​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 29 November 2012

சித்தன் அருள் - 101


வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இன்னமும் எனக்குத் தெரியாத கலை.  இல்லையென்றால் "ஓசி கார்" கிடைத்த சந்தோஷத்தில் வாயை விட்டு வம்பிலே மாட்டிக் கொண்டிருக்க மாட்டேன்.

உண்மையான விஷயம் அவருக்குத் தெரியாது.

"அகஸ்தியர் எப்பொழுது மனமிரங்கி மறுபடியும் அந்த ஓலைச் சுவடியில் வருகிறாரோ அப்பொழுதுதான் என்னால் உங்கள் கேள்விகளுக்குப் படித்துப் பதில் சொல்ல முடியும்" என்ற உண்மையைச் சொல்லியிருக்கலாம். இதனால் இதை அவர் ஏற்றுக் கொள்வாரோ என்னவோ என்ற பயம்.

இன்னொன்று அதுவரையில் அவர் காத்திருக்க முடியாது.  ஏனெனில் அவருக்கு வந்த நோய் அப்படிப்பட்டது.

எப்படி அவரைச் சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது எனக்கு அந்த இதமான மலைக் காற்றும் வளைந்து வளைந்து இறங்கிக் கொண்டிருந்த காரின் சுகமும் கசப்பாக இருந்தது.

இப்படியொரு பீடிகையைப் போட்டு என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.

"என்ன ஏதாவது பிரச்சினையா நான் கேட்ட கேள்விக்குப் பதிலே இல்லையே" என்று என்னை நோக்கிச் சிரித்தார்.  இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்தது.

"வாய்விட்டு உளறி விட்டோம்.  இப்போது சரியாக மாட்டிக் கொண்டோம். எதற்கும் ஒருமுறை அகஸ்தியரிடம் கேட்டுப் பார்ப்போம்.  இவருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ இல்லையோ.  இப்போது எனக்கு அதிர்ஷ்டம் வேண்டும்.  அப்படி முனிவர் இறங்கிவிட்டால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அகஸ்தியர்க்கு ஆயிரம் நன்றி சொல்லி விடுவோம்.  சவாரி சென்னைக்கு என்று சொல்லி ஓடிவிடலாம்" என்று மனம் எண்ணியது.

இதற்குள் அவர் வேறொன்றையும் சொல்ல ஆரம்பித்தார்.

"கீழ் திருப்பதியில் உங்களை இறக்கிவிட்டு விடலாம் என்றுதான் எண்ணினேன்.  நீங்கள் சென்னைக்குப் போவதாக என்னிடம் சொன்னீர்கள். நான் கோயம்பத்தூர் செல்லவேண்டும்.  பரவாயில்லை.  இதே காரில் சென்னைக்கு நானும் வந்து உங்களை சென்னையில் இறக்கிவிட்டுப் பின்பு நான் கோயம்பத்தூர் செல்கிறேன்.  அது வரைக்கும் நாம் அகஸ்தியரிடம் பேசிக் கொண்டே போகலாமே" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

"அடடா.  இது எவ்வளவு பாக்கியம்" என்று என்னால் அப்போது சந்தோஷப்பட முடியவில்லை.  இதென்ன அடுத்த கட்டச் சோதனை!" என்று தான் நொந்து போனேன்.  எனக்கு. ஏண்டா திருப்பதிக்கு வந்தோம் என்று தோன்றியது.

என்னால் ஒலைக்கட்டைப் பிரித்து அவர் கேட்கிற கேள்விகளுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாது.  பொய் சொல்லவும் கூடாது.  அவர் கிட்டேயே எல்லாவற்றையும் கேட்டு வாங்கிக் கொண்டு அதற்கேற்ற மாதிரி சாமர்த்தியமாகவோ அல்லது ஒரு யூகமாகவோ கற்பனை கதையோ ஏதாவது சொல்லி சமாளிக்கவும் முடியாது.

"பகவானே! இதோடு இந்த மாதிரி சோதனைகளைச் செய்யாதே! என்னால் சமாளிக்க முடியாது.  ஒன்று பகவான் பேசட்டும்.  இல்லையென்றால் மேல் திருப்பதியில் ஓலைச்சுவடி காணாமல் போனது போல் என்னைவிட்டு இந்த ஜீவநாடி போகட்டும்" என்று வெறுப்புடன் நினைத்தேன்.

இதற்குள் கீழ்த்திருப்பதி வந்துவிட்டது.

"சார், உங்கள் கோயம்புத்தூர் விலாசம் கொடுங்கள்.  இரண்டு நாள் பூசையில் வைத்துவிட்டு அவர் உத்திரவு கொடுத்தவுடன் நானே நேரில் வீட்டிற்கு வந்து படிக்கிறேன்" என்றேன்.

அவர் முகம் சிறுத்துவிட்டது.

"ஏன்?"

"சில காரணங்கள் உண்டு.  அதை வைத்துச் சொல்கிறேன்".

"அப்படியானால் இன்னொன்று செய்யலாமே! பேசாமல் என்னுடன் கொயம்புத்தூருக்கே வந்துவிடுங்கள்.  நான் ஒரு மில் அதிபர், தனி பங்களா ஒன்று இருக்கிறது.  மேட்டுப்பாளையத்தில் எனக்கு வீடு உண்டு.  நீங்கள் இரண்டு நாட்கள் அங்கேயே தங்குங்கள்.  எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்."

இவர் இப்படியொரு கிடுக்கிப் போடுவார் என்று சுத்தமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.  மவனே சரியா மாட்டிக் கொண்டாய்.  இனிமேல் நாடி கீடின்னு ஏதாவது வாய் திறந்தே அவ்வளவுதான்.  பின்னிப் போடுவாங்க ஒன்னை, இன்னியோட நாடி படிக்கிற சமாச்சாரத்தை அப்படியே விட்டுவிடு.  இந்த மனுஷங்கிட்ட உண்மையை சொல்லி துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிடு - என்று யாரோ என்னை எள்ளி நகையாடி எச்சரிப்பது போல் இருந்தது.

போதும் போதும் இந்த மனுஷன்கிட்டே வாயை கொடுத்து விட்டோமே! இவருக்கு வேறு யாருமே கிடைக்க வில்லையா? என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

"அகஸ்தியரே! இந்த ஒரு தடவை மட்டும் நாடியில் வந்து விடுங்கள். இனிமேல் சத்தியமா நான் யாருகிட்டேயும் நாடியைப் பற்றி மூச்சுவிட மாட்டேன் ஏன் நாடியைத் தொட்டு கூட பார்க்கவே மாட்டேன்" என்று என் மனம் துடித்துச் சத்தியம் இட்டது.

பீமா விலாஸ் ஓட்டலின் ஓரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார்.  பின்பு கேட்டார்.

"உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?  ஆபிசுக்கு லீவு போடணுமா? இல்லை உங்கள் வீடிற்கு தகவல் சொல்ல வேண்டுமா? என்கிட்டே தைரியமாகச் சொல்லுங்கள்.  நான் ஏற்பாடு செய்கிறேன்" என்றார் அவர்.

"ஆபீசுக்கு தகவல் சொல்லணும்.  வீட்டிற்கும் சொல்லணும்"

"டெலிபோன் நம்பரை சொல்லுங்கள்"

"ஆபீஸ் டெலிபோன் நம்பரை சொன்னேன்.  குறித்துக் கொண்டார்"

"வீட்டில் டெலிபோன் இல்லை.  விலாசம் தான் இருக்கு" என்றேன்.

"அதனால் என்ன! அதைக் கொடுங்கள். என் நண்பருக்குச் சொல்லி வீட்டிற்குத் தகவல் கொடுத்து விடுகிறேன்.  உங்கள் ஆபீஸ் செயர்மான் எனக்கு நெருங்கிய நண்பர்.  அவருக்கே டெலிபோன் போட்டுச் சொல்லி விடுகிறேன். பயப்படவேண்டாம்.  அப்போ நாம ரெண்டு பெரும் நேரா கோயம்பத்தூருக்கு போகலாம் இல்லையா?" நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கோயம்பத்தூர் செல்ல முடிவெடுத்து "எது நடந்தாலும் நடக்கட்டும்" என்று அப்படியே விட்டுவிட்டேன்.

இரண்டு நாட்களாக மூல மந்திரத்தை விடாமல் சொல்லி விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஜீவநாடியை எடுத்து பிரித்துப் பார்த்தேன்.

"பூபெயதவில்லை என்றொரு காரணத்தால் வெந்து நெக்குருகிப் போன அம்மகள் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி தன உயிரை மாய்த்துக் கொள்ளும் பொருட்டு அருகிலுல்ள்ள பாக்கு மரத் தோப்பைத் தாண்டி சிறிய வாய்க்காலைத் தாண்டி வெளியேறியதும், அருகிலுள்ள சிறு குன்றில் ஏறி அங்கு விளைந்த ஓர் விஷச் செடியைப் பிடுங்கி, மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ஒவ்வொரு இலையாகப் பறித்து கடித்து உண்டு மயங்கிக் கிடக்கிறாள்.  உயிருக்கொன்றும் ஆபத்தில்லை.  அவளை மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்தால் ஆச்சரியமான செய்தியை அவரே சொல்லவார்.  உடனடியாக ஏற்பாடு செய்க" என்று அகஸ்தியர் முடித்துக் கொண்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று நான் மகிழ்ந்தேன்.

அவசர அவசரமாகப் பூசை அறையை விட்டு வெளியே வந்தேன். பக்கத்திலிருந்த அந்த மில் அதிபரைச் சந்தித்து நாடியில் வந்த செய்தியைச் சொல்ல ஓடினேன்.

ஆனால் --

முதல் நாள் இரவே அவரும் அவருடைய மனைவியும் திருப்பூரில் நடக்க இருக்கும் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டதாகவும் மாலையில் தான் திரும்புவதாகவும் செய்தி கிடைத்தது.

நாடியில் வந்த அந்தச் செய்தியை அந்த மில் அதிபரிடம் மட்டும் தான் சொல்ல வேண்டும்.  மற்ற யாரிடமும் சொல்லக் கூடாது.

என்ன செய்யலாம் என்று ஒரு நிமிஷம் யோசித்தேன்.

"ஐயாவுடைய பொண்ணு வீட்டுல இருக்காங்களா?"

"இருக்காங்களே"

"நல்ல பார்த்துவிட்டுச் சொல்லுங்க"

"அவங்க இந்த வீட்டை விட்டு எங்கும் போகமாட்டாங்க.  வீட்டுலே தான் இருப்பாங்க"

"இப்போ அவங்க இந்த வீட்டுல இருக்காங்களா? தயவு செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்க"

"ஏங்க! ஏதேனும் முக்கியமானத் தகவல் இருந்தா சொல்லுங்க.  அவங்க காலையிலே ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருப்பாங்க.  தகவலைச் சொல்லிடறோம்"

"அவங்க முதல்ல வீட்டுல இருக்காங்களான்னு பார்த்துவிட்டுச் சொல்லுங்க.  நான் பிறகு தகவலைச் சொல்றேன்" என்று துரிதப் படுத்தினேன்.

வேண்டா வெறுப்பாக என்னை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே போன சமையற்காரி சட்டென்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.

"என்னம்மா" என்றேன்.

"சின்ன அம்மாவைக் காணவில்லை.  மேசையில் ஒரு லெட்டர் இருந்திச்சு. அதுலே என்ன எழுதியிருக்காங்கன்னு தெரியலையே" என்று பதறி அடித்தபடி ஓடிவந்த அந்த அம்மாவிடம் இருந்த லெட்டரை வாங்கிப் படித்தேன்.

"என்னைத் தேட வேண்டாம்.  நான் தற்கொலை செய்யப் போகிறேன்" என்று நறுகென்று ஆங்கிலத்தில் கடிதம் எழுதி கிறுக்கலாக கையெழுத்துப் போட்டிருந்தாள்"

எனக்கு பகீர் என்றது.

அடுத்த நிமிடம் அவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு திருப்பூருக்கும் நாசூக்காகத் தகவல் கொடுத்து மில் அதிபரைக் கையோடு கூட்டிடுவர ஏற்பாடு செய்தேன்.

பின்னர் நம்பிக்கையுள்ள நான்கு வேலைக்காரரிடம் நாடியில் வந்த விஷயத்தைப் பாதி மட்டுமே சொன்னேன்.

அவர்கள் நான்கு பெரும் நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள்.

பாக்கு மரத் தோப்பை தாண்டி அருகில் ஓடும் வாய்க்காலைத் தாண்டி அந்தக் காலை நேரத்தில் பதறி ஓடிப் போனதில் வாய்க்காலுக்கு வெளியே கூப்பிடு தூரத்தில் சிறு மலைக் குன்று தெரிந்திருக்கிறது.

அந்தக் குன்றின் மீதேறி நோட்டம் விட்ட பொழுது அவர்கள் கண்ணில் அவர்களுடைய சின்ன எஜமானி குற்றுயிரும் குலை உயிருமாக மயங்கிக் கிடப்பது தெரிந்தது.  அப்படியே அந்தப் பெண்ணைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மூச்சிரைக்க வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம்...........

அவர்களது குடும்ப டாக்டர் அவசர அவசரமாக ஓடி வந்தார்.  அந்தப் பெண்ணை மிக நன்றாகப் பரிசோதனை செய்தவர், அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார்.

"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று கூறிவிட்டுச் சென்றதால் எல்லோரும் (நான் உட்பட) சற்றுத் தைரியமாக இருந்தோம்.

காலை பதினொன்றரை மணிகெல்லாம் திருப்பூர் கல்யாண வீட்டிலிருந்து அந்த மில் அதிபரும் அவரது மனைவியும் வந்து சேர்ந்தார்கள்.  ஆயிரம் "குல" தெய்வங்களுக்கு மனதால் வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.

"பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.  அருமையான தகவல்தான் கிடைக்கும்" என்று அவர்களோடு காரில் சென்று கொண்டிருந்தவாறு நாடியில் வந்ததை அப்படியே எழுதிக் காட்டினேன்.

கொஞ்சம் நம்பிக்கை அவர்களுக்கு பிறந்தது.

ஆஸ்பத்திரி வாசலில் நுழையும் பொழுதே அவரது குடும்ப டாக்டர் ஓடோடி வந்து எங்களை வரவேற்றார்.  அவர் முகத்தில் மந்தாரப் புன்னகை இருந்தது.

"அப்பாடி" என்று பெருமூச்சு விட்டோம்.  அந்தப் பெண் பிழைக்கவில்லை என்றால் என்பாடு அதோ கதிதான்.

அவர்களுடைய வேலைக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம்.  இந்த ஆள் வந்த வேளை பொண்ணு உயிர் போயிடுத்து என்று கடுமையாகக் குற்றம் சாட்டலாம்.  நான் தான் எதோ செய்துவிட்டதாகக் கூட தவறாகப் பேசலாம்.  இதனால் தனிமனிதனாக இருக்கும் என்னை ஆத்திரத்தில் வெட்டிப் போட்டாலும் ஆச்சரியமில்லை.

அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பதை தவிர வேறு வழியே தோன்றவில்லை.

இதற்குள் குடும்ப டாக்டரோடு உள்ளே சென்ற மில் அதிபர் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ஓடோடி வந்தார்.

காலில் புற்ற்நோய் இருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது, வேகமாக வந்த அவர் என் கையைக் குலுக்கினார்.  அவரது கண்ணில் "சந்தோஷம்" நீராக வழிந்தது.  "பெண் பிழைத்துவிட்டாள்" என்ற சந்தோஷம் தான் இதற்க்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியமான செய்தியும் அவர் சொன்னார்.  "சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல்ல. அகஸ்தியர் சொன்னபடி ஒரு அதிசயம் நிகழும் என்று சொன்னாரே அந்த அதிசயம் நடந்திருக்கிறது.  எதனால் அவள் தகொலைக்கு முயன்று ஒரு விஷச்செடியின் இலைகளைத் தின்றாளோ அந்த விஷச்செடி அவளுக்கு இத்தனை வருஷமாக ஏற்படாமல் இருந்த பருவத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.  ஆமாம் சார், ஆமாம்! என் பெண் பூபெய்திவிட்டாள்" என்று சொன்ன போது

என்னாலேயே அதை நம்ப முடியவில்லை.

சித்தன் அருள் ................. தொடரும்!

Thursday 22 November 2012

சித்தன் அருள் - 100 !


[வணக்கம் அகத்திய பெருமானின் தாள் பணியும் அடியவர்களே!

இறைவன் அருளாலும் அகத்தியரின் ஆசிர்வாதத்தாலும், இத்தனை நிகழ்ச்சிகளை பெருந்தன்மையுடன் பகிர்ந்துகொண்ட அந்தப் பெரியவர் நண்பரின் உதவியாலும், இந்த "சித்தன் அருள்" தொகுப்பு நூறாவது இலக்கத்தை இன்று எட்டியுள்ளது.  இதற்கு வலைபூ வாசகர்களாகிய உங்களின் ஆதரவும் ஒரு காரணம்.  பல வேளைகளிலும், போதும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம் என்று நினைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு அடியவரின் வார்த்தை உற்சாகத்தை தர தொடர்ந்து தொகுக்க முடிந்தது.  அகத்தியர் பல நேரங்களில் நம் வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்வது எப்படி என்று பிறரின் பிரச்சினைகளுக்கு வழி சொன்னதின் மூலம் தெளிவு படுத்துகிறார்.

நடந்த விஷயங்களை தொகுப்பவன்  என்கிற முறையில் பல நேரங்களில் அகத்தியரையும், நாடியையும் பழித்து பதில் போட்ட வாசகர்களையும் நான் சந்திக்க வேண்டி வந்தது.  அவர்கள் எழுதிய விமர்சனங்களை நான் மதிக்கவில்லை.  நம்பியவர்களுக்கு உலகம் கையில் என்ற சொல்லுக்கு ஏற்ப, பதில் சொல்வதை தவிர்த்தேன்.  சற்றே அந்த நிகழ்ச்சிகளால் மனம் வருந்தினாலும், நிறைய பேர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் என்னை தொடர வைத்தது என்னவோ உண்மை.  நேர்மையாக சொல்லப்போனால், தமிழ் முருகனுக்கு சொந்தம், நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ.  இது இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால், எது என்னுடையது?  அது தான் உண்மை.

தொடர்ந்து அகத்தியரின் அருள் வாக்கை வாசித்து வாழ்க்கையை செம்மை படுத்தி  கொள்ளுங்கள் என்று கூறி, மறுபடியும் உங்கள் அனைவருக்கும் நன்றியை சொல்லி....................... சித்தன் அருளை தொடருவோம்.] 

கிரேதா  யுகம் 17,28,000 வருஷங்களாக இருந்தது.  அதற்கும் பிறகு த்ரேதா யுகம் 17,96,000 வருஷங்கள் கழிந்தது.  மூன்றாவதாக துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் நடந்து முடிந்தது.  இப்பொழுது நடப்பது கலியுகம்.  இது 4,32,000 ஆண்டுகள்.  இதில் 5107 ஆண்டுகள் கழிந்திருக்கிறது.  பாக்கி 4,26,893 ஆண்டுகள் இன்னும் கழிய வேண்டும்.  இதோடு கலியுகம் முடியும் என்று புராணங்கள் சொல்லுகின்றன.  ஜோதிட சாஸ்திரமும் இதனை வலுவாகச் சொல்கிறது. [இந்த  வருட கணக்கு அவர் எழுதிய காலத்தையது.  மிச்சம் மீதி இன்றைய தியதிக்கு பார்த்தால் சரியாக வராது.  ஆகவே இதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.] 

கலியுகத்தில் கடவுளைக் காண இயலாது.  மற்ற யுகங்களில் பார்த்திருக்க முடியும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  அப்படிக் கலியுகத்தின் "தெய்வம்" வந்து ஆச்சரியமானச் செயல்களைச் செய்தால் கூட அதை இன்றைய தினம் சத்தியமாக யாரும் நம்பமாட்டார்கள்.  ஜனங்களை ஏமாற்றுகின்ற ஒரு வேஷம் தான் இது என்று பகுத்தறிவுவாதிகள் மட்டுமல்ல, ஆன்மீகவாதிகளும் அதிகமாக நம்புகிற காலம்.

இப்படிப்பட்ட காலத்தில், துவாபர, த்ரேதா, கிரேதா காலத்தில் நடந்த சம்பவங்கள், அவதாரங்கள், தெய்வீக நிகழ்ச்சிகள், சுனாமியாலோ அல்லது காலத்தினாலோ அழிந்து போயிருக்கும்.  அதை எப்படி இந்தக் கால நடைமுறைக்குக் கொண்டு வந்து நிலைநாட்ட முடியும் என்று கேள்வி கேட்கலாம்.  இதை தொல் பொருள் ஆராச்சியாளர்களும் கூட நிலைப்படுத்தலாம்.

இருந்தாலும் பிரார்த்தனை,  பக்திக்கும் பகவான் எந்த ரூபத்திலும் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதினால் தான் ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கிறது.

தெய்வத்தை, சித்தர்கள் துணை கொண்டு காணமுடியும்.  ஓலைச்சுவடியில் வரும் செய்திகள் இதற்கு அடிப்படையாக இருக்கும்.  இதுதான் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத நற்பேறு  தமிழ் நாட்டிற்கு கிடைத்திருக்கிறது.  எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் ஓலைச்சுவடியில் வருகின்ற படி நல்ல படியாக நடந்து விட்டால், பின்பு யாரும் கோயிலுக்கோ தெய்வத்தையோ அல்லது மகான்களது உபதேசங்களையோ வேத சாஸ்திரத்தையோ மதிக்கமாட்டார்கள்.  தொடர்ந்து மானசீகமாகப் பக்தியோடும் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதினால் தான் சிலருக்குச் சில காரியங்கள் சொன்னபடி நடக்கவில்லை.

எதற்கெடுத்தாலும் ஓலைச் சுவடியில் அகஸ்தியர் வழிகாட்டுவார்.  பின்பு நான் ஏன் என் கர்மாபடி நடக்க வேண்டும்.  அவசியமே இல்லை என்று அகஸ்தியர் மீது அதிக நம்பிக்க வைத்து எதுவும் செய்யாமல் இருப்பது கூட இன்னொரு காரணம்.

அகஸ்தியர் போன்ற சித்தர்கள் வழியைக் காட்டலாம்.  ஆனால் வாயில் ஊட்டுவார் என்றோ நாம் செய்த கர்மவினைகள் கடன்கள் எல்லாவற்றையும் சட்டென்று உடனே போக்குவார் என்றோ எதிர்பார்க்க முடியாது.  ஆனால் மிகப் பெரிய இன்னல்களிலிருந்து எப்படியாவது காப்பாற்றுவார் என்பது மட்டும் உறுதி.  இது அவரவர் அதிஷ்டத்தைப் பொறுத்தது என்பதே அகஸ்தியர் நாடியிலிருந்து எனக்குக் கிடைத்த அனுபவம்.

நீங்களே கூட கேட்கலாம்.  "எல்லாமே காலம் வந்தால் சரியாகப் போய் விடும்" என்று பொறுத்திருக்கச் சொன்னால் அதற்கேன் "நாடி" பார்க்க வேண்டும்?  தேவையே இல்லை என்பது நியாயம்.

மனது பக்குவப் படுவதற்கும் நமது கர்மாகாலை அறிந்து அதன்படி நடந்து கொள்வதற்கும் எதற்காக நமக்கு இத்தகைய தடங்கல்? அதை எப்படி முறியடிக்க வேண்டும் என்பதோடு நமக்கு கிடைக்காத பாக்கியம் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற உயர்ந்த எண்ணமும் நமக்கு வரவேண்டும் என்பதற்காக் கூட சித்தர்கள் நமக்கு வழி காட்டலாம்.

தேவை இருப்பவர்கள் சித்தரை நாடி வரட்டும்.  நம்பிக்கை இல்லாதவர்கள் விலகி இருக்கட்டும்.  இதில் சித்தர்களுக்கு எந்தவித லாபமோ அல்லது நஷ்டமோ இல்லை என்பதும் உண்மை.

இத்தகைய விஷயங்களெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டு பகவான் அனுக்ரகம் செய்ததாக எண்ணி, லக்ஷ்மி நரசிம்மரையும் அஹோபில மலையையும் த்யானித்துக் கொண்டிருந்த பொழுதான், தன அறையிலிருந்து வெளி வந்த மேலாளர், "என் கையிலிருந்த ஓலைச் சுவடியை லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் வைத்து அர்ச்சனை பண்ணித்தறேன்" என்று சொன்னது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

கொஞ்சம் கூட அகஸ்தியர் நாடியை நம்பாதவர், எப்படித் திடீரென்று மாறினார் என்பது வியத்தகு சம்பவம் என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.

மறு நாள் காலையில்........

அகஸ்தியரின் ஓலைச்சுவடிக்கு எப்படியெல்லாம் அர்ச்சனை செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்தார்.  பின்பு பிரசாதத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தவர் "நான் பெருமாளைத் தவிர வேறு யாரையும் நம்பாதவன்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு இருபது வருஷம் கைங்கர்யம் செய்து வருகிறேன்.  கோயில்ல நேத்திக்குச் சாயங்காலம் நீ ஓலைச் சுவடியைப் படிக்கறச்சே எனக்கு இதுலே துளியும் நம்பிக்கை இல்லை.  பெருமாளை விட வேறு யாரும் உசத்தி இல்லைன்னு நெனச்சுண்டு வந்தேன்.  நேத்து ராத்திரி லக்ஷ்மி நரசிம்மரே அகத்தியரைப் பத்தி என்கிட்டே சொல்லி அவனைத் துச்சாதனம் பண்ணக் கூடாது.  அவன் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவன்.  அவன் கையிலிருந்த ஓலைச்சுவடிக்கு மரியாதை கொடுத்து என் சன்னதியிலே வச்சு அர்ச்சனை பண்ணு" என்று அசரீரி மாதிரி சொல்லிட்டுப் போனார்.

மொதல்லே எனக்கு இது கனவு மாதிரி தோணிச்சு விட்டுவிட்டேன்.  பெருமாள் இந்தப் பிரகாரத்திலே மூன்று முறை வலம் வருவதா சொல்லுவா.  அதன்படி எனக்கு இரண்டாம் தடவையும் அப்படியே என் காதுல சொன்னமாதிரி இருந்தது.  எனக்கு தூக்கம் போயிடுத்து.  கண்ணை தொறந்து பார்த்தேன்.  மணி பன்னிரண்டு.  மூணாவது தடவையும் பகவான் பிரகாரத்தைச் சுத்திட்டுப் போகட்டும், அப்புறமா வந்து உங்ககிட்ட தகவல் சொல்லலாம்னு ஓடி வந்தேன்.  இது தான் நடந்தது" என்றார் அஹோபில மடத்து மேலாளர்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

என் நினைவெல்லாம் "எப்படி அஹோபிலத்துக்கு செல்வது? என்றைக்குக்ச் செல்வது? அகஸ்தியர் நாடியோடு செல்வதா? இல்லையா? இதோ என் கண்ணெதிரே ஆனந்தமாகக் காட்ச்சியளிக்கும் லக்ஷ்மி நரசிம்மர் தானே அஹோபிலத்திலும் இருக்கிறார்.  இங்கேயே அவரது மென்மையான வாசனைத் தரிசனத்தைக் கண்ட பின்பு வேறு என்ன பாக்கியம் எனக்கு வேண்டும்?" என்று என்னை அறியாமல் எண்ணிக் கொண்டேன்.

கருவரையிலிருந்து அகஸ்தியரின் ஜீவ நாடியை எடுத்து பூ துளசியோடு என் கையில் கொடுத்தார்.  அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்ட போது, நேற்று இரவு நள்ளிரவில் என்னால் உணரப்பட்ட அதே பச்சைக் கற்பூரம் சந்தனம் கருந்துளசியின் மென்மையான கசப்பு, அந்த நாடியிலிருந்தும் உணர முடிந்தது.

என்னை அறியாமல் திகைத்துவிட்டேன்.

"சுவாமி, பச்சைக் கற்பூரம் கொடுத்திருக்கிறீர்களா?"

"இல்லையே"

"சந்தனம்"

"அரைத்து உக்கிராணத்தில் வைத்திருக்கிறேன்.  இன்னும் இங்கு கொண்டு வரவே இல்லையே"

"அப்படியானால் இந்தக் கட்டில் எப்படி அதன் நறுமணம் அற்புதமாகப் பரிமளிக்கிறது" என்று கோயில் மேலாளரும் அகோபில அர்ச்சகராகவும் இருக்கிற அவரிடம் கேட்டேன்.

"நான் தொட்டுப் பார்க்கலாமா?"

"தாரளாமாக"

அவர் என் கையிலிருந்த அகஸ்தியர் ஜீவநாடியை வாங்கி முகர்ந்து பார்த்தார்.  அடுத்த நிமிடம் வியந்து போனார்.

"இது நரசிம்மருடைய பிரசாதம் தான்.  பச்சை கற்பூரமும், துளசியும் சந்தன மனமும் அப்படித் தூக்குகிறது என்றால் இது தெய்வச் செயல்தான்.  தீர்த்தத்தில் கலப்பதற்காக பெருமாள் திருவடியில் வைத்த பச்சைக் கற்பூரம் இன்னும் அப்படியே அவர் பாதத்தில் இருக்கிறது.  அவருக்குச் சாத்துகிறபடி சந்தனம் அப்படியே சமையலறை உக்கிராணத்தில் இன்னும் அங்கேயே இருக்கிறது.  அதெப்படி இந்த மூன்றும் சேர்ந்து இந்த ஓலைச்சுவடிகள் அத்தனையிலும் ஒன்று சேர்ந்து வாசனையாக மூக்கைத் துளைக்கிறது" என்று சொல்லிச் சொல்லி அவரால் மீள முடியவில்லை.

"நானும் எத்தனையோ வருஷமா இந்த லக்ஷ்மி நரசிம்மருக்குக் கைங்கர்யம் செய்து வரேன்.  எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் இதுவரைக்கும் ஏற்பட்டதே இல்லை, இப்ப நான் ரொம்பவும் உங்களை நம்பறேன், அகஸ்தியரையும் நம்பறேன்" என்று புளகாங்கிதமடைந்து பேசினார்.

என்னால் வாயைத் திறக்க முடியவே இல்லை.

லக்ஷ்மி நரசிம்மரின் வாசனை கலந்த பிரசாதத்தோடு கூடிய அகஸ்தியருக்கு ஆயிரம் நன்றியைச் சொல்லி எல்லோரிடமும் விடைபெற்று எக்கச்சக்கமான சந்தோஷ எண்ணங்களைத் தாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்ப பஸ் ஸ்டாண்டிற்கு வந்தேன்.

பஸ் ஸ்டாண்டில் பெருங் கூட்டம்.  வரிசையாக நின்று பஸ்சில் ஏறி, கீழ் திருப்பதிக்கு வர குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மணி நேரமாகும் என்று தோன்றியது.

பஸ்சுக்காக காத்திருப்பதை விட பேசாமல் விறுவிறுவென்று நடந்தே போய் விடலாம் என்று திடீரென்று ஒரு உந்துதல் ஏற்பட எல்லாம் இனி லக்ஷ்மி நாராயணன் செயல் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் தூரம் நடந்திருப்பேன்.

ஒரு அம்பாசிடர் கார் மெதுவாக என்னைத் தொடர்ந்து வந்தது.  ஒதுங்கிப் போன என்னைப் பார்த்து காரில் இருந்த ஒருவர் அழைத்தார்.  அவரை நான் முன்னே பின்னே இதுவரை பார்த்ததே இல்லை.  ஆனால் வசதிமிக்க பணச் செழுமையும் தெய்வீகக் களையும் காணப்பட்டது.  அவர் பக்கம் திரும்பினேன்.  "கீழே தான் போகிறீர்களா" என்றார் அவர்.

"ஆமாம்"

"நானும் கீழே தான் போகிறேன்.  காரில் இடமிருக்கிறது.  நீங்களும் ஏறிக் கொள்ளுங்கள்" என்றார்.

எனக்கு ஒரு பக்கம் ஏகப்பட்ட மகிழ்ச்சி.  நடந்து போய்க் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? அதுவும் யாரோ முன்னே பின்னே தெரியாதவர் தன காரை நிறுத்தி என்னை அழைத்துக் கொள்ள முன் வருவது சாதாரண விஷயமா? என்று ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இவரை நம்பி காரில் ஏறினால் பின்னால் என்ன என்ன விளைவு ஏற்படுமோ? நான் மிக மிக அதுவும் நூறு மிகப் போட்டுக் கொள்ளலாம்.  அப்படி மிகச் சாதாரண மனிதன், வீ ஐ பீ கிடையாது.  பண வசதியும் இல்லை.  முகத்திலோ இரண்டு நாளாகத் தூக்கம் இல்லாமல் கண் சிவப்பாகி, தாடியும் மீசையும் கொண்டு காணப்படுவதால் சட்டென்று யாரும் என்னை மதித்து குட்மார்னிங் கூடச் சொல்ல மாட்டார்கள்.

பண வசதி படைத்த பலரோடு எனக்கு முந்தியிருந்த தொடர்பு கடந்த ஆறு மாதமாக இல்லை.  அகஸ்தியர் என்னை விட்டதாக எண்ணி, எல்லோருமே என்னை விட்டுவிட்டார்கள்.  அப்படிப் பணவசதி இருந்தவர்களும் அவரவர் சுயநலத்திற்காக என்னிடம் பழகினார்களே தவிர ஒரு சோதிடன் என்ற கண்ணோட்டத்திலே தான் வைத்திருந்தார்கள்.

வீட்டிலோ என்னைப் பிழைக்கத் தெரியாத முட்டாள் என்று முத்திரையை அட்டகாசமாகக் குத்திவிட்டதால் வேறுபட்ட மனிதனாகவே உலா வந்தவன்.  ஒரு  பணி இருக்கிறது  என்ற ஒன்றைத் தவிர மற்ற கௌரவங்கள் எதுவுமில்லை.  போதாகுறைக்கு "அகஸ்தியரும்" என் பக்கம் வரவே இல்லை. இப்படிப்பட்ட எனக்கு ஒரு பெரிய செல்வந்தரைப் போன்ற ஒருவர், தன காரில் கீழ் திருப்பதிக்கு கொண்டு விடுகிறேன் வருகிறாயா என்று கேட்டபொழுது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.   இருக்காதா  பின்னே.  அடுத்த நிமிடம் சட்டென்று காரினில் ஏறி அமர்ந்தேன்.  சிறிது தூரம் வரை மௌனமாகவே இருந்தோம், நாங்கள் இருவரும். பின் அவரே என்னைப் பற்றியும் என் கையில் காணப்பட்ட ஓலைச்சுவடியைப் பற்றியும் மெள்ளக் கேட்டார்.

இது போதாதா எனக்கு.

ஏதோ என்னை விட்டால் வேறு நாதியே யாருக்கும் இல்லை.  தலைமைச் சித்தர் இந்த ஓலைச்சுவடிக்குள் இந்த உலகத்தையே வைத்திருக்கிறார் என்றும் ரிஷிகேசத்தில் நான் தவம் செய்ததையும் இன்னும் பிற சொல்லக் கூடாதப் பெருமைகளையும் அவரிடம் அளந்து விட்டேன்.

இதற்கு இன்னொரு காரணம்.  எல்லோரும் என்னைக் கைவிட்டு விட்டு வேடிக்கை பார்த்த பொழுது தானாக வந்து காரில் ஏறச் சொன்னதால் மிகப் பெரிய அரச பதவி எனக்குக் கிடைத்தது போலவும் இவருடைய நட்பைத் தக்க வைத்துக் கொண்டால் கடைசிவரை கௌரவத்தோடும் பெருமையோடும் தலை நிமிர்ந்து வாழலாம் என்ற அசட்டு நம்பிக்கையும்தான்.

ஒரு அல்ப சுகத்திற்க்காக இப்படி அவர் காலடியில் விழும்படி நடந்து கொண்டு அசட்டுத்தனமாகப் பேசுகிறோமோ.  இது எங்கு கொண்டு வந்து விடும் என்பது தெரியாமல் இருக்கிறோமே என்று கொஞ்சம் கூட தெரியவில்லை.

அவர் நான் சொன்னதை எல்லாம் கேட்டு ரசிப்பது போல் கேட்டது எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை.

எல்லாம் பொறுமையாகக் கேட்ட அவர் "அதெல்லாம் சரி, இப்போ எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா? உங்கள் அகஸ்தியரைக் கேட்டு" என்றார்.

"எது வேண்டுமானாலும் கேட்கிறேன் சார்" என்று வேகத்தில் சொன்னேனே தவிர அகஸ்தியர் தன திருவாய் மலர்ந்து எதுவும் அருள மாட்டார் என்பதை அடியோடு மறந்து போனேன்.

"இரண்டு விஷயம்", ஒன்று இருபத்தி நான்கு வயதாகியும் என்னுடைய ஒரே மகள் இன்னும் புஷ்பவதியாக வில்லை.  எத்தனையோ வழிகளில் அறுவைச் சிகிர்ச்சைகள் செய்தும் பயனில்லை. மேல்நாடு சென்று வந்தும் பலன் கிட்டவில்லை.  புத்திர பாக்கியம் கிடைக்குமா? இல்லை அவளதுவாழ்க்கை இப்படியே தான் இருக்குமா? என் சொத்தை எல்லாம் திருப்பதிக்கோ அல்லது அநாதை ஆச்ரமத்திர்க்குக் கொடுத்து விடலாமா? என்பது ஒன்று.

இன்னொன்று எனது கால் எலும்பில் புற்று நோய் வந்திருக்கிறது.  இதையும் அகஸ்தியரால் குணப்படுத்த முடியுமா? அவரால் குணப்படுத்த முடியாமல் இருக்காது.  அப்படி குணப்படுத்த முடியாவிட்டால் இந்த நாடியைப் பற்றிச் சொல்வது எல்லாம் கட்டுக் கதை" என்பதை சொல்லி "நீங்கள் நாடியை இனியும் படிப்பது வீண், விட்டு விடலாம் என்பது என் கருத்து" என்று வெட்டொன்று துண்டு ரெண்டாக ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்.

நான், நீண்ட நாட்களுக்குப் பின்பு இப்பொழுதுதான் வெல வெலத்துப் போனேன்.

சித்தன் அருள்..................... தொடரும்!

Monday 19 November 2012

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 6


இன்று கந்த சஷ்டி.  சுப்பிரமணியர் சூரனை வதைத்ததாக கூறுவார்.  இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  அன்பை மட்டும் பார்த்து அதுவே சிவம் என்று உரைத்த முருகர் ஒரு உயிரை அழித்திருப்பாரா? இல்லை.  சூரனுக்குள் இருந்த கெட்ட குணங்களை அழித்து நல்ல குணங்களாக மாற்றினார்.  இதை புரிந்து கொள்ள முடியாத நம்மவர் தான் சூரன் பொம்மையை உருவாக்கி அவன் தலையை சுப்பிரமணியர் கொய்வதாகவும் உடனே அதிலிருந்து சேவல் வெளிப்படுவதாகவும் நடத்தி சந்தோஷப்படுகின்றனர்.  சைவம் என்கிற உணவு முறையை போதித்து சாத்வீக குணங்களை வளர்த்து அதிலிருந்து அன்பினால் உலகை வளர்க்க வேண்டும் என்று உபதேசித்த சுப்பிரமணியர் ஒரு அழிவு என்கிற நிலையை உருவாக்கி இருப்பாரா என்று யோசிக்க வேண்டும்.  சூர சம்ஹாரம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கெட்ட எண்ணங்கள் வரும் போது சுப்பிரமணியர் நடத்துகிறார் என்பதே உண்மை.  ஏன் என்றால், கெட்ட எண்ணங்கள், வெளியுலக நிகழ்ச்சிகளால் நமக்குள் வருகிறது.  சுப்பிரமணியர் என்பது "வெளி உலக ஞானம்".  புரியும் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் எல்லா நலமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த "அவர்கள் வாக்கை" இன்றைய கந்த சஷ்டியுடன் நிறைவு செய்கிறேன்.

ஓம் சுப்ரமண்யாய நமஹா!

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 5


மும் மூர்த்திகளும் நாம் கேட்கும் வரங்களை வாரி வழங்கி நம்மை வாசனையில் சிக்க வைத்து மறுபடியும் பிறவி சூழலில் மாட்டிவிட்டு போய் விடுவார்.  அவர்களுக்கும் மேல் "பராபரம்" என்று ஒன்று உண்டு.  அதை காட்டும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.  நான் சொல்லும் வழியில் சென்றால் "பராபரத்தை" கண்டு உணர முடியும் என்று சுப்பிரமணியர் தனது "சுப்பிரமணிய ஞானம்" என்கிற வெளிப்பாட்டில் கூறுகிறார் அகத்தியரிடம். அவர் இதை அகத்தியருக்கு மட்டும் தான் உபதேசித்துள்ளார்.  சுப்ரமண்யரோ, அகத்தியரோ நமக்கு உரைத்தால் அன்றி இதன் உண்மையை உணர முடியாது.  "பராபரத்தை" உணர்ந்தவன் பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறான்.

சுப்பிரமணியர் (சித்தர்களின் தலைவர்)

Saturday 17 November 2012

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்!


அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர்

பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு
பாடுகிறேன் நமசிவய அகோர மாகும்.
(செய்யுள்.5)

என்று கூறுகிறார். அவையாவன:

மந்திரம் பலன்

1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும்.
2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும்
3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும்.
4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி
5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.
6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும்.
7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும்.
8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும்.
9. கிலி-உம்-நமசிவய - பிறப்பின்மை நல்கும்.
10. நமசிவய - அமுதம் கிடைக்கும்.
11. நமசிவய-உங்-நமசிவய - நாட்டிலுள்ள வியாதிகள், சுரம் தீரும்.
12. நமசிவய-சிங்-வங்-நமசிவய - அறுபத்துநான்கு பிறவிகள் தீரும்.
13. நமசிவய-வங் - வெற்றி கிடைக்கும்.
14. சவ்-உம்-சிவய - சந்தானம் உண்டாகும்.
15. சிங்-றீம் (சிவய) - வேதாந்த ஞானி ஆவர்
16. உங்-றீம்-சிவயநம - மோட்சம் கிட்டும்.
17. அங்-நங்-நமசிவய - தேக சித்தி உண்டாகும்.
18. அவ்-உம்-சிவயநம - கயிலை வாழ் குருவைக் காணலாம்.
19. ஓம்-சிவயநம - இறப்பை வெல்லலாம்.
20. லங்-றீ-றீ-உங்-நமசிவய - தானியங்கள் கொழிக்கும்.
21. நமசிவய ஓம் - வாணிபம் செழிக்கும்.
22. ஓம்-அங்-உங்-சிவயநம - சாத்விக குணம் உண்டாகும்.
23. ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம - தனவான்கள் வசியமாவர்.
24. உங்-ஓம்-நமசிவய - சிரசின் ரோகம் நிற்கும் (தலைவலி).
25. ஓம்-அங்-சிவயநம - நெருப்பினில் பிரவேசிக்கலாம்.

அகோர முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 12 லிருந்து 20 வரை அகத்தியர் கூறுகிறார். அவையாவன:

1. துங்-நமசிவய - எதிரியின் நண்பர்களுக்குள் பகை உண்டாகும்.
2. ஓம்-கங்-சிவய - சக்தி அருள் உண்டாகும்.
3. ஓம்-சிங்-சிவயநம - ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
4. ஓம்-பங்-சிவயநம - பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
5. ஓம்-யங்-சிவயநம - சங்கடங்கள் தீரும்.
6. ஓம்-மாங்-சிவயநம - வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
7. ஓம்-மங்-நமசிவய - கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
8. கெங்-ஓம்-நமசிவய - யாவரும் வசியமாவர்.
9. ஓம்-மங்-யங்-சிவய - விஷங்கள் பறந்தோடும்.
10. அங்-ரங்-ஓம் சிவய - கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
11. ஓம்-அங்-சிங்-சிவயநம - சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
12. ஓம்-வங்-சிங்-சிவயநம - முக்குணத்தை வெல்லலாம்.
13. ஹிரீம் நமசிவய - விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
14. ஐ-உம்-சிவயநம - நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.
15. வங்-சிங்-ஓம்-சிவய - தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.
16. சங்-சிவயநம - விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
17. ஓம்-துங்-சிவயநம - ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
18. ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம - பெரிய நிலப்பரப்புக்கு அதிபனாவான்.
19. சிங்-நமசிவய - தென்னை மரத்தை வளைக்கலாம்.
20. வங்-சிவயநம - மழையில் நனையாமல் செல்லலாம்.
21. சிவய-ஓம்-ஸ்ரீயும் - மழையை நிறுத்தலாம்.
22. கிலி-உம்-சிவ - ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
23. ஓம்-கங்-சிவ்-உம்-சிவய - கடலின் மேல் ஓடலாம்.
24. சங்-யவ்-சிமந - ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
25. மங்-நங்-சிங்-சிவய - பிசாசுகளையும் ராட்சஸர்களையும் அடக்கலாம்.

வாம தேவத்தைச் சார்ந்த 25 மந்திரங்களில் ஒன்பது மட்டும் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:

1. ஓம்-புரோம்-சிவய - அமுதத்தைச் சுவைக்கலாம்.
2. ஓம்-ஐ-உம்-சிவய - மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
3. ஐ-உம்-ஸ்ரீ-சிவய - ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
4. உங்-தெங்-ஓம்-சிவய - பஞ்சதரு வந்து பலன் தரும்.
5. கங்-உங்-கிங்-நசி-ஓம் - காமதேனு வந்து பலன் தரும்.
6. சங்-சிவய-நம - தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
7. மங்-சிவ-ஓம்-நம - இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
8. ஸ்ரீ-உம்-சிவய - விஷ்ணு அபயமளிப்பார்.
9. சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம - கயிலைவளநாதர் முன் தோன்றுவார்.

இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், இந்த மந்திரங்கள் எல்லாம் அரிசி (அக்ஷதை) போன்றவை, பீஜமந்திரங்கள் நெல் போன்றவை. இந்த மந்திரங்களைச் சீரியதொரு குரு மூலம் கற்றுச் சரியாக உச்சரித்தல் வேண்டும். அவற்றைத் தவறாக உபயோகிக்கக் கூடாது. குருவழி கற்றால் தான் இந்தப் பீஜமந்திரங்கள் பலன்தரும்.

மஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 4

முருகப்பெருமானை நம்பி வணங்கி வந்தோர் கை விடப்படார்  அவரை அடைந்து உயர் நிலை பெற்று அழியாத புகழை அடைந்த ஒரு சிலரை அறிவோம்.

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின்  முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ்நாடான இப்பகுதியை அகத்தியமுனிவரே முருகனிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்த போது, முருகனே காப்பாற்றியதாகக் கூறுவர். அப்போது முருகன் மீது பாடிய பாடலே திருமுருகாற்றுப்படையாகும்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியார்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான், இவரிடம்""பாட்டி, சுட்டபழம்வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் நம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமரகுருபரர்: திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடிஅனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் இவர் எழுதிய நூல்களில் சிறப்பானதாகத் திகழ்கிறது. காசியில் மடம் ஒன்றை அமைத்தார். 

தேவராய சுவாமிகள்: பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நூலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராய சுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களை சூட்சுமமாகக் கொண்ட நூல் இதுவாகும். படிப்போரைக் கவசம் போல் காப்பதில் ஈடுஇணையற்ற நூல் இதுவாகும். இவர் சென்னிமலை என்னும் ஊரில் வாழ்ந்தவர் என்பது இவரது பாடல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ராமலிங்க வள்ளலார்: "அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!' என்று கடவுளை கருணைவடிவில் கண்டு போற்றியவர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன்னர் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சி அளித்தார் என்பர். கந்தகோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தப்பெருமானின் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்: யாழ்ப்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாசசுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் வாழ்ந்ததால் "பாம்பன் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களைச் செய்தார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயணத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

Friday 16 November 2012

மகா சஷ்டி - அவர்கள் வாக்கு - 3


சைவ சமயம் என்றல் என்ன?  யார் அதன் நிறுவனர் என்ற கேள்விக்கு ராமசாமி குருகோன் என்ற ஒரு முருகன் அடியவர் முருகனை கைகாட்டுகிறார்.  சைவ சமயத்தின் விளக்கம் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது!  

"எந்த உயிரையும் கொன்று புசித்து வாழாமல், இயற்கை ஆசிர்வதித்த தானியங்களை உண்டு, ஐம்புலக் கட்டுப்பாடுடன் வாழ்க்கை நடத்துபவர்களே, சைவர்கள்!  பிற உயிர்களை கொன்று தின்று உடல் வளர்போருக்கு, தாது சுத்தி என்பது கிடையாது.  தாது சுத்தி இருந்தால் தான் "சித்த மார்க்கம்" கைகூடும்!"

முருகர்/சித்தர்கள்

Thursday 15 November 2012

மஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 2

முருகனுக்கு மூல மந்திரம் பல இருப்பினும் பொதுவாக அனைவராலும் ஜெபிக்கப்படுவது "ஓம் சரவணபவ" தான்.  ஆனால் அதி சக்தி வாய்ந்த ஒரு மூல மந்திரத்தை மும்மூர்த்திகள் சேர்ந்து முருகனை வழிபட உருவாக்கினர்.  அது "ஓம் நம குமாராய" என்பதாகும்.

சித்தன் அருள் - 99 - நரசிம்மர் தரிசனம்!


முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது அகஸ்தியர் நாடியில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்கதை போல் வந்து கொண்டிருந்தது என்பது உண்மை.

என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள தவறியதால் அகஸ்தியர் எனக்குத் தண்டனை கொடுப்பது போல் நாடி படிக்கத் தடை போட்டதும், பின்னர் அவர் உத்தரவுபடி திருமலைக்குச் சென்று நாடியைத் தொலைத்து அவதிப்பட்டதும் கொடுமைதான்.

'பீசாகி போகும் மின்சார விளக்கு போல" இனி அவரை விட்டு நான் விலகப் போகிறேன் என்ற உள்ளுணர்வு எனக்கு ஏற்பட்டது.  இதற்கும் காரணம் உண்டு.  திருமலையில், கோயில் சந்நிதானத்தில் ஓலைச் சுவடியைப் படிக்கும் வாய்ப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.  "போகர்" சித்தர் வந்ததை அகஸ்தியர் சொல்லித்தான் எனக்கே தெரிய வந்தது.  இந்த ஆச்சரியத்தை மென்று முழுங்குவதர்க்குள்,  அஹோபில மேலாளர் என்னையும் நம்பவில்லை.  நான் சொன்ன நாடி செய்தியையும் நம்பவில்லை என்பது வெகு நேரத்திற்குப் பின்பு தான் எனக்குத் தெரியவந்தது. இது எனக்கு ஒரு பெரும் குறை தான்.

பொதுவாக எல்லோருக்கும் நல்லவனாக யாரும் இருக்க முடியாது என்பதைப் போல, எல்லோரும் நாடியை நம்ப வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது.

"நான் நம்பறேனோ இல்லையோ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் மூலம் உனக்கு நாடி கிடைத்துவிட்டது.  அவருக்கு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளை மறக்காமல் செய்திடு" என்று அஹோபில மேலாளர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியது எனக்கு என்னவோ போலிருந்தது.  பல்லைக் கடித்துக்கொண்டேன்.

" இன்று  இரவு  மடத்தில் தங்குகிறேன்.  நாளைக் காலையில் ஊருக்குக் கிளம்புகிறேன்" என்று சொன்னதும் "சரி" என்றார்.  "பின் ஒரு விஷயம்" என்றார்.  என்ன பீடிகை போடப் போகிறாரோ என்று பயந்தேன்.

"இன்னிக்கு நிறைய கூட்டம் இருக்கு.  படுக்கறப்போ கை கால் அலம்பிட்டு சுத்தமா படுத்துக்கோ.  "ரூம்ல" இடமில்லை.  மடத்தின் பிரகாரத்திலே படுத்துக்கோ.  தப்பித்தவறி கூட பிரகாரத்தின் நடுவிலே உருண்டு, புரண்டு வந்திடாதே" என்றார்.

என்னையும் அறியாமல் தூக்கத்தில் புரண்டு படுத்தால் ராத்திரியில் யாராவது வந்தால் அவர்கள் கால் பட்டுவிடும் என்று நினைத்துத்தான் சொல்வதாக முதலில் தோன்றியது.

"நான் எதற்காகச் சொல்றேன்ன ராத்திரி பன்னிரண்டு மணிக்கு லக்ஷ்மி நரசிம்மர், இந்த பிரகாரத்தை தினமும் உலா வருவார்.  குறுக்கே யாரும் இருக்கக்கூடாது.  அதனால் தான் சொன்னேன்."

இதைக் கேட்டு நான் மனதளவில் ஆச்சரியப்பட்டேன்.  இவர் சொல்வது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள ஆவல்.  அகஸ்தியரிடம் கேட்டால் பதில் கிடைக்கும்.  ஆனால் அவர் எங்கு சொல்லப் போகிறார் என்று அவநம்பிக்கை மற்றவர்களைப் போல் எனக்கும் வந்தது.

"சரி சரி!" என்று தலையை ஆட்டிக்கொண்டு அஹோபில மடத்திற்குத் திரும்பினேன்.

ராத்திரி அங்கு ஒரே கொசுக்கடி.  மின்விசிறி கிடையாது.  யாரோ எப்போதோ பயன்படுத்திய பழைய ஓலை விசிறியை எடுத்து "உஷ்" "உஷ்" என்று பெரு மூச்சு விட்டபடி வீசிக் கொண்டேன்.  என்னதான் சுத்தமாக கை, கால் அலம்பிக் கொண்டு படுத்தாலும், புழுக்கம் காரணமாக வியர்வை கொட்டியது.

இப்படி சுத்தம் இல்லாமல் அதுவும் அகஸ்தியர் நாடியைத் தலைமாட்டில் வைத்துக் கொண்டு லக்ஷ்மி நரசிம்ஹரின் சந்நிதியில் "தேவுடு" காக்கிரோமே.  இது தேவையா? பேசாமல் ராத்திரியோடு ராத்திரியாக நடந்தோ அல்லது ஏதாவது பஸ்ஸைப் பிடித்தோ கீழ் திருப்பதிக்கே போய்ச் சேர்ந்திருக்கலாம்.  தப்பு பண்ணி விட்டோமோ? என்று நினைத்துக்கொண்டேன்.

இப்படி பலவிதத்தில் மனது குழம்பியதால் தூக்கமில்லாமல் தவித்தேன்.  நரசிம்ஹர் சுவாமி வருவார்.  அந்தக் காட்ச்சியைப் பார்க்க முடியுமா?  தனியா வருவாரா லக்ஷ்மியோடு வருவாரா என்று நினைத்த எனக்கு, முன்பு பல அற்புதக் காட்ச்சிகளைக் காட்டிய அகஸ்தியர், லக்ஷ்மியோடு கூடிய நரசிம்மரையும் காட்டாமலா போய் விடுவார் என்று அசட்டுத்தனமான நம்பிக்கை வந்தது.

ஒரு வேளை  என்னைப் பயமுறுத்துவதற்காக அஹோபில மேலாளர் சும்மா வாச்சும் இப்படிச் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் வந்தது.  எந்த வித வசதியும் அதிகமாக இல்லாத, பலவித சட்டதிட்டங்களுக்குட்பட்ட இந்த மடத்தில் எப்படி எனது தங்கைகளுக்குத் திருமணம் செய்யப் போகிறேன் என்ற பயமும் ஏற்பட்டது.

லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியில் திருமணம் என்பது விசேஷம் தான் என்றாலும் காணாமல் போன அகஸ்தியர் நாடி கிடைத்ததற்காக என் வீட்டுத் திருமணத்தை இங்கே தான் நடத்தணம்னு அஹோபில மேலாளர் அன்புக் கட்டளை இட்டதை நினைத்துக் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிற்று.  ஒரு வேளை அப்படிச் செய்யவில்லை என்றால் பகவான் லக்ஷ்மி நரசிம்மர் கூட மன்னித்து விடுவார்.  ஆனால் மடத்து மேலாளர் லக்ஷ்மியாக அல்லது நரசிம்மராக அவதாரம் எடுத்து விடுவார் போலிருந்தது.

இரவு நேரமாக அமைதி அதிகமாயிற்று.  திருமலையின் வெளி வீதியில் யாரோ ஒருவர் தெலுங்கில் வேங்கடவனைப் பற்றிக் கதா காலட்சேபம் செய்து கொண்டிருந்தது லேசாகக் கேட்டது.

பதினொன்றரை மணியைத் தாண்டியதும் எனக்கு ஒரு துடிப்பு.  சட்டென்று அகஸ்தியர் நாடியை எடுத்து அவரிடம் பிரார்த்தனை செய்து பிரித்துப் பார்த்தேன்.

"அந்தச் சந்நிதானத்தில் ராத்திரி நேரத்தில் இரண்டாம் ஜாம இறுதியில் மூன்றாவது ஜாம ஆரம்பத்தில் நரசிம்மர் ஒய்யாரமாக பலமுறை பிரகார வலம் வருவது உண்மை.  அன்னவரின் ஆனந்தமான தரிசனத்திற்காக அகத்தியனும் இன்று காத்துக் கிடக்கிறேன்.  ஆனால் பகவான் உன் கண்ணில் தென்படமாட்டார்" என்று சட்டென்று முடித்துக்கொண்டார்.

"பரவயில்லையே.  இதாவது அகஸ்தியர் சொன்னாரே" என்ற சந்தோஷம்.  அதே சமயம் பகவான், பிரகாரத்தில் உலாவருவதைக் காற்றினாலோ அல்லது வாசனயினாலோ உணர முடியுமா என்று நினைத்தேன்.  இது பற்றி என் வேண்டுகோளை அகஸ்தியரிடம் வைத்த போது " எங்கு தன அவதாரத்தைப் பகவான் எடுத்தானோ அங்கு சென்றால் அவனை உணர முடியும்" என்று பதில் வந்தது.  இது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தது.

அப்படியென்றால் நான் அதிஷ்டசாலிதான்.  ஏனெனில் அஹோபிலம் ஹிரண்யனைக் கொன்ற இடத்தில் நரசிம்மரைக் காணப் போகிறோம் அல்லது வாசனையால் சூட்சுமத்தால் உணரப் போகிறோம் என்பது ஒன்று. இன்னொன்று, என் மீது பலவாறு கோபப்பட்டுப் பேச மறுத்த அகஸ்தியர் இப்பொழுது பேச ஆரம்பித்திருக்கிறார் என்பது.

இதை விட முக்கியமானது.  அன்றிரவே நான் திருமலையிலிருந்து ஊருக்குப் புறப்பட்டிருந்தால் இத்தகைய அரிய வாய்ப்பு எனக்கு அஹோபில மடத்தில் ஏற்பட்டிருக்காது.  எனவே ஒன்றே ஒன்று மட்டும் மிக நன்றாகத் தெரிந்தது.

நமக்குத் தெரியாமல் தினமும் ஏதோ ஒன்று நடக்கிறது.  எது நடந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கிறது.  அது நமது கண்ணில் தென்படுவதில்லை.  எல்லாம் நடந்து முடிந்த பின்புதான் நம் அறிவுக்குப் புரிகிறது.  அப்படிப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று என எண்ணிக்கொண்டேன்.

மணி பன்னிரெண்டைத் தாண்டியது.

மனது துடி துடிக்கக் கை கூப்பி லக்ஷ்மி நரசிம்மரையே மனப்பூர்வமாகப் பயந்து பயந்து த்யானித்துக் கொண்டிருந்தேன்.  கண்ணை திறக்கவில்லை.

"பகவானே உன்னைத் தரிசிக்க அஹோபிலம் வருகிறேன்.  அதே சமயம் என் தலைவன் அகஸ்தியனுக்கு இன்று இங்கு காட்சி கொடுக்கும் நீ, அருள் கூர்ந்து எனக்கு உன் வாசனையாவது உணர அருள் புரியமாடாயா?  நான் உனது சிஷ்யன்.  உன்னை ஆராதித்து வரும் மடத்து சிஷ்யன்.  இது வரையில் முறைப்படி உன்னைத் தினமும் தொழுதுவரும் பக்தனாக இல்லாவிட்டாலும் எனக்குக் கருணைக் கொண்டு, இந்த அறிய வாய்ப்பை நல்லபடியாகக் காட்டுங்கள்" என்று தான் பிரார்த்தனை செய்தேன்.

சில வினாடிகள் கழிந்தன.

திடீரென்று காற்று ஒன்று மெதுவாக நடந்து போனது போன்ற உணர்வு.  சந்தனமணம், துளசி மனம் இந்த இரண்டோடு பச்சைக் கற்பூர பெருமாள் தீர்த்தம் ஒன்று ஒரு துளி என் நாவில் விழுந்தது போல் உணர்வு.  யாரோ அமைதியாக அந்தச் சிறு பிரகாரத்தை அழுத்தமாக நடந்து போவது போன்ற உணர்வு.  பன்னீர் மணம், பவளமல்லியின் வாசனை, மகிழம்பூவின் தூக்கல் தெரிந்தது.  பிறகு ஒன்றுமே இல்லை.  மெய் சிலிர்த்துப் போனேன்.  சொல்ல வார்த்தைகளே இல்லை!  கண்ணைத் திறந்து பார்த்தேன்.  அந்த இருட்டில் என் கண்ணில் ஒன்றும் படவே இல்லை.  ஆனால் புஷ்பங்களின் நறுமணம் மட்டும் எப்படியோ அந்த இடத்தை வியாபித்திருந்தது.

புழுக்கமாக இருந்த அந்த மடத்திற்குள் முழுமையான காற்று வாசனை எப்படி வந்தது?

அப்படியானால் நரசிம்மர் உலா வந்து சென்றுவிட்டாரா?  பலமுறை அங்கு உலா வருவதாக அகஸ்தியர் சொன்னாரே.அப்படியென்றால் மறுபடியும் தரிசனம் கிடைக்குமா? என்று ஒரு துடி துடிப்பு சட்டென்று ஏற்பட்டது.

எனக்கு இது கிடைத்ததே பெரிசு.  ஆனாலும் அல்பத்தனம் இருக்கத்தானே செய்யும்?  மறுபடியும் கண்ணை மூடி கொண்டு நரசிம்மரைப் பிரார்த்தனை செய்தேன்.  ஆனால் இந்த அரிய காட்ச்சியோ நறுமணமோ மறுபடியும் தெரியவில்லை.  அரை மணி நேரம் கழிந்தது.

என் மடியில் வைத்திருந்த அகஸ்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.  "அகஸ்தியனை மடியில் வைத்துப் ப்ர்ரர்த்தனை செய்ததால் நரசிம்மர் உனக்கு வாசனையால் உணர வைத்தார்.  மறுபடியும் உனக்கு நரசிம்மர் அருள் வேண்டுமானால் அவர் அவதாரம் எடுத்த அஹோபிலம் செல்க.  இது அகஸ்தியனுக்குக் திருமால் கொடுத்த தரிசனம்.  லட்சத்தில் ஒன்று மட்டும் உனக்கு வாசனையோடு கிடைத்தது.  அதுவும் நீ எந்தன் மைந்தன் என்பதால்" என்று சொல்லி முடித்தார்.

அவ்வளவு பெரிய பாக்கியசாலியா என்று பெருமைப் பட்டுக் கொண்டேன்.  அடுத்த கால் மணி நேரத்தில் தன அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அஹோபில மேலாளர், கலைந்த குடுமியோடும், அவிழ்ந்து தொங்கி கொண்டிருந்த பஞ்சகச்ச வேஷ்டியோடும் பரபரப்பாக என்னைத் தேடி வந்தார்.

எதற்காக இப்படி வருகிறார் என்று நான் எண்ணி முடிக்கும் முன்பே, "உங்ககிட்ட இருக்கிற நாடியைப் பத்தி நான் தப்பா நெனச்சுட்டேன்.  அதை நாளைக்கு காலையிலே நரசிம்ஹர் சன்னதியிலே வச்சு அர்ச்சனை பண்ணித்தரேன்.  அப்புறம் அதை எடுத்துண்டு போ" என்றார்.  இதற்கு என்ன காரணம் என்பது எனக்கு மறுநாள் காலையில் விடை கிடைத்தது.  அது என்னைப் பிரமிக்கவும் வைத்தது.

சித்தன் அருள் ............. தொடரும்!

Wednesday 14 November 2012

மஹா சஷ்டி - அவர்கள் வாக்கு - 1


முருகனை வழிபட்டால் "அம்மை அப்பனை" ஒரு சேர வழிபட்ட பலன் கிடைக்கும்!

அகத்தியர்/போகர் சித்தர்கள் 

Thursday 8 November 2012

சித்தன் அருள் - 98 - போகர் தரிசனம்!


"பேஷ்கார் பேச ஆரம்பித்தால் வெகு நேரமாகும்.  அதற்குள் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே" என்று அஹோபில மேலாளர் சொன்னபோது, எனக்கிருந்த மனசூழ்நிலையில் தொலைந்த "நாடி" என் கைக்கு கிடைத்தால் போதும் என்றிருந்தது.  சாப்பிடக்கூடிய சூழ்நிலையில் இல்லை.  ஒரு வேளை இந்த வழியாகத்தான் நாடி என் கைவிட்டுப் போகவேண்டும் என்று இருந்தால் ஒருவிதத்தில் நல்லது தான்.  ஆனால் "வேங்கடவனின் பாதத்தில் வைத்துவிட்டுவா" என்று உத்திரவு இட்டதால் அதைச் சரியாகச் செய்ய முடியாமல் போய் விட்டதே என்ற கவலை தான் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தது.

மேலாளர் சாப்பிட்டுவிட்டு வரும்வரை காத்திருந்தேன்.

லக்ஷ்மி நரசிம்ஹர் சன்னதியில் மனதார வேண்டிக் கொண்டு மேலாளர் "ரெடி" ஆனதும் அவருடன் அரக்கப் பறக்க ஓட்டமும் நடையுமாக பேஷ்காரைப் பார்க்கச் சென்றேன்.

அவர் எதற்காகக் கூப்பிட்டு அனுப்பினாரோ தெரியாது.  ஆனால் என் மனதுக்கு மாத்திரம் "ஓலைச்சுவடி" சம்பந்தமாக இருக்கும் என்று உள்ளுணர்வு சொல்லியது.

"அடடே! இந்த ஆளைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.  இவர் எப்படி?" என்று பேஷ்கார், என்னைக் கண்டதும் அஹோபில  பொறுப்பாளரிடம் சொன்னது எனக்குப் புளகாங்கிதமாக இருந்தது.

"அஹோபில மடத்திலே தங்கியிருக்கிறேன்" என்றேன் அடக்கமாக.

"என்ன விஷயம் - என்னை வர சொன்னீர்கள்" என்று கேட்டார் மடத்து மேலாளர் பேஷ்காரரிடம்.  இரண்டு பேரும் வெகுநாள் நண்பர்கள் என்று அப்போது தெரிந்தது.

"இதோ இந்த ஓலைச்சுவடியைப் பாரும்" என்று டிராயர் உள்ளே இருந்து ஓலைச்சுவடியை எடுத்து எங்கள் இரண்டு பேரிடம் காண்பித்தார்.

அதைப் பார்த்ததும் அது என்னுடையது என்று தெரிந்தது.  போன உயிர் திரும்பி வந்தது.

"இது எப்படி உங்கள் கைக்கு வந்து சேர்ந்தது?"

அதயேன் கேட்கிற.  யாரோ ஒருத்தன் இப்படியும் அப்படியும் குதிச்சுண்டு இந்த ஓலைச்சுவடியைத் தூக்கிண்டு கோயிலுக்கு வந்திருக்கான்.  பார்க்க பைத்தியம் மாதிரி இருக்கானேன்னு இங்கே வேலை செய்யறவா அவனைத் துரத்திண்டு போயிருக்கா.  சட்டென்று அவனை காணல்ல.அப்போ அந்தச் சமயம் பார்த்து, பெருமாளுக்கு அலங்காரம் பண்ண பூக்கூடையைத் தூக்கிண்டு பட்டாச்சாரியார் வந்திருக்கார். கோயில் கருவறையிலே அந்தப் பூக் கூடையை வச்சு ஒவ்வொரு பூமாலையாக எடுக்கும் போது இந்த ஓலைச்சுவடியைப் பார்த்து என்னவோ ஏதோன்னு நெனச்சுண்டு அதை பெருமாள் பாதத்திலே வச்சு எடுத்துட்டு அப்புறமா என்கிட்டே கொண்டு வந்து இப்பத்தான் கொடுத்துட்டுப் போனார்" என்றார் பேஷ்கார்.

"பெருமாள் பாதத்திலே இது இருந்ததே அது போதும்" என்றேன் உற்சாகத்தோடு.

"ஒரு நிமிஷமா அரை நிமிஷமா ஒண்ணே கால் மணிநேரம் இந்த ஓலைச்சுவடி பெருமாள் பாதத்திலே இருந்துருக்கு" என்று பேஷ்கார் சொன்னதும் எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

ஒரு நிமிஷம் இந்த ஓலைச்சுவடி பெருமாள் பாதத்திலே இருந்தாலே போதும் என்று நினைத்தவனுக்கு அகஸ்தியர் ஒண்ணே கால் மணி நேரம் தன ஜீவ நாடியாம் ஓலைச்சுவடியோடு பெருமாளின் திருப்பாதத்தில் இருந்திருக்கிறார் என்றால் இது ஆச்சரியமான விஷயம் இல்லையா?

இப்படிப்பட்ட அற்புதம் நடக்குமென்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.  இது தெய்வச் செயல்.  அகஸ்தியரின் கருணை.  என்னுடைய பிரார்த்தனைக்குக் கிடைத்த பரிசு - என்று தான் எண்ண வேண்டும்.

பேஷ்கார் சொல்லச் சொல்ல என் மனம் இறைவனுக்கு ஆயிரமாயிரம் நன்றிதனைச் சொல்லிக் கொண்டிருந்தது.

அகஸ்தியர் நாடி மலர்க்கூடையோடு பெருமாள் சந்நிதியில் நுழைந்தது பெருமாளுக்கு மலர் அலங்காரம் நடக்கும்வரை - அந்த ஓலைச்சுவடியைப் பெருமாளின் பாதத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பட்டாச்சாரியாருக்குத் தோன்றியது எப்படி? என்று நினைத்து நினைத்துப் பார்த்த பொழுது "அகஸ்தியர் என் கைவிட்டுப் போகமாட்டார்" என்று சந்தோஷமும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

நிறைய சோதிக்கிறார்.  அதையும் தாங்கி அவரிடம் சரண் அடைந்துவிட்டால் பல்வேறு அற்புதங்களையும் நிறைவேற்றிக் காட்டுகிறார் என்றாலும் அகஸ்தியரை நாடிவரும் அத்தனை பேர்களுக்கும் நல்லது நடந்தால் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்குமே என்ற ஏக்கம் தான் என் மனதில் தொற்றி நின்றது.

நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு அகஸ்தியர் நல்வழிகாட்டி, அவர்களது விதியை அனுகூலமாக மாற்றிக் காட்டியிருக்கிறார் என்பது உண்மை.  எனக்கு உள்ள தாக்கம் எல்லாம் பாக்கி இருபது பேர்களுக்கும் அந்த மாதிரி நற்பலனை அடைய வேண்டும் என்பது தான்.

சிலபேருக்கு ஏன் சரியாக நடக்கவில்லை என்பதை அகஸ்தியரிடம் நானே கேட்டு வருத்தப்பட்டிருக்கிறேன்.  அதற்க்கு என் மீது முழு நம்பிக்கை கொண்டு வரவில்லை, இரண்டாவதாக பொறுமை அவர்களுக்கு இருப்பதில்லை மூன்றாவதாக விதையை விதைத்த உடனே மரமாக வளர்ந்து உடனே கனியும் கையில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  நான்காவதாக நாடி படிக்கும் பொழுது அவர்களது பெயர், பெற்றோரின் பெயர், முன் ஜென்ம பலன் எல்லாவற்றையும் சொன்னால் தான் அது உண்மையான நாடி! இல்லையென்றால் இது ஜீவநாடி அல்ல! என்று எண்ணுகிறார்கள்.  அகஸ்தியர் நாடியை வைத்துப் பிழைப்பதாக அல்லது ஏமாற்றுவதாக என் மைந்தனான உன்னையும் நினைக்கிறார்கள்.  இப்படிப்பட்டவர்களுக்கு நான் எப்படி வழிகாட்ட முடியும்.  அதனால் தான் அவர்கள் வேண்டுகோள், எதிர்பார்ப்பு எல்லாமே தள்ளிப் போகிறது.  இதுதான் சூட்சுமம்" என்று பின்னர் ஒருநாள், மடை திறந்த வெள்ளம் போல் என்னிடம் அகஸ்தியர் சொன்னது இன்னமும், உண்மையாகத்தான் இருக்கிறது 
இது ஒரு புறமிருக்க .....

மிகுந்த சந்தோஷத்தோடு பெருமாள் பாதம்பட்ட இந்த ஜீவ நாடியை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.  அஹோபில மட மேலாளருக்கும் திருமலைக் கோயில் பேஷ்காரருக்கும் நன்றியைப் பலமுறை சொன்னேன்.

"எனக்கும் நாடி பார்க்கவேண்டுமே, இப்பொழுது முடியுமா?" என்றார் பேஷ்கார்.

"திருமலைக் கோயிலில் த்வஜ  ஸ்தம்பத்திற்கு முன்பு அகஸ்தியரின் ஜீவநாடி படிக்கும் பாக்கியம் எனக்கு இருக்குமேயானால், அதற்கான உத்திரவை அகஸ்தியர் கொடுத்தால் பேஷ்காருக்கு மாத்திரமல்ல அத்தனை பேருக்கும் படிக்க நான் தயார் என்றேன்.

"இதற்கெல்லாம் கூட அகஸ்தியரிடம் உத்திரவு வாங்க வேண்டுமா, என்ன?" பேஷ்கார் கேட்டார் 

"ஆமாம்" என்று சொல்லி, ஆறுமாதகாலம், நாடிபடிக்க அகஸ்தியர் எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்களை எல்லாம் சொன்னேன்.

"அப்படியானால் எப்பொழுது எனக்குப் பாக்கியம் கிடைக்குமோ அப்போது கேட்டுக் கொள்கிறேன்" என்றார் பவ்யமாக.

ஐந்து நிமிடம் வேங்கடவனை மனதார வேண்டி அகஸ்தியரிடம் உத்தரவை எதிர்பார்த்தேன் 

"திருமாலின் பாதத்தில் என்னுடைய ஓலைச்சுவடி வைத்தது கண்டு மகிழ்ச்சி அடையும் உங்களுக்கு இந்த ஓலைச்சுவடி எப்படி பெருமாளின் பாதத்திற்குப் போனது என்ற கதையைச் சொல்கிறேன் கேள்."

திருமாலின் பொற்பாதத்தில் வைப்பதற்கு முறையாக யாரும் என்றைக்கும் அனுமதி தரமாட்டார்கள் என்பது அகஸ்தியருக்கும் தெரியும்.  ஒரு விளையாட்டு செய்யலாமென்ற எண்ணத்தோடு தான் உனக்கு நான் கட்டளையிட்டேன்.  எனது சிஷ்யர்கள் பலருண்டு.  அவர்களுள் போக சிஷ்யனைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்.  மங்கோலியச் சித்தன் அவன்.  முருகப் பெருமானை நவ பாஷாண சிலையாக வைக்க வேண்டும், அவன் தரிசனம் எனக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான பூலோக மக்களுக்கும் கிட்ட வேண்டும் என்று ஒரு பௌர்ணமி அன்று பழனிமலையில் யாம் போகனை வேண்டினேன்.

எனது வேண்டுகோளை  போகனும் ஏற்றான்.  இந்தப் பழனி மலையிலேயே முருகப் பெருமானுக்கு நவ பாஷாண சிலையை உருவாக்கிக் காட்டுகிறேன் என்ற போகர் அதனை ஒன்பது வருடங்களாகப் போராடி போராடிச் செய்து காண்பித்தான்.  இதைக் கண்டு யாம் பெரிதும் உவகையுற்றோம்.  அந்த போகனுக்கும் திருமலை தரிசனம் செய்ய வேண்டும்  என்ற எண்ணம்  ஏற்பட்டது.  அவன் இங்கு வந்திருக்கும் போதுதான், உன் கையிலிருந்த எனது ஒலைக்கட்டைக் கண்டான்.  அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  உன் கையிலிருந்த ஒலைக்கட்டைப் பித்தனாக மாறி, பிடுங்கிக் கொண்டவன் திருமாலுக்கு அலங்காரம் செய்யும் மலர்க்கூடைக்குள் சேர்த்தான்.  பின்னர் வழிபட்டான்.  அந்தப் போகனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.  அவன் தான் திருமாலின் கருவறைக்குள் இக்கட்டையும் நீண்ட நேரம் வைத்த்திருக்க  உதவினான் அவனும் இப்பொழுதான் திருமாலை தரிசனம் செய்து செல்கிறான்"  என்று மாத்திரம் சொல்லிவிட்டு அகஸ்தியர் காணாமல் போனார் 

பிறகு எத்தனையோ தடவை படிக்க முயன்றும் அகஸ்தியர் வரவில்லை.

இந்தச் செய்தியைப் படிக்கப் படிக்கக் கேட்டு கொண்டிருந்த பேஷ்காரும் அஹோபில மேலாளரும் மெய்  மறந்து போனார்கள்  சித்தர்களும் முனிவர்களும் திருமாலை அவ்வப்போது வெவ்வேறு உருவத்தில் வழிபாட்டு வருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான் 

ஆனால் 

பெருமாளின் கருவறையில் ஒன்றே கால் மணி நேரம் அகஸ்தியரின் ஜீவநாடி பெருமாளின் காலடியில் இருந்ததற்கும்  பெருமாளின் திருக்கல்யாண அலங்கார வைபவத்தை போகனும் கண்டு சென்று இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்த பிறகு  நான் நானாக இல்லை.

இந்த பாக்கியத்தைப் பெற்ற அகஸ்தியரின் ஜீவநாடி இந்தப் பூலோக மக்கள் அனைவருக்கும் நல்ல வழியை காட்டி மனதை நிம்மதியாக மாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

இதற்காக என் தந்தை மன  வருத்தம் அடைந்தாலும் பரவாயில்லை ஊரார் உலகத்தோர்   கேவலமாகப்  பேசினாலும் பரவாயில்லை, அகஸ்தியரின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்து கொள்ள வேண்டும் என்ற வெறிதான் தோன்றியது.

உண்மையில் "போகர்" தான் அந்த மொட்டையனாக வந்தவரா? என்ற சந்தேகம் அஹோபில மேலாளருக்குத் தோன்றிற்று.  ஏனெனில் அவர் தீவிரமான வைணவர்.  லக்ஷ்மி நரசிம்மரையும், வேங்கடவனையும் தவிர வேறு யாரையும் நம்புபவர் அல்லர்.  எனவே அவர் அகஸ்தியர் சொன்னதையும் "போகர்" வந்ததையும் சிறிது கூட நம்பவில்லை.  நான் கதை விடுவதாகத் தான் நம்பினார் என்பது எனக்குப் பின்னால் தான் தெரிந்தது.

ஆனால் அன்று இரவு அஹோபில மடத்தில் ராத்திரி பன்னிரெண்டு  மணிக்கு நடந்த சம்பவம்.  அப்பப்பா! இன்றைக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

சித்தன் அருள்.................. தொடரும்!

Friday 2 November 2012

சித்தன் அருள்-97

[வணக்கம்! என்ன இன்று வியாழக்கிழமை இல்லையே! ஏன் ஒரு சித்தன் அருள் தொகுப்பு என்று நினைக்கலாம்.  இன்று இந்த சித்தன் அருள் தொகுப்பை நமக்கெல்லாம் வாரி வழங்கி, அகத்தியர் அருளையும் தந்த அந்தப் பெரியவரின் மறைவு நாள் (திதி).  அவர் இந்த மனித குலத்துக்கு செய்த தொண்டை நினைவு கூறும் விதமாகவும், அந்த ஆத்மா என்றும் அகத்தியர் சித்தருடன் உறைந்து நிற்கும் என்ற நினைப்புடன், ஒரு தொகுப்பை வழங்குகிறேன். இனி சித்தன் அருளை தொடருவோம்..........]


திருப்பதி போகிறேன் என்றதும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சட்டென்று தன முகவரியுடன் கூடிய கடிதத்தைக் கொடுத்தார்.  நான் எதற்காக திருப்பதி செல்லப் போகிறேன் என்றதும் "அது எனக்குத் தெரியாது, இதைக் கொண்டு பேஷ்காரிடம் கொடு.  மற்றது உன் பாடு, அவர் பாடு " என்று சட்டென்று முடித்துக்கொண்டார்.

அப்பொழுது இந்த மாதிரி வீ ஐ பீ கடிதத்திற்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. திருப்பதிக்குச் சென்று கோபுரவாயில் நிலையைத் தாண்டியதும் இடதுபக்கம் ஒரு சின்ன கணக்குப் பிள்ளை சாய்வு மேஜை இருக்கும்.  அதற்குப் பக்கத்தில் திருப்பதி ஆலயத்தின் பேஷ்கார் அமர்ந்திருப்பார்.

கோயிலின் தலைமை நிர்வாகிக்கு அடுத்தபடி பலம் வாய்ந்த அதிகாரி அவர். வேறு எங்கேயாவது சென்று இருந்தால் அவர் எப்பொழுது வருகிறாரோ அதுவரை கோயிலின் வெளியில் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சில சமயம் பேஷ்காரைப் பார்ப்பதைவிட தர்ம தரிசனம் வரிசையில் சென்றால் கூட பெருமாளைத் தரிசனம் செய்துவிட்டு வரலாம் போலத் தோன்றும்.

அன்றைக்கு நான் சென்ற போது வழக்கம் போல் "பேஷ்கார்" அந்த இடத்தில் இல்லை.  பெரிய இடத்திலிருந்து கடிதம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம்.  அதை கண்டதும் பேஷ்கார் மிகவும் மரியாதை கொடுப்பார். அதைச் சாக்காக வைத்து அகஸ்தியர் ஓலைச் சுவடியைச் சட்டென்று பெருமாள் பாதத்தில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு எடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நப்பாசை மனதைத் துரத்திக் கொண்டிருந்தது.

கோயிலுக்கு வெளியே அகஸ்தியர் ஓலைச் சுவடியோடு காத்துக் கொண்டிருக்கும் பொழுது செய்தித்தாள் ஒன்றை வாங்கிப் பார்த்தேன்.

அதில் தலைப்பு செய்தியாக "கோயிலில் கொலை செய்து கொள்ளை அடித்த கும்பல் கைது" என்று போட்டு விட்டு உதிரிச் செய்தியாக "இவர்கள் கொலை செய்த கையேடு திருப்பதி கோயிலில் கல்யாண உற்சவமும் பண்ணினார்களாம்" என்று போட்டிருந்தார்கள்.  அதன் கீழே கால் பக்கத்திற்கு நான்கு பேர்களுடைய படமும் போட்டிருந்தது.

அந்தப் படத்தில் காணப்பட்ட நபர்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். அவர்கள் முகம் முன்பு என்னோடு விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

திருப்பதி பெருமாள் ஒரு போதும் இப்படிப்பட்டவர்களைக் காத்து அருள் புரிய மாட்டார் என்பதை மட்டும் உள்மனதிற்குள் உறுதி செய்து கொண்டேன்.

அதே செய்திதாளின் கடைசி பக்கத்தில் "நொண்டிப் பையனுக்கு கிடைத்த சுகவாழ்வு" என்று அன்றைக்கு சென்னை விமான நிலையத்தில் கண்ட சிறுவனின் முகத்தை மட்டும் போட்டு அவனைப் பற்றி சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு செய்திகளும் எனக்கு யானை பலத்தைக் கொடுத்தது.  அந்தச் சந்தோஷத்தை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.  காரணம் அன்றைக்கு யாரும் என்னோடு வரவில்லை.

கையிலிருந்த ஓலைக்கட்டை என்னவென்று நினைத்தானோ, யாரோ ஒருவன் (!), சட்டென்று என்னிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடினான்.  நான் பதறிப்போனேன்.

அவனோ மொட்டையடித்துக் கொண்டிருந்ததால் அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.  அவனைப் பின் தொடர்ந்து ஓடியதுதான் மிச்சம்.

அந்த மொட்டையையும் காணவில்லை.  எங்கேயாவது அந்த ஓலைக்கட்டைத் தூக்கி எறிந்திருப்பானோ என்று தேடிப்பார்த்தேன்.  எங்கும் கிடைக்கவில்லை.  மனம் உடைந்து சுக்கு நூறாகியது.

எப்படியோ என் கைக்கு வந்தது.  திருப்பதியில் கைவிட்டுப் போய் விடும் என்றிருக்கிறது.  விதி யாரை விட்டது>  நானும் ஒரு மனிதன் தானே.  என்ன தப்பு செய்தேனோ?  யார் கண்டார்? ஒரு வேளை என் தந்தையின் பிரார்த்தனை பலித்துவிட்டது போலும், என்று எத்தனையோ சஞ்சலங்கள்.

"திருவேங்கடமுடையான் பாதத்தில் வைத்துவிட்டு கொண்டு வா" என்று சொன்னதால் தான் அதை எடுத்துக் கொண்டு வந்தேன். இல்லை  என்றால் நான் ஏன் திருப்பதிக்கு வரப்போகிறேன்?

அப்படியென்றால் தவறு யார் பெயரில்? என்ற கவலையும் வந்தது. கோயிலை மூன்று முறை சுற்றிச் சுற்றி வந்தேன்.அங்குள்ள கடைக்காரர்களிடம் வெட்கம், மானம் எல்லாவற்றையும் துறந்து கேட்டுப் பார்த்தேன்.

போலீசில் புகார் செய்ய மனம் தோன்றவில்லை.  இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன.  ஒன்று எனக்கு தெலுங்கு தெரியாது.  தமிழில் சொன்னால் அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்களோ என்ற சந்தேகம்.

இன்னொன்று அகஸ்திய ஜீவனாடியைக் காணவில்லை என்றால் அகஸ்தியரையே காணவில்லை என்றாகிவிடும்.  இதைவிடக் கேவலம் வேறு எனக்கு ஏதும் இல்லை.  போலீசில் புகார் கொடுக்கவில்லை.

துக்கம் தொண்டையை அடைக்க கையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை வைத்து என்ன செய்வது? என்று வெறுப்பு ஏற்ப்பட்டது.

மனம் ஒரு நிலையில் இல்லாததால் ஓரிடத்தில் உட்காராமல் இப்படியும் அப்படியும் கோயில் முன்வாசக் கோபுரம் அருகே நடந்து கொண்டிருந்தேன்.  லேசாக எட்டிப் பார்த்த போது;

திருமலைக் கோயிலின் பேஷ்கார் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஏதாவது கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.  எல்லாம் என்னைப் போல் சிபாரிசுக் கடிதம் கொண்டு வந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

அவர் எழுந்து போய் விட்டால் மீண்டும் அந்த இடத்திற்குத் திரும்பிவர அரைமணி அல்லது ஒரு மணிநேரமாகும்.  இப்போது அவரிடம் போவதா இல்லை பேசாமல் ஊருக்குத் திரும்பி விடுவதா என்ற சிந்தனையால் செய்வதறியாது துடித்தேன்.

கடைசியாக அகஸ்தியர் குடி கொண்டிருக்கும் தென் பொதிகை மலை இருக்கும் திக்கை நோக்கி மானசீகமாக நமஸ்காரம் பண்ணினேன்.

"தாங்கள் சொன்னபடி இங்கு வந்தேன்.  ஜீவ நாடி பறிக்கப்பட்டுவிட்டது.  இது என்ன தவறால் நடந்தது என்பது எனக்குத் தெரியாது.  நான் ஆறுமாத காலமாகப் பிரார்த்தனை பண்ணவில்லை என்பது மட்டும் உண்மை.  எனக்கு எதிர்ப்பு இப்போது அதிகம்.  நண்பர்கள், உறவினர்கள் கழன்றுவிட்டனர். தந்தைக்கும் நான் நாடி படிப்பது பிடிக்கவில்லை.

தாங்கள் காட்டிய வழியில் இதுவரை சென்றேன்.  மகான் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனத்தையும், ரண மண்டல அனுமன் தரிசனத்தையும் நான் வெளியே சொன்னதால் ஏற்பட்ட தவறா?  மலைக் கோவிலில் மூன்று நாட்கள் தங்க வைத்து, சித்தர்களது மாமறைச் செவி வழியாகக் கேட்க வைத்ததைத் தெய்வ ரகசியமாக எண்ணிக் காப்பாற்றாமல் போன தவறா?  இதைத் தவிர அப்போதைக்கப்போது நண்பர்கள், உறவினர்கள், வெளி மனிதர்களிடம் அடக்கமின்றி நடந்து கொண்டதற்குப் பரிசா?  எனக்குத் தெரியாது.  ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உண்மை.  எனக்கு நாடி படித்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை.  இருக்கும் பணியை செய்ததால் யாரிடமும் கை நீட்டி பிழைக்க வேண்டாம்.  இத்தனை ஆண்டுகாலமாக தெய்வீக அருளைக் காட்டினாய்.  தொடர்ந்து கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.  இல்லையென்றால் இதுவும் உன் சித்து விளையாட்டு என்று விட்டு விட்டுப் போகிறேன்.  எனவே முடிவு செய்வது உன் பொறுப்பு" என்று மனதிற்குள் சொல்லிப் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

கையில் ஜீவநாடி இருக்கும் பொழுது சில சமயம் அகஸ்தியர் வருவதில்லை. அவரை அழைத்துப் பதில் கேட்க்கும் அளவுக்கு நான் எந்த விதத்திலும் தகுதி பெற்றவனில்லை.  இருப்பினும் எதற்காக இப்படி வேண்டினேன் என்பது எனக்குத் தெரியாது.  நான் என்ன திருநாவுக்கரசரா? தாள் திறவாய் என்றதும் கோயில் கதவு திறந்து கொள்வதற்கு? என்று பலவிதமான சஞ்சலங்கள், தொலைத்துவிட்ட வெட்கம், ஊரில் பெருமையாகப் பேசமுடியாது போயிற்றே என்ற ஆதங்கம், யாரும் இனி மதிக்க மாட்டார்கள் என்பது மாத்திரமல்ல, "ஏதோ நாடியை வைத்துக் கதை விட்டுக் கொண்டிருந்தான். இப்போ உள்ளதும் போச்சே நொள்ளைக் கண்ணா" என்று கிண்டல் செய்வார்களே என்ற ஆத்திரம்.

இந்த மனப் போராட்டங்கள் வெகுநேரம் நீடித்தது.  கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன்.  புஷ்கரணியில் போய் ஒரு முழுக்குப் போடுவோம்.  பின்பு பேஷ்கார் இருந்தால் அவரிடம் அந்த லெட்டரைக் காட்டி பெருமாளைத் தரிசனம் செய்வோம்.  இதோடு சரி.  இனிமேல் சாகிற வரை திருப்பதி பக்கமே தலையைத் திருப்பக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

எல்லாம் முடிந்த பின்னர் பேஷ்காரைப் பார்க்கப் போனேன்.  பொதுவாக கடிதத்தைப் படித்துவிட்டு "எத்தனை பேர்" என்று கேட்பார்.  கடிதத்தில் அதிக நபர்கள் குறிப்பிட்டிருந்தால் எண்ணிக்கையைக் குறைத்து "உள்ளே போ" என்பார்கள்.  சிலர் வாக்குவாதம் செய்வார்.  சிலர் கெஞ்சுவார்கள்.  பின்பு அவர் மனம் இறங்குவார்.  திருப்பதி பெருமாளே "அனுமதி கொடுத்தது போல் ஒரு சந்தோசம் அவர்களுக்கு ஏற்படும்.  பேஷ்காரை வாயார வாழ்த்திவிட்டுப் போவார்கள்.  இது தினமும் நடக்கின்ற நிகழ்வு.

அன்றைக்கு என்னைத்தவிர வேறு யாருமில்லை என்பதால் மெதுவாக பேஷ்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  என் நல்ல காலம் என்று தான் சொல்ல வேண்டும்.

நான் என்ன நடந்தது என்பதை மெதுவாகச் சொன்னேன்.  பின்னர் "எதற்காக நான் திருப்பதிக்கு வந்தேனோ அது தான் முடியாமல் போய்விட்டது" என்றேன்.

"இப்போ என்ன செய்யவேண்டும்"

"அந்த பழமையான ஓலைக்கட்டு உங்கள் கையில் கிடைத்தால் எனக்குத் தகவல் சொல்ல முடியுமா?" என்று கேட்டேன்.

"ஆபிசில் புகார் கொடுத்துவிட்டுபோ" கிடைத்தால் சொல்கிறேன் என்றார்.

உரிய இடத்தில் சொல்லிவிட்டதாக எனக்குத் தோன்றியது. பேஷ்காரின் உதவியால் அரை குறை மனதோடு பெருமானைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன்.

மீண்டும் ஒரு சபலம்.

ஒரு முறை இப்படிச் சுற்றிப் பார்க்கலாமே.  ஒரு வேளை அந்த "மொட்டைத் தலையன்" கிறுக்குத் தனமாக எங்கேயாவது தூக்கி எறிந்திருந்தால் என்று உள்ளுணர்வு தோன்றியது.

ஆனால் கிடைக்கவில்லை.

மன வருத்தப்படுவதா இல்லை எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியாமல் அங்குள்ள அஹோபில மடத்தில் சென்று தங்கினேன்.  ஊருக்கு உடனடியாகத் திரும்பவும் மனமில்லை என்பதுதான் உண்மை.

அஹோபில மடத்தின் பொறுப்பாளரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து நடந்த விஷயத்தைச் சொன்னேன்.  அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு "இங்குள்ள லெட்சுமி நரசிம்மப் பெருமாளிடம் மனதார வேண்டிக் கொள்! எப்படியாவது நாளைக்கு உனக்குக் கிடைக்கும்" என்று எனக்கு அருள்வாக்குச் சொன்னார்.

"சரி" என்றேன்.

"இன்னொன்று, உங்க வீட்டுல நடக்கிற திருமணத்தை இங்கே வந்து நடத்தறேன்னு வேண்டிக்கோ" என்று இன்னொரு தடா உத்தரவையும் போட்டார்.

இதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை.  காரணம் திருமலையில் திருமணம் நடப்பதாக இருந்தால் மாப்பிள்ளை பெண்ணுக்கு மலர்மாலை சூடக்கூடாது. இரண்டாவது மேள தாளம் கூடாது.  சாப்பாடு ஒன்றுக்கு அப்போதே இருபத்தைந்து ரூபாய்.  இலை மற்றும் முக்கியமானப் பொருட்களை வெளியிலிருந்து மலைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.  இதெல்லாம் நினைத்தேன்.  சிம்ம சொரூபமாக விளங்கும் என் தந்தையை நினைத்தேன்.  அடிவயிற்றை பகீர் என்றது.  மயக்கம் போட்டு விழாத குறைதான்.

அப்போது அஹோபில மடத்து மேலாளரை உடனடியாக பேஷ்கார் வரச் சொன்னதாக செய்திவரவே அஹோபில மேலாளருடன் நானும் சென்றேன்.

சித்தன் அருள் ..................  தொடரும்!