​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 1 May 2014

சித்தன் அருள் - 172 - அகத்தியப் பெருமானுடன் பயணம் நிறைவு பெற்றது!


ஆனால் இப்படி பவித்ரமான, புண்ணியம் நிறைந்த இடத்தில் தான் அகத்தியன் வாய் திறந்து பேசுகிறேன். அருமையான காட்சி, அருமையான நாள். மீண்டும், மீண்டும் இந்த புண்ணிய பரணிக்கரை பூமிக்கு வந்திருக்கிறீர்கள். இங்கு அமர்ந்துதான் அகத்தியன் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அருமையான இடத்தில் அமர்ந்து கொண்டு, அகத்தியன் மனம் விட்டுச் சொல்கிறேன். "உங்கள் கூட அகத்தியனும் பயணம் செய்கிறான்". ஆகவே, உங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, எதை எதைச் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் செய்து கொண்டு, முடிந்தால் நெல்லையப்பர் சன்னதிக்கு, கோயிலுக்கு போகவேண்டும் என்று சொல்லவில்லை, அம்பாளை தரிசனம் செய்து விடு என்று சொல்ல மாட்டேன். கோயிலுக்குள் நுழையுங்கள். அகத்தியன் கணக்குப்படி 22 நிமிடங்கள், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து த்யானம் செய். நீ வந்த காரியம், நினைத்த காரியம், எடுத்த காரியம் அத்தனையும் நல்லபடியாக, எந்த வித வில்லங்கமும் இல்லாமல் நடக்கும் என அருளாசி.

அது மட்டுமல்ல. அதற்குப் பிறகு சொன்னேன்; வாய்ப்பிருந்தால், வசதி இருந்தால், நேரம் இருந்தால், உங்கள் சூழ்நிலை உங்களுக்கு ஒத்து வந்தால், என் எதிரே அமர்ந்திருக்கின்ற அன்னவன், அன்றொருநாள் கருடனுக்கு பால் அபிஷேகம் செய்தானே, அந்த புண்ணிய தலமும் இருக்கிறது. பின்னாலே அருமையாக தாமிரபரணி நதிக்கரை, முட்டுஅளவுக்கு ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதடா. முடிந்தால், நேரம் இருந்தால், நீங்கள் அனைவரும் அங்கும் ஸ்நானம் செய்யலாம். அந்த கோயில் இருக்கும் ஊருக்கு கோடகநல்லூர் என்று பெயர். உண்மையிலேயே, பாம்பு போன்ற விஷக் கடிகளிலிருந்து காப்பாற்றுவதர்க்காக கருடன் உட்கார்ந்த இடம். ஆனால் அந்த கோவிலில் என்ன அதிசயம் என்றால், ஒரு சிவலிங்கமோ, நாகர் சன்னதியோ கிடையாது. சமீப காலமாகத்தான் நாக பிரதிஷ்டை பண்ணப்பட்டிருக்கிறது. அதற்குப் பக்கத்திலே ஒரு அற்புதமான சிவன் கோவில் ஒன்று உண்டு. சிவன் கோவில் வரலாறை சொல்லப் போனால், மணிகணக்காக ஆகும். ஏன் என்றால், அதுவும் தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் தான் இருக்கிறது. அதற்கு பக்கத்திலிருந்து மூன்று  காத தூரம் சென்றால் இன்னொரு சிவன் கோவிலும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் எல்லாம் இருக்கிறது,  என்னடா, கோவில்களை பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லாதே. அத்தனையும் அற்புதமான விஷயங்கள். மன்னர்கள், பாண்டிய மன்னர்கள் பார்த்துப் பார்த்து கட்டிய கோவில்கள்.  அந்த பரம்பரையை சேர்ந்த ஒரு சிலர் இங்கு ஒட்டிக் கொண்டிருப்பதால் தான் அந்த வார்த்தையை சொன்னேன். இந்த மாதிரி காரோட்டியாக இருக்கிறேன் என்று எண்ணாதே, உனக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அதைத்தான், உன்னை வரச்சொல்லி, இங்கு அமரவைத்துச் சொன்னேன். இங்கே உனக்கும் கோவிலுக்கும் சம்பந்தம் உண்டு. உன் முன்னோர்கள் கூட சில கோயில்களை கட்டியிருக்கிறார்கள். அந்த கோயில்கள் எல்லாம் தாமிரபரணி நதிக்கரையிலே, சிதிலமாகி, மண்ணுக்குள்ளே மண்ணாகி புதைந்து போயிற்று. அப்பொழுதெல்லாம் அந்த கோயில்களுகெல்லாம் உருவம் கிடையாது. வெறும் தூண் என்றுதான் உண்டு. அதுவும் சாதாரணமாக நாலு பக்கமும் வெறும் சுதையால் கட்டப்பட்டது தான். அத்தனை மாகாளி கோயில்களுக்கெல்லாம், ஆடி மாதம் என்பதாலும் நல்ல நாள் என்பதாலும், அங்கே அம்மன்கள் எல்லாம் தவம் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். 

சற்றுமுன் அகத்தியன் யான் சென்று விட்டு வந்தேன், சங்கரன் கோவிலில் ஆடி தபசு என்பதால். அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் தான் இங்கு வந்தேன். என் புத்திரர்கள், என் மாணவர்கள், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லாம், எப்படி நல்லபடியாக தரிசனம் செய்து முடித்தார்களா என எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாத்தா, எட்டிப்பார்த்து தன் பேரப்பிள்ளையை தட்டிக்கொடுத்து "ஒழுங்காக படிக்கிறாயா?" என்று கேட்பது போல்தான் இருக்கும்.  அகத்தியன் உங்களை சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருப்பதற்கு எத்தனையோ காரணம் உண்டு. காரணங்களில், மிகப் பெரிய காரணம் எல்லாம் பின்னால் யான் உரைப்பேன். பொறுத்திரு. அதுவரை பக்க பலமாய் இருந்து, பக்குவமாய் பிரார்த்தனை செய்து, நல்லபடியாக ஊருக்கு வந்து சேரு என அருளாசி.

அவர் அருள் வாக்கின் படி பயணம் செய்து நெல்லையப்பர் கோவிலை அடைந்தோம். என்னதான் நெல்லையப்பர் சன்னதிக்கு போக வேண்டும் என அகத்தியர் நிர்பந்தப்படுத்தவில்லை எனினும், அவரை முதலில் சென்று தரிசனம் செய்து விட்டு, அகத்தியப் பெருமான் உரைத்ததுபோல், காந்திமதி அம்பாள் சன்னதியில் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்துவிட்டு, ஒரு நல்ல இடம் தேடி வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, அனைவரும் த்யானத்தில் ஈடுபட்டோம். ஆகா! அப்படி ஒரு அற்புதமான ஒரு த்யானம். எங்கெங்கோ அழைத்துச் சென்றது. மனம் இன்னும் அமைதியாகி மெல்லியதாயிற்று.

ஒரு நாழிகை த்யானத்தின் பின், அகத்தியப் பெருமான் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் பிரார்த்தனை செய்து நாடியை பிரித்தேன்.

அகத்தியர் இப்படி உரைத்தார்.

"குரு பார்க்க கோடி பாபம் தீரும் என்று பழ மொழி. ஆனால், குருவை பார்த்து ஒருவன் கண்ணீர் விட்டானே என்று அகத்த்தியனுக்கு ஆச்சரியம். ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றால், அது தான் உச்சநிலை என்று பெயர். த்யானத்தில் உச்சநிலை ஆகும் பொழுது, அவரவர்கள், தன்னை மறந்து, முருகா என்றோ, அம்மா என்றோ, வேங்கடவா என்றோ அடி வயற்றிலிருந்து எழுப்புவது வழக்கம். உணர்ச்சிப் பெருக்கில், 7417 நரம்புகளும் ஒன்று சேர்ந்து, உணர்ச்சிகளும் ஒன்று சேர்ந்து, ரத்தமும், நரம்புகளும், எலும்புகளும் ஒன்று சேர்ந்து ஒடுங்கிப்போய், உச்சநிலையை அடைவதைத்தான் த்யானத்தின் உச்சகட்டம் என்று பெயர்.  ஒருவன் எப்பொழுது த்யானத்தின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டானோ, அப்பொழுதே. முற்றுமே இறைவனிடம் தன்னை ஒப்படைத்து விடுவான். இதை உடல் பொருள் ஆவி என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள். உடல் பொருள் ஆவியில், எப்பொழுது சரணாகதி தத்துவத்தில் ஒருவன் விழுந்துவிட்டானோ, "நாராயணா" என்ற ஒரு வார்த்தையிலே அத்தனையும் அடக்கம் என்று பெயர். நாராயணன் அவன் பார்த்துக் கொள்வான். உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். நீ தைரியமாக பொறுப்பை ஏற்று செய் என்று அர்த்தம்.

இன்றைக்கு சந்திரன் உச்சிகாலத்திலே பலம் பெறும்  நேரம் அது.  மூலம் இருந்து ஏறத்தாழ பூராடம் வந்து, பூராடத்தை தாண்டி, நட்சத்திர வக்கிரமாகி திருஒணத்தில் வந்து நிற்கிறது. திருவோண நட்சத்திரம் வருகிறது இன்றைக்கு என்று யாருக்குமே தெரியாது. பஞ்சாங்கத்தில் பார்த்தால், பூராடம் என்று இருக்கும். நட்சத்திரங்கள் வக்கிரம் ஆவது என்பது மிக மிக அபூர்வமாகி, இன்றைக்கு ஆகியிருக்கிறது. ஆங்கொருவன், எல்லா இடத்தையும் சுற்றிவிட்டு, குரு ஸ்தலத்துக்கு வந்த பொழுது, குரு பகவானை வணங்கிய பொழுது, அப்பொழுது திருவோண நட்சத்திரம் உள்ளே நுழைந்தது. இன்னவனுக்கு, ஆங்கொரு குழந்தை ஒன்று, திருவோண நட்சத்திரம். அந்த குழந்தைகூட திருவோண நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்த குழந்தையின் எண்ணத்தில் தான் அன்றாடம் கண்ணீர் விட்டு கதறி வந்திருக்கிறான். தனக்காக எதுவுமே, இதுவரை வாய் திறந்து கேட்டதில்லை. தன் உயிரையும் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும், அந்த உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான். பாசத்தினோடு அல்ல.

அன்றொருநாள், அங்கொரு மொகலாய மன்னன், அக்பர், தன் மகன் ஹுமாயூன் பிழைக்க வேண்டும் என்று எண்ணி, ஒன்பது முறை வலம் வந்ததாக வரலாறு உண்டு.  அகத்தியன் ஏண்டா இந்த இஸ்லாம் மதத்தில் நுழைகிறானே என்று எண்ணாதே. அங்கே தான் மிகப் பெரிய தத்துவம் ஒன்று இருக்கிறது. ஒரு உயிர் விட்டு ஒரு உயிர் பாய்வது என்பது கூடு விட்டு கூடு பாய்கின்ற நேரம். அதை போகப்பெருமான் மிக அற்புதமாக செய்வான். திருமூலரும் செய்வார், இன்னும் கோரக்கர் கூட ஒருமுறை செய்திருப்பதாக கேள்வி. ஆகவே, அந்த அக்பர், தன் மகனை காப்பாற்ற வேண்டும், ஹுமாயூனுக்காக ஒன்பது முறை வலம் வந்தான். நன்றாக கவனித்துக்கொள். ஒன்பது என்பது நவதலம். நவகிரகங்கள், நவதானியங்கள். அக்பரே, நவரத்னங்களை அணிந்து கொண்டுதான், நவ கிரகங்களை வழிபட்டுத்தான், தன் மகன் காப்பாற்றப் படவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஹுமாயூன் பிழைத்துக்கொண்டான். அது அவன் யோகம். அந்த நேரத்தில் அக்பருக்குள் புகுந்து, ஹுமாயூனை காப்பாற்றியது எல்லாம், திருமூலரே. திருமூலர் தான் அக்பருக்கு பக்க பலமாய் இருந்து, அந்த உயிரை காப்பாற்றி இருக்கிறான். எதற்கு இதை ஒப்பிடுகிறேன் என்றால், இன்னவன், காலை எழுந்த பின் ஒவ்வொரு தலத்துக்கும் சென்ற போதெல்லாம், அவன் எந்த பிரார்த்தனை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், ஈன்றெடுத்த தன் குழந்தை நல்லபடியாக எழுத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், ஒரே எண்ணத்தோடு, அசையா கருத்தோடுதான், இன்றைக்கு பிரார்த்தனை செய்து வந்தான். ஆக, கடைசியில் குருவை தூக்கி உட்கார வைத்தேன். முதலிலே குரு அல்ல. முறைப்படி இன்றைய தினம் நவகிரகங்களை யாம் வணங்கவில்லை. முறை என்பது, முதலிலே சூரியனை வணங்கி, சந்திரனை வணங்கி, என்று பல முறைகள் உண்டு. ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்றைய தினம், மாறுபட்ட கோணத்தில் தான் இன்றைக்கு வலம் வந்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு இந்த வலம் ஞாயமான வலம். எப்பொழுதுமே எதிரிகளால், நல்லவர்களுக்கெல்லாம், நாள் நல்லபடியாக பலிக்கவில்லை என்றால்,  இப்பொழுது கூட சொல்வேன், அகத்தியன் சோதிடம் கற்றவன் என்றாலும் கூட, எந்த ஒரு காரியமும், குறிப்பிட்ட காரியம், குறிப்பிட்ட நாளில், மங்கள நேரத்தில் நடக்கவில்லை என்றால், அவர்கள், செவ்வாய் கிழமையிலோ, சனிக்கிழமையிலோ, அஷ்டமி, நவமி திதியிலோ, செய்யலாம். இன்றைக்கு கூட அகத்தியன் அருள் வாக்கு கொடுப்பதெல்லாம், சில வேளை அஷ்டமியிலோ, நவமியிலோ வரும்.  ஏனடா, இப்படி குடுக்கிறான் என்று வியந்து நிற்க, அவர்களுக்கு அஷ்டமி எற்றதடா. அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகை எற்றதடா என்று சொல்லி அவர்களுக்கு அருள் வாக்கு கூறுவது வழக்கம். இன்றைய தினம் நவகிரகத்தை வித்தியாசமாகத்தான் வணங்கி வலம் வந்திருக்கிறார்கள். அவர்கள் வலம் வந்த காலத்தை கூறு போட்டு பார்த்திட்டால், கடைசியில் எல்லாமே, குருவிடம் சரண். குருவை ஒருவன் அடைந்துவிட்டாலோ, குருவே அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று அர்த்தம். இவன் சொன்னான், "குருவிடம் என்னையே பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்" என்று சொன்னான். அந்த குரு ஸ்தலத்தில் அந்த வார்த்தை சொன்ன போதெல்லாம், அவன் வார்த்தையை அகத்தியன் கேட்டுக் கொண்டிருந்தேன். அகத்தியன் அப்படியே அந்த வார்த்தைகளை குருவின் பாதத்தில் வைத்துவிட்டேன். ஆனால், அகத்தியனே பலருக்கு குருவாக இருந்து பல நன்மைகளையும் செய்து காட்டி கொடுத்திருக்கிறேன், பலரையும் நட்சத்திரமாக மாற்றி அமைத்திருக்கிறேன். 

இன்றைய தினம் குரு வரத்துக்காக இவன் போட்ட பிரார்த்தனைகள் அத்தனையையும், கூட்டாமல், குறையாமல், அலுங்காமல், சிதறாமல், அப்படியே கையினில் ஏந்தி, குருபகவான் சன்னதியில் வைத்துவிட்டேன். அப்படி வைத்துவிட்ட நேரத்தில்தான் இவன் தன்னையும் அறியாமல், அகத்தியனை நோக்கி கண்கலங்கி பேசினான். ஆக எதற்கு சொல்லுகிறேன் என்றால், அகத்தியன் இவன் கொடுத்த வேண்டுகோளை, கையாலே தாங்கி, அந்த பொற்தாமரை மலரடி பாதத்திலே வைத்த பொழுதுதான் கண் கலங்கி இருக்கிறான். சூட்ச்சும சரீரத்திலே ஒரு நாடகமே நடந்திருக்கிறது. யாருக்குமே தெரியவில்லை, இப்பொழுதுதான் சொல்லவேண்டும் என்று எண்ணியிருந்தேன். வாய் திறந்து கேட்டால் சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன். யாரும் கேட்கவில்லை என்பதால்தான் நானும் மௌனம் ஆகிவிட்டேன். ஆகவே, இப்பொழுது எடுத்த காரியம், நினைத்த காரியம், நடந்த காரியம், கடைசியிலே குருபகவான் சன்னதியிலே கண்ணீர் விட்டதெல்லாம், அத்தனையும் பெருமாளின் பொற்பாதங்களை, திருவடியை கழுவியிருக்கிறது. இவனின் கண்ணீர் துளிகளின் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் சொல்லி ஆவான். குழந்தை எழுந்து நடக்கும். அஞ்சிட வேண்டாம் என்று அருளாசி.

அனைவரும், ரயில் பயணம் செய்து, ஆனந்தமாக, அமைதியாக, வியப்புடன், நடந்தவைகளை அசைபோட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.

[அகத்தியர் அடியவர்களே, இத்துடன் நம்பிமலையில் தொடங்கிய இந்த ஆன்மீக, குரு அகத்தியருடனான  புண்ணிய யாத்திரை தொடர் நிறைவு பெற்றது. மிகப் பொறுமையாக அகத்தியரின் வார்த்தைகளை வாசித்து, உள்வாங்கி தம் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்ட, செம்மை படுத்திக் கொள்ள தீர்மானித்த அனைத்து அடியவர்களுக்கும் அடியேனின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்]. 

​ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!​

15 comments:

  1. குருவழியே ஆதிஆதி
    குரு மொழியே வேதம் வேதம்
    குரு விழியே தீபம் தீபம்
    குரு பதமே காப்பு காப்பு...

    குரு அகத்தியருடனான புண்ணிய யாத்திரை தொடர் நிறைவு பெற்றது.
    நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம் . முடிவு வருத்தத்தை தருகிறது .தொடரும் என்று நம்புகிறோம் .

    அன்புடன் s .v .

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  4. Dear Velayudham, we are very grateful to you for this series. Sri Agastya's noble words have crossed all boundaries of time, space and language and have entered into our hearts directly.

    ReplyDelete
  5. ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!​
    ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!​
    ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!​

    ReplyDelete
  6. அந்த குழந்தை நிச்சயம் எழுந்து நடந்திருக்கும் இந்நேரம். அந்த தகவலை உங்கள் எழுத்தில் காண ஆவல்.

    ReplyDelete
  7. ஓம் அகத்திய மகரிஷியே போற்றி...போற்றி.
    தொடர்ந்து எம்மையெல்லாம் வழிநடத்தும் பிரபு.

    ReplyDelete
  8. Sri Parvati Kumar, a spiritual master and teacher from Vizag, Andhra says: "Agastya is also called Master Jupiter, the eldest member of Hierarchy….The Master Jupiter is the Avatar of Synthesis who presides over the Aquarian Age. He conducts himself with the triangular force of Neptune, Mercury and Jupiter. He is called the Master of the Nilagiri Hills (Blue Mountains) in the Theosophical Society. He is called the great Sage Agastya in the Vedic tradition. He is the Master whose abode is in Sirius, whose functioning place for our earth is the Blue Mountains of South India. Agastya is the great sage and is the counterpart of the 7 seers of the Great Bear…..Through serving food he likes to spread himself into the people and thus to adjust any imbalances in the mental, emotional, and physical bodies. In his spiritual activities he never treads any trodden paths, but gives new trends and directions, being full of freshness. His live is always accompanied by will, spreading be-ness and presence. He is very humorous and his teachings are very powerful, but nevertheless humorous, thus uplifting the people”

    ReplyDelete
  9. Today's Sitthan Arul post was amazing, just as the many previous postings by Velayudham Karthikeyan. Karthikeyan concludes the massive journey of the blessed Jeeva Nadi Guru from Chennai with his friends on a pilgrimage cum revelation to temples and places dictated by Agathiyar in 2009.

    Many truths and secrets had been revealed by the great saint. In today's episode Agathiyar explains what meditation or Dhyanam is and what surrender means. He talks about Thirumular coming to the aid of Akbar too. Agathiyar reveals how he personally takes stalk of devotees wishes and prayers and delivers them onto the honorable feet of the Lord.

    Along the way Agathiyar had identified many places where ancient temples still lay buried waiting to be discovered.

    This journey with Agathiyar, the Jeeva Nadi Guru and Velayudham Karthikeyan has simply been amazing. It has been a journey of discovery into the world of Siddhas, Agathiyar revealing the workings of Karma, workings of the Siddhas and the workings of creation itself.

    ReplyDelete
  10. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  11. Dear Karthikeyan Sir,

    We are really blessed to come across Siddar Arul. I have read all the posts from the beginning and following every Thursday and the comments offered. Thank you sir, for enlightening us.

    I have started writing everyday 108 times of Om Agatheesaya Nahama starting from 2014. Kindly let me know where I could sent these books.

    ReplyDelete
  12. Ashta Bandhana Maha Kumbhabhishekam of Sree Lopamudrambika sametha Bhagavan Sree Agasthya temple is on 11.5.2014 Sunday (starting approx. 10.30 am) at Sree Agastya Ashram, Nochur Village, Koduvayur, Palakkad. [approx. 45 mnts by auto from Palakad rlwy station]. Tel. +91-4923-252510, 9995310433.

    ReplyDelete
  13. ஓம் அகத்தீசாய நமஹ.
    அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். நம்பிமலையலிருந்து "தாய் பாதம்" வழியாக பொதிகை பயணம் பற்றி இங்கே வாசித்திருப்பீர்கள். ஒவ்வொரு வருடமும் "சித்ரா பவுர்ணமி" அன்று மட்டும் நிறைய பேர் சென்று தரிசனம் செய்வார்களாம். இந்த வருடம் மே 14 அன்று வருகிறது. அன்று தாய் பாதம் வழியாக பொதிகை பயணத்திற்கு முயற்சி செய்யலாம் என்றிருக்கிறோம்.
    மிக மிக அடர்ந்த வனப்பகுதி என்பதால் பொதிகை செல்லவே 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம். இரவு பகல் பாராமல் வெயில் மழை பாராமல் பசி தூக்கம் பொருட்படுத்தாமல் கிடைத்தவற்றை உண்டு நடக்க வேண்டியது வரும். கொடிய மிருகங்கள் நடமாட்டமுள்ள பகுதிகள் வேறு. "அகத்தியர் வாக்கு" ஐ மட்டுமே நம்பித்தான் இந்த பயணம் இருக்கும்.
    இப்பாதையைப் பற்றி அறிந்தவர்கள் (அல்லது) வள்ளியூர், நாங்குனேரி பக்கம் உள்ளவர்கள் (அல்லது) மலைவாசிகளையோ பளியர்களையோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் உள்ளவர்கள், தயவு செய்து எங்களுக்கு ஓர் பேருதவி செய்யுங்கள். எங்களை 8508765371 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்களுக்கு வழி காட்டுங்கள்.
    மலைவாசிகள் துணையன்றி செல்வது மிக மிக கடினம். யாரை எப்படி அணுகுவது என்று தெரியாமல் திண்டாடுகிறோம்.
    அப்படியொரு ப்ராப்தம் இருந்தால் இப்பாதை வழியே பொதிகை சென்று "சித்தன் அருளை" சிறப்பாய்ப் பெற்று வருவோம்.
    ஓம் அகத்தீசாய நமஹ.

    ReplyDelete
  14. who is thaga arasu agathiyar mention this name in nambi malai payanam . kallaru thagarasan or any other pls clarify

    ReplyDelete