​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 31 July 2026

சித்தன் அருள் - 2263 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 1!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 1

நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===============================================
# இவ் சத் சங்கம் குறித்த ஒரு விளக்க குறிப்பு.
===============================================

( குறிப்பு :- இந்த சத்சங்கத்தில் பங்கேற்ற யாத்திரை குழு அடியவர்கள், கடந்த பெங்களூர் சத்சங்கத்திலிருந்து தொடங்கி கந்தர் அனுபூதியை படித்தும் பாராயணம் செய்தும், அதை பொது மக்களிடம் எடுத்துச் சென்றும் வந்தவர்கள். 

மேலும், குருநாதர் கூறியபடி நவதானிய தீபங்களை முறையாக ஏற்றி வழிபாடு செய்தும், அறுபடை வீடுகள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களின் யாத்திரையையும் நிறைவேற்றியும் உள்ளனர். 

குருநாதர் உரைத்த வண்ணம் ஆலயங்களில் புண்ணிய சேவைகள் பல செய்தனர். அதுமட்டுமல்லாது, குருநாதர் அருளிய நவ கைலாயம், நவ திருப்பதி போன்ற புனித யாத்திரைகளையும் செவ்வனே செய்து முடித்துள்ளனர்.

அதன் பின், 3 அமாவாசை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தல், கடலில் பால், புனித நீர், தீபம் விடுதல், பித்ருக்களுக்கான தர்ப்பணங்கள் போன்ற அனைத்தையும் முறையாக செய்து முடித்தனர்.  

வெற்றி தரும் விஜயாபதியில் முறையாக வழிபாடுகள்…பிள்ளையார்பட்டி, கண்டமங்கலம், பெரிச்சி ஆலய வழிபாடுகள்…சென்னையில் கடலில் அமாவாசை பரிகார பூஜை, பார்த்தசாரதி ஆலம், சென்னை அஷ்டலக்ஷ்மி ஆலயம், and காளிகாம்பாள் ஆலயம் …முறையாக வழிபாடுகள்

கூட்டுப் பிரார்த்தனையில் சித்தர்கள் கூறும் அனைத்து பரிகாரங்களையும் வழிமுறைகளையும் முறையாக குழுவாக தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றவர்கள்…

இவ்வாறு குருநாதர் கூறிய உத்தரவுகளை முழுமையாக அனுசரித்து வந்த இந்த அடியவர்களை, குருநாதர் தனிப்பட்ட முறையில் அழைத்து, ஒவ்வொருவருக்கும் வாக்குகளையும் நல்லாசிகளையும் வழங்கினார்.

குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார்:-  “யார் ஒருவர் சித்தர்களைப் பேச்சு நடக்கின்றார்களோ, அப்படியே பின்பற்றி வருகின்றார்களோ, அவர்களுக்கு எங்களுடைய வாக்குகளும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.”

குருநாதருடைய வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, குருநாதருக்கு நல்லோர், தீயோர் என்ற பாகுபாடு இல்லை. 

அனைவரும் குருநாதருடைய பிள்ளைகளே. ஆனால் குருநாதருடைய வாக்குகளை மிக பணிவுடன் யார் பின்பற்றி கேட்டு வருகின்றார்களோ, அவர்களுக்கு புண்ணிய பலன்கள் உயர்ந்து, வாக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். 

இதை அன்பு அடியவர்கள் நன்கு மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குருநாதர் உரைத்த வாக்குகளை , விஷயங்களை அப்படியே செய்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால், புண்ணிய பலம் உயர்ந்து குருநாதருடைய சுவடி அவர்கள் இல்லம் தேடி வரும்….வாக்குகள் கிட்டும். 

அந்த உத்தரவின்படி நடந்த இந்த சத்சங்கத்தில் ,  அடியவர்களுக்கு, குருநாதர் வாக்குகளையும் அருளாசிகளையும் வழங்கினார். அந்த வாக்குகளில் உள்ள பொதுவான உபதேசங்களை இப்பதிவுகளில் நாம் தெரிந்து கொள்ள உள்ளோம். வாருங்கள் குருநாதர் வாக்கின் உள் செல்வோம்……) 

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

பின் நிச்சயம் தன்னில் கூட நீங்கள் எதை கேட்கப் போகின்றீர்கள் என்பவையெல்லாம் யான் அறிவேன். 

ஆனாலும் அனைத்தும் சொல்லிவிடுவேன். மீண்டும் அதைத்தான் நீங்கள் கேட்கப் போகின்றீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றாருன்னா, யார் யாருக்கு என்ன வேணுமோ… அதெல்லாம் வந்து எனக்கு தெரியும். நான் சொல்லிடுவேன். ஆனா கடைசில நீங்க என்ன பண்ணப் போறீங்க? 

அடியவர்கள் :- திரும்பியும் அதே கேள்விதான் நீங்க கேட்கப் போறீங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  திரும்பியும் அதே கேள்விதான் நீங்க கேட்கப் போறீங்க.  

======================================
# இறைவனை ஏன் வணங்குகின்றீர்கள்? 
======================================

குருநாதர் :- தாயே, எதை என்று புரிய, அதனால் பின் யான் உங்களை முதலில் கேட்கப் போகின்றேன், ஒரு கேள்வியை. நிச்சயம் தன்னில் கூட இறைவனை ஏன் வணங்குகின்றீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரியா போச்சு. எல்லாரும் நீங்க என்ன கேள்வி கேட்பீங்க, அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்க ஏன் இறைவனை வந்து வணங்குகிறீர்கள்? கேட்கிறேன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லுங்க…


அடியவர் 1 :- வழக்கம் ….அப்படியே பழகிடுச்சு, சின்ன வயசுல இருந்து.


குருநாதர் :-  எதை, எவை என்று அறிய தாயே, இவை நிச்சயம் சாத்தியமாகாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  இது கரெக்ட் இல்ல. வேற.

அடியவர்  :- எழுந்து நின்று சொல்லுங்கள் ….. 

அடியவர்2  :- இனி பிறவாமை 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட இல்லை.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுவும் இல்லையாம்.


அடியவர் 3  :- படைத்தவர் அவர் தான்; அவனன்றி ஒரு அணுவும்  அசையாது.


குருநாதர் :-   தாயே, எவை என்று அறிய பின், அதாவது பின் இவள் சொன்னால் எதை என்று புரிய. நிச்சயம் பின் அப்படியே என்று. இதனால் யானும் சொல்கின்றேன், எவை என்ற கூற இவையெல்லாம் ஒரு மனப்பாடம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  காப்பி அடிக்குது தான் சொல்றார். இதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன். ஏற்கனவே சொல்லிட்டு இருக்குறது வந்து காப்பி.


அடியவர் 4   :- புதுசா சொல்லுங்க. ஏதாவது.


சுவடி ஓதும் மைந்தன் :-  புதுசா ஏதாவது சொல்லுங்க.
 
அடியவர் 5    :-  அவர் கிட்ட தானே நம்ம போகணும். 

அடியவர் 4   :-  ஒரு நம்பிக்கை தான்.


குருநாதர் :- எதை, எவை என்று கூற நிச்சயம் இல்லை. தாயே, ஒன்றை சொல்கின்றேன், இவையெல்லாம் நிச்சயம் புதிதாக சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, பழைய எல்லாம் சொல்லிடக்கூடாது வந்து. புதுசா சொல்லணும்.


அடியவர் 6    :- ஒரு அபிமானம். அதாவது இறைவன்ட்ட சொன்னா நமக்கு திருப்தி கிடைக்கும்னு ஒரு…. இப்போ வீட்டுல பேசுறோம் இல்லையா, சிலதெல்லாம் பேச முடியலன்னா அவர்கிட்டயே பேசிட்டு…….


குருநாதர் :- தாயே, எதை என்று புரிய இல்லை.


அடியவர் 7   :- அதுவும் இல்லையாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   அம்மா, சொல்லுங்கம்மா. ஐயா, இறைவன் கோவிலுக்குள்ள போறீங்க இல்லையா.

அடியவர் 8 :- இறைவனை கும்பிட்டா நல்லது நடக்கும் என்று நினைச்சுக்கிட்டே தான் கும்பிடுறோம்.


குருநாதர் :-  அப்பா, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய நிச்சயம். ஆனாலும் இப்படித்தான், நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படித்தான்ப்பா வந்து இருக்கிறாங்க, நல்லது நடக்கும்னு சொல்லிட்டு அடுத்து. இது இல்லன்னா அதுக்கு.


ஒரு அடியவர் :- ( ஆடியோ தடங்கல்கள் )


அடியவர் 7   :- அதுவும் இல்ல. அடுத்தது.


அடியவர் 9  :- இறைவனை அடையறதுக்கு தாங்க, ஐயா. இறைவனை அடையணும். அவர்கிட்ட இருந்து பிரிந்து வந்துட்டோம்.


குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட நீ வணங்கினால் என்ன, எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின். 

சுவடி ஓதும் மைந்தன் :-   நம்ப மட்டும், அதான். நம்ப மட்டும் வணங்கினா போதுமா?


அடியவர் 9  :-  எல்லாரும் வணங்கணும்….

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இவையும் ஆகாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவும் இல்ல. அடுத்து நெக்ஸ்ட் கொஸ்டின்.


அடியவர் 10   :-  அனைவரும் நல்லா இருக்கணும் என்றதுதான் இறைவன்.


குருநாதர் :-  அப்பனே, எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. படைத்தவன் பார்த்துக்கொள்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது படைத்தவர் வந்து பார்த்துக்கொள்வார். நீ நல்லா இருக்கணுமோ, நல்லா இல்லையோ என்று அது வந்து பார்த்துப்பார். அடுத்து.


அடியவர் 11 :- எல்லாத்துக்கும் அவரே பதில் சொல்றார். 

அடியவர் 12  :- ஆத்ம திருப்திக்காக. ….

குருநாதர் :-  எதை, எது என்று புரிய நிச்சயம் இல்லை.


அடியவர் 12  :-  இல்லையா.


அடியவர் 13  :- மனநிலை மாறட்டும். நல்ல வழியில நம்ம மனசை மாத்தணும்.


குருநாதர் :-  எதை என்று அறிய நிச்சயம் இறைவனை வணங்கினால் நிச்சயம் பின் எதை என்று கூற பின் மனம் மாறுமா? என்ன?

அடியவர் 13  :- மனம் மாறணும். உங்க அருள் இருந்தா மாறும்.


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் எம் அருள் ஆசிகள் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட, பின் சாக்கடை என்று சொல்கின்றேன். அங்கேயே தான் காலை வைக்கின்றான். என்ன செய்வது? 

அடியவர் 13  :- அய்யய்யயோ !!!!!

அடியவர்கள்  :- ( சிரிப்புடன் கை தட்டல்கள் …செம …) 
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எங்களோட அருள், கடவுளோட அருள் இருந்தாலும் சாக்கடைன்னு அங்க இருக்குதுடா.


சுவடி ஓதும் மைந்தன் :-  போகாத என்று சொன்ன உடனே என்ன பண்றாங்க?


அடியவர் 10  :- அங்கதான் போய் மிதிக்கிறாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  அங்க சாக்கடை தான் வந்து.


அடியவர் 14 :- சிற்றின்பங்களை மறந்து பேரின்பங்களை  அடையணும். அதுதான்.


குருநாதர் :-  அப்பா, இவையெல்லாம் மறக்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் மறக்க முடியாதுப்பா.


அடியவர் 15  :- அட, சிற்றின்பங்கள் எல்லாம் மறக்க முடியாது.


அடியவர் 14 :-  யாரும் இல்லனாலும் அப்போ நமக்கு ஒரு துணை இருக்காங்கன்ற ஒரு நம்பிக்கை வரும்.


குருநாதர் :-  அப்பனே, எதை என்று கூறப்பின் அம்மையே, இவையும் எதை என்று புரிய பின் சொன்னவையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் சொல்றது தான் இது வந்து எல்லாரும். புதுமையா சொல்லணும்மா.


அடியவர் 7 :- புதுமையா சொல்லணும்.

======================================
# அடியவருக்கு ஒரு வரம்…
======================================


அடியவர் 9 :- புதுமையா, ஐயா சொன்னா தாங்க, ஐயா எங்களுக்கு தெரியும் ( குருநாதர் வாக்கை தான்  சொல்ல முடியும்…எங்களுக்கு எதுவும் தெரியாது. குருநாதர் திருவடிகள் சரணம்….சரணாகதி…. ) 

அடியவர்கள் :- சூப்பர் ….ஹா.. ஹா.. ஹா.. ( சிரிப்பு )  

அடியவர்கள் :-  ( கை தட்டல் ) 


குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் நலங்களாகவே. அறிந்தும் கூட கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் நோய்கள், எது என்று புரிய பின் வரப்போகின்றது அதை மாற்றித் தருகின்றேன். 

( கருணை கடல் திருவடிகள் போற்றி !!!!!) 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு யாருக்கோ, உங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ என்ன பண்ண போறது வந்து.?


அடியவர் 9 :-  நோய்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- சில நோய்கள் வரும்போது…. இந்த கொஸ்டின் என்னை கேட்ட பார்த்தீங்களா, அதுக்காக நான் வந்து….


அடியவர்7  :- மாத்தி தரேன்.


சுவடி ஓதும் மைந்தன் :- மாத்தி தரேன்.


அடியவர் 7  :- அது இல்லாம பண்ணி தரேன்.


சுவடி ஓதும் மைந்தன் :- இல்லாம பண்ணி தரேன்றாருமா. ஓகேங்களா, உடம்பு சரியில்லையோ, ஏதோ வந்து, எது இருந்தாலும் அதை நான் பண்ணி தரேன் என்றாரு. 

======================================
#  இறை என்பது என்ன?  - அடுத்த கேள்வி 
======================================

குருநாதர் :-  எதை, எது என்று புரிய இதனால் இறைவன் எது என்று புரிய, இன்னும் எதை என்று அறிய பின் இறை என்பது என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறை என்பது என்ன?


அடியவர் 7  :-அடுத்த கேள்வி.


குருநாதர் :-  எது என்று புரிய பின் நிச்சயம் போதுமான இடத்தில் பின் சரியான நேரத்தில் என்ன வேண்டும் என்று, பின் உங்களுக்கு நிச்சயம் தன்னில் கூட, அறிந்து நிச்சயம் கொடுப்பவனே பின் அதாவது இறை. 

குருநாதர் :-  எவை என்று கூற இறை  என்றால் பின் உணவு. அனைத்தும் அப்படித்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? இறைவன் யாரு.?

அடியவர் 9  :- சாப்பிடுற மாதிரி …

அடியவர் 7  :- இல்ல இல்ல …


சுவடி ஓதும் மைந்தன் :- இறை என்பது என்ன? இறை, இறை.


அடியவர் 5  :- இரை .


அடியவர் 6  :- இரைன்னா ஃபுட். உணவு 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஃபுட்ன்னு சொல்லலாம்.


அடியவர் 8  :- ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ரைஸ், சின்ன ரைஸ், பெரிய ரைஸ் எல்லாம் இல்ல அதுல வந்து. இறைன்னு சொல்றாரு அப்ப. அவங்க அவங்க உங்களுக்கு எந்த நேரத்துல.


அடியவர் 8  :-  என்ன சாப்பாடு.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சாப்பாடு வேணும்?  என்ன சாப்பாடுன்னா இங்க என்ன குறிக்குது வந்து.?


சுவடி ஓதும் மைந்தன் :- இன்பமும் ஒரு….


சுவடி ஓதும் மைந்தன் :- சாப்பாடுன்னா… சாப்பாடு இல்ல (இங்க).


அடியவர் 8  :-  சாப்பாடு இல்ல. எது எது தேவையோ.


சுவடி ஓதும் மைந்தன் :- எது தேவையோ அதை கொடுப்பவன் தான்.


அடியவர் 8  :-  இறைவன்.


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன். அம்மா புரியுதுங்களா. நீங்க ஏதாவது கேக்கணும்னா கேக்கலாம்மா.

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் அவன்தான் கொடுப்பான். 

பின் இன்பமாயினும்… 

துன்பமாயினும்… 

நோயாயினும்…. 

நிச்சயம் திருமணமாயினும்…. 

அனைத்தும் ஆயினும். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே யார் கொடுப்பாரு?


அடியவர் 8  :-  இறைவன் தான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் தான் கொடுப்பார். அவர் யார் அப்பன்னா வந்து? உங்களுக்கு இறைவன் என்பவர் யார்? இங்க சொல்றாரோ அது மாதிரி அடுத்து சித்தர் வேற மாதிரி சொல்லிடுவாருமா. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா அடுத்து வேற மாதிரி ( சொல்லுவார் ) ஏன்னா….. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா,,,,, நீங்க ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்ல இருந்தா…. அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   10th ஸ்டாண்ட்ல இருந்தா….  அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   12th ஸ்டாண்ட்ல இருந்தா….  அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   PhDல இருந்தா….  அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாருமா. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப நம்ம என்ன பண்ணுவோம்? பக்குவம் பெற்றிருக்கணும்மா. பக்குவங்கள் அடைஞ்சிருக்கணும். நிறைய வந்து பக்குவங்கள்…. ஞானங்கள்…. அறிஞ்சிருந்தா மட்டும்தான் வந்து… என்ன ஆகும் வந்து.


அடியவர் 6   :-   ஐயா, இப்ப என்ன தேவைன்றது நமக்கே புரியல.

குருநாதர் :- தாயே, எதை என்று புரிய அதாவது நிச்சயம் தன்னில் அறிந்து கூட அதாவது நிச்சயம் ஒரு எவை என்று கூட பசிக்கின்றது.  இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் உணவத்துக்கு செல்கின்றாய் எதை என்று புரிய. உனக்கே எவை என்று அறிய பின் எவ்வாறு அதை சாப்பிடலாமா? இதை சாப்பிடலாமா? என்றெல்லாம் நிச்சயம் செல்கின்றாயா என்ன? நிச்சயம் உட்கார்கின்றாய். அங்கேதானே யோசிக்கின்றாய்.


அடியவர் 6   :-  உணவை பார்த்து தான் யோசிக்கிறோம். என்ன சாப்பிடலாம் என்ன.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுவும் மெனு கார்டு கொடுக்குறாங்க இல்ல… அது கூட வந்து.. நீங்க போன உடனே ஏதாவது சொல்லிடுறீங்களா? 


அடியவர் 6   :-  டேபிள்ல மெனு.


சுவடி ஓதும் மைந்தன் :-  டேபிள்ல வச்சு ஏன் வச்சுக்கிறாங்க சொல்லுங்கமா அகத்தியருக்கு? உங்களுக்கு கேக்குறது தான் சொல்றாரு அவரு.


அடியவர் 7  :- நீங்க கேட்டதுக்கு தான் கேக்குறாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க கேட்டதுக்கு தான் கேக்குறாரு.

======================================
#  பிரம்ம முகூர்த்தம்   - அடுத்த கேள்வி 
======================================

அடியவர் 10   :- ஐயா. பிரம்ம முகூர்த்தம் பற்றி.


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட “சுக முகூர்த்தம்” என்பதை எவை என்று அறிய, அதன் பொருள் மாற்றிவிட்டார்கள் அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- பிரம்ம முகூர்த்தம் என்பது.


அடியவர் 10   :- சுக முகூர்த்தம் .


சுவடி ஓதும் மைந்தன் :-  “சுக” முகூர்த்தம்.


அடியவர் 7   :- எந்த டைம் எந்த டைம் ஐயா காலையில?


குருநாதர் :- அப்பனே, இன்னும் அப்பனே நேரங்கள் இருக்கின்றது. இவையெல்லாம் சுலபமானவை சொல்கின்றேன் பின்பே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது சுலபமானவைப்பா இன்னும் பின்னாடி நான் சொல்றேன் அப்பான்றாரு இதை பத்தி.

======================================
#  இறைவன் எப்படி உங்களை வழிநடத்துவார் என்ற ரகசியங்கள்….
======================================


அடியவர் 9  :-  அப்ப இதெல்லாம் சிற்றின்பங்கள். இப்ப நம்ம சாப்பிடுறது.. இருக்கிறது.. வாழ்றது… எல்லாமே. அப்ப அதுதான் நமக்கு தேவைன்னு இறைவன் நினைக்கிறாரா? 


குருநாதர் :- எதை எவை என்று கூற தாயே சிறு சிறுதாக பின் ஊட்டினால் தான் அறிவும் வளரும். பின்பு எதை என்று அவனுக்கு தெரியும்.

சுவடி ஓதும் மைந்தன் :-   இதெல்லாம் வந்து ஊட்டி வளர்த்தா மட்டும்தான் அவருக்கு என்ன தெரியும்.


அடியவர் 7  :-  பின்னாடி என்ன தேவை.


சுவடி ஓதும் மைந்தன் :-  பின்னாடி என்ன தேவை என்று.


அடியவர் 7  :-  உண்மையான தேவை என்ன.


குருநாதர் :- எதை என்று கூற முதலில் எவையெல்லாம் கொடுக்க வேண்டுமோ அவையெல்லாம் கொடுப்பான். பின்பு அறிவை எதை என்று எதன் மூலம் எதை என்று கூற என்ன நினைக்கின்றான் என்ன நினைக்கின்றாள் என்பது எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. அதன்படியே இறைவன் அடுத்த நிலைக்கு நிச்சயம் எடுத்துச் செல்வான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு?  ஃபர்ஸ்ட் என்ன கொடுப்பாரு உங்களுக்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  சின்ன சின்னதா உங்களுக்கு தேவையானது கொடுப்பாரு வந்து. அப்ப என்ன பண்ணுவீங்க? நீங்க எதை நினைக்கிறீங்க?  எப்படி பண்றீங்க?  அதை நினைச்சு அடுத்து என்ன பண்ணுவாரு? 

அடியவர் 4  :- எங்க மனச பார்த்து..அடுத்த ஸ்டெப் 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. நெக்ஸ்ட் ஸ்டெப் எடுத்துட்டு போவாரு. 

======================================
#  உங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு முன்னேற்றம் காண…..
======================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு இல்லை என்றால் நீங்கள் அப்படியே இருக்க வேண்டியதுதான். 

குருநாதர் :- எதை என்று புரிய அடுத்த நிலைக்கு போக வேண்டியது, எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, நல் மனமும்… உயர்ந்த சிந்தனையும்… எவை என்று கூற  தர்மத்தையும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த நிலையை வந்து செல்லணும்னா என்ன பண்ணனும் வேணும்.


அடியவர் :- நல் மனம் இருக்கணும் உயர்ந்த சிந்தனை இருக்கணும்.

======================================
(இப்போது யாத்திரை குழு அடியவர்கள் உயர்ந்த நல் சிந்தனையுடன் மைந்தனுக்கு தாமரை மாலை மரியாதையாக அணிவித்தனர் ….சங்கு நாத்தத்துடன்….) 
======================================

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா இப்பதாங்க இதெல்லாம். ( சங்கோஜப்பட்டார் …)


அடியவர் :- நல்ல சிந்தனை.


அடியவர் 4 :- நல்ல சிந்தனை ஐயா.


அடியவர் 5 :- என்ன உயர்ந்த மனம்.


அடியவர் 7  :- ஐயா உயர்ந்த மனம்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா (தாமரை மாலை) இதெல்லாம் கடவுளுக்கு  போடுறது ஐயா.


அடியவர் 7  :-  இல்ல இல்ல.


அடியவர் 3  :-  அகதீசாய நாம …( சங்கு நாத்தத்துடன்….) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா இதெல்லாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா இங்க பாரு அம்மா. இது புதுசா இருக்கு எல்லாமே. அம்மா இதுவரைக்கும் யாருக்கும் போட்டது இல்லமா இதெல்லாம். இன்னைக்கு தான்யா (தாமரை மாலை) போட்டு இருக்காங்க.

அடியவர்கள் :- ( பரவசம் …கை தட்டல்கள் …) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அடுத்த கட்டம் போகணும்னா என்னமா பண்ணனும்.


அடியவர் :- நல் மனம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்ல மனசு.


அடியவர் :-  உயர்ந்த  எண்ணங்கள்.தர்ம சிந்தனை.


சுவடி ஓதும் மைந்தன் :-  உயர்ந்த எண்ணங்கள். தர்ம சிந்தனை. நல்ல மனசு இருக்கணும்மா. போதும். அடுத்த நிலை.

======================================
# ஏன் வாழ்வில் முன்னேற முடியவில்லை?
======================================


குருநாதர் :- நிச்சயம் அடுத்த நிலை செல்லாததற்கு காரணமே பின் தீய குணங்களே காரணம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்த நிலை.


அடியவர் :-  போறதுக்கு காரணமே தீய குணங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தீய குணங்கள் தான்மா. அது நம்ம மனசுல இருக்கக்கூடாது. அடுத்த நிலையில் நம்ம போகலைன்னா என்ன ஆகுது வந்து?  
………..
சுவடி ஓதும் மைந்தன் :- நம்ம மனசு நல்லது இல்லம்மா. 
………..
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா இல்ல. அடுத்து அடுத்த நிலை போகணும்னா என்ன ஆகுது? 
அடியவர் :- (நல்) மனம் தான் (வேண்டும்).


குருநாதர் :- தாயே!!! மனிதன் நிலைமைகள் மாறிக்கொண்டே போகின்றது. 

குருநாதர் :- போட்டி, பொறாமை நிச்சயம் தன்னில் கூட. அடுத்தவர் பின் கெடுப்பது நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  என்ன ஏது என்று பிறர் பற்றி பின் எவை என்று கூற குறை கூறி….  அவன்.. இவன்.. இப்படி எல்லாம்.. என்றெல்லாம்.. தாயே தேவையில்லை. நிச்சயம் உன்னை நீ அறி. உன்னை நீ சிந்தித்து பார்.


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :- நம்ம யார்?  மனிதன் ஏன் முன்னேறி போக முடியல? எல்லாம் போட்டி பொறாமை… என்னடா இவன் இப்படி… அப்படி இருக்கான் சொல்லிட்டு…. அப்படி போயிட்டு இருக்குது. ஆனால் நம்ம யாரு? 


அடியவர் :- நம்ம எதுக்கு வந்தோம்?


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம எதுக்கு வந்தோம்?  நீ உன்னை நீ வந்து. தெரிஞ்சுக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சுக்கணும். அப்ப யாரும்….. அம்மா புரியுதுங்களா? யாருமே தெரிஞ்சுக்கிறது இல்ல. 

======================================
# கஷ்டங்கள்/துன்பங்கள்  = வாழ்வின் முன்னேற்றங்கள்
======================================

குருநாதர் :- தாயே எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் உங்களுக்கு இறைவன் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் பின் ஒரு ஒரு பின் நிச்சயம் தன்னில் கூட, பின் இடத்தில், அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் பக்குவம் ஏற்படுத்தி, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அதாவது கஷ்டங்கள் வருகின்றது என்றால் நிச்சயம் ஏன் கஷ்டங்கள் வருகின்றது? எதை என்று புரிய அறிந்தும் கூட இதை நிச்சயம் அடுத்த நிலைமைக்கு நீ செல்ல. 

குருநாதர் :-  பின் இதை புரிந்து கொண்டால் தான் அடுத்த நிலைமைக்கும் நீ செல்வாய் என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- .ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார் சொல்லுங்க பார்ப்போம்?


அடியவர் 4 :-  அடுத்த நிலைமைக்கு.


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்த நிலைமைக்கு செல்வதற்கு.


குருநாதர் :-  ஆனால் அடுத்து அதற்குள்ளே மனிதன் நிச்சயம் அறிவாளியாக நினைத்துக்கொண்டு துன்பம் வந்து கொண்டே இருக்கின்றது. இதை மாற்று என்று. இதனால் அடுத்த நிலைமைக்கு செல்வதே இல்லை மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதுக்குள்ள என்ன பண்ணிடுறான்? டேய் துன்பம் வருதுடா நிறைய.. எனக்கு ரொம்ப கஷ்டம் வருதுன்னு சொல்லிட்டு என்ன பண்றாரு வந்து? 

சுவடி ஓதும் மைந்தன் :- அதை மாத்துங்கன்னு சொல்றாரு அப்ப வந்து அது பக்குவ நிலை அடைஞ்சு நீங்க என்ன கேக்குறீங்க அதை கொடுக்குறதுக்கு தான் அந்த துன்பமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்குள்ள என்ன நினைக்கிறோம் நம்ம வந்து ஏப்பா எனக்கு கஷ்டம் வந்துருச்சு. எனக்கு இது பண்ணி எனக்கு மாத்திருங்கன்னு சொல்லிட்டு நீங்களே சொல்லிடுறீங்க அப்ப எவ்வளவு பெரிய அறிவாளி நீங்க பார்த்துக்கோங்க. இது அறிவா இது? 

அடியவர் 4  :- இந்த துன்பத்தையே கடக்குறதுக்கு அவர் தானே ஹெல்ப் பண்ணனும்.


குருநாதர் :-  தாயே எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் முன்னே உட்கார்ந்து கொண்டிருக்கின்றாய்.

அடியவர்கள் :- ( சிரிப்புகள்..ஹா ..ஹா …ஹா … ) 


அடியவர் 7  :- எங்க உட்கார்ந்து பார்த்துட்டே இருக்கீங்க…


சுவடி ஓதும் மைந்தன் :- நீ எப்படி பார்க்கிற அதனாலதான் முன்னே உட்கார்ந்து இருக்கீங்க. அதனால வந்து 

குருநாதர் :-  எதை எவை என்று அறிய தாயே நிச்சயம் தன்னில் கூட துன்பம் ஒன்று எவை என்று கூட, இறைவன் பின் கொடுத்தால் எவை என்று அறிய, பின் இறைவனுக்கு பாதுகாப்பாகவும், பின் எவை என்று கூட, பாதுகாப்பையும் பின் ஏற்படுத்த தெரியும் தாயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- துன்பத்தை கொடுத்தா… எப்படி பாதுகாக்கிறது என்பது இறைவனுக்கு தெரியும்மா.


அடியவர்   :-  பாதுகாப்பையும் கொடுக்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன் :- பாதுகாப்பையும்.


அடியவர்   :- இறைவன் கொடுப்பார்.


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் கொடுப்பாருமா.

======================================
# ஏன் சித்தர்கள் வாக்குகள் அதிகமாக வருகின்றது ?
======================================


குருநாதர் :-  தாயே எவை என்று கூற இதனால் இக்கலியுகத்தில் அப்பனே பின் நிச்சயம் தர்மத்தை எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது இறைவன் ஏதோ தெரியாமல் வரத்தை கொடுத்துவிட்டான். பின் மனிதனிடத்தில் நிச்சயம். 

குருநாதர் :-  மனிதன் வீணாக்கிக் கொண்டே இருக்கின்றான். தர்மம் தலைகீழாக போய்க்கொண்டே இருக்கின்றது. இதனால் மனிதனிடத்திலே உண்மைகள் சொல்லி, தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம் அவ்வளவுதான்.


அடியவர் 7 :- நைஸ்.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றேன் தெரியுங்களா? 


அடியவர்:- தர்மத்தை.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( கலியுகத்தில் மனிதர்கள் உண்மையை அறியாமலே நடித்து, ஏமாற்றி, தவறான வழிகளில் செல்வதை நாம் பல இடங்களில் காண்கிறோம். இறைவன் இருக்கிறார்; ஆனால் மனிதன் நேர்மையான தர்ம வழியில் நடந்தால் மட்டுமே இறைவன் கை கொடுப்பார். மனிதன் வேண்டி வேண்டி இறைவனிடமிருந்து “ஆட்சி நம்ம கையில இருக்கணும்” என்று வரம் வாங்கிக் கொண்டான்; அதனால் கலியுகத்தில் இறைவன் “சரி, நீங்களே பார்த்துக்கோங்க” என்று ஆட்சியை மனிதனின் கையில் விட்டார். ஆனால் மனிதன் அந்த வரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஏமாற்றி, தப்புகளைச் செய்து, தர்மத்தை விட்டு வெளியே போனான். இதனால் இறைவன் அதை மீண்டும் மனிதனின் கையில் திருப்பி கொடுத்து, “இதைக் ஒழுங்காகப் பயன்படுத்திக்கோ” என்று மாற்ற வாய்ப்பு கொடுக்கிறார். அப்படியும் மனிதன் மாறவில்லை என்றால், இறைவன் கடுமையாகச் சுட்டிக் காட்டுவார் — அதுதான் ‘டமால் டுமில்’, அதாவது கடுமையான தண்டனை அல்லது விழிப்புணர்வு. )

======================================
# அபாய சங்கு - “சில ஆண்டுகளிலே வர உள்ள கடும் வறட்சி”….
======================================

குருநாதர் :-  எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகளுக்கு ஒரு முறை எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் வறட்சி என்பது வரும். வருங்காலத்தில் நிச்சயம் பின் அவை தன் வந்து கொண்டே இருக்கின்றது சில ஆண்டுகளிலே… 

சுவடி ஓதும் மைந்தன் :- சில எப்படி சொல்றது? 

அடியவர் 7 :-வறட்சி 

சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகளுக்கு ஒரு தடவை வந்து என்ன பண்ணும்? 

அடியவர் 7 :- வந்து வறட்சி என்பது வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அது என்ன ஆகுதுன்னா வந்து… அடுத்தடுத்து இது பண்ணிட்டு 

அடியவர் :- சில ஆண்டுகள் வரப்போகின்றது 

சுவடி ஓதும் மைந்தன் :- சில ஆண்டுகளிலே வந்து வரப்போகின்றது. 

குருநாதர் :-  அறிந்தும் அதற்குள்ளே மனிதனுக்கு எத்தனை எத்தனை எதை என்று புரிய, பின் என்ன பின் விஞ்ஞானம் பின் தெரிந்திருந்தாலும்…. அதை காக்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சிருந்தாலும் மனிதனுக்கு என்ன வித்தியாசங்கள் என்ன இது பண்ணினாலும்?..... 

அடியவர் 7 :- இல்ல விஞ்ஞானம் இருந்தா கூட, அதை காப்பாத்த முடியாது 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை காப்பாத்த முடியாது… 

அடியவர் 7 :-  இயற்கையை…

======================================
# சித்தர்கள் வாக்குகள் இவ்வுலகில் பலருக்கு செல்லும்…..
======================================

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் அதனுள்ளே பின் பல மனிதர்களுக்கு எவை என்று புரிய, பின் எங்களுடைய பின் வார்த்தைகள், பின் செல்லும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனுள்ளே என்ன பண்ணுவாங்களாம் வந்து? சித்தர்கள் வந்து.. 

அடியவர் :- அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் செல்லும் 

சுவடி ஓதும் மைந்தன் :- அவருடைய வார்த்தைகள் எல்லாம்… சொல்லி… அதுக்குள்ள எங்கேயோ அவரே பரவிச்சிருவாங்க. நம்ம படிக்க… நம்ம சொல்றோம்னா…. அவங்க எங்கெங்க வாக்குகள் போகணுமா அங்கங்க போயிட்டு…. அது சேர்ந்துரும்மா.  ஓகேங்களா 

======================================
# வாக்குகள் கேட்டாலே.. அது புண்ணியம்…
======================================

குருநாதர் :-  நல் விதமாகவே இதனால் நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு தேவையானதை யாங்களே கொடுப்போம் எதை என்று அறிய.  

குருநாதர் :-  அதனால் புண்ணியம் செய்தவர்கள் தான் எங்கள் வாக்கை கேட்பதற்கும் எவை என்று கூட அறிந்து கூட 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா….. உங்களுக்கு நீங்க கேட்டு தான் தர வேண்டிய அவசியம் இல்லை. வரங்கள் எல்லாம் சொல்லிட்டு… 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கள் வாக்குகள் கேட்டாலே.. அது புண்ணியம் தான்மா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால வந்து நாங்க என்ன பண்ணுவோம் உங்களுக்கு தேவையானதை நாங்கள் கொடுப்போம் 

======================================
# ஏன் இவ் சத்சங்க வாக்குகள் இப்போது ?
======================================

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைத்து ஆன்மாக்களும் பின் ஒரு முறையில் அழுது கொண்டே செல்லும் எதை என்று புரிய. 

குருநாதர் :-  யாங்கள் சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட எங்களை மீறித்தான் போக வேண்டும் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. பின் ஏற்கனவே பின் அதாவது முன் உரைத்தும் விட்டோம். 

குருநாதர் :- அறிந்து கூட இதனால் எங்களை பின் தாண்டித்தான் செல்ல வேண்டும். 

குருநாதர் :- அப்பொழுது சிறிய சிறிய தவறுகள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஐயோ!!!!! என்றெல்லாம் அழுது கொண்டே. பின் மானிட பிறப்பு வேண்டாம் வேண்டாம் என்று. 

குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் அனைவருமே அப்படி சென்றவர்கள் தான். 

குருநாதர் :-  யாங்கள் பின் நிச்சயம் தன்னில் கூட பின் பிறவி இருக்கின்றது அடுத்த பிறவில் யாங்கள் இழுத்துக் கொள்கின்றோம் என்று. அதனால்தான் யாங்கள் தான் உங்களை இழுத்துக் கொண்டிருக்கின்றோமே தவிர நீங்கள் பின் எவை என்று கூட பின் எது என்று புரிய பின்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால என்ன சொல்றாரு தெரியுங்களா?  நீங்க எல்லாம் வந்து?

அடியவர் 7 :-  தேடி வரல

சுவடி ஓதும் மைந்தன் :- தேடி வரலமா. நாங்க உங்களை இழுத்து… ஏதோ சின்ன சின்ன தவறுகள்… 

அடியவர் 7 :-   போன ஜென்மத்துல, (சித்தர்களை )  கிராஸ் பண்றப்ப அழுதுண்டு போணோமாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயோ அம்மா !!!! இது மாதிரி வந்து போயிடுச்சே. சின்ன தவறு பண்ணிட்டேனே. இனிமேல் வரக்கூடாது நான். என்ன பண்றதுன்னு சொல்லிட்டு அழுதுன்னு போனவங்க தான் வந்து… இந்த ஜென்மத்துல எல்லாம் வந்து…. கூப்பிட்டு… டேய் வேணாம்டா. தப்பு பண்ணிட்டாத. அதனால வந்து… அதை பாதுகாத்து… இதைவிட மோட்சம் மோட்சம் போடா. இந்த பிறவியிலாவது வந்து 

அடியவர் 5  :- மோட்சத்துக்கு 

சுவடி ஓதும் மைந்தன் :-  மோட்சத்துக்கு கூட்டிட்டு போறாரு கூட்டிட்டு போறேன்றாரு 

குருநாதர் :-  இதனால் எது என்று புரிய ஆனாலும் நிச்சயம் பின் அவ் சிறு வினையை தீர்ப்பதற்கு இவ்வளவு கஷ்டங்கள் நிச்சயம் தன்னில் கூட. பாருங்கள். நீங்களே எண்ணிப்பாருங்கள். 

அடியவர் :- அது தான் கேட்கலாம் என்று இருந்தோம் அய்யா..சின்ன தவறுக்கு …!!!!!!!!!!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- சின்ன தவறுக்கு எவ்வளவு பெரிய தண்டனை?

அடியவர் :- ஒரு பிறவியை கொடுத்து எவ்வளவு பெரிய 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு பிறவி கொடுத்து தண்டனை எவ்வளவு பெரிய தண்டனை பார்த்தீங்களா?  ஆனா இன்னும்…

அடியவர் 7 :-  தவறுதான் பண்ணிட்டு இருக்கிறோம் 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ? 

அடியவர் 7 :-  ( சிரிப்புடன் ) இன்னும் தவறுதான் பண்ணிட்டு இருக்கிறோம் 

குருநாதர் :-  இதனால் எதை என்று புரிய நிச்சயம் தன்னில், இன்னும் பின் எவை என்று புரியவில்லை என்றால், இன்னும் விஞ்ஞானம் மூலமாகவே உரைக்கின்றேன் அப்பொழுது புரியும் நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் இது புரியலைன்னா, என்ன பண்ணனும் நான் வந்து? 

அடியவர் 4 :- சயின்ஸ்… 

சுவடி ஓதும் மைந்தன் :-   சயின்ஸ் எடுத்துட்டு வராரு.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்குகள் தொடரும்.) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. ​பூக்கள் இறைவனுக்காக படைக்கப்பட்டவை. அதை மனிதன் கழுத்தில் போடக்கூடாது என்று குருநாதர் பல முறை கூறியுள்ளார். இந்த குழுவினர் அதை எல்லாம் மறந்துவிட்டார்களா? ஏன் இவ்வாறு செய்கிறார்கள்.

    ReplyDelete