​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 28 May 2012

சித்தன் அருள்-சிவனருள்!


சித்தன் அருள் தொடரை வாசித்த நிறைய அன்பர்கள் இறை தரிசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டினர்/ கேட்டுக்கொண்டனர்.  எனது நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட ஒரு தொடுப்பை கீழே தருகிறேன்.  சென்று பாருங்கள்.  ஆச்சரியமூட்டும் வீடியோ.  நான்கு நண்பர்கள் ஒரு மஹா சிவராத்திரி அன்று சுவாமி தரிசனத்துக்காக கோயிலுக்கு சென்றனர். திடீரென்று மின்னல் அடித்து இடி முழங்க நிமிர்ந்து பார்த்தவர்கள் அசந்து போய் விட்டனர்.  ஆகாயத்தில் இறைவன், ஜடாமுடியை விரித்துபோட்டு மிகவும் கூர்ந்து பூமியில் எங்கேயோ பார்ப்பது போன்ற தோற்றம் மேகத்தில் காணப்பட்டது.  கையில் செல் இருந்ததால் அதனை உடனே படம் பிடித்தனர். பகிர்ந்து கொண்டனர்.  வீடியோவை பார்த்தால் அதில், இரு விழிகள், இமை, புருவம், மூக்கு, உதடுகள், வாய், மூன்றாவது கண் இவைகள் தெளிவாக தெரிகிறது.  வீடியோ க்வாலிட்டி சற்று குறைவானாலும், இதை போன்ற ஒரு ஒளி நாடாவை நான் பார்த்ததில்லை.  கண்டு ஆனந்தப்படுங்கள்.  ஒரு முக்கியமான விஷயம்! இதில் கிராபிக்ஸ் வேலை எதுவும் செய்யப்படவில்லை.  ஒலி மட்டும் சேர்த்திருக்கிறார்கள்.


சித்தன் அருள் .............. தொடரும்!

4 comments:

  1. _/\_Om SivaSiva Om_/\_
    Om Shrim Hreem Shri Agathiya Siththa Suwamiye Potri!

    Ellam Sivamayam!

    Nice!

    ReplyDelete
  2. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete