​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 January 2016

சித்தன் அருள் - 270 - "பெருமாளும் அடியேனும்" - 38 - ஆதிசேஷனும் சனீச்வரன் ஆதிக்கத்தில்!


காலம் காலமாக பெருமாளுக்குக் குடை பிடித்துத் தொண்டு செய்துவரும் ஆதிசேஷன் அன்றைக்கு என்னவோ சற்று மனம் குழம்பியபடியேதான் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

கல்கி அவதாரம் எடுக்கும் வரை பூலோகத்து மக்களைக் காப்பாற்ற வேங்கடவன் திருமலையில் கல் கடவுளாக அவதரித்தார். இது ஒரு வகை புது அவதாரம். கலியின் கொடுமை மிகவும் அதிகம். அதனைச் சமாளிக்க வேறு அவதாரம் எடுத்துப் பயனில்லை என்றுதான் வேங்கடவன் திருமலைக்குப் புறப்பட்டார்.

கலிபுருஷனும் தன் பலத்தைக் காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தான். திருமலைத் தெய்வத்தின் முன்பு கலியால் எதையும் சாதிக்க முடியவில்லை. எனவே சனீச்வரனுடன் சேர்ந்து, ஆதிசேஷனைத் திருமாலிடமிருந்து பிரித்து, திருமாலை பலமற்றவராக மாற்றவேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கினான்.

பல்லாயிரம் ஆண்டுகளாக தனக்குப் பக்கபலமாக இருந்த ஆதிசேஷனும் கலிபுருஷனால் பிடிக்கப்பட்டு தவறான பாதைக்குச் சென்று விடக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்த திருமால், அதை நாசூக்காகவும் சுட்டிக் காட்டினார்.

கருடாழ்வார் மாதிரி, தானும் திசை மாறிவிடுவேன் என்று திருமால் சொன்னது ஆதிசேஷன் மனதைப் புண்படுத்தியது. "திருமாலைவிட்டு ஒரு பொழுதும் அகலாத நான், எப்படியவருக்குத் துரோகம் செய்வேன்? எப்படி என்னை தவறாக எடைபோட்டுவிட்டார் திருமால்? அவருக்கு தெய்வமனசாட்சியே இல்லையா? " என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பிய ஆதிசேஷனை, சனிபகவான் இடை மறித்தார்.

ஈஸ்வரனுக்குப் பின் சனிபகவான்தானே கண்கண்ட தெய்வம் என்று எண்ணிய ஆதிசேஷன், சனீச்வரனைக் கையெடுத்துத் தொழுதார்.

"மங்களம் உண்டாகட்டும் ஆதிசேஷா!" என்று சனீச்வரன் வாழ்த்தினார்.

"தன்யனானேன்!"

"என்ன ஆதிசேஷா? ஏதோ ஒரு குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறதே. உண்மை தானா?" என்று பீடிகையைப் போட்டார்.

"ஆமாம் சனீஸ்வரரே! ஆமாம். தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை" என்றார் ஆதிசேஷன்.

"கலங்கவேண்டாம் ஆதிசேஷா! நான் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறேன். என்ன விஷயம்? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்" என்றார் சனீச்வரன்.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தங்களிடம் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை........... ஆனால்....."

"என்ன ஆனால்?"

"தங்களும் கலிபுருஷனும் சேர்ந்து இந்த பூலோகத்தில் கலி சாம்ராஜ்ஜியம் தொடங்கப் போவதாகக் கேள்வி. ஆகவே தங்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!" என்றார்.

இதைக் கேட்டு சனீச்வரன் கடகடவென்று வாய்விட்டு சிரித்தார்.

"ஆதிசேஷா! தாங்கள் மிகுந்த புத்திசாலி என்றுதான், இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால், தங்களும் மற்றவர்களைப் போல்தான். யார் என்ன சொன்னாலும் சட்டென்று நம்பிவிடுவீர்கள் போலும். தேவலோகத்தில் இருந்துமா இன்னும் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை?" என்று சனீச்வரன் தன் பொல்லாத்தனத்தை மெல்ல ஆதிசேஷன் மீது வீசினார்.

"தாங்கள் தவறாக நினைக்ககூடாது. என் காதில் விழுந்ததை அப்படியே சொன்னேன்!" என்றார் ஆதிசேஷன்.

"மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். தாங்கள் ஏன் என்னைக் கண்டு பயப்படவேண்டும்? தாங்கள்தான் எழுமலையாக மாறி, திருமாலுக்கு மிகமிக வேண்டப்பட்டவர்கள் ஆகிவிட்டீர்கள். பின் எதற்கு கவலை?"

"சனீஸ்வரரே! நான் பயப்படவில்லை. தங்களை நினைத்தும் கலங்கவில்லை. ஆனால் ஒரு சிறு தவறு. யாரை நான் கண் கண்ட தெய்வமாக எண்ணிக் கொண்டிருக்கிறேனோ, அதே திருமால் என்னை இப்போது நம்பவில்லை. அனலில் பட்ட பூச்சிபோல் துடிக்கிறேன்" என்று ஆதிசேஷன் சட்டென்று எல்லாவற்றையும் மனம்திறந்து கொட்டிவிட்டார்.

பழம் நழுவி பாலில் விழுந்தார் போல் சனீஸ்வரனுக்கு. இதைக் கேட்டதும் தாங்கமுடியாத சந்தோஷம் ஏற்பட்டது.

இனிமேல் ஆதிசேஷனைத் தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொள்ளலாம். பிறகு ஆதிசேஷனை வைத்து ஒவ்வொரு காயாக நகர்த்தித் திருமாலைப் பலமிழக்கச் செய்துவிடலாம்.

இப்படிச் செய்தால் பிரம்மாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும் ஆகிவிடும். கலிபுருஷனுடைய கோபத்தையும் தணித்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்து சந்தோஷப்பட்டார், சனீச்வரன்.

பின்னர் ஆதிசேஷன் தோளில் கையைப் போட்டார்.

கையைப் போட்டதுமே, ஆதிசேஷனுக்கு அஷ்டமச்சனி ஆரம்பித்து விட்டதாக திருமால் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.

பாவம், ஆதிசேஷன், இதனை உணரவில்லை. தன் சோகத்தைத் தீர்க்க வந்த மகாபுருஷர், மிகவும் உத்தமர் என்றுதான் ஆதிசேஷன் பெரிதும் நம்பினார்.

சித்தன் அருள்................. தொடரும்!

5 comments:

  1. Om Agatheesaya Namaha: Aum Sai Ram,

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ.
    ஐயா, வணக்கம்.எனக்குள் பல நாட்களாகவே ஒரு கேள்வி. நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
    'பெருமாளும் அடியேனும்' என்கிற இந்த தொகுப்பு யாருக்கேனும் ஜீவநாடியில் வந்த விஷயங்களா ( நம்பிமலை, கோடகநல்லூர் போல் ) அல்லது ஏதேனும் புராணங்கள்/ உப புராணங்கள்- இவைகளில் உள்ளனவையா அல்லது .............
    ‘’இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளா?!’’..............
    கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா.
    இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Suresh Kumar Anna, Thank you for the thoughts as Query (probably on behalf of many) and glad it stands clarified too by the grace of Ayya Agatheesar (30th Jan)

      Om Lobamudra sameedha Agatheesaya Namaha: Aum Sai Ram (please excuse me for typing in English)

      Delete
  3. ஓம் அகதீசாய நமஹ

    ReplyDelete
  4. Sree chakram mantram endral Evai...matrum sree chakra mantra Poojai evvaru seivathu thayai koornthu Vidal aliyungal ...vidaikaka kathirukiren mikka nandri om agatheesaya namah

    ReplyDelete