​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 29 September 2016

சித்தன் அருள் - 453 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"சிவனேனு இரு" என்பதை "எதையும் செய்யாமல் இரு" என மனிதன் எடுத்துக் கொள்கிறான். அப்படியல்ல. ஒரு மனிதன் புறத்தோற்றத்திலே செயல்படாதது போல் தோன்றினாலும், அவன் ஆத்மா நன்றாக பலம்பெற்று,   வினைகளை எல்லாம் முற்றிலுமாக எரித்து, பிறகு சதா பத்மாசனத்திலே அமர்ந்து, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறையோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, சதா சர்வகாலமும், அந்த இறையோடு தொடர்பில் இருக்கும்பொழுது, அந்த தவத்தின் பலன், ஒளி, ஆற்றல், அலைகள் எல்லாம், அவன் சார்ந்திருக்கும் இடத்தை சுற்றி பல நன்மைகளை செய்யும். அப்படி இருப்பதற்குப் பெயர்தான் "சிவனேனு இரு" என்பதின் பொருளாகும்.

No comments:

Post a Comment