​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 27 March 2014

சித்தன் அருள் - 168 - விளகேற்றுவது, துறவு வாழ்க்கை, சித்தன் ஆக ஆசி!

[படம் நன்றி-திரு.ஷண்முகம் ஆவுடைஅப்பா அவர்களுக்கு]

கருவிலே, தலையெழுத்து என்று ஒன்று உண்டென்றால், அது இவன் தலை எழுத்துதான். உங்கள் நாகரீக விஞ்ஞானப்படி எடுத்துப் பார்த்தால், முன்ஜென்மத்துக்கும், இவனுக்கும், அன்மீகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.  கோதாவரி நதிக்கரையிலே, ஆங்கொருநாள், ராமபிரானுக்கு, ஒரு லட்சம் விளக்கேற்றி ஆச்சரியப் பட்டான். அடுத்தமுறை விளக்குதனை ஏற்றும் பொழுது, பெரும் வெள்ளம் சூழ்ந்ததடா! யாருமே உள்ளே நுழையமுடியாது. கோதாவரி ராமனை பற்றி உங்களுக்கெல்லாம், தெரியுமோ, தெரியாதோ. அது, சிறு குன்றுமேல் அமர்ந்திருக்கிற, ராமர் கோயில். கீழே, இடுப்பளவுக்கு, தண்ணீர் வந்து, ஜனங்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, இன்னவனோ, ஆங்கொரு ஒரு லட்சத்து எட்டாயிரத்து விளக்குகளை ஏற்ற, அதற்கான, நெய்யையும், எண்ணையையும், தலையிலே சுமந்து கொண்டு வந்து, காத்து கிடக்கிறான்.  அன்றொருநாள், கிருஷ்ண பரமாத்மா, நள்ளிரவில், சிறை சாலையில் பிறந்த பொழுது, அவனை அந்த சிறை சாலையில் இருந்து வெளியே கொண்டு வரும் பொழுது, நல்லதொரு மழை பெய்தது. மழை பெய்த பொழுது, ஆதிசேஷன் அங்கே வந்து, கிருஷ்ணனை மழையிலிருந்து காப்பாற்றி, தப்பித்ததாக வரலாறு. புராண காலத்தில் நடந்த உண்மையும் கூட. 

அது போல, இன்னவனும், ஒரு லட்சத்து, எட்டாயிரத்து விளக்குகளை, நெய்யும், எண்ணையும் தலையில் தூக்கிக் கொண்டு மலையை நோக்கி நடக்கையில், வெள்ளம் புகுந்து, இதையெல்லாம் கரை ஓடி எப்படியடா ஏற்றுவேன் என்று எண்ணும் பொழுது, என்ன நடந்தது என்று தெரியாது. யாரோ வந்து, தலையில் இருக்கிற நெய்யை அப்படியே அலக்காக தூக்கி, அந்த மாடிப்படி போல் செல்லுகின்ற மலைப்பாதை படியிலே, ஓரத்திலே வைத்துவிட்டான், தண்ணீரிலிருந்து தப்பியது. இன்னவனுக்கும், ஒரு துண்டை தூக்கிப்போட்டு, கையை பிடிக்கச்சொல்லி, அந்த துண்டையும் பிடித்துக் கொண்டு, மேலேறி கரை ஏறினான். அது போல இவனுக்கு, உதவியாளர்களாக இருந்தவர் இருவர். அவர் கையிலும், விளக்குகள் இருந்தது, எண்ணைகள் இருந்தது. அவர்களையும், அழகாக கை தூக்கிவிட்டு, வெள்ளத்தில் சிக்காமல் மேலே ஏற்றி, ஒரு லட்சத்தி எட்டாயிரம் விளக்குகளை, ஏற்றினான். கொட்டுகின்ற மழையிலும், அன்றைக்கு, விளக்குகள் எரிந்ததடா! அது தாண்டா ஆச்சரியம்.  ஒரு விளக்கு ஏற்றினால், சற்று முன் காலையில் கூட, அழுகுணி சித்தன் சமாதிக்கு முன்பு கூட, இன்னவன் ஆங்கொரு ஐந்துமுக நெய் விளக்கை ஏற்றும் பொழுதெல்லாம், வாயு பகவான் வந்து கெடுத்தாலும் கெடுப்பான், விளக்கு அணையும் என்று சொன்னபோதெல்லாம், அப்பொழுதுதான் அகத்தியன் நினைத்துக் கொண்டேன், எப்படிப்பட்ட சூழ்நிலையில் விளக்கு ஏற்றி இருக்கிறான், எந்த கொட்டுகின்ற மழையில் ஒரு லட்சத்தி எட்டாயிரம் விளக்குகளை ஏற்றி ஆனந்தப்பட்டானே, அப்பொழுது வருண பகவான், இவனுக்கு கை கொடுக்கவில்லையா? அந்த காட்சி தான் காலையிலே அகத்தியனுக்கு நினைவுக்கு வந்தது, காலையிலேயே சொல்லியிருக்க வேண்டும், அது தனிப்பட்ட மனிதனை பெரிது படுத்துவதாக ஆகிவிடும், எல்லோருக்கும் முன் பெரிது படுத்துவது என்பது சங்கடத்துக்கு உள்ளாக்கலாம். ஆனால் நடந்ததை யாரும் மறைக்க முடியாது, மறுக்கவும் முடியாது என்பதால்த்தான், இவனுக்கு அப்படிப்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது. இவன் விளக்கேற்றியது ஒரு முகம் இல்லை, யாருக்காக எண்ணி விளக்கேற்றினாலும் சரி, உலகத்துக்கு நினைத்து  விளகேற்றினாலும் சரி, தனக்காக விளகேற்றினாலும் சரி, அந்த விளக்கு எரிய எரிய, அவன் குடும்பம் மட்டுமல்ல, அவன் யாரை எல்லாம் நோக்கி கேட்கிறானோ, யாருக்கெல்லாம் நல்லதொரு வாழ்க்கை வரவேண்டும் என்று அன்றாடம் மனதில் நினைக்கிறானோ, அவை எல்லாம் உடன் நடக்கும்.

இன்றைக்கும் தன் அருகில் சரி பாகமாக பிரித்துக் கொண்டு தன் அறையில் இருக்கின்ற சாதாரண ஏழைகளைப் பற்றி நினைத்தான் அவன். அதெல்லாம், அவனுக்கும் அந்த புண்ணிய பலம் போய் சேரும். இவன் ஏற்றுகின்ற புண்ணியம், ஏற்கனவே சொன்னேனே, மூன்று ஜென்மமாய், இவர்கள் குடும்பத்துக்கு எந்த வித தொல்லையும் தராமல், அற்புதமாக, சிறப்பாக, ஆனந்தமாக ஒப்பிடும்படி வாழ்க்கை அமையும் என்று. இருந்தாலும், அன்னவன், எது சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை. ஏன் என்றால், அவன் உடம்பிலே ஆங்கொரு சிறு சிறு கட்டிகள் அங்கே இருப்பதால் தான், ஒன்றரை ஆண்டுகளாக, அவனும் சொல்லிப் பார்க்கிறான், அகத்தியனும் மனம் இறங்குவதாக இல்லை.

உண்மையிலேயே, எத்தனையோ காரியங்களை சாதிக்கின்ற அகத்தியன் அந்த கட்டியை கரைத்திருக்கவேண்டும், கரைக்கவில்லை என்பதால், மனதுக்குள் ஒரு ஏக்கம் இருக்கலாம். தவறு இல்லை. எதற்காக அவனை சுற்றி சுற்றி வருகிறேன் என்றால், அவனுக்கும் இந்த "மூலத்துக்கும்" சம்பந்தம் உண்டு. இல்லையென்றால், அகத்தியன் இந்த காரியத்தை சொல்லமாட்டேன், வேறு வழியில் சென்றிருப்பேன்.  ஏனடா! அகத்தியனை பார்க்கின்ற நேரம், அகத்தியனை கேட்கின்ற நேரம், அகத்தியன் பதில் சொல்லுகின்ற நேரம், எல்லாம், மூலம் நட்சத்திரத்தையே சுற்றி சுற்றி வருவதால்தான், முன் ஜென்மத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவன் இவன். அதைத்தான் இப்பொழுது ஞாபகப் படுத்தி, இவன் செய்கின்ற, இந்த விளக்குளை எல்லாம், விளக்கேற்றி வருகிறானே, எவ்வளவு புண்ணியங்களை சம்பாதிக்கிறான் என்பதை நினைக்கும் பொழுது, அவனுக்கும், முதுகிலே தட்டிக் கொடுத்து வாழ்த்தவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வார்த்தைகளை சொன்னேன். என் எதிரே இருக்கின்ற இருவரும் சித்தத் தன்மையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, அகத்தியன் பால் கொண்ட அன்பால் ஓடோடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு துணையாக, குரங்கின் வாலைப் பிடித்துக் கொண்டு குட்டிக் குரங்கு வருவது போல, அவர்களுக்குப் பினால், ஆங்கொரு வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கின்ற சிறு பையனும், ஓட்டோடி ஒட்டிக் கொண்டிருக்கிறான். இதை எல்லாம் பார்க்கும் பொழுதுதான், அகத்தியன் அக மகிழ்ந்து போனேன் என்று காலையிலேயே சொன்னேன். அந்த நன்றிக்கு ஏதாவது நன்றி கடன் செய்யவேண்டும் என்று அகத்தியன் ஆசைப்பட்டு உங்களை எல்லாம் வரச்சொன்னேன். 

விதியை மாற்றுவது என்பது இயலாத காரியம். எல்லோரும் சொல்வார்கள், விதியை மாற்றுகிறேன் என்று. இயலாத காரியம். அகத்தியனால் முடியும். செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், யாருக்கும் எந்தவிதத்திலும், மனது புண்படாமல், பிரம்மாவுக்கும் சரி, விஷ்ணுவுக்கும் சரி, சிவனுக்கும் சரி, அவன் தொழிலில் குறுக்கிடாமல், அதே சமயம் அவனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அந்தப் பொறுப்பை அகத்தியன் எடுத்து, விதியை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ சின்னச் சின்ன பிரச்சினைகளை அன்றாடம் தாங்கிக் கொண்டு, வாழ்க்கையில் எங்கெங்கோ திசை மாறிப்போனவனை எல்லாம், இங்கே இழுத்து வந்து உட்கார வைத்திருக்கிறேன். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ சோகங்கள், நன்மைகள், வாழ்க்கையில், ஏமாற்றங்கள், தோல்விகள். அத்தனையும் உள்ளது. இல்லற வாழ்க்கையிலும் சரி, துறவர வாழ்க்கக்கயிலும் சரி. இல்லறத்தில் இருந்து கொண்டு துறவற வாழ்க்கை வாழ்பவர்கள் சிலர் கூட,  சரியாக தன கடமையை செய்யவில்லை என்பதில் அகத்தியனுக்கு வருத்தமே. ஆக, இந்த மண்ணில் சித்தன் நிலை என்பது வேறு. சித்த நிலைமை என்பது அற்புதமானது, அதை ஏற்கனவே உங்களுக்கு வழங்கிவிட்டேன்.  இன்னும் ஒரு சிலர் நெருங்கி வருவார்கள், அவர்களுக்கும் வழங்க தயாராக இருக்கிறேன். யாருக்கு  பாக்கியமோ, அகத்தியன் நான் இப்பொழுது சொல்லமாட்டேன்.  பொடிவைத்து பேசுவதில் என்ன லாபம் என்று கேட்க்காதே. சில சமயம் அகத்தியன் வாய் விட்டு சொன்னால் கூட, சில சமயம் நடப்பதில்லை என்பதால்,  இங்கே வரட்டுமே, பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறேன். ஆகவே, இல்லற வாழ்க்கையிலும், துறவர வாழ்க்கையை மேற்கொண்டாலும், இல்லற தர்மங்களை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது, என்பதுதான் அகத்தியன் கணக்கு. ஆகவே அவர்கள் யார் மனமும் புண் படக்கூடாது. எடுத்துவந்த கர்மங்களை நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது அகத்தியனுக்கு ஆசை. வாழ்க்கை என்பது முன் ஜென்ம கர்மவினை என்பது போல, கர்மாவை கழிக்க வேண்டும். பாவ கர்மா, புண்ணிய கர்மா என்று ரெண்டுவகை உண்டடா! பாவகர்மா இவர்களுக்கு இருந்தாலும், எப்போழுதுக்கு எப்பொழுது சித்தனையும், முனிவர்களையும் நாடி வந்த போதெல்லாம், அந்த பாப கர்மாக்கள் குறைந்து விட்டது.  இன்னும் சொல்லப்போனால், தைரியமாகக் கூட சொல்லலாம், இருந்தாலும் ஒரு சிறு செய்தி. இன்றைய தினம்தான், உங்கள் அனைவருக்கும், முன் ஜென்மத்திற்கும், மூன்று ஜென்மத்தின் பெரும் சுமை, இன்றைய தினம் காலையிலே அந்த தீர்த்தத்திலே குளிக்கும் பொழுது அத்தனையும் கழிந்துவிட்டது.

[இதை படிக்கும் உங்கள் அனைவருக்கும் இது போல பாப சுமை கழிந்து போகட்டும் என்று அகத்தியரை வேண்டிக்கொள்கிறேன்.]
​​
சித்தன் அருள் ................. தொடரும்!

12 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  3. ஓம் அகத்தியப் பெருமானே போற்றி.
    நன்றி ஐயா எங்களுக்காகப் பிரார்த்தித்த தங்களுக்கு.

    ReplyDelete
  4. OM AGATHEESAYA NAMAHA:

    Brother Velayudham Karthikeyan, Hats off to your service, Thanks for the Prayers on behalf of the readers, Enjoying each weeks nectar with thy grace, SAIRAM

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  6. OM AGATHEESAYA NAMAHA
    OM AGATHEESAYA NAMAHA
    OM AGATHEESAYA NAMAHA

    ReplyDelete
  7. Vilakku etriyadhu yaar enbadhai ariya virumbugiren - Om Agatheesayaa nama..Nandrigal - Agathiar bakthan Ravi Chennai.

    ReplyDelete