​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 25 June 2016

சித்தன் அருள் - 357 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

"ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது, அந்த தர்மமே எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால், ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளைப் பெற முடியாது. ஒரு மனிதன் இறை அருளைப் பெற வேண்டுமென்றால், ஏன்? இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, தர்ம குணமும், பிறருக்கு உதவும் குணமும் இருந்துவிட்டால் போதும், இவன் இறையை தேடவேண்டியதில்லை. இறை, இவனைத்தேடி வந்துவிடும். அவனிடம், இறையே வந்து கை ஏந்தும்!" - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

No comments:

Post a Comment