​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 23 March 2014

அந்தநாள்! >> இந்த வருடம்!


[கல்லாரில் அருள்புரியும் அகத்தியப் பெருமான்]

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அவரின் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், என் நண்பரை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம்.  அதில் மறைமுகமாக "அந்த நாள், இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம்.

நம் அனைவருக்குமே, அந்த நாள் இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று அங்கு சென்று இருந்து அவர்களின் ஆசிர்வாதம், நல் வாழ்க்கைக்காக வாங்க வேண்டும், என்ற எண்ணம் இருக்கும். ஒரு சில அடியவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த வருடம் அந்த நாட்களை தெரிவு செய்து தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

நம்பிமலை:- (எல்லோரும் கூடியிருந்து அளவளாவி மகிழ்ந்திருந்த நாள்)

  • 05/08/2014 - செவ்வாய் கிழமை, அனுஷம் நட்சத்திரம், சுக்ல பக்ஷ தசமி திதி.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

  • 06/08/2014 -  புதன் கிழமை, கேட்டை நட்சத்திரம், ஏகாதசி திதி.

திருச்செந்தூர் - (மூவரும் ஒரு சேர இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு வாழ்த்து தெரிவித்த நாள்)

  • 07/08/2014 - வியாழக்கிழமை, மூலம் நட்சத்திரம், த்வாதசி திதி.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும் கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்)

  • 04/11/2014 - செவ்வாய் கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம், சுக்லபக்ஷ த்ரயோதசி திதி.


6 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. Thank you Sir. Om Agatheesaaya Namaha.

    ReplyDelete
  3. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

    ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete
  4. Thanks for the information given to all.

    Also please give important date for visit to Ahobilam in this year .
    We like to go there also

    thanking you

    g.alamelu venkataramanan.

    ReplyDelete
  5. ஓம் அகத்தீசாய நமக.

    ReplyDelete
  6. ஓம் அகஸ்தீஸாய நமக.
    ஓம் அகஸ்தீஸாய நமக
    ஓம் அகஸ்தீஸாய நமக

    ReplyDelete