர் - குரு
  6. திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
  7. ஒப்பிலியப்பன் கோயில் - சனி
  8. கபிஸ்தலம் - ராகு
  9. ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது

தசாவதாரமும் நவகிரகங்களும்:

நவகிரகங்களின் சன்னதி என்பது  பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படுகிற ஒரு நிலையை எங்கும் காணலாம்.   பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்யலாம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.

ஒன்பது கிரகங்களையும், தசாவதாரத்தையும் தொடர்பு படுத்தி ஒரு சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

இதன் அடிப்படையில் பார்த்தால் கிரகங்களை தசாவதாரத்துடன் தொடர்பு படுத்திவிட, 

  1. ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
  2. ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
  3. ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
  4. ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
  5. ஸ்ரீ வாமனவதாரம் - குரு
  6. ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
  7. ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
  8. ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
  9. ஸ்ரீ வராகவதாரம் - ராகு
  10. ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என அமையும்.

பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

  1. ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
  2. வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
  3. திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
  4. திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
  5. ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
  6. தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
  7. பெருங்குளம் - சனி ஸ்தலம்
  8. இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
  9. இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்

1. ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி கோவில்:-

திருத்தல அமைவிடம்:

ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:

தல மூர்த்தி : கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி : வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)
தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம் : சூரிய ஸ்தலம்

2. விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):-

சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்

3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்:-

செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.

தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம்

4. திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:

புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)
தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம்

5. ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:-

குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி

6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:-

சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)
தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம்

7. திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:-

சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம்

8.&9. திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):-

ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)
தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம்

நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து. காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம் செய்வது எளிது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை

    நன்றிகள் ஐயா

    ReplyDelete
  2. Om namo narayanaya
    Om sri lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  3. Sir I sent sms my name phone number city name to janakiraman sir phone number 8610738411
    I did not receive any sms yet now.
    And I can't contact him
    Plz help me to get Reading

    ReplyDelete
    Replies
    1. YOU NEED TO WAIT TILL AGASTHIYAR CALLS YOU!

      Delete
    2. Romba bayamma iruuku sir
      Please pray for me
      R k vignesh
      Madurai

      Delete