​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 November 2013

சித்தன் அருள் - 151 - நம்பிமலை

[ நம்பிமலை - வழிந்தோடும் நீரோடை ]

இது அற்புதமடா! அகத்தியன் இன்றைக்கு கொடுக்கிற மிகப் பெரிய பரிசு இதுதானடா.

கங்கை நதியின் அனுக்ரகம் கிடைத்தது  இன்னொரு விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன்.

கங்கை கேட்டாள், "அக்கா! என் பாபத்தை நீ எடுத்துக் கொண்டுவிட்டாய், உன் பாபத்தை நீ எங்கு போய் தொலைப்பாய்!" என்றாள். அதற்கு முன் ஒரு கதை உண்டடா.

அன்றொருநாள் இந்திரன், அவன் செய்த மிகப் பெரிய தவறால், அங்கமெல்லாம் யோனியாக தவித்துப் போனான். இது நடந்த கதை. தவித்துப் போன இந்திரன், சதுரகிரியில் பல முறையும், கைலாயத்தில் இறைவனிடமும் வந்து காலில் விழுந்தான்.

"நான் தவறு செய்துவிட்டேன். அங்கமெல்லாம் யோனியாகி, புழுத்து வழிகிறது என்றான். யோனியிலிருந்து வருகின்ற உதிரமெல்லாம் அங்கமெல்லாம் படர்ந்து, நாற்றமெடுத்து, யாரும் நெருங்க முடியாத அளவுக்கு காரணமாயிற்று. இந்திரனுக்கே இந்த கதியா என்று கேட்காதீர்கள். நடந்த கதையை சொல்ல வேண்டும். யாருக்கும் தெரியாத ரகசியம் அது. எந்த யோனிக்கு ஆசைப்பட்டு போனானோ, அந்தத் தவறு செய்ததினால், சாபமிட்டு, உடம்பெல்லாம் யோனி ஆயிற்று. நடக்க கூடிய விஷயமா என்று யோசித்துப் பார்த்தால் கூட, இது பொய் கதை என்று நீ எண்ணலாம். மனித உடம்பில் எப்படியடா இத்தனை யோனி வரும் என்று எண்ணலாம். சாபமிட்டால், பலிக்கிற அளவுக்கு அத்தனையும் புனிதமானவர்கள் வாழ்ந்த பூமி இது. சொன்னால் நடக்கும். அப்படிப்பட்ட தவிப்பில் அகத்தியன் தலையிட்டு பார்த்தேன். முடியவில்லை. கை விட்டுவிட்டேன்.

அந்த இந்திரன் கைலாயத்துக்கு சென்று, நான் சொன்னதால் உள்ளே சென்ற போது நந்தி தேவரும் மூக்கை பிடித்துக் கொண்டு விலகிவிட்டார். மற்றுள்ள அத்தனை தேவர்களும் இடம் மாறி போன பிறகு தனியாக மாட்டிக் கொண்டான் முக்கண்ணன். அவனிடம் காலில் விழுந்தான். விழுந்த நேரத்தில் அங்கு சிதறிய உதிரத்தால், கைலாயமே அசிங்கமாயிற்று. ஆயினும் சிவன் கேட்டார், "என்ன வேண்டும்?" என்று. 

"நான் பாபம் செய்துவிட்டேன். மனித்தருளி, விமோசனம் தா" என்று.

பார்வையை திருப்பிக் கொண்டான் முக்கண்ணன். உடனே சொன்னான் "நீ கங்கையில் சென்று நீராடு" என்றான்.

உடனே, கங்கை என்னிடம் ஓடி வந்தாள் "ஐயய்யோ! என்ன இவன் வந்து நீராடினால் கங்கை என் புனிதம் அனைத்தும் கெட்டுவிடும்.யாருமே கங்கையில் நீராட மாட்டார்கள். என்னால் ஏற்க முடியாது" என்று மறுத்து முகம் தூக்கிப் போனாள். அதனால், இந்திரனுக்கு கங்கை மேல் இன்றைக்கும் அந்த கோபம் உண்டு. ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை, ஏன் என்றால் சிவனின் சடையில் தானே கங்கை இருக்கிறாள்.கடித்து விழுங்கி விடலாம் என்று நினைத்தான். முடியவில்லை. கங்கையே கை விட்டுப் போனபோது, முக்கண்ணனிடம் கேட்டான்.

அப்போது முக்கண்ணன் சொன்னான்,

"இதே சதுரகிரி மாவட்டத்திலே ஸ்ரீவைகுண்டம் பக்கத்திலே, தாமிரபரணி அமைதியாக அமர்ந்திருக்கிறாள். நீ அவள் காலில் விழு. உன் யோனி எல்லாம் தங்க நிறமாக மாறி, மறுபடியும் பிழைத்து எழுவாய்" என்றான்.

அதே இந்திரன், நேராக வந்து, ஸ்ரீவைகுண்டம் வந்து, தாமிரபரணியில் நீராடினான். நீராடிய பொழுது, அங்குள்ள நவக்ரகங்கள் எல்லாம் ஆனந்தப்பட்டு உட்கார்ந்து இருக்கிற காலம்.

என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

நீ நேராக சென்று தாமிரபரணியில் நீராடிவிட்டு, நவக்ரகங்களை வழிபாட்டு வா. உன் சாபம் நீங்கும் என்று கங்கையே வழி காட்டினாள்.

ஓடி வந்தான் இந்திரன். ஸ்ரீவைகுண்டத்தில் நீராடினான். அப்படி நீராடிய பிறகே அவன் நோய் போயிற்று. அப்படியே நவக்ரகங்கள் காலில் விழுந்தான். தம்பதிகளாய் இருக்கிற நவக்ரகங்கள், அவனை மாற்றியது. 

நவக்ரகங்கள் தம்பதிகளாய் இருந்த இடம், இங்கிருந்து திருச்செந்தூர்க்கு செல்லும் வழியில், ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகில் கரும்குளம் என்கிற ஊரில், மலைக்கு மேலே வேங்கடவனும், கீழே நவக்ரக தம்பதிகள் சன்னதியும் இருக்கிறதடா. முடிந்தால் அவர்கள் ஆசிர்வாதம் வாங்கிக்கொள். ஏன் சொல்கிறேன் என்றால்,

அந்த தாமிரபரணி நதி, கங்கையின் பாபத்தை போக்கியிருக்கிறாள், இந்திரனின் சாபத்தை போக்கியிருக்கிறாள். கங்கைக்கு பாபத்தை போக்கிய இடம் இந்த இடம். இந்திரனுக்கு பாபத்தை போக்கிய இடம் ஸ்ரீவைகுண்டம். அன்று தான் முதன் முதலாக நவக்ரகங்கள் தம்பதியருடன் இருக்கின்ற சன்னதி உண்டாயிற்று. இன்றைக்கும் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் என்றாலும் கூட, அன்று உருவாக்கப்பட்ட நவக்ரகங்கள் சன்னதியில் இன்றும் இருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். காணக் கிடைக்காத ஸ்தலம். இன்னொன்று தெரியுமா? அந்த மலையிலே, வேங்கடவன் உண்டு. வேங்கடவன் வந்து, வெறும் மரத்தினால் ஆக்கப்பட்ட வேங்கடவன். வெறும் சிலை அல்ல. ஆக அந்த சிலை 2500 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்டாலும் கூட அபிஷேகம் செய்தாலும் கூட இன்றுவரை அது கெட்டுப் போகவில்லை. கை, கால் தலை என தனித்தனியாக பிரித்து எடுக்கலாம். ஆச்சரியம் தானே. தென் திருப்பதி என்று ஒரு பெயர் கூட அந்த ஊருக்கு உண்டு. இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டு போகலாம். இரவு முழுவதும் சொல்லிக்கொண்டிருப்பேன். எவ்வளவு தூரம் தான் இவர்கள் போவார்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு வந்திருக்கிறார்கள், இவர்கள் எல்லாம், அகத்தியனிடம் வேறு ஏதாவது நல்ல செய்தி கிடைக்குமா என்று. அதற்காகத்தான் சொன்னேன், கங்கை நதி நீராடிய புனிதமான ஸ்தலம். அங்கே உட்கார்ந்து கொண்டு அகத்தியன் சொல்லை நீங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். நீ மட்டுமா கேட்கிறாய்? இல்லை அத்தனை தெய்வங்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு கேட்கிறது. அவர்கள் அனைவரும் ஆனந்தப்பட்டுக் கொண்டு இருக்கிற அருமையான நேரமிது. ஆகவே, உங்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கிறது. ஆக, அகத்தியன் 200 ஆண்டுகளுக்கு முன் அபிஷேகம் செய்த நிகழ்ச்சியை, இப்போது நீங்கள் அனைவரும் காணுகிறீர்கள்.

அகத்தியன் முதன் முதலாக அமர்ந்து கொண்டு இறைவனை நோக்கி த்யானம் செய்த இடம், இந்த இடம். இங்கிருக்கும் மலைகள் பூராவும் அகத்தியனுக்கு சொந்தமடா. அகத்தியன் காலாற நடந்து போய், வடகிழக்கு திசை நோக்கி நடந்து போவது உண்டு. காலாற நடக்கும் போது, வேப்ப மரத்தடியில் வேகமாக நடப்பேன். எனக்கு வாயு பகவான் உதவி செய்வான். ஒரே காதத்தில், உங்கள் கணக்குப்படி ஒரு மணி நேரத்தில், இங்கிருந்து மும்பாய் வரை சென்று வந்துவிடுவேன். ஆக, மேற்கு மலை தொடர்ச்சி கூட அகத்தியனுக்கு சொந்தமடா. அங்கு எத்தனையோ அற்புதமான சித்தர்கள் இருக்கிறார்கள், முனிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் எப்போது உங்களை கொண்டு போய் காண்பிப்பது என்று எனக்கு புரியவில்லை. நேரமில்லை. உங்களுக்கு மனிதர்களுக்கு நேரமில்லை. அகத்தியனுக்கு அல்ல. ஆகவே, அடுத்த நிமிடம் பசிக்கிறது என்றால், நீரும் உணவும் எங்கு இருக்கிறது என்று பார்ப்பீர்கள். அகத்தியன் சொல்வதை கேட்கமாட்டீர்கள். அது உங்கள் குணம். ஆக பசிக்கு முதலிடம் கொடுப்பதால் தான், அகத்தியன் எல்லா விஷயத்தையும் முதலில் சொல்ல முடியவில்லை.

இனி இந்த பொதிகை மலை வரலாற்றில், முதன் முதலாக, இந்த திருகுறும்குடி வரலாற்றை சொல்லுகிறேன். திருகுறும்குடி வரலாற்றில் சொல்லும் போது , வாகனத்தில் வரும்போதே கேட்டான் ஒருவன்.

"ஏன் குறுங்குடி என்றாயிற்று?" என்று.

"இங்கு எல்லா சித்தர்களும் குறுகி குழுமி கூடி, குறுங்குடி என்று ஆயிற்று."

எல்லா மனிதர்கள், எல்லா தெய்வ சிலைகளை எல்லாம் 6 அடி 7 அடி என்று வைத்து கட்டியிருக்கும் போது, இங்கு மட்டும் சிறிதாக கட்டப்பட்டு, முதலாக அமைக்கப்பட்டது. அப்பொழுது தான் கேட்டான் ஒருவன். எல்லா கோயில்களும் வைணவ கோயில்கள் தான். 6 அடி 7 அடி என்று உருவச் சிலை வைக்கும் போது, திருகுறும்குடியில் மட்டும் ஏன் குறைந்திருக்கிறது என்று சொன்னான். இறைவனே, தன்னை தாழ்த்தி குழிக்குள் இருக்கும் படியாக, தன்னை குறுக்கிக் கொண்டான். இறைவன் தன்னை தானே, குறுக்கி கொண்டு அற்புதமாக அமர்ந்த இடம் ஆனதால், திரு குறும் குடி என்று பெயர். அதில் திரு என்று அடை மொழியை செப்பி, திருக்குறும்குடி என்று ஆக்கிவிட்டார்கள்.

சித்தன் அருள்............ தொடரும்!

7 comments:

  1. Need Reliable Taxi/Auto information to reach Kallar . Any phone numbers ?? Your help most appreciated.

    ReplyDelete
    Replies
    1. Transport information needed from CBE or Mettupalayam ?? How much they will charge to reach the ashram??

      Delete
    2. Go to mettuppaalayam first. then catch an auto. do not pick auto from coimbatore.

      from mettuppaalayam, it seems, autos charge around Rs.100/-. Tell them very clearly that you want to go to "Sri Thava Murugar Agathiyar Gnana Peeda Asramam".

      Delete
  2. Om Agastheesaya Nama
    Om Agastheesaya Nama
    Om Agastheesaya Nama

    ReplyDelete
  3. Mettupalayam to kallar 200 to 250 Rs by taxi. Auto also demand the same but we can bargain

    ReplyDelete
  4. From mettupalayam to kallar, you can take Ooty bus. all Ooty buses will stop kallar or thooripalam. You ask the conductor to tell the place Agathiyar ashramam. Just 10 t0 15 mins it will take from Mettupalayam. Bus charge also around 10 rs.only.
    From there you have to walk 5 mins to reach ashram. its very near only.

    ReplyDelete
  5. Thanks for everyone who gave inputs to reach Kallar from mettupalayam. i will pass the info to my dad who will be visiting kallar next month.

    ReplyDelete