​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 1 January 2026

சித்தன் அருள் - 2062 - அகத்தியப்பெருமானின் திருநட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குருவின் அருளால் அனைவரும் இவ்வருடத்தில் அனைத்து மனவிருப்பங்களும் நிறைவேறி நலமாக வாழ வாழ்த்துகிறேன்! ஓம் அகத்தீசாய நமஹ!

நம் குருநாதரின் திருநட்சத்திரம் 06/01/2026 செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம், மதுரையில், மூலக்கரையில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் (தியாகராஜர் மில் காலனி. மூலக்கரை, பசுமலை) உள்ள லோபாமுத்திரா சமேத அகத்தியர் சன்னதியில் அபிஷேக ஆராதனைகளுக்கு, அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை 05 மணிக்கு அபிஷேக பூஜைகள் தொடங்கும்.

அனைத்து அகத்தியர் அடியவர்களும் வந்திருந்து பூஜையில் கலந்து கொண்டு அவர்கள் அருள் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வர இயலாதவர்கள், தங்கள் வீட்டினருகில் உள்ள கோவிலில் சென்று உழவாரப்பணி செய்து குருநாதர் அருள் பெற்றுக்கொள்ளும் படி வேண்டிக் கொள்கிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment