​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 June 2019

சித்தன் அருள் - 814 - சித்தமார்கத்தில் எளிய மருத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்கிற தொகுப்பில், மருத்துவம் பகுதியை தொட்டபொழுது, ஓரிரு அடியவர்கள், "சர்க்கரை நோய்க்கான" தீர்வு ஏதேனும் பற்றி அகத்தியப் பெருமான் கூறியிருக்கிறரா? என வினவியிருந்தனர். ஆம்! கூறியுள்ளார். அதை அடியேன் பின் பற்றுகிறேன், நல்ல பலன் உள்ளது. அவர் கூறியதை இத்தனை நாட்களாக, கூறலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.  சரி! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டுமே என்று, இன்று அதை தொகுப்பாக்குகிறேன்.

நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, அனைத்து பஞ்சபூதங்களும், மனிதனால் பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் வாழும் அனைத்து ஆத்மாக்களும், அதன் பாதிப்பிலிருந்து விடுபட, என்னென்னவோ செய்கிறது. ஓரளவுக்கு சில விஷயங்கள் உதவி செய்கிறது. நிறைய அளவுக்கு, பலன் கொடுப்பதில்லை. இதனால் மனித மனம் சோர்ந்து போகிறது. மருத்துவர்களால், சர்க்கரை வியாதி என்பது, பரம்பரை வியாதியாக கருதப்படுகிறது. இது ஓரளவு உண்மையாயினும், முற்றிலும் உண்மை இல்லை. அப்படி ஒரு நிர்பந்தமும் இல்லை. உண்ணும் உணவில் கட்டுப்பாடின்மை, உடல் வியர்க்காமை போன்றவைதான் முக்கிய காரணம். அடியேனின், தகப்பனாருக்கு, இந்த வியாதி இருந்து கடைசி வரை மாத்திரைகளை சார்ந்தே இருந்ததால், பல முறை இதை பற்றி யோசித்திருக்கிறேன். ஏதேனும் ஒரு வழி, சித்தர்கள் காட்டினால், அவருக்கும் நிம்மதியான உடல் நிலையை கொடுக்கலாமே என்று தேடியிருக்கிறேன். அவர் கடைசி காலம் வரை எதுவுமே கைவல்யமாகவில்லை. சித்தர்கள் எப்பொழுதுமே, ஒரு அனுபவம் வழித்தான் எதையும் நமக்கு உணர்த்துவார்கள். அப்பொழுதுதான், அதன் மகத்துவம் நமக்கு புரியும், சரியாக உள்வாங்குவோம். அப்படி ஒரு அனுபவம் அடியேனுக்கு ஏற்பட்டது.

மிகவும் அலைந்து, உடல் நொடிந்து போன நிலையில், ஒரு வியாழக்கிழமை காலை, அகத்தியப்பெருமானை, சென்று தரிசனம் செய்து, அருள் பெற்று வரவேண்டும் என விரும்பினேன். அன்று காலை எழுந்திருக்கும் பொழுது, முடியவில்லை. கைகால்கள் துவண்டது, தலைக்குள் ஒரு கனம். கையும், காலும் மிகுந்த வலி. மரத்துப்போன உணர்வு வேறு. சரி எதற்கும், ஒருமுறை ரத்த பரிசோதனை செய்துவிடுவோம் என்று பார்த்தால், சர்க்கரை அளவு வெறும் வயிற்றில், காலை எழுந்தவுடன் 450 புள்ளிகள் காட்டியது. கேட்கவேண்டுமா பிரச்சினைக்கு. வீட்டில் ஒரே களேபரம். சொன்னால் கேட்பதில்லை, ரொம்ப அலைச்சல், மருந்து சாப்பிட்டு குறைக்க வேண்டும் என நிறைய கட்டளைகள். அன்று அகத்தியர் தரிசனம் கிடைக்காமல் போயிற்று. அடங்கி ஒதுங்கி இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, ஞாயிறு அன்று மாலை அகத்தியரை தரிசனம் செய்வது என்று தீர்மானித்தேன்.

பூசை அறையில், அகத்தியரை, ஓதியப்பரை பார்க்கும் பொழுதெல்லாம், கேள்விக்கணைகள் தான்.

"என்ன? பெரியவர்களே! இந்த நோயை தந்து, அடியேனின் இரு கைகளையும், கால்களையும் எடுக்கப் போகிறீர்களா? சரி, ஆகட்டும், ஆனால், நீங்கள் போடுகிற உத்தரவுகளுக்கு ஓடி ஓடி உழைக்கனும்னா, இரண்டும் (கையும், காலும்) சரியாக வேலை பார்க்க வேண்டும். என்ன தீர்மானம் பண்ணியிருக்கிறீர்கள்?" என்று கேட்பேன்.

ஞாயிறு மாலை, வண்டியில் அகத்தியர் கோவிலுக்கு கிளம்பும் பொழுது, கால்களின் மரத்துப்போன உணர்வு போகவில்லை. எப்படியோ, சமாளித்து, வண்டியில் ஏறி, தனியாக பாலராமபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டேன்.

கோவில் திறந்திருந்தது. பூசாரி மட்டும் இருந்தார், கூடவே அடியேனும். சூழ்நிலை இப்படி அமைவது அடியேனுக்கு பிடிக்கும். ஏன் என்றால், நம் வேண்டுதல்களை, அவர் செவி சாய்த்து கேட்டுத்தான் ஆகவேண்டும். வேறு யாரும் இல்லையே. எதுவுமே ஞாபகத்துக்கு வரவில்லை. போய் அமர்ந்து, எப்பொழுதும் போல, "ஆதித்தய ஹ்ருதயம்" மூன்று முறை ஜபம் பண்ணி குருவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தபின், பூஜாரி பிரசாதம் தந்தார்.

கண் மூடி பிரசாதத்தை வாங்கி நெற்றியில் ஒற்றிக்கொள்ள, மிக சன்னமாக "என்னவோ கேட்கவேண்டும் என்று வந்தாயே, மறந்து போய்விட்டாயா?" என்று கேட்டது.

கேட்க வந்ததை, மறந்து போன அடியேனுக்கு, அவரே ஞாபகப்படுத்தினார். என்னதான், வீட்டில் இருந்து அவரிடம் கிண்டலாக பேசினாலும், அவர் முன் போய் நின்று, அவரே ஞாபகப்படுத்துகிற பொழுது, அடங்கிப்போய் விடுவோம்.

அமைதியாக அவரிடம் கூறினேன்.

"சூழ்நிலை இப்படி இருக்கிறது. ஓடி உழைத்தது, இறைவன், உங்கள் கட்டளைப்படி. எப்படி இது அடியேனுள் புகுந்தது என்று யாம் அறியேன். ஏதேனும் ஒரு வழி காட்டக்கூடாதா, இதிலிருந்து வெளியே வர!" என்று வேண்டினேன். அவ்வளவுதான்.

மறுநாள், ஒரு சித்த குருவிடமிருந்து தொலைபேசி வந்தது.

"ஏன்னு தெரியலை. இன்று காலை தியானத்தின் பொழுது, ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லச்சொல்லி உத்தரவு. அதை தட்டச்சு செய்து உனக்கு அனுப்பியிருக்கிறேன்.  படித்துப்பார்" என்று கூறிவிட்டு விடை பெற்றார்.

மெயில் பார்த்தால், இன்ப அதிர்ச்சி. "சித்த மார்கத்தில் எளிய மருத்துவம்" என்று சர்க்கரை வியாதியை பற்றி விரிவாக போட்டிருந்தார்.

அடியேனுக்கு ஆச்சரியம்.

வேண்டிக்கொண்டோம்! இத்தனை வேகமாக பதிலா! அடடா! நம் குருநாதர், அவர்தான். இதை உடனடியாக செய்து பார்க்க வேண்டும், என மனம் கூறியது. வேலையில் இறங்கினேன். அதில் கூறியிருந்த மருத்துவ முறையை, சுருக்கமாக கூறுகிறேன்.

வேண்டிய பொருட்கள்:-

1. கருஞ்சீரகம் - 50 கிராம்
2. பார்லி - 50 கிராம்
3. கோதுமை - 50 கிராம்

ஒன்றரை லிட்டர் தண்ணீரில், மூன்றையும் கலந்து அடுப்பில், குறைவான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கியபின், பாத்திரத்தை இறக்கி வைத்து, நீரை குளிரவைக்க வேண்டும். அந்த கஷாயம் நன்றாக குளிர்ந்தபின், ஒரு கண்ணாடி குடுவையில் (பாட்டிலில்) வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம் 50 மில்லி (இதற்கு மேல் எடுக்கக்கூடாது) வெறும் வயிற்றில் காலையில், அல்லது இரவில் உணவு உண்டபின் 1 மணி நேரம் கழித்து, உறங்க செல்லும் முன் ஒரு முறை 50 மில்லி கிராம் அருந்த வேண்டும். இந்த 50 மில்லி கிராமுக்கே ஒரு சிலருக்கு கழுத்தில் வியர்க்கும். அப்படியென்றால், அது எத்தனை வீரியம் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாள் பட, கண்ணாடி குடுவையில் உள்ள திரவம் புளிப்படையும். கவலை வேண்டாம். அது வயிற்றை கெடுக்காது. வீரியம் கூடும் அவ்வளவுதான். உணவில் சிறிது கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு, 14 நாட்கள் கழிந்தபின், ரத்த பரிசோதனை செய்தால், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எப்படி "சர்க்கரை" இப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று. நாமும் சாதாரண மனிதர்களை போல என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். தலை சுற்றல், அசதி, மரத்துப் போவது போன்ற அறிகுறிகள் விலகிவிடும்.

சரி! இது எப்படி வேலை செய்கிறது? உடலுக்குள் சென்ற கஷாயம், உடல் மிக ரகசியமாக சேர்த்து வைத்திருக்கும் சர்க்கரையை கூட எடுத்து, உடலை விட்டு விலக்கி விடுகிறது. உடலில் சர்க்கரை அளவு சமநிலை அடைந்ததும், உடல் புது தெம்பு பெறுகிறது. அசதி என்பதே இல்லை. இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், சர்க்கரை கட்டுப்பாட்டுக்காக சாப்பிடும், மருந்து, மாத்திரைகளை, இந்த நேரத்தில் நிறுத்திவிடவும். குறிப்பாக, "இன்சுலின்" எடுத்துக்கொள்பவர்கள் அதை நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால், சர்க்கரையின் அளவு உடலில், மிக குறைந்து, பல பிரச்சினைகள் வரலாம்.

இதில், இன்னொரு ஆச்சரியமான விஷயமும் அவர் கூறியிருந்தார். 14 நாட்களுக்கு பின் மற்றவர்கள் போல எந்த இனிப்பு சுவையையும் சாப்பிடலாம் என்று தொகுப்பில் போட்டிருந்தார். கைகாட்டினாலே, உடனேயே ஓடி போகிற மனநிலை உடையவன். அதையும் பரிசோதித்து பார்த்துவிடலாம் என்று, திருநெல்வேலி சென்ற பொழுது, 1 கிலோ "அல்வா" வாங்கி வந்து 250 கிராமை ஒரு நேரத்தில் சாப்பிட்டு பரிசோதித்தேன். ஆச்சரியம்! சோர்வு, தலை சுற்றல், மரத்து போவது என்கிற அறிகுறிகளை காணவே இல்லை. இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து "சூப்பர் இன்சுலின்" என்று நாமகரணம் செய்தேன்.

அடுத்தவாரம் அகத்தியர் கோவிலுக்கு சென்று அவருக்கு "மிக மிக நன்றியை" கூறிவிட்டு வந்தேன்.

அகத்தியப்பெருமானின், வழிகாட்டுதலில் நம்பிக்கை உள்ளவர்கள், இதை மற்றவர்களுடன் பகிருங்கள். உங்களால், ஒரு ஆத்மாவின் சிரமம் விலக்கப்பட்டால், அதுவே அவரின் ஆசிர்வாதத்தை உடனேயே உங்களுக்கு கொண்டு வந்து சேரவைக்கும்.

இந்த தொகுப்பின் நிறைவில் ஒரு சிறு கேள்வி. மேல் கூறியதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சற்று யோசித்து, உங்களுக்கு ஏதேனும் வழி தெரிந்தால், "agnilingamarunachalam@gmail.com"க்கு உங்களுக்கு தெரிந்த வழியை தெரிவியுங்கள். இந்த சூழ்நிலை மிக வித்தியாசமானது.

அடியேனின் நண்பருக்கு ஒரு உத்தரவு வந்தது.

"இந்த மலை அடிவாரத்தில் யாம் குடிகொண்டுள்ளோம். எம்மை கண்டுபிடித்து, எடுத்து, அந்த ஊர்காரர்களிடம் சேர்க்கவும். எமக்கு கோயில் கட்டி வழிபடச்சொல். யாம் அவர்கள் எதிர்காலத்துக்கு காவலனாக இருப்போம். கவனம், எனக்கு காவலாக சர்ப்பங்கள் உள்ளது."

இதை கேட்ட நண்பரிடம், மலையை கண்டுபிடித்து விட்டீர்களா? என்றேன். ஒரு புன்னகை பூத்து,

"மேலும் எவ்வழி செல்வது என்று புரியவில்லை" என்றார்.

அடியேனுக்கு தெரிந்த வழிகளை கூறிவிட்டேன். என்னிலும், குறைகள் இருக்கலாம், அல்லது யோசனைக்கே வராத விஷயங்கள் இருக்கலாம். 

அடியேனுடைய நிலையில் நீங்கள் இருந்தால், நண்பருக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள், அல்லது என் நண்பரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்.

உங்கள் யோசனையில் என்ன வருகிறது என்று கூறுங்களேன்.

சித்தன் அருள்........... தொடரும்!

29 comments:

  1. ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  2. அகத்தியர் பெருமானுக்கும் தங்களுக்கும் நன்றி. இறைவன் அடி போற்றி. குருமார்கள் அடி போற்றி.

    ReplyDelete
  3. Om Agastheeswaraya Namaha. Thank you very much Sir for this important information. I earnestly pray for your good health.
    it is wonderful and amazing to read receive your guidance and the messagesas revealed by God himself.

    you have the highest place in the Mahamunis Arul and we are indeed greateful to you for getting the arul of Mahamuni through you

    ReplyDelete
  4. Dear Sir, why has the english version which used to get published in Gnana boomi is stopped now. there is a great agasthiya devotee who is from Maharashtra and his name is Sagar and he has visited kodagnallur and other places after reading about it in Gnanabhoomi . he always is very eager to know about the Mahamunis messages and keeps waiting every week. but i am sure now he will be dissappointed . kindly restart the english version. not for Sagar alone but surely lot of people are there who do not know Tamil and were reading the english version

    ReplyDelete
    Replies
    1. Namaskaram! Message sent to the admin of gnanabhoomi web. Hope will have positive result.

      Delete
  5. ஓம் அகத்தீசாய நமஹ!
    ஐயா,
    பார்லியும் கோதுமையும் மாவாக்கி சேர்க்க வேண்டுமா அல்லது முழு தானியமாக சேர்க்க வேண்டுமா?

    ReplyDelete
  6. ஐயா.... எம்பெருமான் முருகப்பெருமான் மற்றும் என் அன்னை அம்மனுக்கும் கோடான கோடி நன்றிகள்...உண்மையிலுமே அவர் அருள் அன்று அனுவும் அமைவதில்லை.... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரா தாயே போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  7. ஓம் அகத்தியர் பிரான் திருவடிகள் போற்றி! தாயின் திருவடிகள் போற்றி! ஐயா வணக்கம். நீங்ககளும், உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன். குருவின் அருளால், தங்கள் அன்பால் கேட்டது வரமாக கிடைத்தது. மிக்க நன்றி ஐயா. குருவின் கருணையினால் மழை பெய்து பூமி சுழிக்கட்டும். குருவே சரணம். 💐😊💐

    ReplyDelete
  8. Thank you for your Medicine information,

    After 14 days, how many days continue the medicine.
    Pls guide me sir.

    ReplyDelete
  9. தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. தினமும் காப்பி சாப்பிடுவது போல இருக்கட்டுமே. இதை மருந்தாக நினைக்க வேண்டாம்.

    ReplyDelete
  10. எல்லாம் வல்ல குருவை வணங்கி அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்

    இதற்கு பத்தியம் இருக்க வேண்டுமா? ஆம் என்றால் என்ன என்ன உணவு பொருட்கள் சாப்பிட கூடாது ?

    14நாட்கள் கழித்து சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகி விடுமா? கஷாயத்தை fridgeல் வைக்கணுமா?

    ReplyDelete
  11. பத்தியம் என ஒன்றில்லை. இனிப்பு சாப்பிடுவதை சற்று கட்டுப்படுத்தி கொள்வது நல்லது.
    சர்க்கரை நோய் நிரந்திரமாக குணமாகாது. ஆனால் ஒரு இயல்பான மனிதரின் வாழ்க்கை திரும்பி கிடைக்கும். பக்கவிளைவுகள் இல்லாத ஆரோக்கியம் அமையும்.

    பிரிஜ் இல் வைக்கவேண்டாம்.

    ReplyDelete
  12. ஐயா வணக்கம். பதிவு 812 இல் கூறியது போல் வெறும் வயிற்றில் காலையில் அல்கலைன் ( எலுமிச்சம் பழம் ) எடுத்துவருகிறேன். அதனுடன் இந்த karuncheraga பானத்தையும் காலையில் அருந்தலாமா . இரண்டும் எடுக்கும் பொழுது எப்படி எடுத்துக்கொள்வது . தயவுசெய்து தெரியப்படுத்தவும் .

    ReplyDelete
    Replies
    1. If you really have sugar problem, then go for it. Otherwise don't take it.

      Delete
    2. மிக்க நன்றி ஐயா. நான் இரண்டு பானங்களையும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்கிறேன்.
      ஓம் லோபாமாதா சமேத அகஸ்தியர் அய்யா போற்றி போற்றி ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் போகர் சித்தர் திருவடிகள் போற்றி போற்றி .

      Delete
  13. ayya treatment for vericose pain for my mother.she is suffering a lot.if ayya suggests pls post.agathiyar loba muthra thayyar saranam

    ReplyDelete
    Replies
    1. There is very good medicine available in Homeopathy. If you are interested can contact a Homeo Doctor or buy "NUX VOM" - 1 M dilution 1 Ounz and ask her to take 3 drops every three hours. It will give good result.

      Delete
  14. Appadi ondrum malaiadivarathuku poi pambugalidam kadivangi andha silayai konduvanthu poojika vendum endru thalai ezhuthu illai avan avanuku ayiretu prachanai ithil malaiadivaramam silaiyaam sarbangalaam .. pomayya neengalum ungal bhakthiyum ...

    ReplyDelete
    Replies
    1. Thanks for your advice. But what to do "decision" is individual's.

      Delete
  15. Can you tell medicine for heart and kidney I wait for your reply

    ReplyDelete
  16. For heart - Kriya Yoga + Pranayaamam practise is good. For kidney Reiki music theraphy is available. Besides "Kannupillai POO" otherwise known as "Kanpoolai Poo" available only in Tamilnadu is a very good medicine.

    ReplyDelete
  17. ஓம் லூபாமுத்ரா சமேத அகத்தியர் ஐயன் திருவடிகள் போற்றி! " எவ்வுயிரும் இன்புற்று இருக்கவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரம்மே ". இந்த வழியில் எல்லோருக்கும் வழி காட்டி கொண்டு இருக்கின்ரீர்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.💐💐💐

    ReplyDelete
  18. ஓம் லூபாமுத்ரா சமேத அகத்தியர் ஐயன் திருவடிகள் போற்றி! " எவ்வுயிரும் இன்புற்று இருக்கவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரம்மே ". இந்த வழியில் எல்லோருக்கும் வழி காட்டி கொண்டு இருக்கின்ரீர்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.💐💐💐

    ReplyDelete
  19. lol i thought you wont publish my comment since its atheistic views ... agathiyar ungalai nallathan train pannirukar :P

    ReplyDelete
  20. Hello creative do not disturb us. we will beleive and practice Mahamunis teachings and dont want you poking us. can you show your creativity elsewhere . leave us alone

    ReplyDelete
  21. Dear Ayya,

    Greetings!!!

    I have forwarded your prescription for Diabetes to my father.

    He prepared and consumed the decoction as advised. But, before medicine Diabetes was 130 and after 14 days consumption now it is 200.

    Please advise

    My mail id is malathisai@gmail.com

    ReplyDelete