​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 November 2019

சித்தன் அருள் - 826 - அனந்தசயனத்தில் லக்ஷதீப திருவிழாவின் தொடக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

15/01/2020 அன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் லக்ஷ தீபம் என்கிற திருவிழா நடக்க உள்ளது. அன்றைய தினம், மொத்த கோவிலுமே, தீபத்தினால் அலங்கரிக்கப்படும். இறைவனுக்கு சிறப்பு பூசைகள் நடை பெரும்.

அப்படிப்பட்ட திருவிழாவுக்கு தொடக்கமாக, 56 நாட்கள் தொடந்து நடக்கிற "முறை ஜபம்" என்கிற மந்திர உச்சாடனம் இன்று தொடங்கியது. மந்திர உச்சாடனத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பத்மதீர்த்த குளத்தில், முட்டளவு நீரில் நின்று மந்திர உச்சாடனம் செய்வார்கள். இன்று முதல் 56 நாட்களுக்கு மாலை 6 மணிக்கு இது நடக்கும்.

இன்று ஜபம் நடந்த பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். ஒரு விஷயம் --> இங்கு நடக்கிற விஷயங்கள் எல்லாம், பெருமாளுக்கும், அகத்தியருக்கும், என்பதே உண்மை.





சித்தன் அருள் ................... தொடரும்!

6 comments:

  1. ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    பதிவிற்கு நன்றி ஐயா... உலகமும் எல்லா உயிர்களும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்க வேண்டும் நாம் அனைவரும்...

    ReplyDelete
  3. Ayya ennudaya brother ennum marriage akala but ருத்ராட்சம் podanum nenaikeranga.podalama ayya?enthana mugam vaithathu podalam.age 32
    அகத்தியர் உண்டு.

    ReplyDelete
  4. அகத்தியர் அடியவர்களே..
    இந்த பக்கத்தை பாருங்கள்..
    பத்மநாப சுவாமி கோவில் ஜலஜபம் காணொளி..

    https://twitter.com/Ashwinsampathk/status/1198264085495762944?s=09

    ReplyDelete
  5. மிக்க நன்றி அய்யா.
    அகத்தியர் உண்டு

    ReplyDelete