​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 13 February 2021

சித்தன் அருள் - 983 - புண்ணிய ஸ்தலங்கள் - சிவம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குருநாதர் அவர் உரைத்த அருள் வாக்கில், உடலை வருத்தி புண்ணிய தலங்களை, கோவில்களை சென்று தரிசிப்பதால், ஒரு மனிதனின் கெட்ட கர்மா மிக வேகமாக கரைந்து போய், புண்ணியம் நன்றாக சேர்ந்துவிடும். நிறைய புண்ணியம் சேர்த்து, பாபம் அழித்து, அத்தனை புண்ணியத்தையும், குருநாதனுக்கோ, இறைவனுக்கோ, தாரை வார்த்துக் கொடுத்தால், அந்த ஆத்மா உடலை நீத்தபின், நேராக மோக்ஷத்துக்குத்தான் செல்லும், எனவும் உரைத்துள்ளார்.

அத்தனை உயரிய கருத்தை பெரியவர்கள் மறைத்து வைத்து, பல புண்ணிய இடங்களையும் கண்டறிந்து, மனிதன் கரையேற வேண்டி, இறைவன் ஆட்கொண்ட இடங்களில் கோவிலை அமைத்து, அங்கு சென்று உண்மையாக தரிசனம் செய்து வர வேண்டி சில விஷயங்களை, வழிகளை உரைத்தனர்.

அப்படிப்பட்ட சிவஸ்தலங்களை கீழே தருகிறேன்.  

1. பஞ்ச கேதார சிவ தலங்கள்:-  

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் சிவாலிக் மலையில் அமைந்துள்ள கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர் மற்றும் கல்பேஷ்வரர் ஆகிய ஐந்து இடங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சிவத் தலங்களில் சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றியதாக சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் சிவபெருமானை கேதரநாதன் என்றும் அழைக்கின்றார்கள்.

  1. கேதார்நாத் - உடல்
  2. துங்கநாத் - கைகள்
  3. ருத்ரநாத் - முகம்
  4. மத்தியமகேஷ்வர் - தொப்புள்
  5. கல்பேஷ்வர் - தலைமுடி

2. பஞ்ச தாண்டவ தலங்கள் என்பது சிவபெருமானின் பஞ்ச தாண்டவங்கள் நிகழ்ந்த சிவத்தலங்களைக் குறிப்பதாகும். பஞ்ச என்ற சமஸ்கிருத சொல்லிற்கு ஐந்து என்று பொருளாகும்.

  1. சிதம்பரம் நடராசர் கோயில் - ஆனந்த தாண்டவம்.
  2. திருவாரூர் தியாகராஜர் கோயில் - அஜபா தாண்டவம்.
  3. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் - சுந்தரத் தாண்டவம்.
  4. அவிநாசி அவிநாசியப்பர் கோயில் - ஊர்த்துவ தாண்டவம்.
  5. திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் - பிரம்ம தாண்டவம்.

3.  ஐம்பெரும் மன்றங்கள்:-

ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன. ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தின அம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து தலங்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.

  1. சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்
  2. மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்
  3. திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்
  4. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்
  5. குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).

இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.

4.  பஞ்சலிங்க தலங்கள்:-

இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள ஐந்து சிவ தலங்கள் பஞ்சலிங்க தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை வட இந்தியாவின் பஞ்ச பூதத் தலங்களைப் போல் மிகவும் பிரசித்தி பெற்ற காசிக்கு சமமானதாக வகைப் படுத்தப்படுகின்றன. இத்தல கோபுரங்கள் அனைத்தும் ஓய்சாளா சிற்ப முறைகளில் கட்டப்பட்டவையாகும்.

  1. அர்கேசுவரர் லிங்கத்தலம்
  2. பாதாளேசுவரர் லிங்கத்தலம்
  3. மரனேசுவரர் லிங்கத்தலம்
  4. மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்
  5. வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்

5. ஆறு ஆதார சிவத்தலங்கள்:-
 
ஆதார தலங்கள் என்பவை மனிதனின் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் உரிய சிவத்தலங்களாகும். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பன அந்த ஆறு ஆதாரங்களாகும்.

  1. திருவாரூர் மூலாதாரம்
  2. திருவானைக்கா சுவாதிட்டானம்
  3. திருவண்ணாமலை மணிபூரகம்
  4. சிதம்பரம் அநாகதம்
  5. திருக்காளத்தி விசுத்தி
  6. காசி ஆக்ஞை

6.  சப்தவிடங்கத் தலங்கள்:-

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள்

  1. திருநள்ளாறு,
  2. நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம்,
  3. திருக்காராயில், 
  4. திருக்குவளை, 
  5. திருவாய்மூர், 
  6. வேதாரண்யம் ஆகியனவாகும். 

இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.

சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.

  1. திருவாரூர் - வீதி விடங்கர்
  2. திருநள்ளாறு - நாகவிடங்கர்
  3. நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
  4. திருக்காராயில் - ஆதிவிடங்கர்
  5. திருக்கோளிலி - அவனிவிடங்கர்
  6. திருவாய்மூர் - நீலவிடங்கர்
  7. வேதாரண்யம் - புவனிவிடங்கர்
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.

  1. திருவாரூர் தியாகராசப்பெருமான் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
  2. திருநள்ளாறு - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
  3. நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
  4. திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
  5. திருக்குவளை - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
  6. திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
  7. வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

7. சப்த கரை சிவ தலங்கள்:-

சேய் ஆற்றின் (செய்யாறு) வட கரையில் அமைந்த சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவத் தலங்கள் ஆகும். அவை:

  1. காஞ்சி
  2. கடலாடி
  3. மாம்பாக்கம்
  4. எலத்தூர்
  5. மாதிமங்கலம்
  6. பூண்டி
  7. குருவிமலை

8. சப்த கைலாய தலங்கள்:-

அன்னை உமையவள் இறைவன் ஈசனோடு கலந்து அவருடைய இடப்பாகம் பெறுவதற்காக அருணாச்சலேஸ்வரம் நோக்கிச் செல்லும் பயணத்தில் ஏழு இடங்களில் லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாா். அவை முறையே சப்த கைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த எழு தலங்களும் சேயாற்றின் தென் கரையில் அமைந்துள்ளன. அவை

  1. மண்டகொளத்தூர்
  2. கரைப்பூண்டி
  3. தென்பள்ளிப்பட்டு
  4. பழங்கோயில்
  5. நார்த்தாம்பூண்டி
  6. தாமரைப்பாக்கம்
  7. வாசுதேவம்பட்டு

9. அட்டவீரட்டானக் கோயில்கள்:-

அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

  1. திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
  2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
  3. திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
  4. திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்
  5. திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்
  6. திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
  7. திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
  8. திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

10. நவலிங்கபுரம்:-

நவலிங்கபுரம் என்பது ஒன்பது லிங்கங்களைப் பிரதானமாகக் கொண்ட சிவலிங்கக் கோயில்களின் தொகுப்பாகும். இக்கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ளது. நவலிங்கபுர கோயில்களில் வல்லநாடு திருமூலநாதர் கோயில் என்பது தலைக்கோயிலாக அறியப்படுகிறது.

  1. வல்லநாடு திருமூலநாதர் கோயில்
  2. காந்தீசுவரம் ஏகாந்தலீஸ்வரர் கோயில்
  3. புறையூர் அயனாதீசுவரர் கோயில்
  4. தெற்கு காரசேரி குலசேகரமுடையார் கோயில்
  5. காயல்பட்டினம் மெய்கண்டேசுவரர் கோயில்
  6. கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயில்
  7. புதுக்குடி வடநக்கநாதர் கோயில்
  8. வெள்ளூர் நடுநக்கநாதர் கோயில்
  9. மனவளராய நத்தம் தென்நக்கநாதர் கோயில்

11. தமிழகத்தின் நவ கைலாயங்கள்:-

தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இந்தத் தலங்களை தரிசனம் செய்ய மார்கழி மாதங்களில் தமிழக அரசே சிறப்பு பேருந்தினை ஏற்பாடு செய்கிறது. காலையில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி நவகைலாயங்களை தரிசனம் செய்துவிட்டு இரவுக்குள் திருநெல்வேலிக்கு திரும்பிட ஏற்பாடு செய்யப்படுகிறது

  1. பாபநாசம், 
  2. சேரன்மகாதேவி, 
  3. கோடகநல்லூர், 
  4. குன்னத்தூர், 
  5. முறப்பநாடு, 
  6. திருவைகுண்டம், 
  7. தென்திருப்பேரை, 
  8. ராஜபதி, 
  9. சேர்ந்த பூமங்கலம் 

ஆகிய ஊர்களை நவகைலாயங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேல்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று தலங்களை நடுகைலாயங்கள் என்றும், இறுதி மூன்றினை கீழ்க்கைலாயங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.

12. நவ சமுத்திர தலங்கள்:-

  1. அம்பாசமுத்திரம்,
  2. ரவணசமுத்திரம்,
  3. வீராசமுத்திரம்,
  4. அரங்கசமுத்திரம்,
  5. தளபதிசமுத்திரம்,
  6. வாலசமுத்திரம்,
  7. கோபாலசமுத்திரம்,
  8. வடமலைசமுத்திரம் (பத்மனேரி),
  9. ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்).

13. சிறப்புக் காட்டுத் தலங்கள்:-

சிறப்புக் காட்டுத் தலங்கள் என்பவை புராண காலத்தில் புகழ்பெற்று விளங்கிய காடுகள் நிரம்பிய சிவத்தலங்களாகும். இத்தலங்கள் பெரும் காடுகளாக இருந்த பொழுது சிவத்தலங்கள் அதில் எழுப்பபெற்றன. இவை வன விசேஷ தலங்கள் என்றும் அறியப்படுகின்றன

  1. கடம்பவனம் மதுரை
  2. குண்டலிவனம் திருவக்கரை
  3. குதவனம் திருவுச்சாத்தனம்
  4. செண்பகவனம் திருநாகேச்வரம்
  5. மகிழவனம் திருநீடூர்
  6. மறைவனம் வேதாரண்யம் (திருமறைக்காடு)
  7. மாதவிவனம் திருமுருகன்பூண்டி
  8. மிதுவனம் நன்னிலம்
  9. வில்வவனம் திருவாடானை
  10. வேணுவனம் திருநெல்வேலி

14. முக்தி தரவல்ல சிவத்தலங்கள்:-

முக்தி தரவல்ல சிவத்தலங்கள் என்பவை உயிர்களின் ஆத்மாவிற்கு வீடுபேறு கிடைக்க செய்யும் சிவத்தலங்களாகும். இந்து சமயத்தில் முக்தி தரவல்லவர்களாக மும்மூர்த்திகள் உள்ளார்கள். இவர்களில் திருமாலும், பிரம்மாவும் ஆன்மாக்களின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப முக்தி தருபவர்களாகவும், சிவபெருமான் அனைவருக்கும் முக்தி தருபவராகவும் இருக்கிறார். ஏழு பிரளயங்களில் மகா பிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடி அண்ட சராசரங்களையும் தனக்குள் ஒடுக்குகிறார். அப்பொழுது அனைத்து உயிர்களுக்கும் கட்டாய முக்தியை சிவபெருமான் அளிக்கிறார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

  1. திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
  2. சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
  3. திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
  4. காசி-இறக்க முக்தி தருவது

15. ஜோதிர்லிங்கத் தலங்கள்:-

  1. சோம்நாத், பிரபாச பட்டணம், கிர் சோம்நாத் மாவட்டம், குஜராத்.
  2. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்.
  3. மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
  4. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம்.
  5. கேதார்நாத் கோயில், உத்தராகண்டம்
  6. பீமாசங்கர் கோயில், சகாயத்திரி, மகாராஷ்டிரா.
  7. காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
  8. திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா.
  9. வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட்.
  10. நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.
  11. இராமேஸ்வரம், தமிழ்நாடு
  12. கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டி

சிவபெருமானின் பெயர், திருத்தல வகை, நகரம், மாநிலம்

  • கேதாரீஸ்வரர் மலைக்கோவில் கேதர்நாத் உத்ராஞ்சல்
  • விஸ்வேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கங்கை நதிக்கரை) வாரணாசி உத்ரபிரதேசம்
  • சோமநாதேஸ்வரர் கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை) சோமநாதம் குஜராத்
  • மகா காளேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை) உஜ்ஜயினி மத்திய பிரதேசம்
  • ஓங்காரேஸ்வரர் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோவில் இந்தூர் மத்திய பிரதேசம்
  • திரியம்பகேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கோதாவரி நதிக்கரை) நாசிக் மகாராஷ்டிரம்
  • குஸ்ருணேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் ஓளரங்கபாத் மகாராஷ்டிரம்
  • நாகநாதேஸ்வரர் தாருகாவனம் காட்டுத்தலம் ஓளண்டா மகாராஷ்டிரம்
  • வைத்தியநாதேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் பரளி மகாராஷ்டிரம்
  • பீமசங்கரர் மலைக்கோவில் பூனா மகாராஷ்டிரம்
  • மல்லிகார்ஜுனர் மலைக்கோவில் ஸ்ரீ சைலம் ஆந்திர பிரதேசம்
  • இராமேஸ்வரர் கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா) இராமேஸ்வரம் தமிழ்நாடு

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

8 comments:

  1. Vanakam
    Indeed these are really excited and happy to see. Thanks for sharing the information

    ReplyDelete
  2. ஐயா அன்பு வணக்கங்கள். ஓம் சிவாய நம! மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. ஓம் லூபா முத்திரை அம்மா சமேத அகத்தியர் அப்பா திருவடிகள் போற்றி!

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  4. ஓம் அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    இப்பதிவிற்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete
  5. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  6. Thank u very much sir
    This is a great and remarkable, time consuming work. U have spent ur precious time to gather all information, for presentation and typing all these matter. It is very cumbersome job. For the sake if us u have done.
    நீங்கள் அங்கு எல்லாம் போக வேண்டியதே இல்லை. எங்களுக்காக இவ்வளவு விஷயங்களை தொகுத்து கொடுத்ததே பல புண்ணியங்களை உங்களுக்கு தரும்.
    ஓம் நமசிவாய
    ஓம் லோபாமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் திருவடிகளே போற்றி.

    ReplyDelete
  7. Om lopamudra samata agastiyar thiruvadi saranam 🙏🙏.

    ReplyDelete
  8. Great Information Sharing Aiyaa.......If any one could see any of these updated temples as per the detailed process, should be thankful to Agastya Gurunathar & you

    ReplyDelete