​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 June 2019

சித்தன் அருள் - 813 - அகஸ்தியர் லோபாமுத்திரை தரிசனம்!

[பிரதிஷ்டை தின அலங்காரம் ]


[வீதியுலா, அகத்தியர் மட்டும்] 
[ சன்னதியில், தாயாருடன் ] 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்தவாரம், புதன், வியாழக்கிழமை, இரண்டு நாட்களும், பாலராமபுரம் அகத்தியர் கோவிலில், "வேலை" பார்த்ததால், நேரமே கிடைக்காமல் போனது. ஆதலால், தொகுப்பை தட்டச்சு செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக, அவர் தரிசனத்தால் அடியேன் பெற்ற அருளை, அங்கு எடுத்த புகைப்படம் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் அவரை தரிசித்து அவரின் அருளை பெற்றுக்கொண்டு "சித்தன் அருளுடன்" நிறைவாக வாழவேண்டும், எனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்தவாரம் ஞாயிற்று கிழமைக்குள் தொகுப்பை வழங்கிட உதவுங்கள், என அகத்தியரிடம் வேண்டிக்கொண்டு வந்திருக்கிறேன். பார்க்கலாம், அவர் எப்படி அருளுகிறார் என்று.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

7 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  2. அம்மை அப்பன் போற்றி

    ReplyDelete
  3. Om lopamudra samata agastiyar thiruvadi pottri.nin padave saranam.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஐயா. இதனை காணும் அனைவருக்கும் பரிபூரண அருள் கிடைப்பதுக்கு அவர்களிடம் பிரார்த்திப்போம்.

    என்றும் அன்புடன்,
    வெங்கடேஷ்

    ReplyDelete

  5. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

    ReplyDelete
  6. Agnilingam ayya, Balaramapuram temple is located between Nagarkoil and Tiruvananthapuram?

    ReplyDelete
    Replies
    1. Yes. Get down at Balaramapuram Junction Bus Stop and ask for the temple.

      Delete