"சத்தியமும், அறமும், இறை பக்தியும் விடாது தொடர, வினைப்பயன்கள் படிப்படியாய் குறைந்துவிடும். வினைகள் குறைய, மனப்பாரம் குறையும், நலமும், சாந்தியும் சேரும். எகுதொப்ப, எவன் விளம்பினாலும் அது குறித்து விசனங்கள் உனக்கு வேண்டாமப்பா. எதிர்ப்புகள், ஏளனங்கள் கண்டாலும், நலம் செய்வதை நிறுத்த வேண்டாம். புத்தி சொல்லி திருந்தவில்லை என்றால், "அவன் விதிப்படி வாழட்டும்" என்று யாங்கள் விட்டுவிடுவோம். அறம், சத்தியம், இறை பிரார்த்தனையை விடாமல் தொடர்ந்து வருவோர்க்கு, யாம் "உன் அருகில் இருப்போம்". - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)

Back Ground Nalla Iruku sir
ReplyDelete