​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 October 2018

சித்தன் அருள் - 774 - 22/10/2018 - அந்தநாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய தினம் (25/10/2018) காலையில் தொகுப்பை பதிவிட முடியவில்லை. கோடகநல்லூரில், இறைவனும், அகத்தியப்பெருமானும், அடியவர்களும், ஒன்று சேர்ந்து நடத்திக் கொடுத்த "அந்த நாளின்" நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு முன், அகத்தியப்பெருமானை பாலராமபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலில் தரிசித்து, விளக்கு போட்டு நன்றி கூறிய பின், எழுதுவதே சரி என்று அடியேன் மனதுக்கு தோன்றியதால், இதோ, இப்பொழுதே புண்ணிய யாத்திரை பயணம் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அங்கு சென்று அவருக்கு நன்றியை, உங்கள் அனைவர் சார்பாகவும் தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன். எல்லாம் அகத்தியர் அய்யன் செயல். நிறைய விஷயங்கள் தெரிவிக்க வேண்டி இருக்கிறது. சற்று, பொறுங்கள். சென்று வந்துவிடுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்........... தொடரும்! 

1 comment: