​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 23 November 2019

சித்தன் அருள் - 827 - அகத்தியரின் அனந்தசயனம்!


மறுபடியும் ப்ரச்னம் பார்ப்பவருக்கு எதிர் பக்கமாக வந்து நின்று சிறுவன், பிரார்த்தனை செய்துவிட்டு களத்தை பார்த்தான். இடது பக்கம் இருந்த ஒரு கட்டத்தை தெரிவுசெய்து, சோழியை வைக்கப்போகிற கடைசி நேரத்தில், வலது கையிலிருந்து, இடது கைக்கு சோழிகளை மாற்றி, இடது கையால் வைத்தான். இதை கண்டு பிரச்னர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அந்த சிறுவன் தெரிவுசெய்து வைத்தது லக்கினத்துக்கு நான்காம் பாவமான கும்பராசி (சுக ஸ்தானம்).

அடுத்ததாக, 6ம் பாவமான மேஷ ராசி, பின்னர் 8ம் பாவமான மிதுன ராசி, 9வது வீடு கடக ராசி, என ப்ரச்னம் வளர்ந்து கொண்டே சென்றது.

எதுவுமே, மனதுக்கு திருப்தி அளிப்பதாக அமையவில்லை. ப்ரசனம் பார்ப்பவரும் தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தார் என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு முறை சோழியை கொடுக்கிற போதும், "பத்மநாபா,அமரப்ரபோ" என வாய்விட்டு கூறியே அந்த சிறுவனிடம் கொடுத்தார்.

கடைசி முறையாக நான்கு சோழிகளை, சிறுவனிடம் கொடுத்து அவன் விருப்பப்படியே களத்தில் வைக்கச் சொல்ல, அவன் அவற்றை ஒரு கட்டத்தில் வைத்தான். அது விருச்சிக ராசிக்கு 12ம் இடமான துலா ராசியாக அமைந்தது.

அனைவரும் அமைதியாக இருக்க, அவரது சிஷ்யர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர். அனைவரும் எழுதி முடிக்கும் வரை காத்திருந்த பிரச்னர், மகாராஜாவை அர்த்தத்துடன் பார்க்க, அவரும் அனுமதிப்பதுபோல் தலையசைத்தார்.

உடனேயே, களத்துக்கு, அனைத்து தேவதைகளுக்கும் நிவேதனம் காண்பிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தேறியது. ப்ரச்னம் நிறைவுக்கு வந்தது, ப்ரஸ்ன விதி அறிவிக்கப்படாமலேயே!

ப்ரச்னம் பார்ப்பவர், தன் அனுமானத்தை 22 சிஷ்யர்களின் முடிவுகளுடன் சரிபார்த்துவிட்டு, மறுநாள் அறிவிப்பதாக கூறி பிரஸ்னத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அனைவரும், அவரவர் இருப்பிடம் ஏகினர்.

மறுநாள், அதே நேரத்துக்கு, அனைவரும் ஒன்று கூடி இருக்க, மகாராஜாவின் உத்தரவுடன், ப்ரஸ்ன விதி வாசிக்கப்பட்டது. [ப்ரஸ்ன விதியின் முக்கிய உரை மட்டும் இங்கு கூறப்பட்டுள்ளது].

"இறை அருளால், அவர் அனுமதியுடன் ப்ரஸ்ன விதி மஹாராஜாவால் வேண்டிக்கொள்ளப்பட்டது. கோவிலின் பூஜை முறைகளில் ஏதேனும் குறை ஏற்பட்டுள்ளதா? எந்த விதத்தில் பூசை செய்து அதை மாற்றவேண்டும் என்பதே முக்கிய விஷயமாக இருந்தது. பூஜை முறைகளில் எந்த வித தவறும் நடக்கவில்லை, எந்த வித மாற்றமும் தேவை இல்லை என்பதே விதியின் முடிவு.

இங்கு நடந்த மனிதத் தவறுகள் தான் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது ப்ரஸ்ன லக்கினத்தின் தோற்றம் உரைக்கிறது. அத்தனை நிதியும் இங்கு அமர்ந்த இறைக்கு உரிமையுடையதாயினும், மனித வாசம் பட்டதும், பார்வை பட்டதும், கலைக்கப்பட்டதும், இறையின் எண்ணத்துக்கு எதிரானது. அத்தனை நிதியும் முக்கண்ணனின் எண்ணப்படியே இங்கமர்ந்தது. அதுவும் ஒரு பொதுநல நோக்குடன், எது எதை செய்யும் என அறிந்து வைக்கப்பட்டது.

இதுவரை நிதியை தொட்டதின் பின் நடந்த நிகழ்ச்சிகளே, இறை அளித்த தண்டனையை உணர்த்துவதாகும். உணர்ந்து திருந்துவதே மனிதருக்கு அழகு. மேலும் நிதியை நெருங்கிட, தொடர்பான அனைத்து மனிதர்களின் குடும்பத்திலும், விஷம் எப்படி உள்ளே சென்றது, என அறியாமலேயே அழிவு ஏற்படும். ஆதிசேஷனும், அனுமனும், நரசிங்கமும் மிகுந்த கோபத்தில் உருமாறியுள்ளனர். அமைதியாய், விலகி நிற்பதே மனிதர்க்கு அழகு" என கூறி முடித்தார்.

பல இடங்களிலும், நாடியில் தோன்றிய சித்தர்கள் உரைத்த ஒரு சில வாக்குகளையும் கீழே தருகிறேன்.

இலுப்பையடி யோகா நித்திரை கொள்ளும் அனந்த பத்மனாபனடி ஆஸ்தி கண்டார் வியக்கவே; இது தனை கண்டு ரிஷியரெல்லாம் நோவ, சித்தருஞ் சினம் கொண்டனரே -

காவலாய் இருக்கும் சிங்க முக ஈசனும் (நரசிங்கர்) பசுபதிநாதனொரு (பசுபதிநாதர், நேபாளம்), காடுறை நாகராஜனும், மங்களப் பேய்ச்சி முலையுண்டானும், கொடனந்த  புரமய்யனுமாதி கேசவனும் வாடி நிற்ப...........  

பொக்கிஷத்தை கையாண்டதால் நரசிங்க பெருமாளும், அனந்தன்காடு நாகராஜா ஸ்வாமியும், வில்வமங்கலத்திலிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவும், காசர்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அனந்தபுரத்து பெருமாளும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளும், நேபாளத்திலிருக்கும் பசுபதிநாதரும் வருத்தம் கொண்டனர்.

தவறு நடந்த்துவிட்டது என்பது தெளிவாயினும், ப்ரஸ்ன விதியில் வந்த ஒரு குறிப்பிட்ட உத்தரவு அடியேனின் மனதுள் பதிந்து உறுத்திக்கொண்டே இருந்தது.

அது என்ன?  

"முக்கண்ணனின் எண்ணப்படியே இங்கமர்ந்தது. அதுவும் ஒரு பொதுநல நோக்குடன்" என்பதின் அர்த்தம் என்ன என்பதே!

முக்கண்ணனை நோக்கி நடக்கலாமா? என்று யோசிக்க தொடங்கினேன்!

சித்தன் அருள்............... தொடரும்!

7 comments:

  1. Agnilingam Ayya, like 786 divine number, what are the other divine numbers.. I remember seeing this blog two more numbers for Murugan and other divinity.
    Kindly advise.

    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. Om Sri lopamudra samata agastiyar thiruvadi sàranam

    ReplyDelete
  3. தினமும் அய்யன் கூறியபடி உலக க்ஷேமமாக இருக்க பிராத்தனை செய்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. Ayya vanakam.divine number I jappam. Seyava illai veru edariku numbers I. Upayogam seiya vendum.om Sri lopamudra samata agastiyar thiruvadi pottri.

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் எண்கள், சக்கரம் தகிடில் பதிக்கும்பொழுது உபயோகப்படுத்தக் கூடியவை. அந்த எண்கள் உள்ள ரூபாய் நோட்டு கையிலிருந்தால், செல்வம் சேரும், மற்றும் அது இருப்பவரின் நம்பிக்கையை பொறுத்து, அவரை சுற்றி, நல்லது நடக்கும்.

      Delete
  5. Deivame viruchiga lagnathuku 12 idam thulam thana ??? ;p enna ippadi solringa :)

    ReplyDelete