​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 April 2014

சித்தன் அருள் - 170 - அகத்தியரை பணியுங்கள் நட்சத்திரமாக்கி விடுவார்!

(கல்லார் மலைமேல் உறையும் அகத்தியப் பெருமான்)

இன்னவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் அந்த புலி தங்கி இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ, எட்டி எட்டிப் பார்த்தும் வரவில்லை. இரையை தேடித்தான் வந்திருக்கிறது, உங்களை தேடி அல்ல. ஆனால் ஏதோ ஒரு சூட்ச்சுமம் மனதுக்குள் புகுந்ததினால் தான் எல்லோருக்குள்ளும் பயம் இருந்தது, யாருமே தூங்க வில்லை. எல்லார் மனதிலும் இருந்தது, யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. பயம் என்றால் உயிர் பயம் அல்ல, ஏதேனும் வந்தால் தக்க பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோமே என்கிற நம்பிக்கை.  ஆனாலும் சித்தர்களை வந்து உங்களை காப்பாற்றச் சொன்ன காரணம், அந்த புலிக்கு எந்த மனுஷ வாசனை உணராமல் இருக்கவும், எந்தவித இரை வாசனையும் அதன் முகத்தில் படக்கூடாது என்பதற்காகத்தான் காற்று வேகமாக அடித்து, அந்த வாசனைகளை திசை மாற்றி, அந்த புலியை விரட்டிவிட்டது. வயதான புலி என்றாலும் கூட, புலி என்றால் கிலிதானே!

அந்த புலியை பார்த்து, அகத்தியன், வந்தது புலிப்பாணி சித்தன் என்று சொல்லமாட்டேன். அது மிருகம் தான். அது உங்களுக்கு பின்னால் 47 அடிகளுக்குப் பின்னால், அமர்ந்திருந்தது. அதை நேற்றே சொல்லியிருந்தால் பதறிப் போயிருப்பீர்கள். மன நிம்மதி இருக்காது. சிலருக்கு, மாரடைப்பு நோய் கூட வந்திருக்கும். ஏன் என்றால், மனிதர்களுக்கு உயிர் என்றால் வெல்லக் கட்டியடா. வாழ்க்கை போகலாம், இருக்கலாம், ஆனால் எப்படிப் போகப்போகிறது என்பதுதான் கேள்வி. இந்த இடத்தில் வந்து, தனிக்காட்டில் வந்து தனியாக, யாரோ ஒரு அகத்தியன் என்ற பெயரின் பின்னால் சென்று முட்டாள்தனமாக ஏதோ விபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாதல்லவா.  என் பெயரைசொல்லிவிட்டு, என் அழைப்புக்கு இணங்கி வந்திருக்கும் உங்களுக்கெல்லாம், நல்லபடியாக வாழ்க்கையை காப்பாற்றி கரை ஏற்ற வேண்டும். உங்களுக்கு நன்றி கடன் செய்யவேண்டும், உங்களுக்கு பல்லக்கு தூக்கியாக இருக்கவேண்டும் என்று சொன்னதெல்லாம் உங்களை தட்டிக் கொடுத்திருக்கிறேன். ஏன் என்றால், அந்த அருமையான காலம், இந்தக் கட்டிலே, புலி போன்ற மிருகங்களுக்கு நடுவிலே, 277 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஐந்து பேருமே காட்டிலே தவம் செய்தார்கள். காட்டிலே தவம் செய்த போதெல்லாம், இப்படிப்பட்ட வன விலங்குகளுக்கு நடுவிலே அமர்ந்து தவம் செய்ததெல்லாம் உண்டு. அந்த தவத்தின் போது பயத்தால் கூட பிரார்த்தனை பண்ணியிருக்கலாம். ஒரு மைந்தனோ, அன்னவனும் மஹா மிருத்யுஞ்ச மந்திரத்தை செப்பினானம். தன உயிருக்கு பயந்து செப்பியிருக்கிறான் போல். மற்றவர்களோ, ப்ர்ராத்தனை பண்ணினாலும் கூட, சுற்றுப்புற சூழ்நிலைகளும் காற்றும், உண்மையான ஒரு காட்டுவாசி போலவே உங்களை வாழ வைத்தது. ஏதேனும் தக்கதொரு பாதுகாப்பை எடுத்துக் கொண்டு வந்திருந்தாலும், அந்த கட்டு வாசியாக இருந்திருக்க முடியாது. 277ஆண்டுகளுக்கு முன்பு, காட்டிலே சமையல் செய்து, சித்தர்களை தேடி அலைந்ததெல்லாம் உண்டு. இவர்கள் அலைந்ததெல்லாம் 17 நாட்கள் தான். 17 நாட்கள் அந்த காட்டிலே உலாவிவிட்டு, இறங்கி விட்டார்கள். அதற்க்கு தான் சொன்னேன், விட்ட குறை தொட்ட குறை என்பது போல, இவர்கள் சித்தர்களோடு நெருங்கி பழகின  நேரம் உண்டு.அது ஒரு பெரும் கதை. அந்த நாளும் நேற்றைய நன்னாள் என்று சொல்லி, இந்த புலிக்கதையும் சொல்லவேண்டும், இவர்கள் சித்தர்களை தேடி வந்த விஷயத்தையும் சொல்லவேண்டும். இந்த ரெண்டும் விட்டுப் போனதற்கு, பின்னால் ஒருநாள், அலைகள் ஓரத்திலே, என் அப்பன் முருகன் சன்னதிக்கு பக்கத்தில் அமர்ந்து சொல்லவேண்டும் என்று ஆசை பட்டு தான் சொல்லியிருக்கிறேன்.

நவ கிரகங்கள் தம்பதியரோடு, அமர்ந்திருந்து வாழ்த்தியதேல்லாம் உண்மையடா.  சிறிது நேரம் அன்னவன், அங்கு தங்கியிருந்தாலும், இப்போதைக்கு எப்போது விளகேற்றிவிட்டானோ, நவ கிரகங்கள் முகம் பளிச்சென தெரிந்து, யாரவன் விளகேற்றுகிறான் என்று எட்டிப் பார்த்து, நவ கிரகங்களும் தத்தம் தம்பதியரோடு, அகத்தியனை நோக்கி வந்தது போல, உங்களை நோக்கி வந்தது. உங்களுக்கு நவ கிரகங்களின் பாக்கியம் கிடைத்தது. அதாவது, இந்திரனுக்கு கிடைத்த நவக்ரக பாக்கியம் என்பது வேறு. பொல்லாத நோயால அவதிப்பட்டு, ரத்தம் சொட்டி ஒழுக, புனுகு தடவக் கூட முடியாமல், புண்ணாகி, வெந்து, அழுகி, புழுக்கள் நெளிந்து துடித்த காலம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்திரனை காப்பாற்றியது நவ கிரகங்களே. ஆனால், உங்களுக்கோ, அகத்தியன் சொல்படி, அந்த அற்புதமான நவ கிரகங்கள் ஒன்பதும் தத்தம் தம்பதியரோடு, ஆனந்தமாக வாழ்த்தியிருக்கிறார்கள். இந்த பாக்கியம் மிகப் பெரிய பாக்கியம். என் குழந்தைகளை அகத்தியன் ஒரு போதும் விடமாட்டேன். அதற்கு, இது ஆரம்பம் தான் சொல்லியிருக்கிறேன். எத்தனையோ, இன்னும் அதிசயங்களை காட்ட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அளவுக்கு மீறி காட்டிவிட்டால், இவர்கள் திசை மாறி போய் விடக்கூடாதே என்கிற பயமும் எனக்கு உண்டு. மனதுக்குள்ளே இன்றைக்கு பேசலாம், நான் அகத்தியன் மைந்தன் என்று. சூழ்நிலை சந்தர்பத்தின் காரணமாக, சற்று விலகிக் கூட போகலாம். தவறில்லை. சில விஷயங்கள் சற்று தாமதமாக நடந்தால் கோபப்பட்டோ, சில விஷயங்களில் சற்று அகலக் கால் வைக்காமல், சற்று அரை குறை, போலியான சிரிப்போடு, அகத்தியனை நம்பி தொழ முடியும்.  அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான், இவர்களுக்கெல்லாம், பக்கம் பக்கமாக, பொழுது பொழுதாக, அணு அணுவாக, இவர்களுக்கெல்லாம் பக்தியையும், ஞானத்தையும், சித்தத்தன்மையையும் ஊட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இன்றைய தினம் நல்ல நாள், மிக அருமையான நாள். காலையிலே அந்த மலை, சாயங்காலம் அலை. அதிசயமான சம்பவம் நடக்கிறது. இயற்கையோடு இவர்கள் வாழ்க்கை ஒற்றுப் போயிருக்கிறது என்று தெரிகிறதா? என் மைந்தர்கள் இயற்கையோடு ஒற்றுப் போகுபவர்கள். இனியும் இயற்கையையே சிந்தனை செய்வார்கள். "இப்படியே வாழ்ந்துவிட்டால், எவ்வளவு சந்தோசம் என்று கேட்டான் ஒருவன்". ஆகா! இப்படிப்பட்ட பாக்கியத்தை இத்தனை நாள் விட்டுவிட்டோமே, இப்பொழுதாவது கிடைக்கிறதே என்று ஆச்சரியப் பட்டான் ஒருவன். ஆகவே, எதுவமே எங்கும் இல்லை? அவன் தான் நடத்துகிறான்என்று சித்த வேதத்தை நோக்கிச் சென்றான் ஒருவன். என் கடன் பணி செய்து கிடப்பதே, யார் எப்படிப் போனால் என்ன? உலகமே இருண்டால் என்ன, வெளிச்சமானால் என்ன, யார் எப்படி பேசினால் என்ன, இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன, என்ன குறை கூறினால் என்ன, புன்னகை பூத்து கை நீட்டி அழைத்தால் என்ன? என்கடன் என் தனிக்கடன் என்று ஒருவன் பேசினான். ஆகவே, எல்லோருமே ஒரு பக்குவமான நிலைக்கு வந்து விட்டீர்கள். அகத்தியனுக்கு இதில் மிக மகிழ்ச்சி. சித்தத்தன்மை தான் வேண்டும் என்று, முறைப்படி மந்திர உபதேசம் பண்ணித்தான் சித்ததன்மை அடைய வேண்டும் என்பதில்லை. அதற்குத்தான் சூட்சுமமாகச் சொன்னேன். காலையிலே தாமிரபரணி நதிக்கரையிலே, சித்தத்தன்மை என்பது படித்து அல்ல, மானசீகமாக ஒரு புஷ்பத்தை போட்டாலே சித்தத்தன்மை கிடைத்துவிடும். இது குறுக்கு வழியல்ல. நேரான வழி. அகத்தியனே இறைவனிடம் பரிந்துரை செய்து, இறைவனே ஆனந்தப்பட்டு பலரையும் சித்த நிலைமைக்கு தள்ளப் படுகின்ற காட்சி. இப்படி பலரையும் மாற்றியிருக்கிறேன். 

​இன்னும் ஒன்று பாக்கியுண்டு. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மனிதனை நட்சத்திரங்களாக மாற்றி காட்ட முடியும், அகத்தியன் மாற்றிக் காட்டியிருக்கிறேன் என்று. இன்றைய தினம் சதுரகிரியில் அதுதான் நடந்திருக்கிறது. எத்தனை மனிதர்களை, சித்தர்களை எல்லாம், இன்றைக்கு நட்சத்திரமாக மாற்றி சதுரகிரியின் மேலே உட்கார வைத்திருக்கிறேன். ஆகவேதான், அன்றாடம் பலரும் கண்டு ஆனந்தப் பட்டு வந்ததுண்டு. அந்த வரிசையில் இந்த ஐந்து பேரும் வந்தாலும் வரலாம் என்பதை மட்டும் சூசகமாக சொல்லி; ஏன் என்றால், அனுமன் இப்போது கிளம்பிக்கொண்டிருக்கிறான். அவனோடு அகத்தியனும் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, நல்லநாளில் ஆரம்பித்து, இவர்கள் போகின்ற வழியில் எல்லாம் பல புண்ணிய ஷேத்ரங்கள் பல உண்டு. நவ திருப்பதியில், ஒரு திருப்பதியை தான் கண்டான் இவன். அங்கு எல்லாமே கோயில் தான். எல்லாமே ஒரு கல்வெட்டுத்தான். எல்லாமே ஒரே உருவச்சிலை தான். எல்லாமே மூன்று திருமண் போட்ட நாமம் தான். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு சூட்ச்சுமம் இருக்கிறது. ஆகவே இந்தக் கால் அங்கு படவேண்டும். ஆகவே, உங்களால் முடிந்தால், எத்தனை நவ திருப்பதியை, பாக்கி இருப்பது எட்டு திருப்பதிகளே, இவர்கள் ஒன்றும் செய்யவேண்டாம், பிரார்த்தனை செய்யவேண்டாம், பணம் குடுக்க வேண்டாம், அர்ச்சனை செய்யவேண்டாம்,  மானசீகமாக உட்கார்ந்து வணங்கக் கூட வேண்டாம், உங்கள் பாதங்கள், அந்த புனிதத் தலத்தில் பட்டுவிட்டு வந்தாலே போதும்.  அதன் விளைவு என்ன என்பதை, இன்னும் நான்கு நாட்களில் உரைப்பேன் என அருளாசி!

சித்தன் அருள்........... தொடரும்!

15 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. Thanks for posting sir! The beauty of Thamirabarani throughout the journey of navathirupathi has no words to explain!Vaikasi visakam and 10 days before it is a great time to visit Thiruchendur and ñavathirupathigal. Thirukurugoor (one of navathirupathi) festival happens on visakam which is a bliss to be there and get the blessings of Sri Nammazhwar/Satagopan on His birth star! The puliyamaram under which the alzhwar sat embraces like a mother! Piravaapuli!

    ReplyDelete
  3. ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக

    ReplyDelete
  4. ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக

    ReplyDelete
  5. In this post, Sri Agastya reveals some real gems. (1) “I gradually imbibe bhakti, gnana and siddha-tvam (the Siddha way of life) into my followers/shisyas”. Here, Sri Agastya gives a balanced view that not just bhakti, but also gnana and siddha-tvam (the Siddha way of thinking, living) are all important. (2) It is not as though repetitious mantra chanting is compulsorily required to attain the maturity of the Siddha-tva. Just a sincere, heart-felt offering of a flower to the Divine is sufficient to receive Grace and develop Siddha-tva. (3) “I never let go (or, I never let down) my children”.

    ReplyDelete
  6. Ayya kindly eexplain what ayya says about Nava thirupathi

    ReplyDelete
    Replies
    1. Sri Agastya is saying that the 9 temples in Nava-Tirupati seem to be alike. Therefore, we may be lazy and visit just 1 or 2 out of the 9 temples and skip the rest. But, says Sri Agastya, there are subtle/secretive differences/variations in divine shaktis present in each of the 9 temples. So, He is recommending to visit ALL the 9 temples.

      Delete
  7. (ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி)

    ReplyDelete
  8. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  9. ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக
    ஓம் அகஸ்தீசாய நமக

    ReplyDelete
  10. http://1.bp.blogspot.com/-FRuOythcUJc/TlpUsxVqPsI/AAAAAAAAMYQ/JBYhjish87g/s1600/map.JPG

    ReplyDelete
  11. Thanks Sivakumar...
    It will useful for all :)

    thanks,
    swamirajan

    ReplyDelete
  12. One can reach Srivaikuntam by bus from Thirunelvelli. At Srivaikuntam we can reach all temples by an auto or cab. Rates will be lesser than from Thirunelvelli. But we should note the temple timings. Temples in the same route may not be open! Local people know the timing well. We reached azhwar thirunagari (Thirukurugoor) where a known tour operator did the arrangement. We can take bath at the ahobila mutt there. But truly speaking one should spend 2 full days. It is really needed to drench in the silence and beauty of these temples esp thenthiruperai and irattai Thirupathi.

    ReplyDelete
  13. என் குழந்தைகளை அகத்தியன் ஒரு போதும் விடமாட்டேன். appa kappathu

    ReplyDelete