​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 27 May 2016

சித்தன் அருள் - 336 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


"ஒரு மனிதன் தனக்குள் இருக்ககூடிய இறையையும், தனக்குள் உள்ள பாவங்களையும் வென்று, எண்ணங்களில் எல்லாவிதமான நல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால், கட்டாயம் இறையருள், அது எந்த நிலையாக இருந்தாலும், அவன் எந்த வடிவை வணங்கினாலும், அவன் விரும்பும் வடிவில், அவன் விரும்பும் நிலையில், அவனுக்கு இறைவனால் காட்சி தரப்படும், அருளப்படும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

No comments:

Post a Comment