​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 11 April 2013

சித்தன் அருள் -119


அகத்தியரின் அடியவரும் என் நண்பருமான ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார்.  ஒரு முறை என்னை அகத்தியர் நாடியுடன் அங்கு அழைத்து சென்று அங்கே வாழும் தமிழர்களுக்கும் அகத்தியரின் பெருமையை விளக்கி அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்கு அகத்தியரின் உத்தரவு இருந்தால் தான் என்னால் எதுவும் செல்ல முடியும் என்று அவரிடம் பதில் சொன்னேன்.

அகத்தியரிடம் பவ்யமாக கேட்ட பொழுது இந்த வேண்டுகோளை அவர் ஏற்கவில்லை, மறுத்துவிட்டார்.

மேலும் "அகத்தியன் என்ன வியாபாரப் பொருளா? விற்பனை செய்வதற்கு? கடல் கடந்து காலடி வைக்க மாட்டேன்" என்றவர் "என்னை அன்றாடம் துதிபாடும் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டால் மூத்தவர்களுடைய உத்தரவுபடி நான் சட்டென்று வாய் வழியாகச் சென்று அருளாசி வழங்கிவிட்டு வருவேன்.  ஆனால் என்னை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தால் வரமாட்டேன்" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

நான் அகத்தியரின் இந்த வார்த்தைகளை அவரிடம் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டேன்..

என் நண்பரோ "அகத்தியர் உத்தரவு கொடுத்தால் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டுமோ அதை அப்படியே செய்திட எங்க ஊர் பக்தர்கள் தயாராக இருக்கிறார்கள்.  தயை கூர்ந்து எங்களுக்காக பிரார்த்திக்கவேண்டும்" என்று மேலும் கட்டாயப்படுத்தினார்.

உடனே இதை கேட்க முடியாது, நேரம் வரும்போது கேட்கிறேன் என்று கூறி தற்காலிகமாக அவரை அனுப்பிவிட்டு  இதை மனதில் வைத்துக் கொண்டு, சமயம் பார்த்து, மூன்று மாதம் கழித்து, அகத்தியரிடம் நான் கேட்டேன்.

"வெளி நாட்டில் வாழும் மக்களும் நம் மனிதர்கள் தானே.  யாம் அங்கே வருகிறோம்" என்றவர், சில கட்டுப்பாடுகளையும் விதித்தார்.

"அகத்தியர் ஜீவநாடியை உன் வீட்டு பூசை அறையில் வைத்துவிடு.  மற்றொரு நாடிஓலைகட்டுடன் மட்டும் அந்த நாட்டிற்கு வா.  அங்கு யார் வீட்டிலும் தங்கக்கூடாது.  ஒரு அறையை எடுத்து தனியாக தங்கு.  தங்கும் அறையில் தரையில் தான் படுத்துத் தான் தூங்க வேண்டும்.  யாருக்கு உண்மையில் தெய்வ நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் தான் யாம் வாய் திறப்போம்" என்று நிறைய கட்டுப்பாடுகளைச் சொன்னார்.

"அப்பாடா! இப்போதாவது வெளி நாட்டிற்கு வருகிறேன் என்று சொன்னாரே" என்று சந்தோஷப்பட்டார் என் நண்பர்.  ஆனால் எனக்கு மட்டும் அதில் முழு திருப்தி இல்லை.  ஏதோ ஒன்று நடக்கப் போகிறது அதனால் தான் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கிறார் என்று மட்டும் தெரிந்தது.

என் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படும் அகத்தியர் ஜீவநாடி, வெளிநாட்டில் உள்ள எனது மற்றொரு ஓலைச்சுவடியில் தெரியும்.  எனவே பொது மக்களுக்கு, அருள் வாக்கை அகத்தியர் சொல்வார் என்பது புரிந்தது.  ஆனாலும், சில பிரச்சினைகளை சந்திக்கப் போகிறன் என்பது ஏனோ எனக்கு அப்போது தெரியவில்லை.

வெளிநாட்டில், அகத்தியர் நாடியை பார்க்க வந்தவர்களில் ஒரு இளம் பெண்ணும் இருந்தாள்.

சுற்று முற்றும் பார்த்து விட்டு, "எனக்கு யாராவது செய்வினை செய்திருக்கிறார்களா?" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.

"செய்வினையை அகத்தியர் நம்புவதில்லை" என்றேன்.

"அகத்தியரை நம்ப வைக்கிறேன்" என்றவள், சட்டென்று எழுந்தாள்.  குறுக்கும் நெடுக்குமாக தரையை பார்த்தபடி நடந்தாள்.  எதற்காக இப்படி நடக்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை.

அந்த அறையில் என்னையும், அவளையும் தவிர வேறு யாரும் இல்லை.  அதோடு இல்லாமல் அப்போது இரவு மணி பதினொன்றையும் தாண்டிக் கொண்டிருந்தது.  இதற்குள் அகத்தியர் நாடியில் எனக்கு ஒரே ஒரு உத்தரவு மட்டும் வந்தது.

"உடனே உன்னைச் சுற்றி ஒரு வளையும் போட்டு பாதுகாத்துக் கொள்.  இம் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிரு.  எது நடந்தாலும் பயப்படாதே, உன்னை நான் பாதுகாக்கிறேன்' என்று மீண்டும் மீண்டும் அகத்தியர் சொன்னார்.

இதுவரையில் அகத்தியர் எனக்கு இப்படியொரு முன் அறிவிப்பை தந்ததில்லை.

அப்படி என்ன தான் செய்யப் போகிறாள் அவள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது,

"அங்கிள்!  நான் இந்த ஜன்னலை திறந்து கீழே குதிக்கப் போகிறேன்.  நீங்களும் என்னுடன் குதிக்க வருகிறீர்களா?" என்று கேட்டாள்.

நான் ஜன்னலைப் பார்த்தேன்.

நான் தங்கி இருந்த ஓட்டலின் எட்டாவது மாடியில் இருந்த எந்த ஜன்னலிலும் எந்தவித தடுப்புச் சுவரோ, கம்பியோ இல்லை.

ஜன்னலை திறந்தால் வெட்டவெளி.  சர்வ சாதாரணமாக "பொத்" என்று கீழே குதித்துவிடலாம்.  வீ ழ்ந்தால் அதோ கதி தான்.

வெளிநாட்டிற்கு வந்திருக்கிறோம். நள்ளிரவு நேரம்.  என் அறையில் இருந்த அந்தப் பெண் ஜன்னல் வழியாக சட்டென்று கீழே குதித்து விட்டால், இதன் விளைவு எப்படிஇருக்கும்? என்பதெல்லாம் எண்ணிப் பார்த்த பொழுது, அகத்தியர் ஏன் இப்படி சோதிக்கிறார் என்ற கவலை தான் ஏற்பட்டது.

அகத்தியர் சொன்னபடி என்னைச் சுற்றி மந்திரத்தால் ஒரு பாதுகாப்பு வலளயத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

இங்கும் அங்கும் நடந்த அந்த பெண் திடீரென்று ஜன்னல் பக்கம் நெருங்கி ஏற ஆரம்பித்தாள்.

"சரி!  ஏதோ ஒரு விபரீதம் தான் நடக்கப் போகிறது" என்று எண்ணினேன்.

அடுத்த நிமிடம் அந்தப் பெண் தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்தாள்.

பத்து நிமிடம் கழித்து, அவளே பேசினாள்.

"இங்கே என்ன நடந்தது என்று எனக்கு புரியவில்லை.  ஒரு வயதான பெரியவர் கருப்பு தாடியுடன் தோன்றினார்.  பார்க்க ரிஷி போன்று இருந்தார்.  என்னை கருணையுடன் பார்த்தார்.

தன் கமண்டலத்தில் இருந்த தண்ணீரை என் முகத்தில் தெளித்தார்.  என் மனது இலவம் பஞ்சாக மாறியது.  ஏதோ ஒரு கொடிய தன்மை என்னை விட்டு விலகிப் போனதாகத் தோன்றியது.  "கவலைப் படாதே........ இன்று முதல் எந்த விதக் கொடிய செயல்களும் உனக்கு ஏற்படாது" என்று சொல்வது போல் இருந்தது.

ஜன்னலில் இருந்து கீழே குதிக்க நினைத்த என்னை அவரே ஜன்னல் வழியாக வந்து, என் இரு கைகளையும் பிடித்து, பத்திரமாக கீழே இறக்கி "சற்று ஓய்வெடுத்துக்கொள்" என்று சொல்லி, கைத்தாங்கலாக அழைத்து படுக்க வைத்து விட்டுச் சென்றார்.

அவர் எங்கே சென்றார் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒளி ரூபமாக உங்கள் கையிலிருந்த ஓலைச் சுவடிக்குள் சென்று மறைந்துவிட்டார்.

அதற்குப் பிறகு எனக்கு உறக்க நிலை ஏற்பட்டுவிட்டது.  இதுதான் நடந்தது.  இது ஏன் ஏற்ப்பட்டது என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்று மண்டியிட்டு, கைகூப்பி, கண்களில் நீர் வர அமைதியாக கேட்டாள் அந்த இளம் பெண்.

செய்வினை என்றால் என்ன என்று அகத்தியருக்கு எடுத்து காண்பிக்கிறேன் என்று சொன்ன இந்த பெண்ணா இப்படி பேசுகிறாள் என ஆச்சரியப் பட்டு போனேன்.

அகத்தியருக்கு நன்றி சொல்லிவிட்டு, "இந்தப் பெண் யார்? அவள் நிலை என்ன? என்பதைப் பற்றி சொல்லுங்கள்" என்று கேட்டேன்.

அவர் சொன்னார்

"இந்த ஊரில் உள்ள மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டின் அருகே உள்ள கேரளாவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மிக நெருங்கிய பழக்கம் உண்டு.  இவர்கள் அதர்வண வேதத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு செய்வினை போன்ற துர்தேவதைகளை வைத்து பிரயோகம் செய்யத் தெரியும்,.  ஆனால் செய்வினையை எடுக்கத் தெரியாது.

இப்படி துர்தேவதையை ஏவி விடுகிறவர்கள் அனைவரும் முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.  தவறாக பிரயோகம் செய்தால் அது அவர்களது வம்சாவளியையே போக்கிவிடும்.

எனவே பெரும்பாலும் யாரும் "செய்வினையை"ச் செய்வதில்லை.  இருந்தாலும், இப்படிப்பட்ட பயம் இந்த ஊர் ஜனங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

பாதி மன பயம்.  பாதி துஷ்ட தேவதையின் காற்று.  எனவே இதைப்பற்றி ஆராய்ச்சி செய்வது நல்லதல்ல.  விட்டுவிடு" என்றார்.

"இந்தப் பெண்ணுக்கு மன உளைச்சலும், யார் எதைச் சொன்னாலும் அதை எதிர்த்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் தான் இருக்கிறது.  அதனால் தான் அவள் அகத்தியனுக்கே சவால்விட்டாள்.  இப்போது அதே அகத்தியனால் தான் அவளைக் காப்பாற்ற முடிந்தது.

ஜன்னல் வழியாகக் குதிக்கலாமா என்று அவள் கேட்ட பொழுது "சரி குதி" என்று நீ சொல்லி இருந்தால் அவள் குதித்திருக்கவே மாட்டாள்.  எனவே இதை "செய்வினை" என்று எண்ண வேண்டாம்.

யாரோ இவளை தூண்டிவிட்டு இங்கு அனுப்பி இருக்கிறார்கள்.  அவர்களும் இன்னும் சில நேரத்தில் இங்கு வருவார்கள்.

அவர்கள் போடும் ஆட்டத்தைக் கண்டு சற்றும் பயந்து விடாதே.  அவர்களை நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன்' என்றும் கூறிய அகத்தியர், "இந்தப் பெண் இனிமேல் அடியோடு மாறிவிடுவாள்.  தெய்வீகப் பெண்ணாக மாறி, ஆன்மீகத்தில் ஒரு பெரிய சக்தியாக மாறி அற்புதமான காரியங்களால் இந்த ஊரில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கொடி கட்டி பறக்கப் போகிறாள்.  இனி இவளுக்கு சுதந்திரம் தான் நல்ல வாழ்க்கை, நல்ல எதிர்காலம்" என்று அருள்வாக்கு கூறினார்.

அந்தப் பெண்ணுக்கு இதைக் கேட்டதும் ஏகப்பட்ட சந்தோஷம்.

நல்ல வார்த்தை சொல்லி அவளை வெளியே அனுப்பிய உடன், இந்தப் பெண்ணைத் தூண்டி விட்டு அகத்தியரை சோதிக்க நினைத்தவர்கள் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள்.

சித்தன் அருள்..................... தொடரும்!

6 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. THANK YOU FOR THIS KIND OF NEWS, BECAUSE THESE ARE THE MAIN WAY TO INCREASE THE SPIRTUAL POWER OF THE MIND.

    ReplyDelete
  3. அகத்தியர் பாதம் பணிந்து வணங்குகிறென். தங்கள் அகத்தியரின் தொடர் படிப்பதற்க்கு மேய் சிலிர்க்கிறது. நன்றி

    ReplyDelete
  4. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  5. நம் கண்ணீரை துடைக்க கர்மாவை தீர்க்க, வழிகாட்ட எப்போது வருவாரோ :-(

    ஓம் அக்த்தீசாய நமக...

    ReplyDelete
  6. அண்ணா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    குருவின் விஜய வருட செய்தி ஏதாவது உண்டா அண்ணா...

    நன்றி...

    ஓம்சிவசிவஓம்
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம் அகத்தீசாய நம
    ஓம்சிவசிவஓம்

    ReplyDelete