​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 14 June 2026

சித்தன் அருள் - 2229 - அன்புடன் அகத்தியர் - திருமூலர் சித்தபெருமான் உரைத்த வாக்கு!




30/3/2026 அன்று திருமூலர் சித்தபெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: இராவணன் புகழ் திருகோணமலை மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமான் ஆலயம். இலங்கை.

இவ் வாக்குதனை செய்யுள் வடிவத்தில் பாடலாக உரைத்தார்.. திருமூலர் சித்த பெருமான்!!

புவி தன்னை அழகாக இயக்கி கொண்டிருக்கும் இறைவா!!! போற்றி!!!!!

போற்றியே பணிகின்றேனே!!!

மூலனவனே!!! தெரிவிக்கின்றேனே வாக்குகளை.

அறிந்தும் எதையென்றும் உணராத நின் நின்று அருளை எப்பொழுது பின் பெற்றார்களே?? மனிதர்களே!!!!

விளக்கம் 

ஈசனே உங்களை முழுமையாக உணர்ந்து கொள்ளாத மனிதர்கள் எப்போது அருள் பெற்றார்கள்?????

உங்களை உண்மை பொருளை உணர்ந்து கொண்டவர்களுக்கே உங்கள் அருள் கிடைக்கும்.







 உண்மையென ஞானம் எங்கிருந்து வந்தது? 


அன்று ஏது அந்த அங்கமாக வந்து நின்றாயே, நின்றாயே இங்கு, 


அங்கங்கு நின்றாயே!! அருள் கூர்ந்து மக்களுக்கு ஒளியாகவே எதிர்த்து நின்று பின் அறிந்தும் ஒன்றிணை மக்கள் தன்னை பின் அறியாத முடியாத பட்சத்தில் பின் இருந்தொன்று இன்று.



விளக்கம் 


இன்றைய காலகட்டத்தில் உண்மையான ஞானம் எங்கு இருக்கின்றது???


உண்மையான ஞானத்தையும் அருளையும் தருவதற்கு இங்கும் அதாவது திருகோண மலையிலும் ஒவ்வொரு தலங்களிலும் கோயில் கொண்டு நின்றிருக்கும் ஈசா!!!


எதையும் அறிந்து கொள்ள முடியாத மக்களுக்கு ஒளி ரூபமாக அருள்தா!! ஈசனே!!!





 இன்றென்று எதையென்று பிரதோச காலத்தைப் போற்றுபவனே,



விளக்கம்


பிரதோஷ காலங்களில் நர்த்தனம் புரியும் ஈசனே






 அறிந்தும் எதையென்றும் அறியாத வகையிலும் கூட நின்று அருள் புரி ஈசனே!! எம் ஈசனே!!!.


 தலை காக்கும் ஈசனே,!!!



விளக்கம் 


 எதையும் அறியாத நிலையில் மனிதர்கள் உள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் அருள் புரிவாய் ஈசனே... தலைமுறையைக் காக்கும் ஈசனே.





 அறிந்தும் எத்தனை? பின் கோடி மனிதர்கள் எத்தனை பாவத்தைப் பின் சுமந்து வந்து நின்று பின் இருந்தாலுமே,....



 அவர்களுக்கெல்லாமே அருள் புரிந்து அனைத்தும் நல்குவாயே ஈசனே.



விளக்கம் 


கோடி கோடி மனிதர்கள் கோடி கோடியாய் பாவத்தை சுமந்து கொண்டிருக்கின்றனர்... அவர்கள் பாவங்களை நீக்கி அருள் புரிவாய்.. அனைத்தும் தருவாய் ஈசனே



 என்றென்றும் மனதில் அனைத்தும் இருக்கும் இறைவனை அறிந்து தாம் மகிழ்ந்து பாடுவோமே, பாடுவோமே சிவபுரனே. 




விளக்கம் 


எங்களுடைய மனதில் நிரந்தரமாய் குடி கொண்டிருக்கும் இறைவா உங்களை நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள் பாடுவோம் சிவ புரனே.






அறிந்தும் கூட ஒன்று அறிந்து எதனென்றும் அறியாத வகையிலும் நின்றின்று மனிதனைப் பின் காக்க என்றென்றும் ஓடி வந்து மனிதனைப் பின் திருத்தி திருத்தி பக்குவப்படுத்தி அருள் கூர்ந்து ஈயனும். ஐயனே!!! 



விளக்கம்


ஒன்றுமே தெரியாமல் ஒன்றுமே அறியாமல் இருக்கும் மனிதர்களை காப்பதற்கு நீங்கள் வரவேண்டும் மனிதர்களை திருத்தி பக்குவம் தந்து அருள் தர வேண்டும் ஐயனே!!





அருளாசி பெறு!!!!, அறிந்தும் எதையென்று மனிதனே, அருளாசி பெறு பின் மனிதனே!!.



 அனுதினமும் ஆசி பெறுக!!!! பின் மனதில் நிறுத்தி எதையென்று அனைத்தையும் நீக்கு, அனைத்தையும் நீக்கு.


எண்ணிய எண்ணங்கள் அனைத்தையும் நீக்கு மனதில் மனிதா.


விளக்கம் 


மனிதர்களே அருள் பெறுங்கள்..


ஈசனை மனதில் நிறுத்துங்கள். 


உங்கள் மனதில் இருக்கும் மாய எண்ணங்களை எல்லாம் நீக்குங்கள். 


உங்கள் மனதில் முழுமையாக ஈசனை நிறுவுங்கள். 


நல் எண்ணங்களை எண்ணுங்கள்.


நீங்கள் எண்ணுவதெல்லாம் யோசிப்பதெல்லாம் ஈசனுக்கு தெரியும் என்று இருங்கள்.





 எண்ணிய எண்ணமெல்லாம் ஈசன் பின் அறிந்தவனே அனைத்தும்.



 எண்ணிய எண்ணங்கள் ஈசன் பின் அறிந்து பின் மனிதனுக்குப் பின் கொடுத்தால் நன்று!!! நன்று!!!


 அதுவே நன்று. அதுதான் புண்ணியம் ஆகுமே,!!!


 ஆகுமே எம் ஈசனே.!! 




விளக்கம் 


மனிதர் நல்லெண்ணங்களை மனதில் விதைத்து யோசித்தாலே... ஈசன் அந்த எண்ணங்களை அறிந்து மனிதர்களுக்கு அருளிடுவார் அதுதான் உங்களுக்கு நன்மை நன்மை.





அறிந்து பின் உன் உள்ளத்தைப் பின் அறிந்து!!! எதையென்றும் அறியாமல் இருந்தும் மக்களைப் பின் காப்பாற்றி நின்று!!!....


 அனைத்திலும் பின் எதிலும் நின்று போராட மனிதனுக்கு தகுதிகள் இல்லாமல் போகுமே. 




விளக்கம் 


உங்களைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கும் மக்களை காப்பாற்றுங்கள்.. ஏனென்றால் வாழ்க்கையில் போராடி வாழ்வதற்கு மனிதர்களுக்கு தகுதியில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.


உற்ற துணை பின் யார்??? என்று பின் மனிதனுக்குத் தெரியவில்லையே சிவபுராணனே.




 அதையும் கூட முழு மனதோடு மனிதனுக்கு ஈந்து, மனிதனுக்கு ஈந்து அனைத்தையும் தருக!!! வளம் தருக!!!


 யோசிக்கும் திறனையும் கொடுக்க சிவபுரனே. நன்று!! நன்று!!!




விளக்கம். 



இறைவன் தான் உற்ற துணை இறைவன் தான் துணைவன் என்பது மனிதர்களுக்கு தெரியவில்லை.. அனைவரும் மாயைகளில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.


இறைவன்தான் துணை என்பதை மனிதர்களுக்கு புரிய வைத்து.. முழுமையாக மனிதர்களுக்கு.. அருள் தர வேண்டும் 


உங்களையே நினைக்கின்ற மனம் தர வேண்டும்..


நல் யோசனைகள் யோசிக்கும் சக்தியை தர வேண்டும் சிவ புரனே.. இப்படி செய்தாலே நன்மை. நன்மை.


 எதையென்று அனைத்தும் வந்து உன் அடியார்கள் இங்கு பாடினார்களே!!!, அழியும் தருவாயில் பாடினார்களே!!!!!.



 அனைத்தும் கூட நீயும் அதைப் பின் அறிந்து பின் காத்தாயே,!!!!


 காத்துப் பின் இரட்சித்துப் பின் அறிந்தும் கூட பின் மனதை மாற்றி தெளிவுகள் படுத்தி பின் நின்று நின்று அனைத்தையும் கொடுத்தாயே.



விளக்கம் 


திருகோணமலை அந்நியர் படையெடுப்பால் அழிய நேரிட்ட பொழுது அடியவர்கள் அனைவரும் ஒன்று கூடி பக்தியால் ஈசனை தொழுது பாடினார்கள்.. அழிவிலிருந்து காத்து அனைத்து.. மனிதர்களின் மனதையும் மாற்றி தெளிவுகள் தந்து அனைவருக்கும் அருளாசிகள் செய்த ஈசனே.



 மக்கள் கலியுகத்தில் எவை எவையென்று தெரியாமல் அலைந்து திரிந்து எதனை என்றும் அறியாமல் இருந்தாலுமே!!!......


, அப்படி ஏது என்று ஏது என்று உணராமல் இருந்தாலும் அத்தனையும் தெளிவுபடுத்த வா!! சிவபுரனே.


 தெளிவுபடுத்த வா!! சிவபுரனே.



விளக்கம் 


கலியுகத்தில் மனிதர்களுக்கு எது நன்மை? எது தீமை? எது உண்மை? எது பொய்? என்பது தெரியாமல் மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். 


இப்படி புரியாமல் தெரிந்து கொண்டிருக்கும் மனிதர்களை புரிய வைத்து தெளிவுகள் தந்து காப்பாற்ற சிவப்புரனே.





 இன்னும் தான் எதை என்றும் அறியாத வகையில் மனிதன் தவழ்கின்றானே,!...


 மனிதன் பொய் சொல்லி தவழ்கின்றானே!!...


, பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றானே!!!.......



. அப்பாவத்தை எப்படி?? பின் முழு மனதோடு பின் அறிந்து எதை என்றும் அறிய பின் உமக்கு தெரியும் சிவபுரனனே!!. சிவபுரனனே!!



 அதையும் பின் அகற்ற வா!! பின் சிவபுரனனே.





விளக்கம் 


நான் யார்??? தான் யார் ???என்பதே மனிதர்களுக்கு இதுவரை தெரியவில்லை!!.. எதற்காக பிறவி என்பதும் தெரியவில்லை... மனிதர்கள் அனைவரும் பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. பாவங்களை அவர்களுக்கே தெரியாமல் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். 



அந்தப் பாவத்தை எப்படி அழிப்பது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் சிவப்புரனே..


அந்தப் பாவத்தை எல்லாம் அகற்றி மனிதர்களை நல்வாழ்க்கை படுத்த வா சிவப்புரனே.






 மனிதனுக்கு தீய சக்திகளை பின் அகற்றி பின் நல் சக்திகள் புகுத்தி தர்மத்தைப் பின் காக்க பின் மனிதர்களை எதையென்றும் அறிந்தும் கூட படைத்திடுவாயே.




விளக்கம்

மனிதர்களுக்குள் இருக்கும் தீய சக்திகளை நீக்கி நல்ல சக்திகளை புகுத்துவதற்கும் தர்மத்தை காப்பதற்கும்... ஞானிகள் மகான்கள் போன்றோரை.. மனிதர்களை திருத்துவதற்கு படைத்து அருள் புரிவாய் சிவனே.




 இன்னும் பின் எத்தனை?? எத்தனை??? ஞானிகள் உன்னைப் போற்றி நின்று துதித்துக் கொண்டிருக்கின்றார்களே.



 அகத்தியன் விரும்பியபடி அவர்களையும் கூட பின் எழ வைத்து எழ வைத்து பின் எழுப்பி பின் அருளிடு பின் சிவபுராணனே.



விளக்கம். 


குருநாதர் அகத்திய பெருமான் ஏற்கனவே வாக்குகளில் நல்கிய படி 


ஜீவ சமாதிகளில் இறைவனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருக்கும் ஞானியர்களை எழுப்பி அவர்களுடைய அருளால் இந்த உலகம் நல்ல முறையாக இயங்குவதற்கு அகத்தியர் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.. அகத்தியரின் சாசனப்படி அந்த ஞானியர்களை நீங்களும் எழுப்பி அருள் செய்ய வை சிவபுராணனே.






 அன்பாக அமர்ந்திட்டு மனதில் பின் தோன்றும் பின் ஈசனாரே!!!!!!


 பார்வதியே பின் அறிந்தும் எதை என்றும் அறிய பின் உலகத்தில் இருக்கும் அனைத்துப் பின் குழந்தைகளையும் பின் காப்பாற்று!!!!


 என்று உத்தரவிட்டு நீயும் கூட மௌனம் பின் சாதித்துக் கொண்டாயே.



விளக்கம்


சித்தர்கள் எங்கள் மனதில் அன்பாக அமர்ந்து அருள் பாலிக்கும் ஈசனாரே !!!


ஏற்கனவே அமர்நாத்திலும்.. கைலாயத்திலும் கங்கோத்திரியிலும்... ஈசனிடத்தில் குழந்தைகளை காப்பாற்று என்று பார்வதி தேவி வேண்டிக்கொண்டார்... அழிவிலிருந்து இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும் ஈசனே அனைத்தும் உங்களுடைய குழந்தைகள் தான். அதனால் நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் ஈசன் இடத்தில் வைத்துவிட்டு... தற்பொழுது பார்வதி தேவியே நீங்கள் இப்பொழுது மௌனமாக இருக்கிறீர்கள். 



என்ன நடக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் தேவியே.. அனைத்தும் அறிந்தது உங்களது உள்ளம். 


இதனால் மனிதர்களுக்கு தெளிவை தருவதற்கு ஓடோடி வாருங்கள். 






 அறிந்தது உனது உள்ளம் !!....


எதையென்று பின்று பின் எதனென்று பின் மனிதனுக்கு தெளிவுகள் படுத்த பின் ஓடோடி வா.



 அறிந்து எதை என்று புரிய நின்றும் கூட அறி என்று பின் காளையின் (நந்தி வாகனத்தில்)

பின் பின் மேலென்று பின் எதை என்று அறிய பின் அனைத்திற்கும் மேலாக அருள புரிய மனிதனுக்கு ஓடோடி எதை என்று அறிய பின் காளையின் மேலே பின் பார்வதியும்!!!........ எதை என்று சிவபுராணனே பின் அன்னையும் தந்தையுமாக ஓடோடி வா !!! சிவபுராணனே.



விளக்கம் 


மனிதர்களுக்கு அருள் புரிவதற்கு... காலை வாகனம் நந்தி வாகனத்தில் அம்மையப்பனாக வாருங்கள் சிவனே பார்வதி தேவியே






 அறிந்தும் எதனுள்ளம் எதனென்று தெரிவித்து எதனென்றும் அறியா மூலப் பொருட்களுக்கு அலைகின்றானே மனிதனே.!!! திரிகின்றானே மனிதனே !!!


அத்தனையும் தோல்வி என்று மீண்டும் பின் குழப்பத்தில் இருந்து!!!...



 அக் குழப்பத்தை நீக்கிடவே அருளிடுவாயே.!!!



 அருளிடுவாயே!!! எம் ஈசனாரே !! எம் ஈசனாரே.................




விளக்கம். 


மனிதர்கள் நாம் என்ன நினைக்கின்றோம் நமது உள்ளத்தில் என்ன நினைக்கின்றோம் என்பது தெரியாமலே மாயா பொருள்கள் மீது நாட்டம் கொண்டு இச்சை கொண்டு அழிகின்ற பொருளின் மீது ஆசை கொண்டு மனிதர்கள் தெரிகின்றார்கள். 


இதன் பின்னாலே சென்றால் அனைத்திலும் தோல்வியை ஏற்படும் குழப்பங்கள் ஏற்படும் 


அந்த குழப்பங்களில் இருந்தும் தோல்விகளில் இருந்தும் காப்பாற்றுவதற்கு அருள் தா ஈசனாரே.





 அன்பென்று ஒன்றுதனை மனிதனுக்குப் புகுத்துவாயே. 

பின் உன் மேலே அறிந்தும் கூட!!



விளக்கம் 


மனிதர்களுக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியவில்லை யார் மீது அன்பு காட்ட வேண்டும்?? என்பதும் தெரியவில்லை இறைவன் மீது அதாவது உங்கள் மீது அன்பு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை மனிதர்களுக்கு தர வேண்டும்!.




 அனைத்தும் பின் நீதானே!!!

 பின்பு செய்தால் அன்பென்று பாதையைப் பிடித்துக் கொண்டு வருவாய் மனிதனே. 




விளக்கம் 

அன்பே சிவம் சிவமே அன்பு என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டால் அன்பின் வழியிலே இறைவனை அடையும் வழியை பிடித்துக் கொண்டு மனிதர்கள் வந்து விடுவார்கள்.





அன்பென்ற பாதையை யார்? மீது யார்? என்று எதன் எதனை மேல் வைத்து எது என்று புரியாமல் தவிக்கின்றானே. மனிதன் தவிக்கின்றானே.



விளக்கம். 


யார் மீது அன்பு காட்ட வேண்டும்?? என்பதே மனிதர்களுக்கு தெரியவில்லை இதுநாள் வரை!!


மாயை மீது அன்பு வைத்து மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.




 அவ் அன்பைப் பின் எதனை? எதனையோ? பயன்படுத்தி அங்கங்கு இருந்து வைத்து வைத்து தோல்விகள் அடைந்து பின் முக்கியமான எதை என்று கூட எங்கு? மனிதன் பின் அன்பை வைத்திருக்க வேண்டும்?????....


 அதனையும் கூட மறந்து விடுகின்றானே. மறந்து விடுகின்றானே.




விளக்கம். 


உண்மையான அன்பினை எங்கு காட்ட வேண்டும் உண்மையான அன்பு எங்கு செலுத்த வேண்டும் என்பதை தெரியாமல் மறந்து மனிதர்கள் வாழ்வதால் வாழ்க்கையில் பல தோல்விகள்.. பல கஷ்டங்களை மனிதர்கள் அனுபவித்து வருகின்றார்கள்.





 ஈசனாரே !! பின் அறிந்தும் எதை என்றும் உணர்ந்த பின் அழிவுகள் எதை என்றும் அறிய பின் எதை என்று தடுக்க நீ எவையென்று புரிய!!!!....


 இப்படித்தான் கலியுகம் என்று பின் எப்பொழுதே எங்களுக்கு பின் வருடங்களில் எதை என்று புரிய இத்தனை இத்தனை கஷ்டங்கள் வந்து மனிதனைப் பின் ஆட்கொண்டு பின் இதன் மூலம் அழிவான் என்று ஏற்கனவே பின் உரைத்திட்டாயே.




விளக்கம் 


ஈசனார் கலியுகம் தொடங்குவதற்கு முன்பாக கலியுகத்தின் விதியில் கலியுகம் இப்படித்தான் இருக்கும்.. இந்தந்த காலகட்டங்களில் இப்படியெல்லாம் அழிவுகள் வரும்... மனிதர்கள் இப்படி எல்லாம் மாறிவிடுவார்கள் அதனால் அழிவுகள் ஏற்படும் அதனால் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை கலியுகம் தொடங்குவதற்கு முன்பாகவே.... சித்தர்கள் எங்களிடம் ஈசனாரை நீங்கள் தெரிவித்து இருந்தீர்கள்.





 ஆனாலும் இப்பொழுதும் எதை என்று அனைத்தும் தடுப்பதும் உன் கையிலே இறைவனே.




விளக்கம் 


கலியுகத்தில் ஏற்படும் அழிவை தடுப்பது உங்கள் கையிலே ஈசனே.





 முழு மனதோடு பின் ஆழ்ந்து பின் அறிந்தும் கூட உன்னையே நினைத்திட அருள் கொடுப்பாயே.

 மனிதனுக்கு அருள் கொடுப்பாயே.



விளக்கம். 


உங்கள் மீது முழுமையாக பக்தி கொண்டு உங்களையே நினைத்துக் கொண்டு இருக்கும் வரம் மனிதர்களுக்கு தர வேண்டும் ஈசனே.








 எதை என்றும் பின் உணராத மனிதனுக்கு உண்மைப் பொருளைப் பின் உணர்த்துவதற்கு அருள் கொடுப்பாயே.



விளக்கம். 


எதையும் புரிந்து கொள்ளாத மனிதர்களுக்கு உண்மை பொருளை புரிந்து கொள்ள அருள் தாருங்கள்.





 அருள் ஈந்து பின் அன்னையின் மடியில் பின் கருத்துடன் அருள் கூர்வாயே. 


விளக்கம்


அன்னையோடு உமா மகேஸ்வரனாய் திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் ஈசனே... அனைவரையும் கூர்ந்து கவனித்து அருள் தருவாய். 





கூர்ந்து பின் அறிந்தும் எதை என்றும் உண்மைதனைப் பின் அறிந்தும் எதை என்று புரிய!!!!



 உம் அருளாலே உண்மை தெரிவிக்க!!!...

 மனிதனுக்கு ஆரோக்கியங்கள்!!!


 வரும் காலங்கள் நோயோடு வந்து என்று தணித்திட!!!



விளக்கம். 


ஈசனுடைய அருளால் உண்மை மனிதர்களுக்கு தெரிந்து விட்டால் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள் ஏனென்றால் வரும் காலத்தில் நோயோடு தான் வாழ வேண்டும் என்று கலியுகத்தில் விதி இருக்கின்றது. 


ஈசனுடைய அருளால் உண்மை பொருளை அறிந்து கொண்டால் நோய்கள் மனிதர்களுக்கு வராது வளராது.






 அனைத்தும் உன் பின் அறிந்தும் கூட அனைத்தும் பின் சொந்தங்கள்!!! அனைத்தும் பின் உயிரினங்கள் அனைத்தும் உன்னுடையதே!!!




விளக்கம். 


இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உங்களுக்கு சொந்தம் நீங்கள்தான் அனைத்து உயிர்களுக்கும் தந்தையானவர்.





 சொந்த பந்தங்கள் மனிதனுக்குப் பின் எப்பொழுது? ஏது? என்று அறிய பின் உருவாக்கினானே.


உருவாக்கியதை எதை என்று நினைத்துப் பின் அதனின்றும் சந்தோஷப்பட்டானே மனிதன். 



அனைத்தும் என்றும் பொய் என்றும்!!!


 உண்மைதனைப் பின் நீதான் சொந்தம் என்று மனதில் பின் அன்போடு காட்ட ஓடோடி ஓடி வா!!!! காளையின் மீது ஓடோடி.  வா!!!!


 அருள் கூர்ந்தும் இறைவா !!!





விளக்கம். 


மனிதர்கள் எப்பொழுது தமக்காக சொந்த பந்தங்களை உருவாக்கினானோ!?.. அதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைத்தான் ஆனால் அதன் மூலம் தான் அவனுக்கு துன்பம் ஏற்படுகின்றது என்பது அவனுக்கு தெரிவதில்லை. 



மனிதர்கள் ஏற்படுத்திய சொந்த பந்தங்கள் அனைத்தும் பொய். 


உண்மை பொருள் இறைவன் மட்டுமே இறைவன் மட்டுமே சொந்தம்...


மனித ஆத்மாக்களுக்கு இறைவனே சொந்தம்... என்ற உண்மையை அன்போடு மனிதர்களுக்கு காட்டுவதற்கு நன்றி வாகனத்தில் வாருங்கள் இறைவா. 


அருள் தாருங்கள் இறைவா.





மனதினின்று  மூலனே!!! உன் துதி பாடுகின்றேனே. அனுதினமும் உம்மையே துதி பாடுகின்றோமே. சித்தர்கள் அனைவரும் உம்மையே துதி பாடுகின்றோமே.




விளக்கம் 


என் மனதில் இருந்து திருமூலன் நான் உங்களை துதிக்கின்றேன்.. தினமும் சித்தர்கள் உங்களை துதிக்கின்றோம்.





 ஏன்? எதற்காக? எம் என்று எதை என்று கூட உம்மைப் பின் அருளாற்றல் பின் ஏற்றி ஏற்றி பின் அங்கும் இங்கும் அலைந்து இந்த கஷ்டங்களோடு உன்னைத் பின் பின் ஒரு திருத்தலங்கள் பின் திருத்தலங்களை உருவாக்கினார்களே.



விளக்கம். 


சித்தர்கள் எங்களுக்கு உங்களுடைய அருள் ஆற்றல்கள் கிடைத்து அந்த அருள் ஆற்றல்களை மனிதர்களுக்கு கிடைப்பதற்கு.. இந்த பூலோகத்தில் எல்லா இடங்களுக்கும் அலைந்து திரிந்து சென்று எங்கெங்கு சக்திகளை பகிரச் செய்ய முடியும் மனிதர்களுக்கு எங்கெங்கெல்லாம் சென்றால் அருள் கிடைக்கும் இறைவனின் ஆற்றல் எங்கெல்லாம் விடுகின்றது அதை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதை எப்படி மனிதர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதை எல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு புனிதமான இடங்கள் இறைவனுடைய ஆற்றல்கள் தேக்கி வைக்கும் இடங்களாக பார்த்து பார்த்து ஆலயங்களை உருவாக்கினோம்.







 உருவாக்கி மனிதனுக்கு நல் போதி!!! போதித்து!!!

( நல் போதி !!. நல் உபதேசங்கள்)


 நல் எண்ணங்களை வளரச் செய்ய பாடுபட்டனரே.


 அப் பாடுபட்டதெல்லாம் அழியும் வண்ணம் வருகின்றதே!!!


 அதை நீயும் காப்பாயே. 



விளக்கம். 


பல திருத்தலங்களை சக்தி வாய்ந்த திருத்தலங்களை எல்லாம் உருவாக்கி மனிதர்களுக்கு நல் அருள்கள் உபதேசம் செய்வதற்கு பாடுபட்டோம்.



ஆனால் இப்பொழுது நாங்கள் கஷ்டப்பட்டதெல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றது. 


நாங்கள் உருவாக்கிய திருத்தலங்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றது. 


அதை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.





பின் எவையென்றும் அறிய நின் பின் உன்னையே நினைத்துக் கொண்டு!! உன்னையே நினைத்துக் கொண்டு!! 

எதை என்று ஞானிகள் பலவற்றை செய்தனரே. 



அதுவும் கூட அழிதல் அழிவு என்றே வருகின்றதே!!!!!


 அதையும் தடுத்திட நீதான்!!! அறிந்தும் கூட  பின் எவையென்றும் அன்னையும் தந்தையும் கூட!!!!



விளக்கம். 


உங்கள் மீது பக்தி கொண்டு உங்கள் மீது அன்பு கொண்டு உங்களுடைய அருளைப் பெற்றுக் கொண்டு ஞானியர்கள் ஒவ்வொரு இடங்களிலும் புனித ஸ்தலங்களை உருவாக்கினார்கள்... அந்த ஸ்தலங்கள் எல்லாம் தற்பொழுது அழிந்து கொண்டிருக்கின்றது..


அழிவிலிருந்து தடுப்பதற்கு அன்னையும் தந்தையும் அம்மையப்பனாக வாருங்கள்.





 எவையென்றும் அறியாத வகையிலும் கூட மனிதனுக்கு புத்திகள் பின் மாறுமே!!! மாறுமே.!!



 அதனையும் நீயும் கூட பொறுத்தருள் ஈந்து!!!.....

 அறிந்தும் கூட அனைத்தையும் கூட பொறுத்தருள் ஈந்து புத்திகள் மனிதனுக்கு ஈவாயே. 

சிவபுரனே!!!



விளக்கம் 


மனிதர்களுடைய மனம் ஒரு குரங்கு போல அடிக்கடி புத்திகள் மாறிக்கொண்டே இருக்கும் எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். 


அதையெல்லாம் மன்னித்து பொறுத்து மனிதர்களுக்கு புத்தியை தாருங்கள் சிவப்புரனே.




 என் மனதில் இருக்கும் அன்பானவனே!!!

 அறிந்தும் கூட எவையென்று புரிய என் மனதில் பின் வாழ்பவனே!! வாழ்பவனே!!!


 ஒப்பில்லாததை அனைத்தும் அளிப்பவனே!!!


 அனைத்திற்கும் பின் உயிராக இருப்பவனே!!!


 அனைத்திலும் இருப்பவனே!!!


 எங்கு? எதில் ? பின் எத்தொழிலும் எதை என்றும் அறிய பின் எங்கு உன்னைப் பின் நினைத்தாலும் வருபவனே!!!




விளக்கம். 


என் மனதிலும் சித்தர்கள் மனதிலும் வாழ்பவரே... யாராலும் ஈடு செய்ய முடியாத யாராலும் கொடுக்க முடியாத அருளையும் ஆசிகளையும் தருபவரே. 


எல்லாமாக இருப்பவரே.. ஏகனாக இருப்பவரே அனேகனாக இருப்பவரே 


சர்வமும் நீயே சகலத்திலும் நீயே அனைத்து பொருள்கள் அனைத்து ஜீவராசிகளிலும் உயிராய் இருப்பவரே. 



யார் யார் எங்கெங்கு என்னென்ன செய்து கொண்டு இருந்தாலும் உங்களை நினைத்தாலே கருணை உள்ளம் கொண்டு உடனடியாக பிரசன்னமாகி அருள் பாலிப்பவரே தாயுமான சுவாமியாய்... வருபவரே.





 அதை மனிதனுக்கு இன்னும் கூட கலியுகத்தில் தெரிவிப்பாயே!!! தெரிவிப்பாயே!!!!



விளக்கம் 

தோன்றா துணையனாய் எப்பொழுதும் துணை வரும்.. உங்கள் மகிமை மனிதர்களுக்கு தெரியவில்லை இந்த கலியுகத்தில். 


உங்கள் கருணையை மனிதர்களுக்கு காட்டு... நினைத்த போதெல்லாம் வந்தருளும் உங்கள் கருணையை மனிதர்களுக்கு தெரிவிக்க வேண்டும் ஈசனே.



 தெரிவிப்பதற்கும் அறிந்தும் கூட

 எங்களை நீங்கள் தானே அனுப்பினீர்களே.!!!



 கலியுகத்தில் மறைந்திருந்து மனிதன் என்ன? என்ன? செய்யப் போகின்றான்????? என்பதைப் பின் (பார்த்து) சொல்லுங்கள்.... என்று எதை என்று கூற அங்கங்கு என்று எதை என்று அறிந்து அனுப்பினீர்களே.


 உலகத்திற்கு அனுப்பினீர்களே !!!




விளக்கம். 


உங்கள் கருணையை உங்கள் மகிமையை மனிதர்களுக்கு தெரிவிப்பதற்கு இறைவன் தான் உண்மை இறைவன் தான் நிரந்தரம் என்ற உண்மையை மனிதர்களுக்கு தெளிவுபடுத்த எங்களை அனுப்பினீர்கள். 



கலியுகத்தில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் வாழப் போகிறார்கள் என்பதை கவனியுங்கள் என்று கட்டளையிட்டீர்கள்.





அறிந்தும் கூட மனிதன் எதை எதையோ பின்பற்றி திருந்தவில்லையே திருந்தவில்லையே.!!!



 கோபத்தில் ஆளாக்கினானே உங்களை!!!


 எதை என்று புரிய உனை தனைப் பின் அறிந்தும் எதை என்றும் தந்தையே!!!!! பின் கோபத்தில் உங்களை ஆளாக்கினார்களே. மனிதர்கள் ஆளாக்கினார்களே!!!!



விளக்கம் 

கலியுகத்தில் மனிதர்கள் தர்மத்தோடு வாழவில்லை.. சகஜீவராசிகளை உயிர்களைக் கொன்று தின்று அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்து வாழ்கின்றார்கள் இதனால் உங்களுக்கு கோபம் வந்தது. 


உங்களை கோபத்திற்கு ஆளாக்கியவர்கள் மனிதர்களே.




 கோபத்தைப் பின் எறிந்து!!!!..... பின் அனைத்திற்கும் நல்குவாய்.


 அனைவரையும் சமநிலைப்படுத்துவாய். 


அனைத்தும் ஒன்றே!!! என்று பின் நிச்சயம் தன்னில் பின் உருவாக்குவாய்.!! உருவாக்குவாய்!!

 சிவபுரனனே!!!. 





விளக்கம் 


நீங்கள் கோபப்பட்டாலும் அனைவரும் உங்கள் பிள்ளைகளே நீங்கள் தான் தந்தை 


உங்களுடைய கோபத்தை தணித்து சாந்தமாய் உங்கள் குழந்தைகளுக்கு அருள் அனைத்தும் தாருங்கள் .


மனிதர்களிடையே இருக்கும் ஏற்ற தாழ்வினை மாற்றி அனைவரும் சமம் என்பதை அருள் செய். 


அனைத்தும் ஒன்று சகல ஜீவராசிகளும் ஒன்று என்பதனை அனைவருக்கும் மனதில் புரிய வைத்து பிறர் நலம் பேண வேண்டும்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பாட்டின்படி அனைவரும் வாழ்வதற்கு அருள் செய் சிவபுரணனே.




 பல பல ஞானியர்கள் அறிந்து உமையும் இன்று உம்மை எதை என்று கூற.....


இக் கடலடியில்


(திருக்கோணமலை கடலுக்கு அடியில்)


 பல ஞானிகள் பின் எவையென்றும் அறிந்தும் கூட கலியுகத்தை காக்க ஓடோடி வா !!!!!  ஈசனே!!!! என்று தவம் புரிகின்றனர். 



அருளும் !!! எதை என்றும் அருளிடும் பின் இறைவா!!!! இறைவா !!!!அருளும் இறைவா.!!!


விளக்கம் 


திருகோணமலை கடலில் அடியில் பல ஞானிகள் இந்த உலகத்தை கலியுகத்தில் அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எங்கள் வரவேண்டும் அருள் தர வேண்டும் அருள் தர வேண்டும் சிவனே என்று கடலுக்குள்ளே தவத்தில் நித்திய தவத்தில் இருக்கின்றார்கள்.

அருள் தாருங்கள் இறைவா. வரம் தாருங்கள் இறைவா.




 எப்பொழுதும் மனிதனுக்கு எவையென்றும் தெரியாது!!! எவையென்று சிறு குழந்தை போல் இருந்து பின் தவறு செய்கின்றானே.



 அதைப் பின் திருத்திட வா.  !! வா !!  வா !! வா!! அருள் கூர்ந்து!!!  ஈவாய் ஈவாய் காளையின் மேல் ஏறி அமர்ந்து ஏறி எதை என்று புரிய அன்னையும் தந்தையுமாக வா !!வா!!. 



விளக்கம் 

மனிதர்கள் சிறு குழந்தைகள் போல் எதுவும் தெரியாமல் தவறுகள் செய்து விடுகின்றார்கள். 


மனிதர்கள் தவறுகள் செய்யாமல் இருக்க அவர்களை திருத்துவதற்கு வாருங்கள் அம்மையப்பனாக நந்தி வாகனத்தில் வாருங்கள்.




எதை என்றும் புரிந்த நிலைக்கு ஏது என்று அறியாத பின் வண்ணம் என் உள்ளம் புகுந்தாயே!!! என் உள்ளம் புகுந்தாயே!!!!



விளக்கம். 


உங்கள் அருள் என்ன உங்கள் கருணை என்ன என்பதை திருமூலன் நான் புரிந்து கொண்டேன் உங்களை அறிந்து கொண்டேன் இதனால் என் உள்ளத்தில் வந்து குடி கொண்டாய் இறைவா.


உங்களை முழுமையாக புரிந்து கொண்டதால் என் உள்ளத்தில் நீங்கள் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிகின்றீர்கள்.





சித்தர்கள் பின் உமக்கு எது என்றும் அறிய ஏது என்று  கூட அறிய நீ பின் பின் முடிவெடுப்பது எவையென்று அறிந்து!!!!


 அவ் முடிவிற்கு தக்கவாறு யாங்கள் தம் நிச்சயம் தன்னில் மனிதனை திருத்திடுவோமே திருத்திடுவோமே.



 நல்முடிவு பின் எடுத்து எடுத்து கலியுகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எங்களுக்கு அருள் கூர்ந்து கூர்ந்து!!! எங்களுக்கு அருள் கூர்ந்து !கூர்ந்து!


 அறிந்தும் உனதுள்ளம் எதை என்றும் புரிய பின் எமது உள்ளங்கள் நீ என்று அருளுவாயே.




விளக்கம் 


ஈசனாரே நீங்கள் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்? என்ன முடிவு எடுப்பீர்கள்?... என்பதெல்லாம் சித்தர்கள் எங்களுக்கு நாங்கள் அறிவோம்.. உங்கள் முடிவின்படி உங்களுடைய கட்டளைப்படி... நிச்சயம் நாங்கள்.. எங்கள் சேவையை தொடர்வோம் மனிதர்களை திருத்திடுவோம்.



நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும் சிவனே... கலியுகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற விதியை எங்களுக்கும் வகுத்து தந்துள்ளீர்கள் மனிதர்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டுவதற்கு!! மனிதர்களுக்கு அதையெல்லாம் வாக்குகளில் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக் கூறி மனிதர்களை திருத்துவோம். 



சித்தர்கள் எங்களுக்கு நீங்கள் அருள் கூர்ந்து அருள் தந்து.. உங்கள் உள்ளம் என்ன என்பது எங்களுக்கு தெரியும் எங்களது உள்ளம் என்ன என்பது உங்களுக்கும் தெரியும்.. உங்கள் எண்ணமே எங்கள் எண்ணம் அந்த எண்ணத்தின் படி வழிநடத்த அருள் செய்வாய்.




 எங்கள் உள்ளங்கள் எல்லாம் நீயே!!! இருந்திருப்பாயே எப்பொழுதும் இருந்திருப்பாயே. !!!


வழிகள் பின் நடத்திடுமே!!!



விளக்கம். 


சித்தர்கள் எங்கள் உள்ளத்தில் நிரந்தரமாய் குடி கொண்டிருக்கும் இறைவா.. நீங்கள் அனைவரையும் வழி நடத்துங்கள்.






 நடத்திட!! எதை என்றும் புரிந்தும் அறிந்தும் கூட!!!..... எங்கெங்கும் ஞான தீட்சங்கள் உருவாகின்றதே!!!!!



விளக்கம். 


இறைவா நீங்கள் வழி நடத்துங்கள்.. நீங்கள் வழி நடத்திட நடத்திட இந்த உலகத்தில் ஞான தீட்சங்கள் உருவாகும்.. ஞானங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.



 உருவாகி!!.. எதை என்றும் புரியாத நிலையில் பின் மனிதன் எதை என்றும் உணராத தன்மையாக இருந்தாலும்!!.....


 அதை நீ பின் உணர்த்துவதற்கு எதை என்றும் புரியாத அமுதத்தை வழங்கு இறைவா.!!


 உன் அமுதத்தை வழங்கு பின் இறைவா.!!!



விளக்கம். 


ஞான தீட்சங்கள் உருவாக... உருவாக மனிதர்கள் எதை என்று புரியாத நிலையில் இருந்தாலும்... உங்களுடைய ஞானங்களை ஞான தீட்சங்களை மனிதர்கள் புரிந்து கொள்வதற்கு... உங்களுடைய அமுதமான அருளை ஆசிகளை அருள் அமிர்தம் சிவ அமிர்தத்தை அனைவருக்கும் தாருங்கள்.







 மனிதனுக்கு செம்மையான அறிவையும் புத்தியும் கொடுத்தும் எதை என்றும் நிற்காத அருளிக்கும் எதை என்று புரியாத வகை நின்றாலும் !!....



விளக்கம். 


மனிதர்களை படைக்கும் பொழுதே புத்தியை கொடுத்து அறிவை கொடுத்து அனுப்பினாலும் அருள் ஆசிகள் கொடுத்து அனுப்பினாலும்.. அதை மறந்து மனிதர்கள் புரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள்.





அருள் ஈந்து பின் உமை பின் எதை என்று புரிய உமை என்று அறிய பின் எப்பொழுதும் எதை என்று அனைத்திற்கும் நீயாக காரணத்தை!!!


 ஏது என்று அனைத்திலும் பின் நீயே!! என்று பின் உரைத்திட எதை என்று எங்களுக்கும் பின் பரிசுத்தமான உன் ஆற்றலை  எப்பொழுதுமே தந்திருக்கின்றாயே!!

 தந்து தந்து இருக்கின்றாயே.





விளக்கம். 


மனிதர்களுக்கு அருளும் அறிவையும் நீங்கள் படைக்கும் பொழுதே தந்தாலும்... மனிதர்களுக்கு தெரியவில்லை எதுவும். 


அனைத்திற்கும் காரண கர்த்தா நீங்கள் தான் என்பது மனிதர்களுக்கு தெரியவில்லை சர்வமும் நீயே சகலமும் நீயே என்பது அறிந்திருக்கவில்லை மனிதர்கள்.



இறைவா உங்கள் அருளாலே இந்த உலகம் இயங்குகின்றது .




அனைத்திலும் நீங்கள் தான் இருக்கின்றீர்கள்.. உங்களுடைய பரிபூரண ஆற்றல் சக்தியை எங்களுக்கும் தந்து இருக்கின்றீர்கள் அதாவது சித்தர்கள் எங்களுக்கும் இந்த உலகத்தை வழிநடத்தும் சக்திகளை தந்திருக்கிறீர்கள்.




 அதையும் கூட பின் எங்களை நீயும் இப்பொழுது கலியுகத்தில் அப்படியே பின் நில்லும்!! என்று சொல்லிவிட்டாயே.


விளக்கம்.

நீங்கள் இந்த உலகத்தை வழிநடத்த எங்களுக்கு தந்த ஆற்றலை சக்திகளை மனிதர்களுக்கு தந்து மாற்றுவதற்கு நாங்கள் தயாரான பொழுது கலியுகத்தில்


ஆற்றல்களை மனிதர்களுக்கு தர வேண்டாம்!! என்று எங்களை நிறுத்தி விட்டீர்கள்)






 யாங்கள் என்ன செய்வோமே!????????


 உம்மை தானே நினைத்து நினைத்து உருகின்றோமே!!!!



விளக்கம். 


நீங்கள் மனிதர்களுக்கு தர வேண்டாம் என்று நிறுத்தி விட்டீர்கள் இனி நாங்கள் என்ன செய்வோம்??.. உங்களையே நினைத்து உருகிக் கொண்டிருக்கின்றோம் மனதை மாற்றி அருள் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டு இருக்கின்றோம்.




 ஆற்றலை எதை என்று கொடுத்த பின் அவை பின் செலவு செய்யாமல் அப்படியே காத்திருங்கள்!! என்று!!


விளக்கம் 


இறைவன் மனிதர்களுக்கு வழிநடத்த கொடுத்த ஆற்றலை அப்படியே நிறுத்தி வையுங்கள் என்று சொல்லிவிட்டீர்கள் நீங்கள்.






காத்திருங்கள்!! என்பதற்காகவா!?!?!?!?!? உன்னை யாங்கள் பின் துதித்து பாடினோமே.



விளக்கம். 


அனைத்து சக்திகளையும் கொடுத்து உலகத்தை வழிநடத்தும் பரிபூரண ஆற்றலையும் தந்து கடைசி நேரத்தில் நீங்கள் இப்படி எங்களை நிறுத்தி விட்டீர்கள்... இதற்காகவா இறைவா உங்களை வேண்டி கெஞ்சி பிரார்த்தனை செய்து துதி பாடி வணங்கிக் கொண்டிருக்கின்றோம்????




 நிச்சயம் அவ்வாற்றலை கலியுகத்தில் பின் பயன்படுத்தவில்லை என்றால் அனைத்தும் அழித்திடுமே.


 அனைத்தும் பின் மனிதன் அழித்திடுவானே.




விளக்கம். 


நீங்கள் தந்த பரிசுத்தமான ஆற்றலை இந்த உலகத்திற்கு பயன்படுத்துவதற்கு மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தாவிட்டால் கலியுகத்தில் அனைத்தும் அழிந்துவிடும்..


அநியாயம் அக்கிரமங்கள் பெருகி மனிதர்கள் அனைத்தையும் அழித்து விடுவார்கள்...


மனிதர்கள் செய்யும் தவறினால் சகல ஜீவராசிகளும் அழிந்துவிடும்.






 அறிந்தும் கூட எவை செய்ய வேண்டும்??


 நிச்சயம் தன் ஓடோடி உம்மிடத்தில் வந்தோமே. 


வந்தோமே சித்தர்கள் யாங்கள் தான்!!!




விளக்கம். 


இதற்கு என்ன தீர்வு?? இதற்கு என்ன வழி?? இனி என்ன செய்ய வேண்டும்??.. என்பதற்காக சித்தர்கள் உங்களிடத்தில் சரணடைந்திருக்கின்றோம் உங்களிடத்தில் வந்திருக்கின்றோம். 









 நிச்சயம் தன்னில் எவை? எவை? செய்ய எவை ?எவை? என்று அறிய!!!


 உனதன்று எதை என்று புரிய எங்களுக்கு அருள் கூர்ந்து இதைச் செய்ய?? அதைச் செய்ய!!! என்று நிச்சயம் தன்னில் உள்புகுந்து பின் எதை என்று கூற!!


 என்றுமாறு கட்டளை இடு!! இடு !! தந்தையே!!!!


. கட்டளை இடு!! இடு!! தந்தையே.!!



விளக்கம். 


எல்லோரும் இனி என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழ வேண்டும்?... எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்... என்பதை எங்களுக்கு கட்டளை இடு இறைவா 


உங்கள் அருள் வேண்டும் இறைவா...


என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குள் புகுத்து எங்கள் தந்தையே எங்களுக்கு கட்டளை தாருங்கள் தந்தையே. 











 இதனையும் தன் மக்களுக்கு ஏது என்று அறிய கலியுகத்தில் இன்னும் தானே பின் அழிகின்ற நிலைக்கு!!! அழிகின்ற நிலைக்கு!!



விளக்கம். 


இறைவா எல்லாம் உங்கள் மக்கள் உங்கள் குழந்தைகள் கலியுகத்தில் நீங்கள் இப்படி கட்டளை இடாமல் அனுமதி தராமல் இருந்தால் இன்னும் மனிதர்கள் அழிந்து விடுவார்கள்.. அழிந்து கொண்டே இருக்கின்றார்கள்.


கட்டளை இடங்கள் தந்தையே அனுமதி தாருங்கள் தந்தையே.




 ஆனாலும் உன் பக்தர்கள் என்றால் ஞானிகள் இருக்கின்றார்களே!!!



. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் !!!


ஒரு சந்தர்ப்பத்தை கொடு பின் சிவபுரனனே. சிவபுரனனே!!!



விளக்கம்.


இறைவா 


சித்தர்களும் உண்மையான ஞானிகளும் மகன்களும் உங்கள் மீது பக்தி காட்டும் நல் ஆத்மாக்களும் இருக்கின்றார்கள்.. அவர்கள் மனிதர்களை திருத்துவதற்கு பார்த்துக் கொள்வார்கள். 


ஒரே ஒரு வாய்ப்பை கொடு சிவபுராணனே.. இந்த உலகம் திருந்தி மீண்டும் நல்வாழ்க்கை வாழ ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள்.




 நால்வர்களும்!!


 (சமய குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர் திருகோணமலை யில்)



உன்னை இங்கு போற்றிப்!! போற்றி!!


 இத்தவத்தின் வலிமையால் என்னென்ன? தேசத்தை காக்க நால்வர்களும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்களே. 






அறிந்தும் கூட அவர்களுக்கும் ஞானம் இன்னும் கொடுத்து மக்களைப் பின் தன் திசையில் பின் திருப்பிட அருள் கூர்ந்து இன்னும் இன்னும் ஆற்றலை பெருக்கி பெருக்கி அறிந்தும் கூட எதை என்று புரியும் வண்ணம் அனைத்தும் பின் அளித்திடு!!!! சிவபுரனனே!!!.



விளக்கம் 


நாயன்மார்களும் அனுதினமும் திருகோணமலையில் வந்து உங்களை வணங்கி துதி பாடிக் கொண்டிருக்கின்றார்கள் உங்களுடைய ஞானத்தையும் அருளாசிகளையும் அனைவருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மனதில் மாறுதல்களை ஏற்படுத்தி அருள் ஆசிகள் ஞானத்தை தந்து இந்த தேசத்தை காப்பாற்றுங்கள்)





 சிவபுரனனே!!!!

எதை என்றும் புரியாமல் நாளும் அனைத்தும் கூட அனைத்தும் கூட உமையே (உமையவள்) நீ அறிந்தும் கூட எதை என்று கூட அனைத்துமே உமக்கு தெரிந்திருக்குமே.



விளக்கம்.


தேவியே உமையவளே.. உங்களுக்கு அனைத்தும் தெரியும்...


அனைத்தும் தெரிந்து கொண்டு ஈசனார் எங்களை அமைதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டார். 


ஒவ்வொரு நாளும் என்னென்ன நடக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும் தேவியே. 


இதனால் தந்தையான ஈசனிடம் எடுத்துச் சொல்லுங்கள் இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும் 

மனிதர்களை காப்பாற்ற வேண்டும் 


மனிதர்களின் கர்மா வினைகளை அகற்ற வேண்டும்.






 எங்களைப் பின் அப்படியே அமைதியாக இரு என்று சொல்லிவிட்டாயே.



 தாயே!! நீயே எடுத்துக் கூறு. 


தாயே நீ ஈசனிடம் எடுத்துக் கூறு. 


தாயே நீயே!! தந்தையிடம் எடுத்துக் கூறு.!!


எடுத்துக் கூறி அனைத்து வினைகளையும் களை!!!! (களையச்செய்)


 மனிதனின் அனைத்து வினைகளையும் களை!!!!!



 கலியுகத்தில் பின் வினைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றானே. மனிதன் சேர்த்துக் கொண்டிருக்கின்றானே. !!!



அவையும் எதை என்றும் புரிய எதை என்றும் அறிய இவை என்று புரிய பின் அவை என்றும் அழிக்கப் பின் எதை என்று அறிய!!!


 பாவத்தை நிச்சயம் அழித்திடு!!!! பின் தந்தையே!!!


 தானாக உணர்ந்து பின் கொள்வானே. மனிதன் தன்னையே பற்றி சிந்திப்பானே.



விளக்கம் 


கலியுகத்தில் மனிதர்கள் அதிக பாவங்கள் அதிக வினைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்...


அதையெல்லாம் தந்தையே ஈசனே அழித்து விடுங்கள். 

மனிதர்களுடைய கர்மா மற்றும் பாவங்கள் வினைகள் முழுமையாக அழிந்தால் தான்...


தான் யார்??? என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியும்... தான் யார்?? எதற்காக இந்த பிறவி இந்த ஆத்மா என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க முடியும்.





 அறிந்தும் கூட அறிந்தும் கூட இத் (திரு) கோண மலையில் தன்னில் கூட பின் அனுதினமும் அதிகாலையில் வந்து பல ஞானிகள் உன்னைப் போற்றி துதிக்கின்றனர்.


 மலையில் தன்னைப் பின் இராவணனும் பின் ராமனும் பின் சீதையும் கூட அனுதினமும் பல பல வழியில்!!!கூட அவர்களுடைய சீடர்களும் இங்கு வந்து உன்னைத் தொழுகின்றார்களே!!!.


இத்  தேசத்தை (இலங்கையை) நலமாக காக்கப் பின் தொழுகின்றார்களே செய்கின்றார்களே.


 எதை எதை என்று அறிய மக்களுக்கு இன்னும் தன்னில் கூட உன் லீலையை பின் அறிந்தும் கூட என்று புரியப் பின் அருள் ஈந்து கூர்ந்து கவனித்து பார்த்தால் எங்களுக்கும் பின் எதை என்று அறிய கட்டளை இடு.

 பின் தந்தையே!!

 தாயே!!! நீயும் எடுத்துக் கூறும்.!!

 தாயே நீயே எடுத்துக் கூறும்.!!

அனைத்தும் பின் உந்தனுக்கே சொந்தம். தந்தையே!!! அனைத்துமே உந்தனுக்கே சொந்தம்!!. 

அதை அறியாத மூடர் எதை என்றும் அறியா கர்மத்தில் சேர்கின்றானே.

முதலில் பின் அனைத்திற்கும் நீயே!! என்று !! நீயே என்று!! காட்டு. 

உலகத்திற்கு நீயே!!! என்று காட்டு!!!.

ஆசிகள்!! ஆசிகள்!!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 11 June 2026

சித்தன் அருள் - 2228 - அன்புடன் அகத்தியர் - மௌன பிரபு வாசி முனிவர் ஜீவ சமாதி!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

குருநாதர் அகத்திய பெருமான் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் சித்தர்கள் ஜீவசமாதி பயணங்களில்

தூத்துக்குடி மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பல ஜீவ சமாதிகள் உள்ளது குறிப்பாக மௌன குரு ரெட்டி சுவாமிகள் ஜீவசமாதி மற்றும் சுப்பாஞானியார் ஜீவசமாதி மில் குருநாதர் ஏற்கனவே வாக்குகள் உரைத்துள்ளார்.

அதன்படியே அருப்புக்கோட்டையில் அமைந்திருக்கும் வாசி யோக சித்தர் ஆலயத்தில் இந்த யாத்திரை சென்ற அடியவர்களுக்கு செல்லும் காரிலேயே சித்தர்களின் அனுபூதி அமைந்தது. 

இதனைக் குறித்து குருநாதரிடம் மௌன பிரபு வாசி முனிவர் ஜீவ சமாதியில் குருநாதர் இடம் கேட்ட பொழுது குருநாதர் வாக்குகளாகவே தந்து விட்டார்.

அவ் வாக்குகள் பின்வருமாறு!!

குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ மௌன பிரபு வாசிமுனிவர் ஜீவ சமாதி அருப்புக்கோட்டை.

ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன் 

அப்பனே இப்பொழுது மௌனம் சித்தன் என்கின்றார்களே நல் முறைகளாக தன் பிள்ளைகள் எப்படி போவார்கள்?? என்று கூட பின் கூடவே வந்து விட்டான்!!

அவந்தனும் இங்கே அமர்ந்து கொண்டு தான் இருக்கின்றான் என்பேன். 

நல் முறைகளாக ஆசீர்வாதங்கள் 

அப்பனே இவந்தன் நல் முறைகளாக இப்பொழுதும் கூட நல் முறைகளாக இவன் தான் அழைத்து வந்து நல் முறைகளாக ஆசிகளும் தந்துவிட்டான் என்பேன். 

இவனது அனுமதி இல்லாமல் யாரும் இங்கே வர முடியாது என்பேன்!!

தகுதி ஏற்றார் போல் பின் யாருக்கு எவ் தகுதி இருக்கும் என்பதை கூட உணர்ந்து தான் பின் ஞானிகளும் செய்வார்கள் என்பேன். 

அத்தகுதி நீங்கள் அனைவரும் படைத்திருக்கின்றீர்கள். 

அதனால்தான் இப்பொழுது கூட இங்கு வந்து ஆசிர்வாதங்களாக பெற்று செல்கின்றீர்கள் என்பது உறுதி 

உறுதி அப்பனே இவன் அருள் இருந்தால் அப்பனே இவ்வுலகத்தில் அனைத்து திறமைகளும் சாதிக்கலாம் என்பேன். 

சிறப்பு வாய்ந்த மனிதன். 

மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாறியவன் இவன். 

அதனால் சற்று உற்றுப் பார்த்தால் இழந்தும் நல் முறைகளாகவே உறங்கி க் கொண்டிருக்கின்றான் என்று நினைத்தீர்களா????

உறங்கவே இல்லை. 

பின் மனிதர்களை எவ்வாறு?? பின் நல் முறைகளாக பயன்படுத்தி மக்களை திருத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான்!!


ஆனாலும் அதிவிரைவிலே அனைத்தும் செய்வான்.

இவ்வாலயம் இன்னும் சிறப்பு பெறும் அனைவரும் இதன் சிறப்பை பற்றி அறிவார்கள் என்பேன். 

வருவார்கள் என்பேன். 

ஆனாலும் புத்தி இல்லாத மனிதன் இன்னும் எதனை எதனையோ நினைத்து ஓடிக்கொண்டே இருக்கின்றான். 

ஒரு பிரயோஜனமும் இல்லை. 


ஆனாலும் இவந்தன் தேர்ந்தெடுத்து நல் முறைகளாக.. பின் கஷ்டங்கள் இருப்பவர்களுக்கு. இவந்தனே அனைத்தும் செய்வான் என்பேன் 


நல் முறைகளாக மனதை சில மனிதர்களுக்கு மாற்றி நல்முறைகளாகவே இவன் பெரும் ஞானி என்பேன். 

இவந்தனும் பின் சுற்றித் திரிவான் என்பேன்.. நல்லோர்களை வாழ வைப்பான் என்பேன்.. இவனுக்கு அவ் அனுக்கிரகம் உண்டு என்பேன்.

இவந்தன் ஓடோடி வந்து உதவிடுவான் என்பேன். 
நிச்சயம் இவந்தனக்கு தெரியும்

அப்பனே மனதார மனதார இன்று கூட இவன் தான் இங்கு அழைத்தான் என்பேன். 

அப்பனே எதற்காக?(அழைத்தார்) ஏன்? என்ற கேள்விகள்...

அப்பனே அனைவரும் ஒரு விதத்தில் அப்பனே மக்களை வாழவைத்து உள்ளீர்கள் என்பேன். 

அதனால்தானப்பா!!

இவந்தனுக்கு பிடித்து விட்டால் அனைத்துமே செய்வான்.. என்பேன். 
அனைவருக்கும் அனைத்துமே செய்வான் பொறுத்திருங்கள்.

ஆனாலும் எதிர்கொள்வதற்கு சில கஷ்டங்கள்..

கஷ்டங்கள் நேர்ந்துவிட்டது.

ஆனாலும் இவனே தீர்ப்பான். 

நல் அருள்கள் நல் அருள்கள் பொங்கி வழியுதப்பா. 

நல் முறைகளாக இப்பொழுது கூட பின் முகத்தில் கையை வைத்துக்கொண்டு கேட்டுக் கொண்டிருக்கின்றான் இவந்தன்.

அப்பனே இவந்தனக்கு அனைத்து வித்தைகளும் தெரியும் என்பேன்.

இவந்தனை பணிந்தால் அப்பனே நல்லோர்களுக்கும் அனைத்து வித்தைகளையும் தெரியாமல்!!...... தெரியும் அளவிற்கு சொல்லிக் கொடுத்து விடுவான் என்பேன். 


தகுதிகள் உண்டு என்பேன் உண்டு என்பேன் அப்பனே 

குறைகள் இல்லை அனைவருக்கும் ஆசிர்வாதங்கள்...

யான் நல் முறைகளாகவே இப்பொழுது கூட கொடுத்து அனுப்புகின்றேன் அப்பனே.. நல் முறைகளாக இவந்தனுடைய ஆசிகளும் துணையிருக்க... அப்பனே நல்முறையாக புண்ணியம் செய்து அப்பனே நல் முறைகளாகவே...

கடையில் (கடைநாளில் ) இவந்தனை இங்கே பார்க்கலாம் என்பேன் ஒவ்வொருவரும். 

நல் முறைகளாக இன்னும் இத்தலத்தைப் பற்றி அப்பனே இன்னும் எழும்.. என்பேன். 

இவையன்றி கூற பொறுத்திருங்கள்.. அனைத்தும் விவரிக்கின்றேன்.. மறு வாக்கும் இங்கு வந்து...


(வணக்கம் அய்யா அவர்களே. இந்த வாக்கு இரவில் பயணத்தின் போது குருநாதர் வாசியோக சித்தரின் ஜீவ சமாதியில் உரைத்தது 

குருநாதர் தன் வாக்குகளில் கூறியபடி மௌனம் சாமிகள் அடியவர்களுடன் வாகனத்தில் கூடவே பயணித்து வந்ததை அடியவர்களுக்கு பரிமளம் மூலம் தெரியப்படுத்தினார் குருநாதர் தனது வாக்குகளில் மௌனம் சித்தரே உடன் வந்தார் என்பதையும் வாக்குகளில் கூறினார்.

காரில் ஏறும் பொழுது பஞ்சாமிர்த வாசனை தல யாத்திரை செய்த பொழுது அடியவர்களுக்கு காரின் உள்ளே வீசிக்கொண்டே இருந்தது  தெய்வீக அனுபவமாக பஞ்சாமிர்தம் திருநீறு சந்தனம் வாசனை திரவியங்கள் பரிமளம் வீசிக்கொண்டே இருந்தது குருநாதர் இதைப்பற்றி மௌனம் சாமிகள் உடன் வந்தார் என்பதை அறிந்து மிகவும் பக்தி பரவசமுற்றனர்)

அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ மௌனபிரபு வாசி முனிவர் ஜீவசமாதி நான்கு வழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகில், ஜோதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது.

ஸ்ரீ மௌன பிரபு வாசி முனிவர் சாமிகள் 
மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரம் குருபூஜை.

ஜோதிபுரம் 
நான்கு வழி சாலை இரயில்வே மேம்பாலம் அருகில் 
அருப்புக்கோட்டை 
தொடர்புக்கு:
9443680517,
9443396893,
9952622801.

Sri Vasi Munivar
G486+HMX, Vasantham Nagar, Aruppukkottai, Tamil Nadu 626101
https://maps.app.goo.gl/sSjScBzTriCSbx2n8

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2227 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 13



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 13 ( நிறைவு பகுதி )

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை. 


நேரலை:- https://youtu.be/C5OQ5pL4GnY?t=37707

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு….. 
===========================


குருநாதர்:- அப்பனே, அழகாக அறிந்தும் எது என்று புரிய, சரியாகவே புரிந்து அறிந்தும் கூட இன்னும் பல வகையில் கூட ஐந்தாம் இடத்தை பின் கடக்க ரகசியங்கள் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐந்தாம் இடத்தை கடந்தால் மட்டும்தான் எல்லாம் உண்டு.


அடியவர்:- இருக்கும். எல்லாம் சரியா இருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சரியா இருக்கும். அந்த ஐந்தாம் கட—அந்த ஐந்தாம் இடத்தை வந்து கடக்கவில்லை என்றால்...


அடியவர்:-  சரியா தெரியல அப்படின்னா முடிஞ்சது.


சுவடி ஓதும் மைந்தன் :- ஒண்ணுமே தெரியாது. ஏன்னா அடுத்து ஐந்தாம் இடத்தில் குழந்தை பாக்கியம். அடுத்து ஏழாம் இடம் என்பது திருமணம். 10 தொழில். 11 வருமானம். 12... ம்... மோட்ச ஸ்தானம்ங்க ஐயா. இறைவனை காணது இல்லைங்க ஐயா.  தெரியாமல் போய்விடும். அப்ப அஞ்சுலவே நிறுத்திட்டார். அஞ்சுல நிறுத்திட்டார். அஞ்சிலே பெரும் சந்தேகம் நம்மளுக்கு வந்து, அந்த அஞ்சை கடந்தவன்... அஞ்சை கடந்தவன் எல்லாத்தையும் கடப்பான். அஞ்சை கடக்கவில்லை என்றால்...


அடியவர்:-  அங்கேயே நிக்க வேண்டியதுதான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அங்கேயே நிக்க வேண்டியதுதான். 



===========================
# ஐந்தை கடக்க - “நமச்சிவாய வாழ்க” 
===========================


குருநாதர்:- அறிந்தும் எவை என்று புரிய, அதாவது ஐந்தை கடக்க வேண்டும் என்றால் ஐந்து எழுத்தோனை பிடியுங்கள். போதும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பி என்ன சொல்லிட்டாரு?


அடியவர்:-  ஈசனை.


சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னால கடக்க முடியலன்னா என்ன பண்ணனும்?


அடியவர்:-  நமச்சிவாய.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐந்தோனை கடக்க முடியவில்லை என்றால் யாரை பிடிக்கணும்?


அடியவர்:-  நமச்சிவாயனை பிடிக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நமச்சிவாயனை தான் பிடிக்கணும். 


குருநாதர்:- அறிந்தும் ஏது என்று அறிய, பின் அதாவது அறுபடையோன், பின் வெல்வான் ஏது என்று புரிய. ஏழுபடையோன் ஏது என்று அறிய, அஞ்சான் அறிந்தும் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அஞ்சில் கடக்கணும்னா, அஞ்சை பிடிச்சிட்டுங்கன்னா யாருக்கு—யாருக்கு அருள் கிடைக்கும்?


அடியவர் 4 :- ஆறுபடை முருகன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆறுபடை முருகனும் கிடைக்கும். ஏழு மலையானும் கிடைக்கும். 


குருநாதர்:-  அறிந்தும் ஏது என்று புரிய, பின் விட்டுவிடுவானா என்ன? சனீஸ்வரன் என்ற—சனீஸ்—எவை என்று அறிய, சனீஸ்வரனே சனி பட்டம் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப...எட்டாம் இடம். சனீஸ்வரனும் எட்டு என்பது விட்டுருவார். 


குருநாதர்:-  அறிந்தும் ஏது என்று அறிய, அதனால் பின் ஒன்பதாம் இடமும் மிகவும் சிறப்பு. அறிந்தும் ஏது என்று புரிய, அதாவது பாக்கியம் செய்வதற்கு இப்பிறவிலே வாய்ப்பு அளிப்பான் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்பதாம் இடம் சாதாரணம் இல்லைங்க ஐயா.


அடியவர் :- பாக்கிய ஸ்தானம். ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானம். அந்த பாக்கியம் அளிப்பதற்கு இறைவன் வந்து வாய்ப்பு அளிப்பார் அப்படின்றாங்க.


குருநாதர்:-  அறிந்தும் எது என்று அறிய, அதனால் ஐந்தோடன் ஐந்தாம் இடம் ஏது என்று புரிய மிகவும் பங்கு வகிக்கின்றது. பின் இதைத் தன் ரகசியமாக பல வழியில் கூட ஏதோ—அதாவது யான் குழப்பி விட்டேன் என்று குழப்பிக் கொள்ளுங்கள். ஏனென்றால் எது என்று அனைத்தும் புரியும்படி சொன்னாலும் இவர் கேட்பதில்லை. ஏது என்று அறிய.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, சுலபமா எதுன்னு கிடைச்சிட்டாலும்...


அடியவர் 4 :- இப்ப இந்த கணக்கு சொன்னதுனால எல்லாரும் போட்டு குழப்பிட்டு இருப்போம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கணக்கு. வீட்ல இருக்க சொன்ன மாதிரி மூணு பேர், நாலு பேர் எல்லாத்தையும் போட்டு இந்த திசையா, அந்த திசையான்னு போட்டு குழப்பிட்டு இருப்போம். கொஞ்சம் குழப்புங்க. குழப்ப குழப்ப இன்னும் புத்தி தெளிவாகும். இன்னும் வந்து நிறைய விஷயங்கள் வந்து நமக்கு வந்து புலப்படும், தெரிய ஆரம்பிக்கும். எல்லாத்தையுமே எளிமையா சொல்லிட்டா, அதுக்கு மதிப்பு இருக்காது. அதனால நீங்க எல்லாம் குழப்புங்க. குழப்புனதுக்கு அப்புறம் கண்டிப்பா குருநாதர் தெளிவு கொடுப்பாருங்க.


குருநாதர்:-  அனைத்தும் இலவசமாக கொடுத்துவிட்டால் மனிதன் சோம்பேரி ஆகிவிடுவான். அதனால் இதுவும் யான் இலவசமாக தரப்போவதில்லை.


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )


அடியவர்:- குருநாதருக்கு நிச்சயமா தெரியும் அது. அவர் தெளிவா ஒரு கால்குலேஷன் சொன்னாருன்னா ஈசியா குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம். அவர் சொல்ல மாட்டாங்க. எல்லாத்தையும் ஈசியா கொடுத்தா அதுக்கு மதிப்பு இல்ல. அதனாலதான் நீங்க கண்டுபிடிங்க. வேலை செஞ்சுட்டு வாங்க. ஹோம்வொர்க் பண்ணிட்டு வாங்க. அதுக்கப்புறம் நான் சொல்றேன் இந்த வழின்றாங்க.




குருநாதர்:- அறிந்தும் ஏது என்று புரிய, ஆனாலும் அனைத்தும் ஏது என்று அறிய நமச்சிவாயனை அறிந்து கூட எங்கெங்கு சென்றால், பின் அதாவது ஒவ்வொரு—பின் லக்னக்காரனும், பின் ராசிக்காரனும் எங்கெங்கு சென்றால் என்பவை எல்லாம் யான் அறிந்து வைத்திருக்கின்றேன். நிச்சயம் சொல்வேன்.




அடியவர் 4:-  ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும், ஒவ்வொரு லக்னக்காரங்களுக்கும் எங்கெங்க போகணும். நீங்க ஆல்ரெடி எங்கெங்க போயிருக்கீங்க. இன்னும் எங்கெங்கெல்லாம் போனா அந்த எலுமிச்சம் பழம் எப்படி மேல ஏறி வந்ததோ அதே மாதிரி நம்மளும் வாழ்க்கையில மேல ஏறி வந்துருவோம். அந்த ரகசியம் தெரியும். சொல்றேன்.


குருநாதர்:-  அறிந்தும் அப்பனே, அனைத்தும் ஏது என்று அப்பனே சுலபமாக கிட்டிவிட்டால் அப்பனே மதிப்பே இருக்காதப்பா. அதனால்தான் அப்பனே எது என்று கூட இறைவனிடம் மன்றாடுங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் சொல்வேன்.


அடியவர் :-ஆமா. எல்லாம் ஈசியா கிடைச்சிட்டா அதுக்கு மதிப்பு இருக்காது. கஷ்டப்படுங்கப்பா.


குருநாதர்:-  அறிந்தும் எதை என்று புரிய இவ்வாறாகவே பல வருடங்கள் ஏன் எதற்கு பல பின் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் என்பவை எல்லாம் எதற்காக அறிந்தும் கூட அதாவது ஏது என்று புரிய இவ்வாறாக நீங்கள் கேட்கின்றீர்களே… எங்கு ஆன்மா இருக்கின்றது என்பது நிச்சயம் அவ் ஆன்மாவினுடைய பின் நிச்சயம் தன்னில் கூட எலும்புகளில் சிதற கிடைக்கும் பின் நுண்.. பின் புழு புழுக்கள் நிச்சயம் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு இடத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். நிச்சயம் அழியாது தாயே.


அடியவர் :- ( ஆசிரியத்தில் ) அப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாரு பார்த்தீங்களா யாராவது ஒன்னு கேட்டாங்க பாருங்க.. அந்த… ஐயா எக்ஸ்பிளைன் பண்ணுங்க 


===========================
# குலதெய்வ ரகசியம் என்ற  வாக்கின் தொகுப்பாக..அருமையாக எடுத்துரைத்தார் அடியவர்.
===========================


அடியவர் 4 :- கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு அம்மா வந்து கேட்டாங்க அதாவது வந்து முன்னாடி வந்து குருநாதர் வந்துட்டு தனுஷ்கோடியில வந்து எல்லா ஆன்மாக்களுக்கும் வந்துட்டு, பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு. 


அப்ப இப்போ இன்னைக்கு சொல்லும்போது ஒவ்வொரு திசையில இருக்கிற கடலை நோக்கி போகணும் அப்படின்னு சொன்னதுனால, ஒரு அம்மா வந்து குழப்பம் ஆயிட்டு, இல்ல முதல்ல தனுஷ்கோடி போகலாம்னு சொன்னீங்க இல்ல. இப்ப எதுக்கு ஒவ்வொரு திசையில இருக்கிற கடலுக்கு போகணும்னு இப்ப ஏன் மாத்தி சொல்றாங்க… அப்போ எல்லா ஆன்மாவும் தனுஷ்கோடிக்கு போகாதா ?  அப்படின்னு ஒரு கேள்வி அங்க அந்த அம்மா வச்சாங்க. 


அதுக்கு தான் குருநாதர் என்ன சொல்றாருன்னா வந்துட்டுங்க இறைவனை முழுமையா நம்பி இருக்கிற எல்லா தனுஷ்கோடி போகணும்னா அந்த ஆன்மாக்கும் ஒரு சக்தி வேணும். சக்தி இல்லாத ஆன்மாக்கள் எல்லாம் அந்தந்த இடத்துல அப்படி அப்படி தங்கி இருக்கும். சொல்லணும்னா வந்துட்டு. அது எங்க தங்கி இருக்கும்னா குலதெய்வ கோயிலை சுத்தி தான் தங்கி இருக்கும். அந்த குலதெய்வ கோயிலோட திசையை அதனாலதான் கண்டுபிடிக்க சொல்றோம். எங்க இருக்குன்னு சொல்லிட்டு. அது அந்த அடிப்படையில தான் அந்த திசைக்கு அருகில் இருக்கிற கடல். 


இப்ப மேஷ ராசினா கிழக்கு. கிழக்கு திசை. உங்களுக்கு கிழக்குதான் வந்துட்டு எங்க வந்து குலதெய்வம் இருக்கோ அதுக்கு அருகில் இருக்கிற கடல். அந்த அந்த திசையை நோக்கி போகும்போது அந்த ஆன்மாவை உங்களால பிரார்த்தனை பண்ணி அந்த குலதெய்வ கோவில்ல இருந்து இழுத்துக்கொண்டு கடல்ல நீர்ல விட்டு மோட்ச கதியை அடைய வைக்க முடியும் சொல்லணும்னா வந்துட்டு. அதே மாதிரி இதுக்கு முன்னாடி எவ்வளவோ ஆன்மாக்கள் பிறந்திருக்கும் மன்னர்களா இருந்திருப்பாங்க.. ராஜாக்களா இருந்திருப்பாங்க. 


பல நூறு வருடங்கள் வந்து ஆட்சி செஞ்சிருப்பாங்க சொல்லணும்னா.. வந்துட்டு அவங்க எல்லாம் இறந்தே போனாலும் அவங்களோட எலும்புகள் வந்து முழுமையா வந்து அழியறது கிடையாது. சரிங்களா வந்துட்டுங்க. மத்த இதெல்லாமே அழிஞ்சாலும் எலும்பு அழியல அப்ப அந்த அணுக்கள் வந்து இன்னும் இருக்கத்தான் செய்யுது சொல்லணும்னா வந்துட்டு.


அடியவர்  :-அந்த எலும்புகளை சாப்பிடக்கூடிய நுண்ணுயிர்கள் வந்து இன்னும் உயிரோட இருக்குதுப்பா அப்படின்றாங்க.


அடியவர் 4 :- சோ அப்ப இன்னும் அப்போ அந்த அந்த நுண்ணுயிர் மூலமா அந்த ஆன்மா இன்னும் இருக்கத்தான் செய்யுது. அந்த எலும்புல அந்த ஆன்மா இருக்குது. அந்த எலும்பை சாப்பிடக்கூடிய நுண்ணுயிர் இருக்குன்னா அந்த நுண்ணுயிருக்குள்ள அந்த ஆன்மா இருக்குது அப்ப இது எல்லாத்தையும் கட்டி இழுத்து நம்ம மோட்ச கதியை அடைய வச்சாதான், நமக்கு நம்ம வாழ்க்கையில எல்லாமே நல்லபடியா நடக்கும்.


குருநாதர்:- இவை அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் பின் அவ் நுண்ணுயிர் பல வழியில் கூட பின் கடக்கும். அதாவது பின் ஒரு இடத்தில் பின் அதாவது பின் ஏது என்று அறிய இறக்கின்றான். அறிந்தும்  கூட ஓரிடத்தில் புதைக்கின்றார் ஆனாலும் சிறிது தூரத்தில்…மற்றொரு புதைக்கிறார். ஆனாலும் பின் எவை என்று அறிய பின் தானாகவே சேர்ந்துவிடும் அவை.


அடியவர் :- எல்லாம் ஒரே இடத்தில் புதைக்கிறது எல்லாம் ஒன்னு சேர்ந்துரும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த எலும்பு நுண்ணுயிர் இருக்கு பாருங்க அது வந்து அது என்னன்னா ஒருத்தரை உங்க முன்னோர்கள் ஒரு இடத்துல புதைக்கிறாங்க இன்னொருத்தரை இன்னொரு இடத்துல புதைக்கிறாங்க ஆனால் அது என்ன ஆகும் வந்து.


அடியவர் :- எல்லாம் ஒன்னா சேர்ந்துரும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்னா சேர்ந்துரும்ன்றாரு வந்து.


அடியவர் 4 :-  அது இல்லாம நம்ம வந்து கடைசியா என்ன பண்றோம்னா அஸ்தியை கரைக்கிறோம் இல்லைங்களா? நீர்ல தான் கரைக்கிறோம் அதே நீர்ல எவ்வளவோ அஸ்திகள் கரைக்கப்படுது அப்போ அந்த ஆன்மா மத்த ஆன்மாக்களோட சேர்ந்து பயணம் பண்ணுது சொல்லணும்னா வந்துட்டுங்க. ஒன்னா சேர்ந்துருது. அதுதான் சொல்ல வராரு வந்துட்டுங்க.


அடியவர் :- இல்ல அது ஒன்னா சேர்ந்துரும்ன்றாங்க அது பிரச்சனையா நல்லதா அப்படின்னு குருநாதர் கேட்கணும். 


குருநாதர்:- அறிந்தும் எவை என்று எதைப் புரிய இவ்வாறே இல்லை அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. அவ் எலும்புகளில் இருக்கும் நுண்ணுயிர்கள், பின் தேடி ஏது என்று அறிய, சொந்த பந்தங்களாக அனைத்தும் பின் இணைந்துவிடும்.


அடியவர் 4 :-அடடா.


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த எலும்புகள்ல வந்து எல்லாம் இருக்குல்ல சில சில உயிர்கள் இருக்குமா அது வந்து நீங்க வந்து 1000 kmல இருந்து அந்த பக்கம் போனாலும் அது என்ன ஆகுமா.


அடியவர்  :- தேடி வந்துரும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்திருக்காங்கன்னா தேடி வந்துரும். அந்த நுண்ணுயிர் மூலமா நுண்ணுயிர் அந்த சின்ன ஒரு நுண்ணுயிர் 


அடியவர்  :- அதான் அணு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அணு, ஓகே, ஐயா புரியுதுங்களா? 


https://youtu.be/C5OQ5pL4GnY?t=38258


===========================
# ஆன்மாவின் அசாத்திய, அதி விரைவு  பயண வேகம் 
===========================


குருநாதர்:-  அறிந்தும் இவை யாவும் இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆன்மாக்கள் ஏது என்று அறிய அதாவது பின் அணுவிலிருந்து ஏது என்று புரியும் துகளாக ஏது என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் ஒரு சிட்டிக்கை அறிந்தும் கூட பின் நிமிடத்திற்கு பின் பல எது என்று கூட மைல் பல ஆயிரம் பின் மைல்கள் தொலைவில் பின் கடக்கும் அவ் ஆன்மா.


அடியவர் 4 :- ஒரு ( குறுகிய காலத்திற்குள் ) இதுக்குள்ள பல ஆயிரம் மைல் கடந்து போயிடுது அந்த துகழ். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த துகழ் என்றது என்ன தெரியுங்களா? நம்ம ஆன்மாதான் துகழ்ன்றாருங்க ஐயா. ஆன்மாதான் அப்ப ஒரு இப்படி (என்ற கண் இமைக்கும் நேரத்தில் )  ஆனா என்ன தெரியுமா போகும்?  பல ஆயிரம் மைல் போயிடும்.


===========================
# ஒருவர் இறந்தவுடன் - அவ் ஆன்மா என்ன ஆகும் ?
===========================


குருநாதர்:-  அறிந்தும் ஏன் எதற்கு எவை என்று புரிய இறந்தவுடன் ஆன்மா அறிந்தும் கூட அதாவது அணுவானது வெடித்து சிதறி, எது என்று அறிய பல லட்சம் அறிந்தும் கூட, பின் மைல் தொலைவில் சென்று விடுகின்றது. ஆனாலும் 11வது நாள் பின் 12வது நாள் அனைவரும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று ஒரு இடத்தில் கூடுகின்ற பொழுது, நிச்சயம் அவையே நினைத்துக் கொண்டிருக்கின்ற பொழுது மீண்டும் இங்கு வருகின்றது. 


அடியவர் :- சிவாய நம!!!! 


அடியவர் :-  இறக்குறப்போ எல்லாம் வெடிச்சு சிதறுன்றாங்க. அந்த காரியம் பண்றாங்க இல்லையா?. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்துச்சுன்னா அந்த ஆன்மா வந்து ஒரு செகண்ட்ல 


அடியவர் :- பல ஆயிரம் மைல் கடந்து போயிருது 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடந்து போயிடும். 


அடியவர் 4 :- வெடிச்சு சிதறி 


சுவடி ஓதும் மைந்தன் :-  வெடிச்சு  சிதறி ஆனா அந்த ஆன்மாவோட துகழ் நமக்கு 


அடியவர் :-  காரியம் சொல்றோம்.. காரியம்னு வைக்கிறோம்ல ( ஒருவர் இறந்த பின்னர் சில நாட்கள் கழித்து வைக்கும் காரியம் என்ற நிகழ்வில்  ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  வைக்கிறீங்களா… அப்போ அது நினைச்சுனே ஒரு பத்து நாள் 


அடியவர் :-   அப்ப நினைக்கிறோம்ல எல்லா பேரும் அந்த இறந்து போன அந்த உயிரை நினைக்கிறப்போ.. எல்லாம் திருப்பி ஒன்னு சேர்ந்துரும்ன்றாங்க அந்த இடத்துல 


சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி என்ன ஆகும். 


அடியவர் :- ஒன்னு சேர்ந்துரும்ன்றாங்க


சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னு சேர்ந்துரும்ன்றாரு 


===========================
# இறைவன் என்ற காந்தகம்
===========================


குருநாதர்:-   பின்பு ஏது என்று அறிய பின் இதற்கு பின்பு மோட்சம் கொடுப்பதா என்று இல்லையா என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் இறைவனிடத்தில் தான் உண்டு அறிந்தும் கூட. பின் ஏது என்று கூற  அதாவது இறைவன் காந்தகம். அதனால்தான் பின் இங்கு காந்தகத்தை எடுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  காந்தகத்தை எடுங்க ஐயா. 


அடியவர் :-  ( கந்தகத்தை எடுத்து வந்தார்கள் ) 


குருநாதர்:- எதை எவை என்று புரிய, ஆனாலும் பின் சரியாக வைத்தால்தான் இறைவிடம் செல்லும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் இறைவன் அப்படியே நிறுத்துவான். அப்பொழுது என்ன அவ் நிச்சயம் அவ் துகழ் என்ன செய்யும்?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=38406




சுவடி ஓதும் மைந்தன் :-  சரியான நேரத்தில் வச்சு மனசு சேர்ந்திடும். அப்ப சரியாக இல்லை என்றால் என்ன ஆகும் சேராது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   https://youtu.be/C5OQ5pL4GnY?t=38412
( கந்தகத்தை இணைத்து விளக்கங்கள் அவசியம் நேரலையை பார்க்கவும். ) 


===========================
# இரண்டு காந்தங்களின் எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும் (Opposites attract), 
# இரண்டு காந்தங்களின்  ஒத்த துருவங்கள் விலக்கும் (Like poles repel)." 
===========================

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா 


குருநாதர்:- ஆனாலும் அனைத்தும் இறைவனிடம் பிரிந்து வந்ததுதான் ஏனென்றால் இறைவன் வீசுகின்றான். பின் அதாவது பின் கை ஏது என்று படும் அல்லவா அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=38470




சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே இறைவனிடமிருந்து வந்த துகழ் தான்.


குருநாதர்:- அறிந்தும் இவை தன் அதனால்தான் இறை பக்தியை பின் பயன்படுத்திக் கொண்டு வெல்லலாம் அனைவருமே. 


அடியவர் :-  இறைவன் துகழு. அப்போ அந்த இறைவன் துகளை ஒன்னு சேர்க்கிறதுக்கு இறைபக்தியை பயன்படுத்தி தான் ஒன்னு சேர்த்து இறைவன் கிட்ட போக முடியும் அப்படிங்கிறாரு. 


குருநாதர்:- இவைதன் அனைத்தும் ஏது என்று புரிய அதனால்தான் பின் இதில் ஒரு மதம் என்றே யான் குறிப்பிடவில்லை அனைத்தும் இப்படித்தான் இயங்குகின்றது. 


அடியவர் :- ம் 


சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து ஒரே மதத்தில் மட்டும் நான் சொல்ல பண்றது வந்து மொத்தமா எல்லாம் 


அடியவர் :- அப்படித்தான்.. இப்படித்தான் இயங்குது 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் இயங்குது என்றார் 


குருநாதர்:- அறிந்தும் இதனால்தான் மனிதன் புதுமையான விஷயங்கள் செல்கின்றான். அதனால் யாங்களும் புதுமையான விஷயங்களாகத்தான் எடுத்து வருவோம். 


அடியவர் :-  சிவாய நம 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றார் மனிதன்?  மனுஷன் பழைய விஷயங்களே சொன்னா… என்ன பண்ணுவாங்க?  இனிமேல் 


அடியவர் :-  நம்ப போறதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ப போறதில்லை. அதனால வித்தியாசமா சொல்லணும். வித்தியாசமானதெல்லாம் சொன்னா மட்டும்தான் நீங்க வித்தியாசமா புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்க இல்ல. அதனால நாங்களும் ? 


அடியவர் :-  புதுசா கண்டுபிடிக்கிறோம் பாருங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  புதுசா வந்து கண்டுபிடிக்கிறோம்ன்றாரு வந்து 


குருநாதர்:-  ஏது என்று புரிய இதனால் புரியாமல் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட சித்தர்கள் மீது நம்பிக்கை வைத்து நிச்சயம் தன்னில் கூட பின் நடந்தால் புரியும் அனைத்தும். 


அடியவர் :-  எங்க மேல நம்பிக்கை வைங்கப்பா. சித்தர்கள் மேல நம்பிக்கை வைங்க வச்சா எல்லாமே புரியும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே புரியும். 


===========================
#  ஐந்தெழுத்துக்கு  உரியவர் அருள் அவசியம் வேண்டும்.
===========================


குருநாதர்:-  அறிந்தும் ஏது என்று புரியும் இதனால் ஐந்தாம் இடம். அதனால்தான் இதை வெல்ல வேண்டும் என்றால் பின் அதாவது ஐந்தெழுத்துக்கு  உரியவன்  நமச்சிவாயனே. 


அடியவர் :- ஐந்தாம் இடத்தை வெல்லனும்னா அவர்தான் ஐந்தெழுத்துடைய 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐந்துக்கு  உரியவன் யாரு? 


அடியவர் :- நமச்சிவாயன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நமச்சிவாயன் மட்டும்தான். அவர்தான் 


அடியவர் :- அந்த இடத்தை வந்து புரிய வைப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரிய வைப்பார் 


அடியவர் :- கடக்க வைப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடக்க வைப்பார் 


அடியவர் :- இறைவனை காண்பிப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை காண்பிப்பார். அப்படி இல்லை என்றால் முடியாது 


குருநாதர்:-  அதனால்தான் ஏது என்று அறிய குலதெய்வத்தை ஏது என்று புரிய அனைத்து இடங்களிலும் பின் கல்லாக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால் என்னவோ புரியவில்லை என்பதனால்தான் என்ன பண்றது எல்லா இடத்திலும் 


அடியவர் :- கல்லா இருக்கிறார் இறைவன் 


சுவடி ஓதும் மைந்தன் :- கல்லு மாதிரி இறைவனை வச்சிருக்காங்க இறைவன் வச்சிருக்காரு வந்து 


குருநாதர்:-  அறிந்தும் ஏது எவை என்று தவிர ஏது என்று புரியும் அனைத்திலும் அறிந்தும் கூட பின் ஒன்றின் பின் ஒன்றாகவே நிச்சயம் இன்னும் விளக்கங்கள். ஏன் எதற்கு இத்தனை அவதாரங்கள்? இத்தனை பின் விதவிதமாக பின் முகங்கள்? என்பதை எல்லாம் சொல்கின்றேன் 


அடியவர் :-  இன்னும் இத்தனை அவதாரங்கள் எதுக்கு இத்தனை முகங்கள் எதுக்கு எல்லாம் அப்படின்றதுதான் வந்து இன்னும் வரக்கூடிய காலங்கள்ல நாங்க சொல்றோம்ப்பா விளக்குறோம் அப்படின்னு சொல்லி இருக்காங்க 


குருநாதர்:-  அறிந்தும் அப்பனே யான் சொல்லியதை நல்முறையாக செய்யுங்கள் 


அடியவர் :-  அந்த காயின்ஸ் புற்றியே அந்த காயின் பூஜை சொல்லி இருக்காங்க இல்ல நன்முறையில் செய்யுங்கன்னு சொல்லி இருக்காங்க ம் 


குருநாதர்:- அப்பனே அடுத்தும் கூட அப்பனே நீர் வருகின்றது அல்லவா அதையும் பின் நிச்சயம் கொடுங்கள் அப்பனே எது என்று புரிய அதனுள்ளே அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே சிவபுராணத்தை ஓதுங்கள் அனைவருக்காகவும் என்பேன் அப்பனே பின்பு உரைப்பேன் 


சிவபுராணம் பாராயணம் :- ( ஆரம்பமானது )  
https://youtu.be/C5OQ5pL4GnY?t=38665


( பாராயணம் முடிந்த பின்னர் வகுக்கள் ஆரம்பமானது )


===========================
#  அடுத்த கூட்டு பிரார்த்தனையில் - “காசி மண்” அனைவருக்கும்…
===========================


குருநாதர்:-  அறிந்தும் எதை என்ற குறிப்பிட்ட அறிந்தும் கூட இதனால் இதன் தன்மை அதிகமாகும் ஐந்தாம் இடத்தை கடக்க. இதனால் காசி தன்னில் பின் அறிந்தும் கூட மணல் எடுத்து அடுத்த முறை அனைவருக்கும் கொடுக்க இதிலிருந்து எடுத்துக்காட்டுவார்கள் சித்தர்கள். 


அடியவர் :- அடுத்த முறை வந்து காசியிலிருந்து மணல் எடுத்துக் கொடுக்க சொல்லி இருக்காங்க. அதிலிருந்து சித்தர்கள் வந்து சில விளக்கங்கள் கொடுப்பாங்கன்னு சொல்லி இருக்காங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அதிலிருந்து என்ன செய்யணும்னு சொல்லுவாங்க. இப்ப நீங்க எல்லாம் கேட்டீங்க பார்த்தீங்களா, அந்த டவுட் எல்லாம் அதுல கிளியர் ஆகும். அவர் எல்லாம் கேட்டாருங்களா, அப்ப அதிலிருந்து ஐயா புரியுதுங்களா? 


குருநாதர்:-  அப்பனே, இதற்கு பின் ஏதோ ஒரு வழியை சொல்லிவிட்டாலும் புரியாதப்பா. இதனால் அப்பனே, செயல்முறை, அதாவது செய்முறையாகவே விவரிக்கின்றேன்.


அடியவர் :- காசியிலிருந்து செயல்முறையாவே வந்து சும்மா சொன்னா எல்லாம் புரியாதுப்பா. செயல்முறையாவே உங்களுக்கு விளக்குனாதான் புரியும் அப்படின்றாங்க.


https://youtu.be/C5OQ5pL4GnY?t=39329


===========================
#  காலம் காலங்களாக பயன்படுத்திய ரகசியங்கள்.
===========================


குருநாதர்:-   அப்பனே, ஏது என்று புரிய. இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலைகள் வேண்டாம் அப்பனே. நடமாகவே. காலம் காலங்களாக எது என்றறிய பயன்படுத்தியதை மீண்டும் அப்பனே பயன்படுத்தி பின் நிச்சயம் பின் உங்களை நீங்கள் வெல்லுங்கள் என்பேன் அப்பனே.


அடியவர் :- காலம் காலமாக பயன்படுத்தியது தான் இதெல்லாம். இதையெல்லாம் நாங்க உங்களுக்கு சொல்லித் தரோம். இதை பயன்படுத்தி உங்களை நீங்கள் வெல்லுங்க அப்படின்றாங்க.


===========================
#  கங்கை அன்னையின் “காசி மண்” மகிமைகள் 
===========================


குருநாதர்:-   அப்பனே, சரியாகவே. அப்பனே, பின் காசி தன்னில் அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே. பின் நிச்சயம் எவை ஆறு அறிந்தும் கூட அப்பனே சரியாகவே அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அழகாக இல்லத்தில் பின் நிச்சயம் அப்பனே பின் அதாவது வையுங்கள் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து காசியிலிருந்து நீங்க என்ன பண்ணனும் தெரியுங்களா, நிச்சயமா இதுக்காக ஒரு இடத்தை வச்சு தனியா நீங்க வையுங்கன்றார் வந்து.


குருநாதர்:-   அப்பனே, இதன் ஆற்றல் போக போக கூடும் என்பேன் அப்பனே.


அடியவர் :-  இதனுடைய ஆற்றல் போக போக கூடும்ன்றாங்க.


குருநாதர்:- அப்பனே, பின்பும் ஏது என்றறிய அப்பனே நிச்சயம் தண்ணீர் கூட பின் மண்ணையும் எடுத்து வந்தால் இதற்குரிய ஆற்றலையும் யான் சொல்லிக் கொடுக்கின்றேன் அப்பனே.


அடியவர் :- மண் எடுத்துட்டு வந்தா இதற்குரிய ஆற்றலையும் சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்றாங்க. 


அடியவர் :-  ( சந்தேகம் ) அது காசி கங்கை உள்ள இருக்கிற மண் எடுத்துட்டு வர்றது தானே?


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா ஆமா.


அடியவர் :- கங்கை மண்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா கங்கை மண். ஓகேங்களா. 


குருநாதர்:-  அப்பனே, அனைத்திற்கும் தெளிவுகள் கிடைக்கும். ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நிச்சயம் நீங்கள் அனைவரும் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே பின் அதாவது படித்தால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் தேர்ச்சி பெற முடியும். படிக்காமல் வந்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தால் அப்பனே யான் சொல்வதும் புரியாது அப்பனே சொல்லிவிட்டேன்.


அடியவர் :-  படிக்காம கேள்வி எல்லாம் கேட்கிறா இன்னும் பதில் சொன்னாலும் புரியாதுப்பா. படிச்சிட்டு வாங்க. அப்பனாதான் புரியும்ன்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பத்தாம் வகுப்பு எதை என்று புரிய அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் தேர்வில் உட்கார்ந்தான் அப்பா. ஆனாலும் அப்பனே பின் ஒன்றுமே எழுதவில்லையாம்ப்பா. இதற்கு என்ன அர்த்தம் அப்பா?


அடியவர் :- பத்தாம் வகுப்பா ஒன்னும் எழுதலையாம் தேர்வுல போயி. இதுக்கு என்ன அர்த்தம்னு கேக்குறாங்க.


குருநாதர்:- ஏது என்று புரிய அப்பனே இப்படித்தான் பல மனிதர்கள் அப்பன் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே பின் ஒன்றும் தெரியாமல் அப்பன் தேர்வில் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்று அப்பனே அமர்ந்து கொண்டு அப்பனே வெற்றியும் பெற்று, அப்பனே மனிதர்களும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பா.


அடியவர் :- ஒன்னும் தெரியாம அவங்க வெற்றி பெற்று வெற்றி பெற்று இருக்காங்கன்னு சொல்றாங்க அவங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஒன்னும் தெரியாம?


அடியவர் :-  கேடுதான்.


குருநாதர்:-  அப்பனே, இதனால் அப்பனே சொல்லிக் கொடுக்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கவலைகள் வேண்டாம் அப்பனே. ஒவ்வொன்றும் அப்பனே ஒவ்வொரு முறையும் உங்களை வெல்ல அப்பனே நிச்சயம் யான் பின் செய்முறை விளக்கமாகவே கூறி பின் நிச்சயம் அனைத்தும் வெல்ல வைக்கின்றேன்.


அடியவர் :- கவலைப்படாதீங்கப்பா. ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு செயல்முறை விளக்கமாகவே உங்களை வெல்வதற்குரிய வழிகளை நாங்க சொல்லிக் கொடுக்கிறோம் அப்படின்றாங்க.


===========================
#  கங்கை அன்னையின் “காசி மண்” எடுத்து வர அடியவர்கள் மூலம் கருணை கடல் ஏற்பாடு  
===========================


குருநாதர்:- அப்பனே, நலமாகவே ஏது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே ஒவ்வொன்றுக்கும் அப்பனே வித்தியாசங்கள். அப்பனே, பின் உங்களை நீங்கள் வெல்ல வேண்டுமானால் அப்பனே சில சிறப்பு ஏது என்று அறியப்ப நிச்சயம் தன்னில் கூட பல வகையான அப்பனே ஏது எங்கு சென்றால் அப்பனே எங்கு கிரக பலன்கள் அதிகமாக அப்பனே விழும். அப்பனே எங்கு சக்தியில் கூடும் அவை எடுத்து வந்தால் அப்பனே நீங்கள் சொன்னாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் வலிவிடுமா என்பது சந்தேகம் தானப்பா. அதனாலே பின் நிச்சயம் அப்பனே பின் நிச்சயம் எடுத்து வந்து உங்களுக்கு கொடுக்கச் சொல்லி இருக்கின்றேன்.


அடியவர் :-  அதாவது சில இடங்கள் வந்து சொல்றாங்க. சொன்னா அங்க போனா அவங்க சக்திகள் கூட சொல்றாங்க பட் உங்களுக்கு அதெல்லாம் போக முடியுமான்னு தெரியல. அதனாலதான் இந்த வழிமுறைகளை நாங்க சொல்றோம். இந்த நீர், மண்ணெல்லாம் எடுத்துட்டு வந்து உங்களுக்கு கொடுக்கச் சொல்லி செயல்முறைகளை சொல்ல சொல்றோம். சக்திகளை ஏத்துறதுக்கு வழி பண்றோம் அப்படின்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, அடுத்த முறை அப்பனே நிச்சயம் ஆன்மாக்கள் பற்றியே உரைப்பேன் அப்பனே. அனைத்தும் ஏது என்று புரிய அப்பனே பின் சொல்கின்றேன்.


அடியவர் :- அடுத்த முறை வந்து ஆன்மாக்களை பத்தி சொல்றேன். எல்லாத்தையும் சொல்லித்தரேன் அப்படின்னு சொல்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, ஏனென்றால் அப்பனே இதனை பின் முழுமை பெற்றால்தான் அப்பனே அடுத்தடுத்தும் அப்பனே பின் உயரிய இடத்தையும் பின் பிடிக்க முடியும். இவ்வுலகத்தையும் காக்க முடியும் என்பேன் அப்பனே.


அடியவர் :-  அதாவது இந்த அஞ்சாம் இடத்தை பத்தி இன்னும் நிறைய எக்ஸ்பிளைன் பண்றேன். முன்னோர்கள் ஆன்மாக்கள் பத்தி இது எல்லாம் புரிஞ்சுகிட்டாதான் அடுத்த இடத்துக்கு போக முடியும். இறைவனை பத்தி அறிய முடியும்ன்றாங்க.


குருநாதர்:- அப்பனே, அதனால் உங்களை வென்று அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே மக்களையும் தெளிவுபடுத்தலாம். அப்படி இல்லை என்றால் அப்பனே தெளிவுபடுத்த முடியாதப்பா.


அடியவர் :-  உங்களை வென்று பிறரையும் மக்களையும் நீங்க தெளிவுபடுத்தலாம். இல்லைன்னா ஒண்ணுமே செய்ய முடியாது. ஜீரோ தான்றாங்க.


குருநாதர்:- அப்பனே, நலங்களாகவே எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே நல்விதமாக பின் வேண்டுவதெல்லாம் அப்பன் நிச்சயம் தன்னில் கூட தடை தாமதம் பட்டாலும் அனைத்தும் கொடுப்பேன் யான்.


அடியவர் :-  எல்லாத்தையும் நான் கொடுக்கிறேன் அப்படின்றாங்க குருநாதர்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாத்தையும் கொடுக்கிறார். கொஞ்சம் தடைப்பட்டாலும்.


அடியவர் :-  தடைப்பட்டாலும் நேரமானாலும் காலமானாலும் கொடுக்கிறேன்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, இதனால் ஐந்தாம் பகுதியிலே நிற்கின்றீர்கள் என்பேன் அப்பனே எது என்று புரிய. அப்பனே அடுத்தடுத்து சித்தர்கள் சொல்வார்கள் அப்பா. அதை மீறி வரவேண்டும் என்று.


அடியவர் :-  நிச்சயமா அதை மீறி நம்ம தாண்டி வரணும். அடுத்தடுத்து சித்தர்கள் எல்லாம் சொல்லித் தரோம். உங்களுக்கெல்லாம் சொல்லித் தரோம். தாண்டி எப்படி வர்றதுன்னு சொல்லி.


குருநாதர்:-  அப்பனே, அதை மீறி வந்தால்தான் அப்பனே இறைவனையும் காண முடியும் என்பேன் அப்பனே.


குருநாதர்:-  இல்லையென்றால் அப்பனே, பின் அதிலேயே நின்று அப்பனே மீண்டும் மீண்டும் இறப்பி. அப்பனே மீண்டும் மீண்டும் பிறப்பி.


அடியவர் :-  இறைவனை அறியலைன்னா மீண்டும் மீண்டும் பிறப்புதான்.


சுவடி ஓதும் மைந்தன் :- இறக்கணும்.


அடியவர் :-  இறக்கணும். பிறக்கணும். இறக்கணும். சுழற்சிதான். சுழற்சியில.


குருநாதர்:-   அப்பனே, நலங்களாக அப்பனே பின் அதாவது நிச்சயம் ஈசனுக்காக ஒரு பாடலை பாடு. அப்பனே, அனைவரிடத்திலும் அப்பனே நல்விதமாக அப்பனே அனைத்து நலங்களும் ஏற்பட. அப்பனே, ஈசனை நினைத்து அப்பனே நீரை கொடுங்கள். அப்பனே, நமச்சிவாய என்று சொல்லி.


அடியவர் :-  அக்கினி தீர்த்தம் என்ன பண்றதுங்க ஐயா?


குருநாதர்:-  அப்பனே, நல்விதமாக ஏது என்று புரிய அப்பனே இவைதன். அப்பனே, எவ்வாறு செய்தாலும் சரியே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, காசி தண்ணிர்  மட்டும் பத்திரமா வைக்கிறது சொல்லி இருக்காரு வந்து.


அடியவர் :-  சரி, அக்கினி தீர்த்தம் குளிக்கிறதுக்கு பயன்படுத்திக்கலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது ஒன்னு ஆமா.


அடியவர் :-   சரி.


குருநாதர்:- அப்பனே, ஏது என்று புரிய அப்பனே இவ்வாறு அப்பனே பின் ஈசனை நினைத்து பாடி அப்பன் நல்விதமாக அப்பன் நமச்சிவாய என்று கொடுத்து அனைவருக்கும் அப்பனே பின் நலமாக அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே பின் ஏது என்று புரிய அடுத்த வாக்கிலும் விவரமாக இன்னும் குறிப்பிடுகின்றேன். 


குருநாதர்:-  ஏனென்றால் அப்பனே நிச்சயம் சிறிது அப்பனே குறிப்பிட்டு அப்பனே ஏது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்து கூட.  அதனால் பல வகையான நன்மைகள் ஏற்பட அப்பனே சொல்லிக் கொண்டே இருப்பேன் அப்பனே.  ஏனென்றால் வரும் சன்னதிகளுக்கு இது நிச்சயம் எடுத்துச் செல்வார் என்பேன் அப்பனே எதை என்று புரிய. அதனால் அவர்களும் பயன்படுத்தி வெற்றிக் கொள்வார் வாழ்க்கையை.


அடியவர் :-   நிறைய விஷயங்களை சொல்லித்தரேன். உங்களுடைய சந்ததிகளுக்கும் பயன்படுத்திக்கிறோம். இப்போதைக்கு இந்த நீரை வந்து நமச்சிவாய மந்திரத்தை சொல்லி எல்லாருக்கும் நீரை கொடுங்கப்பா அப்படின்றாங்க.


குருநாதர்:-  அப்பனே, அம்மையே அனைவருக்குமே எம் ஆசிகள் மீண்டும் சித்தர்கள் வந்து வாக்குகள்  எது என்று புரிய அப்பனே அழகான செப்புவார்கள் அதை பயன்படுத்திக் கொள்க. அப்பனே வெற்றியும் கொள்க ஆசிகள் !!!!  ஆசிகள் !!!! . 


அடியவர் :-  அய்யா, அடுத்த கூட்டு பிரார்த்தனை எங்க?


குருநாதர்:-   அப்பனே எது என்று புரியும் அப்பனே நலமாகவே எவை என்று அப்பனே நீங்களே அப்பனே  ஏது என்று புரிய.  இதனால் அப்பனே பின் அடுத்தும் ஏது என்று அறிய அப்பனே அதனால் சில ரகசியங்கள் சொல்ல வேண்டும். இங்கிருந்தேதான் சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. 


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் ) 


அடியவர் :-   அடுத்த மாதம் வச்சக்கலாம் இல்ல ?


அடியவர் :-  24ஆம் தேதி.


அடியவர் :-   ஐயா  நமச்சிவாய மந்திரத்தை சொல்லி தீர்த்தத்தை கொடுக்க சொல்றாங்க எல்லாம் அப்படியே உடாந்துருங்க…


( இறைவனை நோக்கி உயர் எண்ணங்களுடன் கூட்டுப் பிரார்த்தனை….) 




பாடகர், அடியவர்கள்  பாடிய பாடல் :-  
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
https://youtu.be/C5OQ5pL4GnY?t=39727

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் நிறைவு முடிந்தது. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!