​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 29 July 2013

நாடி வாசிப்பது பற்றிய தகவல்!

வணக்கம்!

திரு.ஆனந்தகுமார் (ஈமெயில்:dksanand@gmail.com), என்கிற அகத்தியர் அடியவர் ஒரு தகவலை அளித்து, சித்தன் அருள் வலைப்பூவை வாசிக்கும் அடியவர்கள் நலத்திற்காக பகிர்ந்து கொள்ளச் சொன்னார்.  அந்த தகவலை கீழே தருகிறேன். மேலும் விவரங்களுக்கு திரு.ஆனந்தக்குமாரை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

மேட்டுப்பாளையத்துக்கு அருகில் கல்லாரில் அமைந்துள்ள அகத்தியர் ஆஸ்ரமத்தில் "அகத்தியர் ஜீவ நாடி" படிக்கிறார்களாம்.  "சித்தன் அருளை" தொடர்ந்து வாசித்து வந்த பல அன்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த தகவலை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  "கல்லார்" ஆச்ரமத்தைப் பற்றிய விலாசத்தை  கீழே எடுத்துக் கொள்ளவும்.  சென்று அவர் அருள் பெற்று வாருங்கள்.

அவரே தந்த வேறு சில தகவல்களும்:-

திரு சரவணன் என்பவர் கிருஷ்ணகிரியில் சிவன் கோவிலை கட்டி அங்கே அகத்தியருக்கென்று ஒரு தனி சன்னதி உருவாக்கியுள்ளாராம்.

குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக, மறைந்த திரு.ஹனுமத் தாசன் (அகத்தியர் மைந்தனாக இருந்து நாடி வந்தவர்கள் அனைவருக்கும் அகத்தியர் அருள் வாக்கை வாங்கிக் கொடுத்தவர்) அவர்களுக்கு குருபூஜை 25/09/2013 அன்று இந்தக் கோவிலில் வைத்து நடத்துவதாக தீர்மானித்துள்ளார்.

அகத்தியர் அடியவர் திரு.சண்முகம் ஆவுடையப்பர் என்பவர் பகிர்ந்து கொண்ட விரிவான தகவலை கீழே தருகிறேன்.

அகத்தியர் ஜீவநாடியானது அகத்தியரின் பிரதான அடியவரான தவத்திரு தங்கராசன் என்பவரிடம் கல்லாரில் உள்ள "ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ தவ முருகர் ஞான பீடத்தில் உள்ளது.  சனிக்கிழமை அன்று ஐந்து பேர்களுக்கு மட்டும்தான் வாசிக்க உத்தரவு உள்ளதாம்.  யாருக்கு அகத்தியரின் அருள் உண்டோ அவருக்கு மட்டும் அகத்தியர் அருள் புரிவார்.

திரு.தங்கராசன் சுவாமிகளை 9842027383 என்கிற எண்ணிலும், மாதாஜி சரோஜினி அம்மையாரை 9842550987 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து செல்வது நல்லது என்கிறார்.

விலாசம்:-

Sri Agathiyar Gnana Peedam Thirukovil,
2/464, Agathiyar Nagar, 
Thuripaalam, 
Kallar - 641 305, 
Methupalaiyam, 
Coimbatore.

ஆஸ்ரமம் செல்வதற்கு போக்குவரத்து வசதி உள்ளது.

கார்த்திகேயன்!