​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 26 April 2018

சித்தன் அருள் - 754 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த தொடரில் தெரிவிப்பதெல்லாம், சித்த மார்கத்தில் சிறந்து விளங்குகின்ற, அனுபவத்தால் பழுத்த பெரியவர்களின் வாக்கு! யார் மனதையும் திருப்திப்படுத்துகிற அளவுக்கு, அடியேனால், எழுத முடியும் என்று தோன்றவில்லை. நம்முள் பல கேள்விகள் இருக்கலாம். எல்லா கேள்விகளுக்கும், நாம் விரும்புவதுபோல் பதில் இருக்கும் என்று அடியேன் நம்பவில்லை. உரைத்த உண்மையை அது போல் தெரிவிப்பது மட்டும் தான் அடியேனின் வேலை. இங்கு கூறுபவைகளை, நடை முறைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. குளத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள கரையிலிருந்தால் முடியாது. நீரினுள் இறங்கித்தான், அவரவர் உணரவேண்டும். அதற்கு, முதலில், "அகம்பாவம்" என்கிற ஆடையை கரையில் கழட்டி வைத்து, இறங்கி, ஆழம் அறிந்தபின், "அக்கரை" ஏறும் பொழுது, கௌபீனம் கூட வேண்டாம் என தோன்றும். அப்படித் தோன்றினால், அந்த ஆத்மா உணர்ந்துவிட்டது என்று அர்த்தம். இனி, இந்த வார தொடருக்கு செல்வோம்.]

"இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது தானே! அப்படியிருக்க, பஞ்ச பூதங்கள் துணையின்றி ஒரு பிரார்த்தனையை சமர்ப்பிக்க முடியுமா? அனைத்திலும் அந்த பஞ்ச பூதங்களின் குணம் என்னவோ அதன் படித்தானே பிரார்த்தனையும் அமையும். உதாரணமாக இங்கிருப்பவர் பிரார்த்தனை உடன் பலனளிக்கும், வெளி நாட்டில் இருந்தால் எந்த கர்மா செய்தாலும் பலன் கிடைப்பதில்லை என பெரியவர்கள் கூறுவதின் அர்த்தம் என்னவோ?

நீ பிரார்த்தனையை கூறுகிறாயா? அல்லது கர்மா செய்வதை கூறுகிறாயா?

இரண்டும் வேறாகினும், ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது தானே!

ஆம்! இரண்டும் வேறு வேறு தான். ஆயினும் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. உன் கேள்வி புரிகிறது. பாரத கண்டத்தை கர்ம பூமி என்கிறார்கள். அங்கு செய்யப்படும் கர்மாக்கள், பிரார்த்தனைகள் எளிதில், விரைவில் நிறைவேறிவிடும். இந்த வித்யாசத்தோடு, ஏன் இறைவன் படைத்தான் என்று கேட்க வருகிறாய்! அப்படித்தானே!

அந்த படைப்பு ஒரு தெய்வ ரகசியம். ஏன், பாரத கண்டத்தை "கர்ம பூமி" என இறைவன் வரையறுத்து, மிச்ச இடங்களை போக பூமி என்று பிரித்தாளுகிறான் என பலருக்கும் புரியவில்லை. ஒரு வீடு கட்டினால், மனிதன், வாசல், திண்ணை, நடு அறை, மாடி, பின்புறம் என பல இடங்களாக பிரித்துக் கொள்கிறான்? அவன் வசதிக்காக, மேலும் சொல்லப்போனால், சமூகம் ஒப்புக்கொண்ட ஒரு முறை. அல்லவா. ஒரே கல் தான், ஒன்று படியாகிறது, இன்னொன்று தெய்வம் குடிகொள்ளும் சிலையாகிறது. ஏன் என்று, அந்த சிற்பியிடம் கேட்டால் என்ன சொல்வான். அது சிலைவடிக்கும், பக்குவம் கொண்டது. ஒன்று போதும், இன்னொன்று பக்குவம் இருப்பினும் படியாகட்டுமே என்று தீர்மானித்தேன், என்பான். அது போல், இறைவன் தேர்ந்தெடுத்த இடங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட பக்குவம் உடையது. தெரிவு செய்வது, இறைவன் உரிமை. அதில் கேள்வி கேட்க்கும் உரிமை நமக்கில்லை, என்பதே உண்மை. இருப்பினும், மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு, கேள்வி கேட்க்கும் உரிமை இருக்கும் வரை, இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். இப்போதைக்கு, இந்த விஷயத்தில், இது வரை தெரிந்து கொண்டால் போதும்.

பிரார்த்தனையை சமர்ப்பிக்க கோவில்கள், மகான்களின் சமாதிகள், பல புண்ணிய இடங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, என எப்படி புரிந்து கொள்வது?

"தனிப்பட்ட வாழ்வின், பிரார்த்தனைகள் என்றால், அதை புரிந்து கொள்ள காலங்கள் ஆகும். பிறருக்கென என்றால், ஒரு சில வேளை உடனேயே நம் கண் முன் நடப்பதை காணலாம். இதிலிருந்தே, எதற்கு, இறைவன் முக்கியத்துவம் கொடுத்து, உன்னை வழி நடத்துகிறான் என்று உணரலாம். பிரார்த்தனையை, மிக சிறந்த விஷயம் எனக் கூறக் காரணமே, பிறருக்கு பிரார்த்திக்கும் நிலைமையில், ஒரு மனிதன் தன் தேவைகளை மறக்கிறான். அந்த தன்னை மறந்த நிலையில், இறைவனே இறங்கி வந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்து விடுவான். லோகம் க்ஷேமமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிற பொழுது, அந்த பன்மையான பரந்த நிலையில், நீயும் இந்த உலகத்தில்தானே இருக்கிறாய். உன் தர்மத்துக்கு உட்பட்ட பிரார்த்தனைகளும், காலப்போக்கில் நிறைவேற்றப் படும்.

ஒரு விஷயத்தை கூறுகிறேன். சரியாக புரிந்து கொள். கர்ம பாரத்தை குறைத்துக் கொள்ளத்தான் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ஒரு மனிதனுக்கு எத்தனையோ உடல்கள் உள்ளது. இனி உள்ள ஜென்மங்களுக்கான சூக்ஷும உடல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. இங்கு நாம் பார்க்கும் பௌதீக, பஞ்ச பூத உடலுக்கு "ஸ்தூல" உடல் என்று பெயர். பஞ்ச பூத கலப்பில்லாத உடல்கள் அதனதன் இடத்தில் உள்ளது. இந்த உடலால் செய்யப்படுகிற விஷயங்களின் கர்ம பலனுக்குண்டான நிகழ்வை, இனி எந்த ஜென்மத்தில் அந்த ஒருவன்/ஒருவள் அனுபவிக்க வேண்டும் என இறைவன் தீர்மானித்து அந்தந்த சூக்ஷும உடலில், பதித்து விடுவார். நல்லது செய்தால் நல்ல பலன், தீயது செய்தால், தீய பலன். மறுபடியும், மறுபடியும் பிறவித் தளை. இது எதற்கு என்று மனிதன் யோசிப்பதில்லை. இந்த பிறவித்தளையிலிருந்து விடு பட என்ன செய்ய வேண்டும் எனக்கூட மனிதன் யோசிப்பதில்லை. நல்லது செய்தாலும், தீயது செய்யாமல் இருக்க வேண்டும். நன்மை, தீமை போன்றவற்றின் கர்ம பலனை இறைவனிடமே சமர்ப்பித்து விடவேண்டும். "எனக்கு நன்மையையும் வேண்டாம்/ தீமையும் வேண்டாம், இறைவா நீயே அனைத்தையும் எடுத்துக்கொள்" என்று வேண்டிக்கொள்ளவேண்டும். அவனிடமே, கொடுத்துவிடவேண்டும். இதை எத்தனை பேர் செய்கிறார்கள் என கவனித்துப் பார். அப்போது, நமக்கென காத்திருக்கும் உடல்கள் என்னவாகும் என்ற யோசனை வரும். என்ன செய்தால், அந்த உடல்களையும் தாரை வார்த்துக் கொடுத்து, பிறவித்தளையை விட்டு வெளியே வரமுடியும்? என்று யோசிப்பாய். அதற்கும் விடை, மிக எளிய ஆத்மார்த்தமான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும்! அனைத்தையும் கழித்து விடலாம், எனக் கூறி நிறுத்தினார்.

பிரார்த்தனை வழி உடலை தாரை வார்த்து, பிறவித்தளை விலகி இறைவனோடு கலந்துவிடலாமா? தாங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது, என்றேன்.

இந்த மாதிரி, எத்தனையோ எளிய வழிகள், சித்த மார்கத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது. அதை புரிந்து கொள்ளத்தான், யாருக்கும் மனம் இல்லை! நேரம் இல்லை, என்றார்.

சித்தன் அருள்.......................... தொடரும்!



11 comments:

  1. Om Sri Matha Lobamudra sametha agatheesaya namaha ....Thiru Agnilingam ayya avargaluku mikka nandri ...

    ReplyDelete
  2. நமச்சிவாய வாழ்க! இறைவனின் கருணை எவ்வளவு பெரியது! இப்படி ஒரு அருமையான விளக்கத்தை யாராலும் தர முடியாது! அனைத்து கருவி, காரணங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  3. Vannakkam ayya....
    Ullaarndhu purindhu kolla mudiyavillai...

    ReplyDelete
  4. இறைவனின் திருவிளையாடல் ....

    ஓம் நமசிவாய

    ReplyDelete
  5. நிறைய விஷயங்களை நான் கடைபிடித்து வருகின்றேன் என்று நினைக்கும் போது மனம் நிம்மதி கிடைக்கிறது... புதிய வழிமுறைகளை அகத்தியர் அய்யன் தருகிறார்...

    ஓம் அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    ReplyDelete
    Replies
    1. ஓம் அகத்தியர் அய்யன் போற்றி போற்றி
      ஓம் அகத்தியர் அய்யன் போற்றி போற்றி
      ஓம் அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

      Delete
  6. அப்படியிருக்க, பஞ்ச பூதங்கள் துணையின்றி ஒரு பிரார்த்தனையை சமர்ப்பிக்க முடியுமா? அனைத்திலும் அந்த பஞ்ச பூதங்களின் குணம் என்னவோ அதன் படித்தானே பிரார்த்தனையும் அமையும்.

    Ayya, Could you explain please

    ReplyDelete
  7. FOR EG: TAKE WATER. DEPENDING UPON THE PLACES WHERE IT RUNS THROUGH, IT COLLECTS SOME GUNAM. IT MAY TASTE SLIGHTLY DIFFERENT THAN WHAT WE MAY THINK. IF IT IS TAKEN AS MEDICINE, THE CURE TIME WILL DIFFER FOR THE SAME PERSON. IT IS BECAUSE OF THE GUNA IT INHERITS. THE BRIEF MENTION HERE MEANS THAT IF ONE DOES A KARMA/PARIHARAM IN A KARMA BHOOMI THE RESULT WILL COME FAST THAT A BOGHA BHOOMI. IT DOES NOT MEAN THAT BOGHA BHOOMI KARMA IS NOT ACCEPTED. IT WILL BE ACCEPTED ON A LATER TIME. IN THE CASE OF PITHURKARMA IN BOGHA BHOOMI, NOTHING IS ACCEPTED - THIS IS AS PER AGASTHIYA AND KANCHI PERIYAVAA.

    ReplyDelete
  8. PLS GIVE US NEXT ADVICE AFTER 26TH APRIL 2018

    ReplyDelete