​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 13 March 2014

சித்தன் அருள் - 166 - திருச்செந்தூர் - முருகர், அனுமன் தரிசனம்!


அகத்தியப் பெருமான் உத்தரவுப்படி, அனைவரும் திருச்செந்தூரை சென்றடைந்தோம்.  ஏதோ தோன்றவே, ஒரு விடுதியில் அறை எடுத்து, பயணக் களைப்பு விலக, சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, பின் குளித்து கோவிலுக்கு சென்றோம். கூட்டம் அதிகம் இருந்ததால், எங்கும் ஒரே சப்தம். என்ன செய்யப் போகிறோம் என்கிற திகில் உணர்வுடன் நேராக முதலில் சென்று முருகரை தரிசனம் செய்யலாம் என்று உள்ளே சென்றோம். அங்கேயும் ஒரே கூட்டம், ஒரே சப்தம். ஒரு நொடி கூட அமைதி இல்லை. கோவில் அர்ச்சகர்கள், சப்தம் போட்டுக்கொண்டே உள்ளே செல்வதும், வெளியே வருவதையும் பார்த்த பொழுது எரிச்சல் தான் வந்தது. இதற்குள் ஒரு அந்தணர் வந்து "அர்ச்சனை செய்யணுமா? சீக்கிரம் தரிசனம் செய்ய வேண்டுமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டார். யாருடைய வேண்டுதல்களுக்கும் செவி சாய்க்க வேண்டாம் என்று தோன்றியதால், "இல்லை சுவாமி! நாங்கள் தர்ம தரிசனத்திலே சென்று முருகரை தரிசனம் செய்து கொள்கிறோம்" என்று கூறி விலகி நடந்தோம்.

தர்ம தரிசன கூட்டம் சற்று வேகமாக நகர்ந்தது. ஓரளவுக்கு தூரத்துக்கு மட்டும் தான் நெருங்க முடியும். இருந்தும் முருகருக்கு நேராக சென்றடைந்ததும், நாங்கள் அனைவரும், அவரை கண்டு மகிழ்ந்திருக்க, அதுவரை அங்கிருந்து ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டிருந்த ஒரு கோவில் நிர்வாகி, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார். கிடைத்த தருணத்தை முருகரின் தரிசனத்துக்கு உபயோகிக்க நினைத்த அந்த ஒரு நிமிடத்தில், என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அத்தனை சப்தமும் நின்று போனது. உள்ளே முருகருக்கு "தீபாராதனை" நடந்தது. நன்றாக முருகர் முகம் தெரிய, அந்த ராஜ அலங்கார உருவத்தை உள் வாங்கி மனதில் பதித்துக் கொண்டேன். என்னவோ, ஏதோ ஒன்று உள்ளே புகுந்து, மிகுந்த சுகத்தை கொடுத்தது. உள்ளே இருந்த பூசாரி வெளியே வந்து, எங்களுக்கு அருகில் வந்து, விபூதி பிரசாதத்தை இலையில் வைத்து தந்தது, ஆச்சரியமாக இருந்தாலும், "அடேங்கப்பா!முருகா! இது போதும்" என்று என் மனம் வேண்டிக் கொண்டது.

வெளியே வந்து, பிரகாரத்தில் எங்கேனும் அமர ஒரு இடம் கிடைக்குமா என்று தேடும் வரை அந்த மென்மை எங்களுக்குள் பரவி நின்றது. யாருக்குமே பேச வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. அத்தனை சுகமாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பின்னர் அகத்தியர் நாடியில் விளக்கிய போது தான் புரிந்தது. அத்தனையும் முருகப் பெருமானின் அருள்.

கண்களால் எத்தனை முறை துழாவினாலும், ஒரு இடமும் அமைதியாக கிடைக்காததை கண்டு "சரி! நேராக அறைக்கே செல்வோம். நாடியை திறந்து அகத்தியரிடமே, "கோவிலில் ஒரு அமைதியான இடம் கூட காண முடியவில்லை என்று சொல்வோம். பிறகு அகத்தியர் என்ன சொல்கிறாரோ அதன் படி நடந்து கொள்வோம்" என்று தீர்மானித்து, அறைக்கு வந்து சேர்ந்தோம்.

அறையில் ஒரு சுத்தமான இடம் தேர்ந்தெடுத்து வடக்கு நோக்கி அமர்ந்து பிரார்த்தனை செய்து பின் நாடியை பிரித்தேன். வந்த செய்திகள் ஒரு அணு குண்டு வெடித்தாற்போல் இருந்தது. கூடவே சில செய்திகள் சந்தோஷத்தின் உச்சிக்கே எடுத்து சென்றது.

"மூலம் உதித்திட்ட வேளை இது! ஓங்கு புகழ் என் அப்பன் முருகன் சன்னதிக்கு எதிரே அமர்ந்து அகத்தியன் சில வாக்குகளை, அருள் வாக்காக இங்கு உரைக்கிறோம். ஆங்கே சில நாழிகைக்கு முன்பு, சிறப்பாக சில செய்திகளை சொல்லிடவேண்டும் என்று, ஆங்கு ஓர் தம்பதிகளாய் வீற்று இருக்கும் நவக்ரக சன்னதிக்கு இன்னவனை போகச்சொன்னேன்; அன்னவனும் அப்படியே செய்தனன். நவக்ரக சன்னதி என்பதை பற்றி, ஏற்கனவே, நேற்றைய தினம் ஆங்கொரு மலைப் பகுதியில் யாம் உரைத்தோம். இன்றைக்கோ அலைப்பகுதியில் யாம் உரைக்கப் போகிறோம். நிலையான வாழ்வுதனை இவர்கள் நீண்ட காலம் பெற்றிட வேண்டும் என்பதற்காக அகத்தியனே அருள் கூர்ந்து பேசுகின்ற நல்லதொரு செய்தியடா! 

சற்று முன் சொன்னேன், மூல திருநட்சத்திரம் வந்தது என்று. ஒளிமறை மூலம் என்று குறிப்பிட்டேன். சோதிடத்தைப் பற்றி அதிகம் தெரியாத உங்களுக்கெல்லாம், சில சோதிட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மூலத்திரு மைந்தனாக வீற்றிருக்கும் அனுமன், இங்கு தான் இருக்கிறான். ஆச்சரியமான சம்பவம் ஒன்று உண்டு. முடிந்தால், வசதி இருந்தால், இதை நீங்கள் ஒரு முறை சென்று பார்க்கலாம். ஆங்குள்ள மிகப் பெரிய ராஜ கோபுர கல்வெட்டில், ஹனுமனின் சிலை, கீழே கல்வெட்டில் செதுக்கப்பட்டிருக்கும்.  அந்த அனுமன், மூலத்திரு மைந்தன், இன்றைய தினம் என் அப்பன் முருகனை தரிசித்து வந்த நேரத்தில் தான் நீங்கள் உள்ளே நுழைந்தீர்கள். அகத்தியனும், ஏற்கனவே காத்திருந்தேன், ஒரு நாழிகை. உங்களது கணித நேரப்படி 9.22 வரை நான் அங்கிருப்பேன்.  உங்கள் கணிதப்படி 7.22க்கு வந்தவன், ஏறத்தாழ 2 மணி நேரமாய் உங்களுக்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான், அந்த அதிசயம் நடந்தது. நான் பெரிதும் போற்றி வணங்குகின்ற அனுமனே, இங்கு வந்து முருகனை தரிசித்த காலம் இது. அந்த அனுமனுக்கு பக்கத்தில் தரிசிக்கிற நேரத்தில் தான் நீங்கள் அனைவரும், இங்கு வந்து ஆனந்தமாக கை எடுத்து கும்பிட்டாலும், உங்கள் அத்தனை பேர் மனதிலும் ஆங்கொரு சிறு, ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. கோவில் என்றால், அமைதிவேண்டும், ஆனந்தம் வேண்டும், த்யானம் செய்வதற்கு இடம் வேண்டும், நிம்மதி வேண்டும்.  அது எதுவுமே இந்த கோவிலில் இல்லை என்று குறை பட்டுக் கொண்டீர்கள். ஆனால் ஒரு சம்பவம் உங்களுக்கு மட்டும் சொல்லுகிறேன்.  நீங்கள் தரிசித்த நேரமும், அனுமன் தரிசித்த நேரமும், அகத்தியன் தரிசித்த நேரமும் அனுகூலமாய் இருந்ததால், யாவுமே மிக அற்புதமாக நடந்தது என்பது தான் உண்மை. ஆக, அந்த குறையை விட்டுவிடுங்கள். உலகத்தை திருத்த இயலாது. 

அது மட்டுமல்ல, இப்பொழுதே இந்த முருகன் சன்னதி முன்பு, முருகன் எனக்கு தெய்வம், எனக்கு குரு, எனக்கு ஆசான், அந்த சன்னதிக்கு வரச்சொனதற்கும் காரணம் உண்டு, பலப்பல. அதை சொன்னால் பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். ஏன் உங்களை வரச் சொன்னேன் என்றால், ஏதேனும் புதிர் போடுவதற்கல்ல. என் தலைவனை நீங்கள் கண்டு, அவனது முழு ஆசியும் நீங்கள் வாங்க வேண்டும். மலையிலே ஆங்கொரு நம்பியின் தரிசனத்தை மறைமுகமாக காண வைத்தேன். ஆங்கொரு அருவிக்கரை ஓரத்திலே, நதிகளை காண வைத்து அவர்களால் ஆசிர்வதிக்கச் சொன்னேன். நதிக்குப் பிறகு, நிலையான வாழ்க்கையை நீங்கள் பெறவேண்டும் என்று அலைகடல் ஓரம் வரச்சொன்னேன். ஆகவே, இந்த மூன்றுக்கும், நிலையான வாழ்வு, மலை, நதி,அலைகடல் ஓரம், இந்த மூன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள், ஆரம்பத்திலிருந்து, முடிவு வரை, வினாயகனிலிருந்து, இன்றைக்கு அனுமன் வரை, ஆக ஒரு மிகச்சிறந்த காரியம் நடந்திருக்கிறது. அனுமன் இங்கு வருவானேன் என்று ஆச்சரியப் படக் கூடாது. கல்வெட்டில், 9 கல்வெட்டில் அனுமன் ஆனந்தமாக உட்கார்ந்திருக்கிறான். முடிந்தால் எட்டிப் பாருங்கள், முடிந்தால் என்று சொன்னேன்.

இங்கு வரச் சொன்னேனே, அடுத்தது என்ன என்ற கேள்வி எழும். எல்லோருமே அயர்ந்து கொண்டிருக்கிற நேரம். அகத்தியன் இந்த அருள் வாக்கு உரைக்கின்ற இந்த அறையின் எண்ணோ 203 ஆகும். இரண்டையும் கூட்டினால் ஐந்தாகும். ஐந்து என்பது பஞ்ச பூதங்களை குறிக்கும், இந்த அறையில் பஞ்ச பூதங்கள் இருப்பதினால் தான், அகத்தியனே வாய் திறந்து சொன்னேன், கோவிலிலே அசிங்கம் நிறைய இருப்பதாலும், அகத்தியனுக்கு மனம் இல்லாததாலும், அகத்தியன் அங்கு வாய் திறக்கவில்லை. நிச்சயம் வாய் திறந்தால், பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும். கூட்டம் கூடியிருக்கும், அல்லது உங்கள் மனம் கெட்டிருக்கும். வெறுப்பு, விருப்பு இல்லாமல் நிறைய விஷயங்களை சொல்லவேண்டும் என்பதினால்தான், அங்கேயே நவக்ரகங்கள் தம்பதிகளாய் இருக்கின்ற கோவில் முன்பாக அகத்தியன் வாய் திறந்து சொன்னேன். ஆனால் ஆங்கொரு சண்டாளன் ஒருவன், அகத்தியன் சொல்வதையே குறுக்கிட்டு பேசினானே, எவ்வளவு பெரிய பாபத்தை செய்திருக்கிறான் தெரியுமா? ஆகவே, அகத்தியன் வாக்குரைக்கிறோம் என்று தெரிந்தும் கூட அவன் அரைகுறை மந்திரத்தில் வாக்குரைத்து எட்டிப் பார்த்தானே! அவன் ஒரு ராகு அல்லவா? யாருக்கு யார் பிடிக்ககூடாதோ அவனுக்கெல்லாம் பிடித்திருக்கிறது. அவனுக்கு மோசமான காலம், அதனால் தான், அவன் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டான்.  அகத்தியன் கோபப்படவில்லை, ஆத்திரப்படவில்லை, சாபம் இடவில்லை. அருமையான சன்னதியில், ஆனந்தமான நிலையில், சுமார் 2400 வருடங்களுக்கு முன் நடந்த அற்புதமான ஒரு விஷயத்தை எல்லாம் சொல்லி, எங்கெங்கே இந்திரன் இருந்தான், எங்கெங்கே நவக்ரகங்கள் தன் தம்பதிகளுடன் உட்கார்ந்திருந்தார்கள், என்பதை எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  உண்மையிலேயே நவக்ரகங்கள் இப்படி அமைவது அல்ல. ஒன்றாக நேரடியாக, நேர்கோணலில் தான் அமர்ந்திருக்கிறார்கள். நேர் கோணலில் அமர்ந்திருந்துதான் இந்திரனுக்கும் இன்னும் பலருக்கும், இன்றுவரை ஆசிர்வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அகத்தியன் சொல்வதெல்லாம், எதற்காக சொல்ல வந்தேன் என்றால், அங்கு நேராக தனித்தனியாக நின்று, நடுவிலே சூரிய பகவானும், அவன் மனைவி உஷாவும், பிரத்யுஷாவும் வரிசையாக நின்று வாழ்த்துரைத்த காலம். அகத்தியன் வாய் திறந்து சொல்லும் போதெல்லாம், எல்லா நவக்ரகங்களும் ஒன்றாக என் பக்கம் திரும்பியதடா. அது அவனுக்கு பொறுக்க முடியவில்லை, விஷயம் தெரியாத பையன், மாட்டிக் கொண்டுவிட்டான். அகத்தியன் மன வருத்தத்துக்கு ஆளானான் என்பது மட்டும் உண்மை. ஆனால், அத்தனை கிரகங்களையும் ஒன்று சேர பார்ப்பது என்பது இயலாத காரியம். 

முன்பொருநாள், ஆங்கொருவன், யாகம் செய்தான், பஞ்சேஷ்ட்டி எனும் தலத்தில். அந்த பஞ்சேஷ்டியின் கோபுர உச்சியில்தான் நவக்ரகங்களை வரிசையாக பார்க்க முடியும். அந்த காட்ச்சியைத்தான் இன்றைக்கு அகத்தியன் இங்கு காட்டினேன். நவக்ராகங்கள் துணை செய்தது, வாழ்த்தியது, வாழ்த்துக்களை பெற்றீர்கள். அது போதும் எனக்கு. மற்றவைகளை செந்தூரிலே வைத்துக் கொள்வோம் என்று சொன்னேன். நன்றாக கவனிக்கவும், செந்தூரிலே வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேனே தவிர, செந்தூர் கோவிலிலே வைத்துக் கொள்ளலாம் என்று அகத்தியன் வாய் திறக்கவில்லை. எனக்குத் தெரியும், இங்கு ஏகப்பட்ட தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது.

சித்தன் அருள்............... தொடரும்!

12 comments:

  1. Palaniyilum Kanchi Ekambareshwarar Alayathilum, Adiyenukku Kidaitha Inimaiyaana Anubam, Indru Agathiya Perumaan Siththan Arulil Vilakkukindrar. Nandri Aiya.

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  3. karumkulam engu ullathu ayya?

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி > திருச்செந்தூர் வழித்தடத்தில் உள்ளது.

      Delete
  4. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  5. ஓம் நம குமாராய
    ஓம் அகத்தீசாய நமக..

    ReplyDelete
  6. dear karthi vanakkam
    ஓம் அகத்தீசாய நம:
    ஓம் அகத்தீசாய நமக:
    ஓம் அகத்தீசாய நமக:

    ReplyDelete
  7. வணக்கம்.என் அப்பன் முருகன் தலத்தில் அகத்திய பகவானின் அருளுரை கேட்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.
    இன்று அதை பகவான் அகத்தியர் நிறைவேற்றி விட்டார்.
    கோடானு கோடி நன்றிகள்.
    ஓம் அகத்தீசாய நமஹ.

    ReplyDelete
  8. ஓம் அகதீசாய நமக

    ReplyDelete
  9. Om Agatheesaya namaha,
    Om Agasthiyare potri potri,
    Avar tham paatha kamalangal potri potri,
    Ayyanae thunai,
    Muruganukku arokara...

    ReplyDelete