சித்தன் அருளை தொகுப்பதற்காக நிறைய புரட்டியபோது ஒரு தகவல் என் கண்ணில் பட்டது. அது தொகுப்பாக குழுவில்/ப்ளாகில் வந்து சேர சிறிது காலம் ஆகும் என்பதால், அதன் உட்கருத்தை மட்டும் உடனே உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.
நம்மிடையே, இந்த தொகுப்பை வாசிப்பவர்களில் பல மருத்துவர்களும் (டாக்டர்) இருக்கலாம். அவர்கள் தங்கள் கடமையை (தொழிலை) செய்வதற்கு, பல நோயாளிகளையும் பார்க்கவேண்டிவரும். தொட்டு சிகிற்சை செய்யவேண்டிவரும், மருந்து கொடுக்கவேண்டிவரும், ஊசி போட வேண்டிவரும். ஏதாவது ஒரு காரணத்தால் அந்த நோயாளி என்றேனும் இறக்க நேர்ந்தால், நேர்மையான எண்ணத்துடன் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் சிகிச்சை செய்திருந்தாலும், அந்த நோயாளி இறந்ததினால் (என்றாயினும்) கொன்ற பாபத்துக்கு இணையான "பிரம்மா ஹத்தி தோஷம்" சிகிட்ச்சை அளித்த அந்த மருத்துவருக்கு வரும். அதுதான் உண்மை விதி. இதை அகத்தியரே ஒரு மருத்துவருக்கு நாடி பார்க்கும் பொழுது சொல்கிறார். இது அந்த தொழிலில் தவிர்க்க முடியாதது.இதற்க்கான பரிகாரமும் அகத்தியரே சொல்கிறார். அதிலிருந்து விடுபட, ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டதாக தெரிந்தால், அன்றே சிவன் கோவிலில் அந்த நோயாளியை நினைத்து "மோக்ஷ தீபம்" ஏற்றவேண்டும். மரண செய்தி என்று தெரிந்ததோ அன்றோ அல்லது உடனேயோ (வரும் நாட்களில் கூட) இதை செய்தால், அந்த தோஷம் விலகிவிடும் என்கிறார். அதற்காக வேண்டுமென்றே கொன்று விட்டு "மோக்ஷ தீபம்" போட்டால் போதுமே என்று நினைக்க கூடாது. வேண்டுமென்று செய்ததற்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது.
இதை செய்யாமல் போனால், அந்த தோஷமானது, கூட இருந்து, மருத்துவரை வருத்தும். மருத்துவர்களே, இதை புரிந்து கொண்டு உடனே செய்வது நல்லது. ஏன் வாரத்தில் ஒரு நாள் ஒரு முறையேனும் இப்படி தீபம் ஏற்றிவர, தெரியாமலே நம்மிடம் வந்து சேர்ந்த தோஷத்தை விலக்கி கொள்ளலாமே. யோசியுங்கள்! நலம் பெறுங்கள்!