​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 20 January 2017

சித்தன் அருள் - 573 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மற்றவர்களுக்கு இருக்கிறது என்று சொல்வதே தன்முனைப்பின் அடையாளம்தான். உலகிலே மிகவும் தீயவர் யார்? மிகவும் நல்லவர் யார்? என்ற தேர்வு பஞ்ச பாண்டவர்களில் தர்மருக்கும், கௌரவர்களில் துரியோதனனுக்கும் வைத்தபொழுது, துரியோதனன் சென்று வந்து, முனிபுங்கவர்களிடம் "யாரைப் பார்த்தாலும் எனக்கு கெட்டவனாகத்தான் தெரிகிறார்கள். எல்லோரும் தீயவர்கள்தான். இந்த உலகம் தீயவர்களால்தான் நிரம்பப்பட்டிருக்கிறது" என்று கூறினானாம். தர்மர் வந்து கூறும்பொழுது "இந்த உலகில் எல்லோரும் நல்லவர்களே. இருக்கின்றனர். ஒரே தீயவன் நான்தான்" என்று கூறினானாம். இந்த சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது என்ன. தன்னுடைய பார்வையில், எல்லாம் நல்லவைகளாகத் தெரியவே தன்னுடைய மனதையும், சிந்தனையையும், கருத்தையும் அனுமதித்தால், அதுவே சிறப்பாகும். ஒரு மகா பெரிய தீயவனிடமும், ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும். எத்தனை பெரிய நல்லவனிடமும், எஃதாவது ஒரு தீய குணம் இருக்கும். நல்லவனிடம் இருக்கின்ற தீய குணத்தை சீர்தூக்கிப் பார்த்து, அவன் திருத்திக் கொண்டிய வேண்டும். தீயவனிடம் இருக்கக்கூடிய நல்ல குணத்தை, அவன் மேலும் வளர்த்துக்கொண்டு, அதன் மூலம் மற்ற தீய குணங்களை விட, அவன் முயற்சி செய்ய வேண்டும்.

3 comments:

  1. [ROUGH TRANSLATION] It is a sign of ego to see that others have possessions. When a debate arose between Duryodana of Kaurava and Dharma of Pandavas as to Who is the most good person? Who is the most evil person in the world?, Duryodana told the munis that “All appear bad to me…all are evil…this world is filled with bad people”. Dharma said “in this world, all are good. Only I am bad”. From this incident, understand that one should develop his thoughts, mind and viewpoints to see good in others. Even the most evil person, will have one good quality. Even the most good person, will have some bad quality. A good person should make efforts to come out of his bad quality and correct himself. A bad person should make efforts to develop further his good quality, and through that, drop his bad qualities.

    ReplyDelete