​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 28 September 2016

சித்தன் அருள் - 451 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறைவனை வணங்க காலம், நாழிகை ஏதும் இல்லையப்பா. மனிதன் விருப்பத்திற்கேற்ப, எப்பொழுது வேண்டுமானாலும், இறைவனை வணங்கலாம். அது, வணங்குகின்ற மனிதனின் மன நிலையைப் பொறுத்தது. மனதிலே எழுகின்ற பக்தி நிலையைப் பொறுத்தது. இதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

2 comments:

  1. ஆபத்து காலத்தில் கோயில் செல்ல இயலாமல் இருந்த இடத்தில் இருந்தே இறைவனை,சித்தர்களை நினைத்து பிரார்த்தனை செய்தால் நம் வேண்டுதல் அவர்களை சென்று சேருமா

    ReplyDelete
  2. Maharishi has very often explained that Irai is sarva vyapi i.e. ella idathilum, ella neramum, neekkama ullavar. He also explained that when he refers to Siva, he is not referring only to Siva-lingam or Siva idol in temple, but to this Irai who is everywhere and everytime.

    ReplyDelete